Jump to content

கல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்

கல்­மு­னை­யையும் அதன் தென் பகு­தி­யி­லுள்ள பிர­தே­சத்­தையும் ஒரு மத ரீதி­யான தென் கிழக்கு மாகா­ண­மாக்க வேண்டும் என்று இந்­திய அர­சாங்­கத்­திடம் 1986ஆம் ஆண்டு கூட்­டணித் தமிழ் தலை­வர்­களே விதைந்­து­ரைத்­தார்கள். அன்­றைய கூட்­ட­ணியின் வாரி­சாக இருக்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதே­பாணியில் கல்­முனை விட­யத்­தினை தீர்ப்­பதற்கு விரும்­ப­வில்லை என்று தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்­வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரி­வித்தார்.

kalmunai.jpg

கேள்வி:- கல்­முனை பிரச்­சினை இது­வரை காலமும் தீர்க்கப்படா­மைக்கு கிழக்குத் தமிழர் கூட்­ட­மைப்பின் ஓர் அங்­க­மா­க­வி­ருக்கும் அகில இலங்கை தமிழர் மகா­சபை என்ன காரணம் என்று கரு­து­கின்­றது?

பதில்:- அம்­பாறை மாவட்டத் தமிழர்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக அர­சியல் ஞானம் படைத்த தலை­வர்­களைத் தெரிவு செய்­யா­மையே இப்­பி­ரச்­சினை தீர்க்க முடியாமல் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்றமைக்கு  காரணமாகும். 

கேள்வி:- இது­வரை காலத்தில் அங்­கி­ருந்து பல தமிழ் புத்­தி­ஜீ­விகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கை­ய­தொரு குற்­றச்­சாட்டை முன்­வைக்­கின்­றீர்­களே?

பதில்:- கல்­மு­னை­யையும் அதன் தென் பகு­தி­யி­லுள்ள பிர­தே­சத்­தையும் ஒரு மத ரீதி­யான தென் கிழக்கு மாகா­ண­மாக்க வேண்டும் என்று இந்­திய அர­சாங்­கத்­திடம் 1986ஆம் ஆண்டு  விதந்­து­ரைத்த தலை­வர்­களை வேறு எவ்­வாறு வர்­ணிக்­கலாம்? அன்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் முஸ்லிம் தலை­வர்கள் ஓர் இர­க­சிய ஒப்­பந்­தத்தை செய்­தி­ருந்­தார்கள் எனக் கூறப்­பட்­டது. எனவே தான், கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு ஒன்று கிட்ட முடி­யாது இருந்­தது. அன்­றைய கூட்­ட­ணியின் வாரி­சாக இருக்கும் இன்­றைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதே­பா­ணியில் இந்­த­ வி­ட­யத்­தினை தீர்ப்­ப­தற்கு விரும்­ப­வில்லை.        

கேள்வி:- கல்­முனை பிரச்­சி­னைக்கு உங்­க­ளு­டைய தரப்பில் எவ்­வ­கை­யான தீர்­வினை முன்­மொ­ழி­கின்­றீர்கள்? 

பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு வெளி­யிட்ட பிரகட­னத்தின் அடிப்­ப­டை­யில்தான் அந்தத் தீர்வு இருக்க வேண்டும். தற்போ­தைய கள நிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்­யலாம். 

கேள்வி:- 1989ஆம் ஆண்டு முன்­மொ­ழி­யப்­பட்ட விடயம் என்ன என்­பதை விப­ரிக்க முடி­யுமா?

பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலு­வல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்­முனை தமிழர் பிரிவு என அழைக்­கப்­படும் கல்­முனை வடக்குப் பிரிவில்,  பத்து கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுகள் அடக்­கப்­பட்­டன. அவையாவன கல்­முனை-1, கல்முனை2, கல்­முனை-3, பாண்­டிருப்பு-1, பாண்டிருப்பு-2, பெரி­ய­நீ­லா­வணை-1, பெரி­ய­நீ­லா­வணை-2, நற்­பிட்­டி­முனை-1, நற்­பிட்­டி­முனை-2 மற்றும் சேனைக்­கு­டி­யி­ருப்பு என்­ப­ன­வாகும்.

கேள்வி:- நீங்கள் பத்து கிராம உத்தியோ­கத்தர் பிரி­வு­களை கூறுகின்றீர்கள். ஆனால் தற்போது 29 கிராம உத்தியோ­கத்தர் பிரிவுகள் அல்லவா காணப்படுகின்றன?

பதில் :- நான் குறிப்­பிட்ட பத்து கிரா­ம­சேவகர் பிரி­வு­க­ளுக்கும் தற்­போ­துள்ள 29 கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்கும் இடையில்  எவ்­வி­த­மான வித்­தி­யா­சமும் கிடை­யாது. பழைய கல்­முனை பிரி­வுகள் மூன்றும் புதி­தாக 11 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும், பழைய பாண்­டி­ருப்பு பிரி­வுகள் இரண்டும் புதி­தாக 8கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும், பழைய பெரிய நீலா­வணைப் பிரிவுகள் இரண்டும் புதி­தாக நான்கு கிராம உத்தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பழைய நற்­பிட்­டி­முனை பிரி­வுகள் இரண்டும் புதிதாக மூன்று கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பழைய சேனைக்­கு­டி­யி­ருப்பு புதி­தா­க­மூன்று கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவை தான் தற்­போது 29 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளாக உள்­ளன. 

கேள்வி:- எனினும் கல்­முனை தமிழ் பிரிவு, கல்­முனை முஸ்லிம் பிரிவு என்று 1989 இல் பிரிக்­கப்­பட்ட பொழுது மரு­த­மு­னைக்கும் நற்­பிட்­டி­மு­னையின் முஸ்லிம் பகு­திக்கும் என்ன நடந்­தது?

பதில்:- அவை இரண்டும் நிலத்­தொ­டர்­பற்ற இரண்டு துண்­டு­க­ளாக கல்­முனை முஸ்லிம் பிரி­வுடன் சேர்க்­கப்­பட்­டன. 

கேள்வி:- அப்­ப­டி­யாயின் மரு­த­முனை, நற்­பிட்­டி­முனை பற்றி உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

பதில்:- நிலத்­தொ­டர்­பற்ற துண்­டு­க­ளாக இருக்கும் அவை சீரான நிர்­வா­கத்­திற்கு இடைஞ்­ச­லாக இருக்கும். அத­னாலே தான் மரு­த­மு­னையை  தனி­யான பிரிவாக உரு­வாக்க  வேண்டும் என்று நாம் விரும்­பு­கின்றோம். அங்கே 17000 முஸ்­லிம்கள் மட்­டுமே குடி­யி­ருப்­பார்கள். 

சீரான நிர்­வாகம் கருதி நற்­பிட்­டி­முனை முஸ்லிம் பகு­தியை தமிழர் பெரும்­பான்மைப் பிரி­வான  கல்முனை வடக்குடன்  சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு சேர்க்கும் போது கல்­முனை வடக்கில் 30சத­வீத முஸ்­லிம்­களும் 70 சத­வீத தமி­ழர்­களும் குடியிருப்பர். இதுவே எமது முன்­மொழிவா­கவும் உள்ளது.

கேள்வி:- வவு­னியா மாவட்­டத்தில் வவு­னியா தெற்கு சிங்­களப் பிரிவின் சில நிலத்­தொ­டர்­பற்ற பகு­திகள் அவற்றை அண்­மித்த தமிழ்ப் பிரிவில் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ள­தைப்­போன்று கல்­மு­னை­யிலும் அமைக்­க­லாமே? 

பதில்:- அது 50 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட பழைய கதை. தற்­போ­தைய சூழ்­நி­லையில் எந்த அர­சாங்­கமும் நிலத்­தொ­டர்­பற்ற பகு­தி­களை இணைப்­பதை விரும்­ப­மாட்­டாது என்­பது தான் யதார்த்­த­மாகும்.  

கேள்வி:- தற்­போதைய கல்­முனை01 எனப்­படும் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரிவுக்­குள்ளும் கல்­முனை03 எனப்­படும் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுக்­குள்ளும் 5000 முஸ்­லிம்கள் குடி­யி­ருக்­கி­றார்கள். மேலும் இஸ்­லா­மாபாத் என்ற பிர­தேசமும் அங்குள்­ள­தல்­லவா?

பதில்:- 1989ஆம் ஆண்­டிற்குப் பின்னர் காணிக் குடி­யேற்­றத்­திற்கு அதி­காரம் படைத்த பிரிவு கல்­முனை பிர­தேச செய­லாளர் பிரிவு எனப்­படும் முஸ்லிம் பிரிவு மட்­டுமே. அப் பிர­தேச செய­லாளர் KP/59, KP/59/1  எனப் பெயரிட்ட இரண்டு சட்­டத்­திற்குப் புறம்­பான  பிரிவுகளை உரு­வாக்கி அங்கு 5000 முஸ்­லிம்­களைக் குடி­யேற்­றி­யுள்ளார். 

சட்­டத்­திற்குப் புறம்­பான இவ்­விரு கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களும் உட­ன­டி­யாக நீக்­கப்­பட வேண்டும். அக் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுகள் கல்­முனை 01 அல்­லது KP/61/1, கல்முனை03 அல்­லது KP/59/1  என்பவற்றின் பகு­தி­க­ளா­கவே கரு­தப்­பட வேண்டும். அது மட்­டு­மல்­லாது அங்கு வாழும் 5000 முஸ்லிம் மக்­களும் கல்­முனை வடக்கு எனும் பிரிவில் வசிப்­ப­வர்­க­ளாக கரு­தப்­பட வேண்டும். 

கேள்வி:- உங்­க­ளு­டைய முன்­மொழிவின் பிர­காரம், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு என முழு அதிகாரம் கொண்ட பிரிவுகளையும் மூன்றாவது பிரிவான மருதமுனையையும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்துகையில்  கல்முனை தெற்கின் நிர்வாக மத்திய நிலையம் கல்முனை வடக்கில் தானே இருக்கப்போகின்றதே?  

பதில்:- உண்மைதான். கல்முனை தெற்கு தனக்கான ஒரு நிர்வாக மத்தியை அமைக்கும் வரை அவ்வாறான நிலைமைதான் இருக்கும். அவ்வேளையில் அவர்கள் அம்மத்திக்கு அருகாமையில் புதிய இஸ்லாமாபாத்தையும் அமைக்கலாம். அதில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. இந்த முன்மொழிவை உள்ளீர்ப்பது தவிர்க்கப்படுகின்ற போது கல்முனை விவகாரம் தீரா நோயாகிவிடும்.    

நேர்­காணல்:- ஆர்.ராம்

 

https://www.virakesari.lk/article/62875

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.