Jump to content

`உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்!’ - அசத்தும் கோவை உணவகம்


Recommended Posts

`உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்றால், உணவை வீணாக்குபவர்களை உயிரைப் பறிக்கும் எமனுக்கு சமமானவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.

covai hotel

                              covai hotel

 

கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரே, தொடர்ந்து 81 வருடங்களாக ஹோட்டல் நடத்திவருகிறார், ரத்னவேல். `டேஸ்ட்டான உணவை, வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டா 5 ரூபாய் நாணயம் வழங்கப்படும்’ என்ற அறிவிப்போடு நம்மை வரவேற்றது, ராயல் ஹிந்து ரெஸ்டாரன்ட் (ஆர்.ஹெச்.ஆர்). லாபம் என்ற கடிவாளத்தில் கண்ணைக் கட்டி இயங்கும் ஹோட்டல்களுக்கு மத்தியில், சமூகப் பார்வையை விசாலமாக்கியிருந்தார் ஆர்.ஹெச்.ஆர் மேலாளர் ரத்னவேல். மேலாளரின் மகன் குருமூர்த்தி நம்மிடம் பேசினார்.

covai hotel
 
covai hotel

 

"இந்த ஹோட்டல், 1931-ல் எங்க தாத்தா குருசாமி தொடங்கியது. அன்றிலிருந்து 88 வருஷமா சுவையும் தரமும்தான் எங்க ஹோட்டலில் நிர்வாகம் செஞ்சிட்டு இருக்கு. நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். அதில் படித்த பாடம், இத்தனை வருஷம் ஹோட்டல் நடத்தின அனுபவம், என்னை இந்தத் துறையில் ஏதாவது புதுமை படைக்கத் தூண்டியது."

"ஹோட்டல் துறையில் மிகப்பெரிய பிரச்னை, ஃபுட் வேஸ்ட்டிங் தான். கஸ்டமர்ஸ் எப்போவும் பிடிக்காத உணவை இது வேணாம், அது வேணாம்னு சொல்ல மாட்டாங்க. உப்பு, ஊறுகாய் ஆரம்பித்து தயிர், சேமியா, பாயசம் வரை எல்லாத்தையும் வாங்கிட்டு, பாதியை இலையிலே கைகழுவிடுவாங்க. இதை சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சோம். அப்ப உதிச்சதுதான் இந்த திட்டம். வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டால், இலைக்கு 5 ரூபாய் திருப்பிக் கொடுக்கலாம்னு முடிவுசெய்து, அதை உடனே நடைமுறைப்படுத்தினோம்" என்றார்.

food waste
 
food waste

 

"ஒவ்வொரு கஸ்டமரும், உணவு ஆர்டர் செய்யும்போது இருக்கும் மனநிலை கடைசியில இருக்காது. பாதி பதார்த்தம் இலையிலேயே தங்கிடும். எடுத்து குப்பையில போடும்போது மனசு கஷ்டமா இருக்கும். இந்த திட்டம் தொடங்கி ஒரு வாரம் தான் ஆச்சு. 5 ரூபாய் மீதி தர்றதால, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் வாங்குறாங்க. பிடிக்காத ஐட்டமா இருந்தா, வைக்கும்போதே வேண்டாம்னு சொல்லிடுறாங்க. எங்களுக்கும் மனசு நிறைவா இருக்கு. உணவு மீதமிருந்தா, பக்கத்துல இருக்கும் அரசு மருத்துவமனையிலும், ஆசிரமத்திலும் கொடுத்துடுவோம்" என்றனர் கடை ஊழியர்கள்.

வாடிக்கையாளர் ஒருவர் பேசுகையில், "இது அற்புதமான திட்டம். ஹோட்டலில் சாப்பிடும்போது, இது வேண்டாம்... அது வேண்டாம் என்று நாங்கள் சொல்வதற்குக்கூட வாய்ப்பு இருப்பதில்லை. எல்லா பதார்த்தங்களும் சம்பிரதாயப்படி அடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே ஒவ்வொன்றும் கேள்வியுடனும் விருப்பத்துடனுமே பரிமாரப்படுகிறது. ஆனால், ஃபுல் மீல்ஸில் வாடிக்கையாளர் உண்ணும் பதார்த்தங்களுக்கு மட்டுமே பில் செலுத்த எல்லா உணவகங்களும் வழி செய்தால், பெரும்பாலும் வேஸ்டேஜ் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை வியாபாரம் என்ற ரீதியில் கருதாமல், சமூகப் பார்வையோடு அணுகினால் தீர்வு கிடைக்கும்" என்றார்.
food waste
 
food waste

"இந்த காலத்தில் சின்னச்சின்ன தொழில் முனைவோர்களும் தள்ளுவண்டிக் கடைகளும் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் சுவை, தரம், விலை அனைத்தையும் சரிநிகர் சமாக வைப்பது அத்தியாவசியமாகிறது. மக்கள், மறுபடியும் பாரம்பர்யத்துக்கே திரும்புறாங்க. அதனால இளநீர் ஜெல்லி, கம்பு தோசை, கம்பு புட்டு, ராகி தோசை, ராகி புட்டு, சோள தோசை போன்ற உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கஷ்டமரின் ஃபீட்பேக் எங்களை வளர்த்துவருகிறது. மூன்று நாள் முன்னதாக ஒரு பெரியவர், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு இதைச் சொல்லப்போவதாக எழுதிவைத்து, `இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள்!’ என்றும் வாழ்த்திவிட்டு சென்றார்" என்று பூரிக்கிறார் குருமூர்த்தி.

மேலும், இந்த ஹோட்டலில் அரசு பிளாஸ்டிக் தடை செய்யும் முன்பே, ஸ்வீட் போன்ற உணவுகளுக்கு பாக்கு மட்டை போன்ற இயற்கைக்கு உகந்த பைகளைப் பயன்படுத்தினர். இப்போது, துணிப்பையும் பயன்படுத்திவருகின்றனர். பஃபே சிஸ்டம் போன்ற சில வழிமுறைகளால் உணவு வீணாவதைத் தடுக்க முடிந்தாலும், இலையிட்டு அமர்ந்து பரிமாரி உணவு உண்ட நம் பாரம்பர்யம் இதை சற்றே இடைமறிக்கிறது. இதை எல்லாம் தாண்டி, இத்தகைய திட்டங்களால் மக்களைக் கவர்ந்தால், உணவு வீணாவதைத் தடுக்கலாம் என்பதற்கு ஆர்.ஹெச்.ஆர் ஒரு முன் உதாரணம்.
covai hotel
 
covai hotel

 

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, 2019-ம் ஆண்டின் உலகலாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் மட்டும் 194.4 மில்லியன் மக்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 14.5% பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 20.8% பேர் எடைக் குறைவு பிரச்னையால் அவதிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/food/miscellaneous/coimbatore-hotel-gives-five-rupees-as-cash-back-for-encouraging-dont-waste-food-motto

Link to comment
Share on other sites

மேலை நாடுகளில் இவ்வாறான வீணாக்கப்படும் உணவுகளை தவிர்க்கவும் அவை தேவைப்படும் மக்களுக்கு கிடைக்கவும் சில வழிவகைகள் உள்ளன. அதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

உணவு வங்கிகள் (Food Banks)  ; இவை உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவு தேடும் மக்களுக்கு இடையில் முகவராக பணியாற்றுகின்றன. இதில் வேலை செய்யும் பலரும் தங்கள் சொந்த நேரத்தை தருகிறார்கள். வருமானம் குறைந்தவர்கள், அண்மையில் வேலையை இழந்தவர்கள், நாட்டிற்கு புதிதாய் வந்தவர்கள் என பலரும் இவற்றில் பயன் பெறுகிறார்கள்.   

செயலிகள் : பல உணவு வர்த்த நிறுவனங்கள், காலாவதி திகதிக்கு அண்மித்த பொருட்களை குறைந்த விலையில் விற்கின்றன.  உதாரணம்

https://www.greenbiz.com/article/16-apps-helping-companies-and-consumers-prevent-food-waste

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.