Jump to content

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்


Recommended Posts

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

et.jpg

 

https://www.virakesari.lk/article/62932

Link to comment
Share on other sites

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை 

(நா.தனுஜா)

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

 இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்.

குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/62946

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை -  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை எனவும் அதேவேளை, அவரின் நியமனத்தினால் மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 

இந்நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தனிநபரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமையானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற பெரும் அவமரியாதையாகும். சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தினால் நாங்கள் மிகுந்த கலக்கமடைந்திருக்கிறோம் என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/62952

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்

அமெரிக்க தன் வசம் ஆதாரங்களை  வைத்துள்ளது, ஆனால் தண்டிக்க இன்றும் விரும்பவில்லை. காரணம், அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் இலங்கை பற்றிய மாற்றம் வரவில்லை.

அம்மையாரின் கவலை முதலைக்கண்ணீரே !

Link to comment
Share on other sites

ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போர்க்குற்றப் புகார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

 

ஷவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், ஷவேந்திர சில்வா மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஷவேந்திர சில்வா தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

படத்தின் காப்புரிமை Twitter

 

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதன்படி, இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது, தமிழர்களை அவமதிக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

படத்தின் காப்புரிமை Twitter

 

யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதானது, தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த நியமனம் வழங்கப்பட்டமையினால் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாம் அதிருப்தியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அமெரிக்காவின் பதில்

இலங்கை இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும், நம்பகமானதும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அம்னெஸ்ட்டி இன்டர்நெஷனல் எதிர்ப்பு

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய இராணுவ தளபதியாக நியமித்தமையானது, யுத்தத்தின் போது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையாக குறைபாடாகவே கருதுவதாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை தெரிவிக்கிறது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எதிர்ப்பு

"யுத்த குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக" அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை யுத்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்

இந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் பி.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிடும்போது இதனைக் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகியுள்ள நிலையில், ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒற்றுமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ரீதியில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை, சர்வதேசத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49397774

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி மகிந்தவின் இன்னொரு வடிவம் என்று 2015 இலேயே சொல்லிட்டம். அப்ப எல்லாம் நல்லவர் வல்லவர்.. நல்லாட்சி என்று குடுகுடுப்பை அடிச்சவை இப்ப..?! 😲

Link to comment
Share on other sites

தெரிந்தோ  தெரியாமலோ மைத்திரி ஒரு நன்மை செய்துள்ளார். மீண்டும் சர்வதேசத்திற்கு போர்க்குற்றம் பற்றிய நினைவுகளை மீட்க வைத்துள்ளார். 

யார் புதியாய்  மகேஷின் இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களும் தமிழின அழிப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து இருப்பார்கள். 

ஷவேந்திர சில்வாவை நியமித்தது மூலம் சர்வதேசத்திற்கு இங்கு நல்லெண்ணமும் இல்லை நம்பகத்தன்மையும் இல்லை என்பதை மீண்டும் கூற முடிகின்றது.  

Link to comment
Share on other sites

#சவேந்திரசில்வா
சவீந்திர சில்வா மீது பயணத்தடை வேண்டும் – அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு
 

US embassy statement.jpg

Link to comment
Share on other sites


அமெரிக்காவில் உள்ள ஒரு சட்டப்படி, போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் எந்த உறவுகளையும் வைக்க முடியாது என்கிறது,
இதன் மூலம் மைத்திரி 'சோபா' உடன்படிக்கைக்கு ஆப்பு வைத்துள்ளாரா? 


Under Leahy Law, US troops can’t cooperate with foreign forces facing war crimes allegations.

http://www.ft.lk/top-story/Storm-of-controversy-over-new-Army-Chief-appointment/26-684244

Link to comment
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபை கவலை

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இல்ஙகையின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த நியமனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவுக்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் போது, இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கையானது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மோசமாக பாதிப்பதுடன், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின், அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222576/ஐக்கிய-நாடுகள்-சபை-கவலை

Appointment of alleged war criminal to head of Sri Lanka army ‘deeply troubling’, says UN human rights chief

https://news.un.org/en/story/2019/08/1044501

 

Link to comment
Share on other sites

சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக  கனடா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/63011

Link to comment
Share on other sites

’இராணுவ தளபதி நியமனத்தில் வெளிநாடுகள் தலையிட முடியாது’

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி நியமனமானது, ஜனாதிபதியின் சுயாதீனமான தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது, 

அரச சேவையின் நியமனங்கள் மற்றும் அரச சேவை செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுவது சிறப்பான ஒன்று அல்லவென்றும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இராணுவ-தளபதி-நியமனத்தில்-வெளிநாடுகள்-தலையிட-முடியாது/150-237077

‘ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவர்’

ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:55

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷவேந்திர சில்வா எமக்கு முக்கியமானவரெனத் தெரிவித்த பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மூலமே அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவித்தார்.

பத்தரமுல்ல- சுஹூருபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சவேந்திர-சில்வா-எமக்கு-முக்கியமானவர்/175-237059

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் நல்லிணக்கம்,  பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நலிவடையும் - கனடா , ஜெர்மன் கண்டனம் 

Published by T Yuwaraj on 2019-08-20 19:20:37

(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கும் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள், இந்நியமனம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நலிவடையச் செய்வதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

Image result for canada and german png

லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச, உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் பலவும் தமது கண்டங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் வெகுவாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒருபகுதியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட், 'உண்மையிலேயே இவ்விடயம் மிகுந்த அவதானத்திற்குரியது' என்றும் பதிவிட்டிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/63043

Link to comment
Share on other sites

 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சவேந்திர டி சில்வா  இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்ததால்::

  1. ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைப்படலாம்.
    1. யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான  அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்
    2.  இதனால் கிடைக்கும் வருமானம் தடைப்படலாம்

      2. இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்

 

On Sri Lanka Shavendra Silva as Army Commander Inner City

UNITED NATIONS GATE, August 19

"January 29-3: On Sri Lanka, given the newly assembled evidence regarding Shavendra Silva, formerly UN Peacekeeping adviser now Sri Lanka Army Chief of Staff, how can the SG and USG Lacroix continue to deploy Silva's troops as peacekeepers? What vetting is taking place? What is the SG's and USG's comment and action on this individual as chief of staff of an army the UN has been taking troops from?" There was no answer then; now the question has been submitted to a wider UN group including Guterres' Global Communicator Melissa Fleming. Watch this site, and see ITJP's dossier.

Now ITJP has said, "the United Nations cannot in good conscience continue to deploy peacekeepers from an Army headed by a man who allegedly repeatedly and knowingly committed war crimes against hundreds of thousands of civilians. Major General Silva of course is not alone in being promoted post-War – there is a pattern of rewarding, honouring and promoting alleged perpetrators, deploying them in prestigious UN jobs, as diplomats and in the former conflict areas to administer the very people they defeated. This is a text book case of impunity.

http://www.innercitypress.com/sri1silvagutflem081919.html

Link to comment
Share on other sites

Colombo based advocacy group the Centre for Policy Alternatives (CPA) has called on the Government to urgently review the appointment in light of the serious allegations levelled against Lt. Gen. Shavendra Silva.

In a statement issued yesterday, the CPA charged that Shavendra Silva’s appointment as Commander of the Army was effectively a “repudiation” of promised security sector reform and accountability by the current Government. “It demonstrates a clear disregard for human rights norms, and will facilitate the further entrenchment of impunity in Sri Lanka,” the CPA statement said.

It also cited that the 2015, the Paranagama Commission, appointed by then President Mahinda Rajapaksa, referred to the ‘white flag’ surrenders and other cases and noted credible allegations of war crimes that required independent investigations.

“Major General Silva’s series of promotions demonstrates how these alleged violations appear to be rewarded,” CPA said.

The advocacy group has also urged the Parliamentary Sectoral Oversight Committees to adopt a more robust role to monitor Silva’s work and the Sri Lanka Army and “take action to prevent Sri Lanka from sliding further towards a state where human rights violations are ignored and impunity thrives”. 

http://www.ft.lk/top-story/Controversy-over-new-Army-Chief/26-684244

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது  – ஐரோப்பிய ஒன்றியம் 

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்று  செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.

சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது. 

அத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/63054

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் -மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா) Published by T Yuwaraj on 2019-08-20 22:15:42

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அதேவேளை, மனித உரிமை மீறல் குற்றங்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களினால் எடுக்கப்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியிருக்கிறது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அறிக்கையில் முழுமையான விபரம் வருமாறு:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தியிருக்கும் அதேவேளை, சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் பின்னணியில் இந்நியமனம் தொடர்பில் உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சவேந்திர சில்வா இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்ட வேளையிலும் நாங்கள் இதனையொத்த கருத்தையே வெளியிட்டிருந்தோம். பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் என்பன குறித்து வாக்களித்த தற்போதைய அரசாங்கம், அவற்றை நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகயையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது. மனித உரிமைகளுக்குச் செய்யப்படும் அவமரியாதையையும், தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களையுமே இந்நியமனம் வெளிக்காட்டி நிற்கிறது.

இந்நிலையில்  சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் வலியுறுத்துவதுடன், மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/63051

Link to comment
Share on other sites

போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை ஜனாதிபதியால், நாட்டின் இராணுவத் தளபதியாக்கப்பட்டுள்ளார். இதை  சனாதிபதி தெரிந்தே செய்துள்ளார். 

கேள்வி இங்கே என்னவென்றால் :
- அமெரிக்க தலைமையிலான மேற்குலத்தின் இரகசிய ஆதரவுடன் தான் செய்தாரா? இல்லை 
- வரும் எந்த சவாலையும் சமாளிக்கலாம் என எண்ணி செய்தாரா?  

இதுவரை வெளிவந்த  செய்திகளின் வைத்து பார்க்கும்பொழுது மேற்குலக ஆதரவுடன் தான் செய்துள்ளார் என நம்பலாம். மேற்குலம், உண்மையிலேயே இந்த நியமனத்தை வாய்ச்சொல்லுக்கும் மேலாக சென்று பொருளாதார தடை இல்லை தூதுவரை மீளழைத்தல் போன்ற இராசதந்திர நகர்வை செய்யலாம். 

இன்னும் சில வாரங்கள் சென்ற பின்னர் அனைவரும் இந்த நியமனத்தை மறந்து விடுவார்கள் என்பதே சிங்களத்தின் கணிப்பு. 

இந்த கணிப்பு வெற்றி தரும் வேளையில், மைத்திரி கூட சனாதிபதி சேர்தலில் குதிக்கலாம். 

Link to comment
Share on other sites

On 8/20/2019 at 12:06 AM, ampanai said:

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியக் கயவர்களை, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் கைதேர்ந்த இந்தியப் பயங்கரவாதக் கும்பலை   மலைபோல் நம்பிய அமெரிக்க இராஜதந்திர முட்டாள்களும் இறுதியில் இந்தியாவைப் போல இலங்கையில் அமெரிக்கா பிச்சைப்பாத்திரத்துடன் அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 

கடத்தல், பாலியல்  பலாத்காரம்,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல். கொலைகளில் பிரபலமான ஒரு மிலேச்ச பயங்கரவாதி சவேந்திர சில்வாவை சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளின் தலைவனாக நியமித்ததன் மூலம் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுத்துவந்த சர்வதேச முட்டாள்களும் கூட்டமைப்பினரும் தாங்கள் கையாலாகாத பிற்போக்கு அரசியல்வாதிகள் என வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் சுமந்திரன் வகையறாக்கள் விடும் அறிக்கைகள் பயனற்றவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

by in செய்திகள்

eagle-flag-usa-300x199.jpg

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி  ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும்,  சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.

இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு  வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.

அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்குவதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு, ஜனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/08/21/news/39651

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன? யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா? இல்லை 

சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா? அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே 

ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் இன்னும் வடிகிறது -  ஸ்ரீதரன் எம்.பி. 

Published by R. Kalaichelvan on 2019-08-21 12:00:12

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

sridharan_mp.jpg

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில்,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன  சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார். 

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங்களைக்கொண்டு வருவேன் . மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த , இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன்  என்று சொல்கின்றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

 தமிழ் மக்களின் இரத்தம் குடித்த  சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது. 

அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/63081

Link to comment
Share on other sites

On 8/20/2019 at 12:31 AM, ampanai said:

தெரிந்தோ  தெரியாமலோ மைத்திரி ஒரு நன்மை செய்துள்ளார். மீண்டும் சர்வதேசத்திற்கு போர்க்குற்றம் பற்றிய நினைவுகளை மீட்க வைத்துள்ளார். 

யார் புதியாய்  மகேஷின் இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களும் தமிழின அழிப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து இருப்பார்கள். 

ஷவேந்திர சில்வாவை நியமித்தது மூலம் சர்வதேசத்திற்கு இங்கு நல்லெண்ணமும் இல்லை நம்பகத்தன்மையும் இல்லை என்பதை மீண்டும் கூற முடிகின்றது.  

சர்வதேசம் சும்மா பெயருக்கு அறிக்கை விடும். பின்னுக்கு அவர்களே ஆலோசனை கொடுத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

சர்வதேசத்தின் பங்களிப்புடன்  தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்  - மனித உரிமைகள் கண்காணிப்பகம் 

(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது. 

hrw.jpg

இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

லெப்டினன் ஜெனரல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுந்தொனியில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கிறது.

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இந்த நியமனம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.  

இந்நிலையில் உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/63114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…

புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21.08.19) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/129299/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.