Jump to content

ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள்

காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர்  தெரிவித்தார்.

Image result for à®à®¾à®£à®¾à®®à®²à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®°à®¿à®©à¯Â  à®à®±à®µà¯à®à®³à¯

நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்'என்னும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்கு கிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை  திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள  லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்போது  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கே இது தொடர்பில் குறித்த பெண்மணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனையானது மிகப் பெரியது.  நான் கணவரை இழந்து இரு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாடுகின்றேன். 3 பேர் காணாமல் போன நிலையில் நான் தனிமையில்  உள்ளேன். எனது உறவுகளையும் அதேபோன்ற உறவுகளையும் தேடும் ஆயிரக் கணக்கானோரில் நானும் ஒருவர்.

காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது.

ஓ.எம்.பி வேண்டும் உடனடியாக அந்த அலுவலகம் இங்கே உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

 

https://www.virakesari.lk/article/62882

Link to comment
Share on other sites

உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சிங்கள அரசு தெரியப்படுத்த வேண்டும், தெரியப்படுத்த வைக்க வேண்டும். 

இது பற்றிய வழக்கு ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ஆனால், இலங்கையின் அரசியல் அமைப்பின் சட்டங்களுக்கு அமைய ஒரு வழக்கை முன்னெடுக்கலாம், இல்லை இருக்கும் வழக்கை சட்டமா அதிபரின் கவனம் வரை எடுத்து செல்லலாம். 

"காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது."

Link to comment
Share on other sites

இந்த மக்களுடைய வேதனை தெரியாம, புரியாம தான் சுமந்திரன், மாவை, சம்பந்தன், சரவணபவன் எல்லாரும் ரணில் என்ற ஏமாற்றுப் பேர்வழி பின்னால சுத்திக்கொண்டிருக்கீனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.