Jump to content

சிலாபம் முன்னேஸ்வரம் கொடியேற்றம்


Recommended Posts

chilaw.jpg?itok=PDCNIUHa

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ வடிவாம்பிகை  ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (17) ஆரம்பமாகியது.

கொடிச்சீலை யானையில் சுமந்த வண்ணம் ஆலயத்தைச் சுற்றி வீதி வழியாக எடுத்து வரப்பட்டு ,பின்னர் கொடி ஏற்றப்பட்டது.

கொடித்தம்பத்திற்கு அபிஷேகமும் இடம்பெற்றது.  

'இந்நிகழ்வில்  பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

முக்கிய நிகழ்வுகளாக தீ மிதிப்பு உற்சவம் செப்டெம்பர் 08 ஆம் திகதியும், வேட்டைத் திருவிழா செப்டெம்பர் 11 ஆம்திகதியும் தேர்த்திருவிழா செப்டெம்பர் 12 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் செப்டெம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது

-உடப்பு குறூப்  நிருபர் -

http://www.thinakaran.lk/2019/08/17/இந்து-மதம்/38861/சிலாபம்-முன்னேஸ்வரம்-கொடியேற்றம்

Link to comment
Share on other sites

Monday, August 19, 2019 - 11:44am

சிலாபத்திலிருந்து வடக்கே, குருநாகல் பாதையில், மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது முன்னேஸ்வரம் சிவன் கோவில். ஐந்து ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்ற. வரலாறு படைத்த கோயில். இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களில் முன்னேஸ்வரம் முதல் தோன்றியதால் முன்னேஸ்வரம் என்ற நாமம் பெற்றது என்பது பலர் கருத்து. இந்நாட்டுக்கு விஜயன் வருகை தருவதற்கு முன்பே ஐந்து பெரும் சிவஸ்தலங்கள் இருந்ததாக வரலாற்று நெறியாளரான சேர் போல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மகா தீர்த்தத்தில் திருக்கேதீஸ்வரமும், சாலவத்தை (சிலாபம்) யில் முன்னேஸ்வரமும் கோட்டையாற்றில் திருக்கோணேஸ்வரமும் கீரிமலையில் நகுலேஸ்வரமும் இருந்ததாக தெரிவிக்கிறாா்கள்.கும் வரலாற்று நெறியாளர் ஐந்தாவது சிவஸ்தலம் பற்றி தெரிவிக்காது உள்ளார். 

கி.மு. 543ம் ஆண்டு இந்நாட்டுக்கு வருகைத் தந்த விஜயன் இந்நாட்டை முப்பத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ராஜதானியின் நான்கு வாசல்களிலும் சிறப்புடன் விளங்கிய நான்கு சிவாலயங்களை புனருத்தாரணம் செய்தான் என பழைய இலங்கைச் சரித்திர நூல் (அமெரிக்கன் மிஷன் பதிப்பு) தெரிவிக்கிறது. முன்னேஸ்வரம் ஆலயம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது.  

ரிஷி முனிவரினால் இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டதால் முனிஈஸ்வரம் ஸ்ரீ முன்னேஸ்வரம் எனப்பெயர் வந்ததாகக் கதையுண்டு. யுத்தத்தில் இராவணனையும் ஆயிரக்கணக்கான வீரர்களையும் கொன்று இராமன் தன் மனைவி சீதை சகிதம் புஸ்பக விமானத்தில் இந்தியா திரும்பும்போது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்துக்கு விஜயம் செய்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார் எனத் தக்ஷண கைலாச மகாத்மீயம் கூறுகிறது. இக்கோயில் விஜயகுமாரனால் புணர்த்தனம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சோழர்கள் இலங்கையை ஆண்டபோது இக்கோயில் அவர்களால் பரிபாலிக்கப்பட்டது.

பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. மகா மண்டபத்தின் மேல் பகுதியும் தனி கருங்கல்லேயாகும். இக் கல்லில் சதுரமாக செதுக்கப்பட்ட பகுதியில் நான்கு மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதனை கொண்டும் மகா மண்டபத்தில் உள்ள கல்தூண்களின் ஓவியங்களைக் கொண்டும் பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு  எண்ணத் தோன்றுகிறது.

குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வர ஆலயத்திற்குரிய பூமியை 64 கிராமங்களாக பிரித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் இடுகுறி காரணப் பெயர்கள் இட்டான். இக்கிராமங்களில் சோழநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை குடியிருக்க வைத்தான்.   ஸ்ரீ பராக்கிரமபாகு எனப்படும் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் (கி.பி.1410-1462) கி.பி. 1448ம் வருடம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டான். ஆலயத்தின் இடிந்த பகுதிகளை திருத்தி பல கிராமங்களை மானியங்களாக ஆலயத்திற்கு அளித்தான். இவனது இம் மானியத்தை கல்வெட்டு சாசனமாக செய்வித்தான். இன்னும் இக்கல்வெட்டை ஆலயத்தின் கர்ப்பக்கிருகச் சுவரின் பின்பகுதியில் காணலாம்.  

உடப்பு குறூப்  நிருபர்

http://www.thinakaran.lk/2019/08/19/உள்நாடு/38921/முன்னேஸ்வரம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.