Jump to content

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது


Recommended Posts

வேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தினகரனுக்குத் தெரிவித்தார்.

அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், வாக்குரிமை தொடர்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது உரிய கவனம் செலுத்தப்படும் என  மேலும் தெரிவித்தார்.

ஒரு கட்சி அவரை வேட்பாளராக அறிவித்திருக்கின்றது. இன்னமும் வேட்புமனுக்கள் கோரப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதுதான் அது பரிசீலிக்கப்படும். 

தேர்தல் சட்ட விதிகள் அங்கு மீறப்பட்டிருந்தால், வேட்புமனுவை நிராகரிக்க எமக்கு அதிகாரமிருக்கின்றது. ஆட்சேபனை தெரிவிக்கப்பட வேண்டுமென்பது கிடையாது.

2005 இல் கோத்தாபய ராஜபக்ஷ, வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப் பகுதியில் நான் உயர்பதவியில் இருக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 2013 இன் பின்னரே பதவியேற்றேன்.

மற்றொரு விடயம் இன்றிருப்பது போன்ற நவீன உத்திகள் எதுவும் அன்று பதிவின்போது கையாளப்படவில்லை. வெறுமனே அடையாள அட்டை மட்டும் போதுமானதாகவே இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட மாவட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முறைப்பாடு விசாரிக்கப்பட்டு முடிவு வெளிவருவதற்கு முன்னர் எம்மால் எதுவும் கூற முடியாது. நாம் அவசரப்படவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

https://www.thinakaran.lk/2019/08/18/உள்நாடு/38867/இரட்டை-பிரஜாவுரிமை-கொண்டவர்-அரசியலில்-ஈடுபட-முடியாது

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் இவ்வாறுதான் தேர்ந்தெடுக்கப்படுவார்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மூவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முகநூலில் அவர் இவ்விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து 50% மற்றும் அதற்கு மேலதிகமாக ஒரு வாக்கினை பெற வேண்டும். அவ்வாறு ஒரு வேட்பாளரும் பெறமுடியாத விடத்து மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பில் கடந்த ஜூன் 11 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 39 இன் செயலாளர்கள் அல்லது நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு, செயலாளர் தொடர்பான பிரச்சினை காணப்படும் கட்சியொன்றை தவிர அனைத்து கட்சிகளும் பங்குபற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முகநூலில் அது தொடர்பான கேள்வியும் பதிலையும் தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் செல்லுப்படியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த வேட்பாளர்களினாலும் முடியாது போனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா?

பதில்: அவ்வாறு மீண்டும் வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது. மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து அரைவாசியுடன் மேலதிகமாக ஒரு வாக்கினை அதாவது 50% இற்கும் அதிக வாக்கினைபெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப 1, 2, 3 என்ற இலக்கங்களை பிரயோகித்து தமது விருப்பு வாக்கை அளிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கு அளிக்க வேண்டுமானால் 1 என்ற இலக்கத்தை மட்டும் பிரயோகிக்க முடியும் அல்லது வழமை போன்று (X) என வழங்கி வாக்களிக்க முடியும்.

A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டு மொத்தமாக செல்லுபடியாகும் வாக்குகள் 100 என நாம் வைத்துக் கொண்டால், வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் வருமாறு என வைத்துக்கொள்வோம்.

A = 40, B = 35, C = 15, D = 6, E = 4

அதற்கமைய, முதலாவது மற்றும் இரண்டாவது வேட்பாளர்களான A மற்றும் B ஆகியோருக்கு இடையில் போட்டி அமையும். ஏனைய C, D, E ஆகியோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

பின்னர், 1ஆவது மற்றும் 2 ஆவது இடங்களை பெற்றுக் கொள்ளும் A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் புள்ளடியிடப்பட்டுள்ள விருப்பு வாக்கு தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.

அதனையடுத்து, 15 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டு அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். C என்பவருக்கு மாத்திரம் புள்ளடியிட்டுள்ள வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அத்துடன் 1 என அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டுகளும் நீக்கப்படும். அவற்றில் வேறு எவருக்கும் வாக்களிக்கப்டாமை காரணமாக அவ்வாறு ஒதுக்கப்படும். அவற்றில் 1, C இற்கு 2, A அல்லது B இற்கு புள்ளடி இடப்பட்டிருந்தால், A இற்கு புள்ளடியிடப்பட்ட வாக்குகள் A இற்கான பெட்டியிலும் B இற்கான வாக்குகள் B பெட்டியிலும் இடப்படும். C இற்காக 1 என இலக்கமிடப்பட்ட வாக்குச்சீட்டில் இலக்கம் 2 என குறிப்பிடப்பட்ட 2 எனும் விருப்பு வாக்குகள் D அல்லது E இற்கு வழங்கப்பட்டிருப்பின், இலக்கம் 3 என குறிப்பிடப்பட்ட 3 எனும் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றதா என பரீட்சிக்கப்பட்டு 3 என இடப்படாதவை காணப்படுமாயின் அவையும் அதிலிருந்து நீக்கப்படும். இலக்கம் 2 ஆனது, D அல்லது E இற்காக வழங்கப்பட்டிருப்பின் 3 என A அல்லது B இற்கு இடப்பட்டிருப்பின், அவை A இற்காக மற்றும் B இற்காக இடப்பட்ட பெட்டிகளில் இடப்படும். ஆயினும் 2 எனும் விருப்புவாக்கு D இற்கு வழங்கப்பட்டு, 3 ஆனது E இற்கு வழங்கப்பட்டிருப்பின், இதன்போது E போட்டியில் இல்லை என்பதால் அவையும் நீக்கப்படும். 2 ஆனது E இற்கு வழங்கப்பட்டு  3 ஆனது D இற்கு வழங்கப்பட்டிருப்பின் அவையும் நீக்கப்படும். அதன் அடிப்படையில் D மற்றும் E பெற்றுக் கொண்ட வாக்குகள் 2, 3 இலக்கங்களுக்கு அமைய, A மற்றும் B இற்கு வழங்குதல் அல்லது நீக்கப்பட்டு, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு குறித்த 25 (15+6+4) வாக்குகளும் A அல்லது B இற்கு சேர்க்கப்பட்டு அல்லது நீக்கப்படுதல் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு பிரிக்கப்பட்டு A இற்கு மேலதிகமாக 03 வாக்குகளும், B இற்கு 10 வாக்குகளும் கிடைத்துள்ளது என வைத்துக் கொண்டால், A இனது மொத்த வாக்குகள் 43 (A=40+3 = 43) ஆகவும், B இற்கான மொத்த வாக்குகள் 45 (B = 35+10 = 45) ஆகவும் காணப்படும்.

  • தற்போது செல்லுபடியாகும் வாக்குகள் 88 ஆகும். A மற்றம் B ஆகியவற்றின் மொத்த வாக்குகள் 88 (43+45 = 88) ஆகும். இதன்போது இங்கு அதன் அரைவாசிக்கும் அதிகமான 45 வாக்குகளைப் பெற்ற B வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படும்.
  • இதன்போது செல்லுபடியான வாக்குகள், 100 ஆக இருந்த போதிலும், அதில் அரைவாசிக்கும் அதிகமாக அதாவது 51 இனை பெற வேண்டிய அவசியம் ஏற்படாது.
  • இதன்போது A இற்கு 08 வாக்குகள் அதிகமாகவும், B இற்கு 05 வாக்குகள் மேலதிகமாகவும் கிடைத்தால் A = 48 உம் B = 40 உம் பெற்று, A வெற்றி பெறுவார்.
  • A இற்கு அல்லது B இற்கு எவ்வித மேலதிக வாக்குகளும் பெறப்படாத நிலையில், A=40, B=35 என்பதால் A வெற்றி பெறுவார்.
  • A மற்றும் B சமமான வாக்குகளை பெறுவாராயின் வெற்றியாளரை தெரிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் சீட்டிழுப்பு மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு மேலதிக வாக்கு வழங்கப்படும்.

http://www.thinakaran.lk/2019/08/15/உள்நாடு/38687/ஜனாதிபதி-தேர்தலில்-வெற்றியாளர்-இவ்வாறுதான்-தேர்ந்தெடுக்கப்படுவார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.