Jump to content

’அறநெறி வகுப்புகளால் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன’


Recommended Posts

2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:19

 

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புகளால், மாணவர்கள் பாரிய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.

தரணிக்குளம் கிராமத்தில், பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனிமையில் வீடுகளிலும் வெளி இடங்களிலும் உலாவும் சிறுவர்கள், தீய செயல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி, சிறுவயதிலேயே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது.

இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

http://www.tamilmirror.lk/வன்னி/அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன/72-236915

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரைகள் ஓய்வை விரும்பினாலும் , அலைகள் விடுவதில்லை.

கருத்தாளர் ஓய்வை விரும்பினாலும் அம்பனை விடுவதில்லை 😂.

#இந்தமாதம், சமய மாதம் 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

புலம்பெயர் மேற்கத்தைய நாடுகளில் பல வேறு வழிகள் இருந்தும் கூட, பதின்ம வயதினர் பல 'சிக்ககளுக்கு' உள்ளாகின்றனர். ஆனால், அவர்களுக்கு பல வேறு தெரிவுகள் உள்ளன : விருப்பமான ஒரு விளையாட்டை தெரிந்து அதில் ஈடுபடுதல் ;  ' நெட்ப்ளிக்க்சில்' 'பிந்ச்' பார்த்தல் என தெரிவுகள் உள்ளன. 

தாயகத்தில் அவ்வாறான தெரிவுகள் குறைவு. 

அந்த மக்களுக்கு அறநெறி கல்வி என்பது இவ்வாறான தவறான தெரிவுகளை செய்வதை தடுக்க முடியும். அந்த வகையில் அறம் சார்ந்த கல்வி என்பது மதம் சார்ந்தும் இருக்கலாம். அதில் அவர்கள் கற்கும் சில ஆக்கம் விதிமுறைகள் அவர்கள் வளர்ந்து ஆளான பின்பு, தாமாக எது சரி / பிழை என்பது தமது பகுத்தறிவால் அறியும் காலம் வந்த பின்பு  அதில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத படிப்பினைகளை நீக்குவார்கள். 

ஆக, இவ்வாறான கல்விகள் தமது பிள்ளை செல்வங்களுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது. 

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

 அந்த மக்களுக்கு அறநெறி கல்வி என்பது இவ்வாறான தவறான தெரிவுகளை செய்வதை தடுக்க முடியும். அந்த வகையில் அறம் சார்ந்த கல்வி என்பது மதம் சார்ந்தும் இருக்கலாம். அதில் அவர்கள் கற்கும் சில ஆக்கம் விதிமுறைகள் அவர்கள் வளர்ந்து ஆளான பின்பு, தாமாக எது சரி / பிழை என்பது தமது பகுத்தறிவால் அறியும் காலம் வந்த பின்பு  அதில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத படிப்பினைகளை நீக்குவார்கள். 

அவர்கள் வளர்ந்து தமது பகுத்தறிவால் நீக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக நீங்களே  ஒத்துக்கொள்ளுகின்றீர்கள். அவற்றை கற்பிப்போர்  வளர்ந்தவர்கள் தானே. அவர்களே காலத்திற்கு ஒவ்வாத மூடத்தனங்களை நீக்கிவிட்டு கற்பிக்கலாம் தானே. இது தானே மானுட வளர்ச்சி. 

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

அவர்கள் வளர்ந்து தமது பகுத்தறிவால் நீக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக நீங்களே  ஒத்துக்கொள்ளுகின்றீர்கள். அவற்றை கற்பிப்போர்  வளர்ந்தவர்கள் தானே. அவர்களே காலத்திற்கு ஒவ்வாத மூடத்தனங்களை நீக்கிவிட்டு கற்பிக்கலாம் தானே. இது தானே மானுட வளர்ச்சி. 

அது மானுட வளர்ச்சி என்பது சரி. ஆனால், இந்த உலகம் பல மானுடங்களை கொண்ட ஒரு கூட்டு அமைப்பு. இங்கே பல விதமான வெவ்வேறு பட்ட வளர்ச்சிகள் உள்ளன. அவை பயணிப்பதும் வேறு வேறு திசைகளில், வேகத்தில். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.