Jump to content

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்


Recommended Posts

19276.jpg

இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது.

மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால், கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம். எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம். 

இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார். இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு ஆள் உள்ளூரிலும் இல்லை. வெளிநாடுகளிலும் இல்லை என்ப தன் காரணமாக சைவ சமயத்துக்கு ஒரு சதமும் மதிப்பில்லை என்றாயிற்று.

இந்த உண்மையை சைவ மதத் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தொடர்பில் தகவல் தெரிவித்த சைவ சமயத் தலைவர்கள்; வெறும் வேலை, செப்படி வித்தை என்று கூறினார்கள். ஆக, இந்தச் சந்திப்பானது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையேயன்றி வேறில்லை என்பது புரிதற்குரியது.

தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டு மல்ல இலங்கையில் யார் பிரதமராக இருந் தாலும் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுவே நிலைமை.

இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது. ஆனால் இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குக் கண்டனம் கூடத் தெரி விக்கவில்லை எனின் சைவ சமயத்துக்கு இருக்கக்கூடிய மதிப்பு என்ன என்பதை சைவ சமயத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத் தாக வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்.

அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்.

பெளத்த பீடங்களில் அரசியல்வாதிகள் எப்படி வளைந்து வந்தனம் செய்கிறார்களோ அதுபோல சைவத் தலைமைப்பீடங்களுக்கும் வருகின்ற அரசியல்வாதிகள் குந்தியிருந்து கும்பிடு போடுவர்கள். இது நிச்சயம் நடக்கும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19276&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதவிக்கு யாழ் களத்திலேயே பல பொருத்தமான ஆட்கள் உள்ளார்களே?

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத் தாக வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்.

அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்.

தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

சைவர்களின் நம்பிக்கையுள்  அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். 😊

https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயம் என்றால் என்ன?
இது இந்துசமயத்துக்குள் இல்லையா?
இந்து மதத்துக்கு ஏற்கனவே ஆர் ஸ் ஸ் வாரியர்கள் அவர்  இவர் என்று 
பல தலைவர்கள் இருக்கிறார்கள் தானே?

ஏன் இப்ப இவர்கள் தணிக்கவாடி ஆட நிற்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

மதம் ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை. அந்த வரையறைக்குள் அதை வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எதிரில் நிற்பவர்  எந்த மதத்தை சார்ந்தவர்  என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதே சிறந்த நல்லிணக்கம். அப்படியான நிலையில நாடும் மக்களும் பொருளாதார வளர்சசி அடைவார்கள். குற்றச்செயல்கள. குறையும். இலங்கை  இந்தி யா போன்ற  நாடுகளில் இப்போதைக்கு இது ஒரு கனவுதான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காலனித்துவ ஆட்சி நிலவியபோது ஒல்லாந்தர் போத்துகேயர் காலத்திலும் இறுதியில் ஆங்கிலேயர் இருந்தபோதும் வகை தொகையின்றி இலட்சக்கணக்கில் சைவர்கள் வாழ்வாதாரம் தொழில் கல்வி வேறு காரணங்களுக்குமாக மதம் மாற ஒப்புக்கொண்டார்கள். அண்மைகாலங்களில் போர் ஓய்வுக்குவந்தபின் ஏற்பட்ட கஸ்டமாக வாழக்கை நிலையை காரணம்காட்டி சைவசமயத்தைச் சார்ந்தவர்களை மதம்மாற்றி கவந்து இழுப்பதில் வேறு சமயங்களைச் சார்ந்த மதம்மாற்றிகள் பல வழிகளிலும் முயற்சிப்பதையும் கேள்விப்படுகிறோம். ஏற்கனவே பல சைவர்கள் இவர்களால் மதம் மாற்றப்பட்டும் விட்டார்கள். இன்றும் இந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எமது அரசியல்வாதிகள் இதைக்கண்டு ஆவன செய்வார்கள்  என்று நாம் நம்புவதில் பயனில்லை.

தமிழர்கள் ஒரு மையக் கட்டமைப்பை இஸ்தாபிப்பதன் மூலம் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கமைத்து அவர்களை  ஒரே கோட்டில் பயணிக்கவைக்க வேண்டும். அவர்களுக்கான வேலைத்திட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் அது மதத்தலைவர்கள் பக்கமிருந்து உருவாகக்கூடாது. இன்று அரசியல் தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக இயங்குவதும், தான் சொல்வது எடுபடவில்லையென்றால் வெளியேறி புது கட்சி தொடங்குவதும் வழக்கமாகிவிட்டது. தமிழினம் தனது சொந்த பிரச்சினைகளையே பேசி தீர்க்கும் நாதியில்லாத ஒரு இன ஒற்றுமையற்ற  முரண்பாடுள்ள சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் நாம் திட்டமிட்டு அப்படி மாற்றப்பட்டுள்ளோம். இதனால் இலங்கையின் அரசியல் அரங்கில் எமது உரிமை தனித்துவம் தொழில் வாய்ப்பு கல்வி பொருளாதாரம் என்பன சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்படுகிறது. விடுதலைப்போரின்போது ஆட்சியாளரின் வாசல் வரைக்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்த இனப் பிரச்சினையை இனவாத சிங்கள ஆட்சியாளர்கள் சாணக்கியமாக நகர்த்தி தமிழ்மக்களின் வீட்டு வாசலில் கொண்டுவந்து போட்டுவிட்டிருக்கிறார்கள். 

சிறுபான்மையினங்கள் மோதி உடைக்க முடியாத ஒரு அரசியல் அரணை சிங்கள இனவாதிகள் கட்டியெழுப்பிவிட்டார்கள்.  தமிழினத்தின்அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெறும் சம்பந்தனும் சுமந்திரனும் போதாது. இன்னும் வேறு நல்ல தலைவர்களும் தேவை. இந்த விடயத்தை இவர்கள் இருவரும் அல்லது தமது கட்சி தீர்த்து வைக்கும் என்று நம்புவதே முட்டாள்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!


ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

 

Link to comment
Share on other sites

1 minute ago, சாமானியன் said:

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!


ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

 

இருக்கிறது. அது தான் மேலைத்தேய நாடுகள் முன்னேறி உள்ளன. மதங்களை கைவிட வேண்டிய அவசியமே இல்லை. அவற்றை கண்டுக்காமல் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் நின்று விளையாட விட்டு விட்டு  மக்கள் தமது காரியங்களை ஆற்றினாலே போதும்  நாடு முன்னேறும். 

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!


ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம். இன்றும் பத்து தலை முறைக்கு பின்னராக மேற்குலகம் மீண்டும் மதத்தில் நம்பிக்கை வைக்க கூடும். அதே வேளையில் கிழக்கில் நம்பிக்கை குறைந்து இருக்கலாம்.

உலகில் ஒரே மதத்திற்கான நாடாக வத்திக்கான் உள்ளது. அதற்காக பலரும் தமது சொத்துக்களை எழுதி வைத்து செல்கிறார்கள். உலகில் மிகவும் செல்வந்த நிறுவனம் இது தான்.

Link to comment
Share on other sites

பல மேலைத்தேய நாடுகளில் வாழும் இந்துக்கள்/சைவர்கள் தங்கள் பிள்ளைகளை, இரண்டாம் தலைமுறையினரை தமது மதம் பற்றிய அறிவை அதிகம் கற்பித்து வளர்ப்பதில்லை. அதே பெற்றோர், தமது பிள்ளைகள் வேற்று மதத்தித்தினரை திருமணம் செய்து மதம் மாறும் நிகழ்வுகளும் உள்ளன. இதன் பின்னர் தாம் தவறு விட்டுவிட்டோமோ என ஏங்குபவர்கள் உண்டு,

இதில் பட்டறிவு கூறும் செய்தி என்னவென்றால், நீ நல்லவனாக இருந்தால் மாட்டு காணாது வல்லவனாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் நீ இருந்ததிற்கும்  ஒரு நாள் அடையாளம் இருக்காது.   

Link to comment
Share on other sites

10 hours ago, Maruthankerny said:

சைவசமயம் என்றால் என்ன?
இது இந்துசமயத்துக்குள் இல்லையா?
இந்து மதத்துக்கு ஏற்கனவே ஆர் ஸ் ஸ் வாரியர்கள் அவர்  இவர் என்று 
பல தலைவர்கள் இருக்கிறார்கள் தானே?

ஏன் இப்ப இவர்கள் தணிக்கவாடி ஆட நிற்கிறார்கள்? 

எல்லா மதங்கள் போன்றும் எமது மதத்திலும் தீவிர வலதுசாரி போக்குள்ள பிரிவு உண்டு. ஆங்கிலத்தில் "ஆர்த்தடோக்ஸ்" (orthodox) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும்.

இந்து மதத்தில் அது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் கொள்கையை இன்றுவரை பெரும்பான்மை இந்துக்கள்/சைவர்கள் ஏற்கவில்லை. வருங்காலத்தில் அது மாறலாம்.   உலகிலே இன்றைய பலம் மிக்க தலைவரான ட்ரம்ப் கூட அவ்வாறான மக்களின் (evangelical christians)ஆதரவை பெற்றே அந்த பதவியை வென்றார்.

இலங்கையில் பல மதங்கள் இருந்தாலும், இந்து/சைவ மதமே அரசியல் கலப்பில்லாமல் உள்ளது, ஆனால், அதை முன்மாதிரியாக பின்பற்றாமல், மற்றைய மதங்களை உசுப்பேத்தியே பெரும்பான்மை சிங்கள இனமும் முஸ்லீம்களும் அரசியல் செய்கின்றனர். இதற்கு இந்துக்கள்/சைவர்களின் பதில்தான் என்ன?   

"அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்".   

 

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

"அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்".   

அப்படி ஒரு  கேவலமான நிலமை தமிழருக்கு  வராது. மக்கள் சுதந்திரமாக  தமது கல்வியறிவுடன் வாக்களிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 21. ம் நூற்றாண்டு 22 ம் நூற்றாண்டை நோக்கி நடை போட வேண்டுமே தவிர 15 ம் நூற்றாண்டை நோக்கி அல்ல. 

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம். இன்றும் பத்து தலை முறைக்கு பின்னராக மேற்குலகம் மீண்டும் மதத்தில் நம்பிக்கை வைக்க கூடும். அதே வேளையில் கிழக்கில் நம்பிக்கை குறைந்து இருக்கலாம்.

"சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம்."

உண்மை தான் அம்பனை. நாம் நம் கண்முன்னே தற்போது நடக்கும் நிகழ்வுகளையும், நமக்குத் தெரிந்த வரலாற்றையும் மட்டுமே கருத்தில் கொண்டு உலகநடப்பு சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்கிறோம்.

2000மோ, 5000மோ இத்தனை ஆண்டு வரலாறுகள் மட்டும் நமக்கு படிப்பினையாகாது. அந்த வரலாறு கூட முழுமையானதோ, நம்பகரமாதோ தெரியவில்லை. மேலும் இவற்றுக்கும் முந்தைய வரலாறு பற்றி தெளிவான ஆதாரங்கள் இல்லை. 

நமக்குத் தெரிந்த வரலாற்றிலேயே பல சமூகங்கள் ஒருகாலத்தில் எழுச்சியையும், பின்னர் வீழ்சியையும் கண்டதாக அறிகிறோம். இப்போது முன்னேறி இருக்கும் மேலை நாடுகள் பல நூற்றுகளுக்கு முன்னர் இருந்த இடமே தெரியாது. எதுவும் நிரந்தரமல்ல. 

முன்னேறியதாகச் சொல்லப்படும் மேற்கு நாடுகளில் கூட வெள்ளையினத்தவர் இந்து, பௌத்த, இஸ்லாமிய மதத்துக்கு மாறுவதையும் காண்கிறோம். அதற்காக அதை பிற்போக்குத்தனம் என்பதா? 

தென்னாசியா போன்ற கீழைத்தேய நாடுகள் முன்னேறாமைக்கு மதம் காரணமல்ல. ஊழல், படிப்பறிவின்மை, சாதி இவை தான் முக்கிய காரணம். 

 

 

11 hours ago, ampanai said:

உலகில் ஒரே மதத்திற்கான நாடாக வத்திக்கான் உள்ளது. அதற்காக பலரும் தமது சொத்துக்களை எழுதி வைத்து செல்கிறார்கள். உலகில் மிகவும் செல்வந்த நிறுவனம் இது தான்.

அது மேலை நாடு. அதனால் அது முற்போக்கானது என்று தான் சிலர் கருதுகிறார்கள் போலும்! 😊

Link to comment
Share on other sites

6 minutes ago, மல்லிகை வாசம் said:

அது மேலை நாடு. அதனால் அது முற்போக்கானது என்று தான் சிலர் கருதுகிறார்கள் போலும்! 😊

பல மேற்குலக நாடுகளில் கத்தோலிக்க பாடசாலை சபையால் பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. மற்றையது, பொதுப்பாடசாலை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்க உங்கள் இரத்தத்தில் கத்தோலிக்க மதம் இருந்திருக்க வேண்டும். 

இந்த இரண்டிற்கும் நிதியை தரும்பொழுது அவர்கள் எந்த மதம் என கேட்பது இல்லை. 

இந்த பழம்போக்கான முறையை எதிர்ப்பவர்களில் சைவர்கள்/இந்துக்கள் குறைவு. நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருப்பார்கள். ஆனால், உள்ளூர் கோயில் கணக்கு வழக்கில், போர்க்கொடி !
 

10 hours ago, tulpen said:

அப்படி ஒரு  கேவலமான நிலமை தமிழருக்கு  வராது. மக்கள் சுதந்திரமாக  தமது கல்வியறிவுடன் வாக்களிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 21. ம் நூற்றாண்டு 22 ம் நூற்றாண்டை நோக்கி நடை போட வேண்டுமே தவிர 15 ம் நூற்றாண்டை நோக்கி அல்ல. 

உங்களின் கவனத்திற்கு இந்த யாழில் இருந்து வரும் பத்திரிக்கையின் கருத்தை மீண்டும் இணைகின்றேன் 

On 8/18/2019 at 5:06 PM, ampanai said:

இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது.

 

Link to comment
Share on other sites

தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது.

இதை விட  லட்சம் மடங்கு தமிழ் மக்கள் துன்பத்தை அனுப்பவித்து விட்டனர். ஒரு ஆதீன சுவாமிகளுக்கு கொதி நீர் பட்ட‍த்தை பற்றி அந்த பத்திரிகை நீலி கண்ணீர் வடிக்கிறது. 

Link to comment
Share on other sites

11 minutes ago, ampanai said:

பல மேற்குலக நாடுகளில் கத்தோலிக்க பாடசாலை சபையால் பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. மற்றையது, பொதுப்பாடசாலை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்க உங்கள் இரத்தத்தில் கத்தோலிக்க மதம் இருந்திருக்க வேண்டும். 

இந்த இரண்டிற்கும் நிதியை தரும்பொழுது அவர்கள் எந்த மதம் என கேட்பது இல்லை. 

இந்த பழம்போக்கான முறையை எதிர்ப்பவர்களில் சைவர்கள்/இந்துக்கள் குறைவு. நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருப்பார்கள். ஆனால், உள்ளூர் கோயில் கணக்கு வழக்கில், போர்க்கொடி !

சரியாகச் சொன்னீர்கள், அம்பனை. நாங்கள் பொதுவாக பிறமதங்களைப் பற்றி விமர்சிப்பதில்லை. நமது மதத்தை பிறர் விமர்சிக்கும்போது நமது கருத்தைச் சொன்னால் மதவாத முத்திரை குத்துகிறார்கள். 

Link to comment
Share on other sites

14 minutes ago, tulpen said:

இதை விட  லட்சம் மடங்கு தமிழ் மக்கள் துன்பத்தை அனுப்பவித்து விட்டனர். ஒரு ஆதீன சுவாமிகளுக்கு கொதி நீர் பட்ட‍த்தை பற்றி அந்த பத்திரிகை நீலி கண்ணீர் வடிக்கிறது. 

ருல்பென், தமிழர்கள் பல துன்பத்தை அனுபவித்தோம் / அனுபவிக்கிறோம் என்பது பொதுவாக நாமறிந்த ஒன்று. அதற்காக ஒரு பத்திரிகை ஆதீன சுவாமிகளுக்கு கொதிநீர் ஊற்றியதைப் பற்றி எழுதுவது ஏன் நீலிக்கண்ணீர் வடிப்பதாகும். 

மொட்டந்தலைக்கும் முழந்தாழுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். இவ்வாறான உங்கள் கருத்துக்கள் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகாது.

Link to comment
Share on other sites

இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது என நினைக்கிறேன்:

மதங்கள் மனிதரைப் பிரிக்கிறது என்ற பொதுவான கருத்தும் இங்கு நிலவுகிறது. உண்மையில் மதங்கள் ஒத்த சிந்தனையுள்ள மக்களை ஈர்த்து ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

மேலும், மதங்களை சாக்காக வைத்து மக்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள், மதங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் போன்றோரே மதங்களின் மேல் அவப்பெயர் வர மூல காரணம். மதங்கள் நல்வழியையே போதிக்கின்றன. ஆனால் அவற்றை ஆயுதமாக எடுக்கும் மனிதர்களால் தான் கலகங்கள் ஏற்படுகின்றன. பிறர் மத நம்பிக்கையில் அனாவசிய குறுக்கீடு செய்வோரும் அதில் அடக்கம். ஆகவே இவை மதங்களின் தவறல்ல.

Link to comment
Share on other sites

18 minutes ago, மல்லிகை வாசம் said:

இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது என நினைக்கிறேன்:

மதங்கள் மனிதரைப் பிரிக்கிறது என்ற பொதுவான கருத்தும் இங்கு நிலவுகிறது. உண்மையில் மதங்கள் ஒத்த சிந்தனையுள்ள மக்களை ஈர்த்து ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

மேலும், மதங்களை சாக்காக வைத்து மக்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள், மதங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் போன்றோரே மதங்களின் மேல் அவப்பெயர் வர மூல காரணம். மதங்கள் நல்வழியையே போதிக்கின்றன. ஆனால் அவற்றை ஆயுதமாக எடுக்கும் மனிதர்களால் தான் கலகங்கள் ஏற்படுகின்றன. பிறர் மத நம்பிக்கையில் அனாவசிய குறுக்கீடு செய்வோரும் அதில் அடக்கம். ஆகவே இவை மதங்களின் தவறல்ல.

கடவுளுக்கு சக்தி இருந்தால் இதை எல்லாம் தடுக்கலாம் தானே. மனிதரை காப்பாற்றும் கடவுள்களை நான் இது வரை காண வில்லை. கடவுள்களை காப்பாற்றும் மனிதர்களை தான் கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது என நினைக்கிறேன்:

மதங்கள் மனிதரைப் பிரிக்கிறது என்ற பொதுவான கருத்தும் இங்கு நிலவுகிறது. உண்மையில் மதங்கள் ஒத்த சிந்தனையுள்ள மக்களை ஈர்த்து ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

மேலும், மதங்களை சாக்காக வைத்து மக்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள், மதங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் போன்றோரே மதங்களின் மேல் அவப்பெயர் வர மூல காரணம். மதங்கள் நல்வழியையே போதிக்கின்றன. ஆனால் அவற்றை ஆயுதமாக எடுக்கும் மனிதர்களால் தான் கலகங்கள் ஏற்படுகின்றன. பிறர் மத நம்பிக்கையில் அனாவசிய குறுக்கீடு செய்வோரும் அதில் அடக்கம். ஆகவே இவை மதங்களின் தவறல்ல.

நல்ல கதை நீளம்போதாது ......
மில்லியன் கணக்கில் பரிய போர்மூலம் மக்களை கொன்றதில் இருந்து 
குச்சுஒழுங்கையில் இருந்த குஞ்சனை கொன்றவரை இந்த மதங்களும் 
அதை நம்பும் மூடரும் இருக்கிறார்கள் என்பதுதான் உலக வரலாறு. 

சைவமத நாயன்மார்களான அப்பர் சுந்தரர் சம்மந்தர் வரை கொலையுண்டு போன வரலாறுதான் 
எமக்கு மிஞ்சியது ........... 
அப்பாவி மக்களை கொன்று அடிமைகளாக்கி இல்லாத பொய் புரட்டுக்கள் ஆபாசகதைகள் 
காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களை புகுத்தி இந்துக்கள் என்று போன்றவை போர்த்தி சாமர்த்தியமாக 
காட்டு விலங்கிலும் கீழாக இன்று தமிழரை சொந்த புத்தியையோ ....யாரும் சொல்லும் கருத்துக்களையோ 
கேட்க முடியாது மதம் பிடித்த யானைகள் ஆக்கி வைத்த்திருக்கிறது என்பதுக்கு ஈழமும் தமிழகமும் சாட்சியாக இருக்கிறது. 

மக்களை ஏய்த்து மூளைச்சலவை செய்து ஏழை எளியவர் தொடங்கி பணக்காரர் வரை ஏமாற்றி 
பணம்பறித்து ஒரு குறித்த சமூகமே எந்த வேலை வெட்டியும் இல்லமால் வளரும் கூடாரம்களாக 
எமது முன்னையோர் கட்டிய கோவில்கள் ஆகி இருக்கிறது. 

தமிழனின் மதம் சிவன் மேலே இருக்கிறான் கீழே இருக்கிறான் என்று மாயாஜாலம் செய்ததில்லை 
நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. அகங்காரம்  ஆசை கோபம் காமம் போன்றவை கடந்து நீ நீயாக இருந்தால்  நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. 
இப்போது கூட பேச்சு  வழக்கில் சும்மா எந்த சோலியூம் இல்லாமல் இருப்பவர்கள் .... "அவன் செத்தே சிவனே என்று இருந்தான்" என்று சொல்வதுண்டு. 
அப்போது அது இப்படி வெறி பிடித்த மனிதரை உருவாக்கும் மாதமாக இருக்கவில்லை ... மனிதருக்கு வாழும் வழியை  காட்டும் ஓர் மார்க்கமாகவே இருந்தது. 

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

கடவுளுக்கு சக்தி இருந்தால் இதை எல்லாம் தடுக்கலாம் தானே. மனிதரை காப்பாற்றும் கடவுள்களை நான் இது வரை காண வில்லை. கடவுள்களை காப்பாற்றும் மனிதர்களை தான் கண்டுள்ளேன்.

இதை எல்லாம் தடுப்பது மட்டும் கடவுளின் வேலை இல்லை, ருல்பென். சைவ சமயத்தில் நாம் கற்றதின் படி கடவுளின் தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்பனவாகும்.

நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றல் உண்டு. அதை நாம் அடக்க முடியாது. அதை முழுதாக விபரிக்க முடியாது. 

மனிதனை விஞ்சிய சக்தி இல்லை எனில் மனிதனே போரால், இயற்கையால், நோயால் வரும் அழிவுகளைத் தடுத்திருக்கலாமே? எல்லாம் நமது சக்தியை விஞ்சிய ஏதோ ஒரு சக்தியால் தான் இயங்குகிறது. அழித்தலும் அந்த இயக்கத்தின் ஓர் பகுதியே! 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

மில்லியன் கணக்கில் பரிய போர்மூலம் மக்களை கொன்றதில் இருந்து 
குச்சுஒழுங்கையில் இருந்த குஞ்சனை கொன்றவரை இந்த மதங்களும் 
அதை நம்பும் மூடரும் இருக்கிறார்கள் என்பதுதான் உலக வரலாறு. 

மருதங்கேணி, எதற்காக எல்லாவற்றுக்கும் மதத்தின் மீது பழி போடுகிறீர்கள்? ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அதிகார வர்க்கம் பேராசை காரணமாகப் போர் தொடுக்கிறது. மதங்களின் இயல்பு இதுவல்ல. 

மதங்களுடன் மனிதர்களின் பொன், பொருள், நிலம், பெண் மீதான ஆசையைக் கலக்காதீர்கள். இவை தான் போருக்கு மூல காரணம். கூடவே இந்த ஆதிக்க வெறியர்கள் தமது மதத்தையும் தாம் ஆட்சிப்படுத்திய தேசங்களில் பரப்பினார்கள். இது ஆட்சியாளர்களின் வெறியே தவிர, மதங்கள் மீதான தவறல்ல.

 

2 hours ago, Maruthankerny said:

சைவமத நாயன்மார்களான அப்பர் சுந்தரர் சம்மந்தர் வரை கொலையுண்டு போன வரலாறுதான் 
எமக்கு மிஞ்சியது ........... 
அப்பாவி மக்களை கொன்று அடிமைகளாக்கி இல்லாத பொய் புரட்டுக்கள் ஆபாசகதைகள் 
காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களை புகுத்தி இந்துக்கள் என்று போன்றவை போர்த்தி சாமர்த்தியமாக 
காட்டு விலங்கிலும் கீழாக இன்று தமிழரை சொந்த புத்தியையோ ....யாரும் சொல்லும் கருத்துக்களையோ 
கேட்க முடியாது மதம் பிடித்த யானைகள் ஆக்கி வைத்த்திருக்கிறது என்பதுக்கு ஈழமும் தமிழகமும் சாட்சியாக இருக்கிறது. 

மக்களை ஏய்த்து மூளைச்சலவை செய்து ஏழை எளியவர் தொடங்கி பணக்காரர் வரை ஏமாற்றி 
பணம்பறித்து ஒரு குறித்த சமூகமே எந்த வேலை வெட்டியும் இல்லமால் வளரும் கூடாரம்களாக 
எமது முன்னையோர் கட்டிய கோவில்கள் ஆகி இருக்கிறது. 

மீண்டும் இவை இந்து மதத்தின் குறைபாடு அல்ல; ஆதிக்க வெறியர்களின் தவறே!

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

தமிழனின் மதம் சிவன் மேலே இருக்கிறான் கீழே இருக்கிறான் என்று மாயாஜாலம் செய்ததில்லை 
நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. அகங்காரம்  ஆசை கோபம் காமம் போன்றவை கடந்து நீ நீயாக இருந்தால்  நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. 
இப்போது கூட பேச்சு  வழக்கில் சும்மா எந்த சோலியூம் இல்லாமல் இருப்பவர்கள் .... "அவன் செத்தே சிவனே என்று இருந்தான்" என்று சொல்வதுண்டு. 
அப்போது அது இப்படி வெறி பிடித்த மனிதரை உருவாக்கும் மாதமாக இருக்கவில்லை ... மனிதருக்கு வாழும் வழியை  காட்டும் ஓர் மார்க்கமாகவே இருந்தது. 

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றும் இந்து மதம் மனிதருக்கு வாழும் வழி காட்டும் ஓர் மார்க்கமாகவே இருக்கிறது. ஆனால், மக்கள் தான் நல்லவற்றை விட்டு விட்டு வேண்டாதனவற்றை நாடுகின்றனர்.

உதாரணத்திற்கு, நித்தியானந்தா நல்ல ஆன்மிக கருத்துக்களை சொன்ன போது பலரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவரது மன்மதலீலை பற்றிய வீடியோ வெளிவந்த பின்னர் தான் அவரைப்பற்றி தேடுகிறார்கள், பேசுகிறார்கள் - அதுவும் அவரது லீலைகள் பற்றித் தான். (இங்கு நித்தியானந்தாவுக்காக வக்காலத்து வாங்க நான் வரவில்லை; நடப்பதைச் சொன்னேன்). ஆகவே, பலரது தேடல் இந்த லட்சணத்தில் இருக்கும் போது மதங்களில் குறை காண்பது சரியல்ல. அவை காட்டும் நல்வழியில் பயணிப்பது நமது தெரிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

மருதங்கேணி, எதற்காக எல்லாவற்றுக்கும் மதத்தின் மீது பழி போடுகிறீர்கள்? ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அதிகார வர்க்கம் பேராசை காரணமாகப் போர் தொடுக்கிறது. மதங்களின் இயல்பு இதுவல்ல. 

மதங்களுடன் மனிதர்களின் பொன், பொருள், நிலம், பெண் மீதான ஆசையைக் கலக்காதீர்கள். இவை தான் போருக்கு மூல காரணம். கூடவே இந்த ஆதிக்க வெறியர்கள் தமது மதத்தையும் தாம் ஆட்சிப்படுத்திய தேசங்களில் பரப்பினார்கள். இது ஆட்சியாளர்களின் வெறியே தவிர, மதங்கள் மீதான தவறல்ல.

 

மீண்டும் இவை இந்து மதத்தின் குறைபாடு அல்ல; ஆதிக்க வெறியர்களின் தவறே!

 

53 minutes ago, மல்லிகை வாசம் said:

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றும் இந்து மதம் மனிதருக்கு வாழும் வழி காட்டும் ஓர் மார்க்கமாகவே இருக்கிறது. ஆனால், மக்கள் தான் நல்லவற்றை விட்டு விட்டு வேண்டாதனவற்றை நாடுகின்றனர்.

உதாரணத்திற்கு, நித்தியானந்தா நல்ல ஆன்மிக கருத்துக்களை சொன்ன போது பலரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவரது மன்மதலீலை பற்றிய வீடியோ வெளிவந்த பின்னர் தான் அவரைப்பற்றி தேடுகிறார்கள், பேசுகிறார்கள் - அதுவும் அவரது லீலைகள் பற்றித் தான். (இங்கு நித்தியானந்தாவுக்காக வக்காலத்து வாங்க நான் வரவில்லை; நடப்பதைச் சொன்னேன்). ஆகவே, பலரது தேடல் இந்த லட்சணத்தில் இருக்கும் போது மதங்களில் குறை காண்பது சரியல்ல. அவை காட்டும் நல்வழியில் பயணிப்பது நமது தெரிவு. 

உங்களுக்கு சுருக்கமாக நான் கூற கூடியது 
பல முஸ்லீம்களுக்கு இங்கு நான் கூறுவதுதான் 

2000 .... 3000..... 4000 வருட பழமையான குரான் பைபிள் மற்ற புரட்டுகளிலும்  
என்ன எழுதி இருக்கிறது என்பது எனக்கு தேவை இல்லை .... எனது கருத்து அவை பற்றியதும் இல்லை.
இப்போ   ... இன்று 
இந்து ..
முஸ்லீம் ...
கிறிஸ்தவன் ...
என்று சொல்பவன் இது என்னுடைய மதம் சார்ந்தது என்று சொல்லிக்கொண்டு வீதிகளில் எதை செய்கிறானோ 
அது பற்றியதுதான் எனது கருத்தும் ஆட்சேபனையும் ..... அதுதான் என்னை பாதிக்கிறது 
வேறு பல மக்களை பாதிக்கிறது...... பல தேசங்கள் இனங்களை அழிக்கிறது. 

இந்துமதம் என்பதே இல்லாத ஒன்று ...
அதை ஏன் திரும்ப திரும்ப வழிகாட்டுகிறது என்று எழுதுகிறீர்கள்?
அப்படி என்ன வழி  காட்டுகிறது என்று சுருக்கமாக ஒரு பந்தி எழுதுகிறீர்களா 
வாசித்து அறிவோம்.  

குரான் பைபிள்  கீதை என்று புகழும் புத்தங்களை விட 
எவ்ளவோ நல்ல கருத்து உள்ள புத்தகங்கள் இன்று மில்லியன் கணக்கில் இருக்கிறது 
பட்டுகோட்டை  எழுதியதுபோல் ......
எல்லாம்தான் படிச்சீங்க ..... என்ன செய்து கிழிச்சீங்க? 

நீங்களே பட்டும் படாமல் ... தயங்கி தயங்கி எழுதுவதுதான் உண்மையும் 
இன்றைய உலக யதார்த்தமும் ..... இந்த பாழாய்ப்போன மதங்கள் எல்லாம் பெண்களை அடிமை செய்யவும் 
இன்னொரு இனத்தை அழிக்கவும் ... இன்னொரு சமூக குழுமத்தை நசுக்கவும் .....
மனிதர்களை ஆறாம் அறிவை செயல்படுத்தாது மிருகங்கள் போல வைத்திருக்கவும்தான் 
இருக்கிறது தவிர  ...... உலகில் மதங்களால் ஏதும் நல்லது நடக்குமெனில் 
அதை சி ஐ எ  மொஸாட் போன்ற பாரிய உளவுதுறைகள் பரிய பண செலவில் பாரப்ப மாட்டார்கள். 
அதையும்தாண்டி  சமூகம் மதத்தால் நன்மை அடைகிறது என்று இருந்தால் எழுதுங்கள் 
அது பற்றி விவாதிப்போம். 

Link to comment
Share on other sites

25 minutes ago, Maruthankerny said:

இப்போ   ... இன்று 
இந்து ..
முஸ்லீம் ...
கிறிஸ்தவன் ...
என்று சொல்பவன் இது என்னுடைய மதம் சார்ந்தது என்று சொல்லிக்கொண்டு வீதிகளில் எதை செய்கிறானோ 
அது பற்றியதுதான் எனது கருத்தும் ஆட்சேபனையும் ..... அதுதான் என்னை பாதிக்கிறது 

மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன். அது மதத்தின் தவறல்ல. அவர்கள் செய்வது போல் செய்வது தான் எனது வழியுமல்ல. அவரது செயல்கள் உங்களைப் பாதித்தால் நேருக்கு நேராகச் சென்று அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டியது தானே? எதற்காக உண்மையான followersஇடம் இந்தக் கேள்வி??

30 minutes ago, Maruthankerny said:

உலகில் மதங்களால் ஏதும் நல்லது நடக்குமெனில் 
அதை சி ஐ எ  மொஸாட் போன்ற பாரிய உளவுதுறைகள் பரிய பண செலவில் பாரப்ப மாட்டார்கள். 

இது மதங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டிய சமூகப்பிரச்சினைகள். இதில் உள்ள அரசியல் சிக்கலானது. மதத்தை இதற்குள் இழுக்காதீர்கள். மேலும் முதல் பந்தியில் எழுதியதே இதற்கான பதிலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.