Jump to content

ஜனா­தி­பதி தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து சிவா­ஜி­லிங்கம் கருத்து


Recommended Posts

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) தவி­சாளர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

sivajilingam.jpg

வவு­னி­யாவில் அமைந்­துள்ள தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற தலை­மைக்­கு­ழுவின் கூட்­டத்தின் பின்னர் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில், 

இலங்­கையின் எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்­பெற இருக்­கின்ற நிலையில், இது தொடர்­பாக விரி­வான கலந்­து­ரை­யா­டலை தமி­ழீழ விடு­தலை இயக்கம் நேற்­றைய தினம் ஐந்து மணி நேரத்­திற்கு மேலாக நடத்­தி­யது.

எனவே இந்த நாட்டில் ஏழு ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த நிலை­யிலும் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­த­ர­மான தீர்வு எதுவும் கிடைக்­க­வில்லை. எது எவ்­வாறு இருந்­தாலும் ஈழத்­தமிழ் மக்கள் தங்­க­ளுக்கு ஏதா­வது கிடைக்­குமா என்ற நிலையில் இத்­தேர்­தலை பயன்­ப­டுத்த வேண்டும் என்ற எண்­ணப்­பாடு இருக்­கின்­றது. எனவே இது தொடர்­பாக தமி­ழீழ விடு­தலை இயக்கம் இம்­மாத இறு­திக்குள் மத்­தி­ய­குழு மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுக்க இருக்­கின்­றது.

பிர­தான கட்­சிகள் இரண்டு தமது  வேட்­பா­ளர்­களை அறி­வித்­தி­ருக்­கி­ன்றன. இந்த சூழ்­நி­லையில் அவர்­க­ளு­டைய தேர்தல் அறிக்­கையை பொறுத்­துதான் எங்­க­ளு­டைய தீர்­மா­னத்தை இந்­நாட்டு மக்­க­ளிற்கு பகி­ரங்­க­மாக தெரி­விக்க இருக்­கின்­றோம் என்றார்.

இதே­வேளை, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தி­னு­டைய தீர்­மா­ன­மா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய  தீர்­மா­ன­மாக இருக்­குமா  என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை மூன்று கட்­சிகள் இருக்­கின்­றன. அதில் ஒரு கட்சி எங்­க­ளு­டைய கட்­சி­யாகும். நாங்கள் எடுக்­கின்ற தீர்­மா­னத்­தினை ஏனைய இரு கட்­சி­க­ளோடும் கலந்­தா­லோ­சித்து ஒரு இறுதித் தீர்­மா­னத்­திற்கு வருவோம். எனவே நாங்கள் எடுக்­கின்ற தீர்­மா­னத்­திற்கு அவர்கள் சாத­க­மாக இருக்கப் போகின்­றார்­களா அல்­லது எதி­ராக இருக்கப் போகின்­றார்­களா என்­பதை காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

உங்­க­ளு­டைய தீர்­மா­னத்­திற்கு எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்­மானம் இருக்­கு­மே­யானால், உங்­க­ளு­டைய தீர்­மா­னத்­தி­லேயே உறு­தி­யாக இருப்­பீர்­களா என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய மற்­று­மொரு கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

இது தொடர்­பாக நாங்கள் கருத்து தெரி­விக்­க­வில்லை. எங்­க­ளது எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்­பாக ஒவ்­வொரு கட்­டங்­க­ளிலும் ஊடக வாயி­லாக தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

நீங்கள் எப்­பொ­ழு­துமே அர­சாங்­கத்தை குறை கூறு­ப­வர்­க­ளா­கவும் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து இயங்­கு­ப­வர்­களை குற்றம் சாட்­டு­ப­வ­ரா­கவும் இருக்­கின்­றீர்கள். ஆனால் உங்­க­ளு­டைய கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வ­ரா­கவும் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து இயங்­கு­ப­வ­ரா­கவும் அரச சொத்­துக்­களை அனு­ப­விப்­ப­வ­ரா­கவும் இருந்து வருகின்ற வேளையில், ஒரே கட்­சிக்குள் இருக்­கின்ற நீங்கள் இரு­வரும் வெவ்­வே­று­பட்ட கருத்­துக்­களை கொண்­டி­ருப்­பதன் காரணம் என்ன என்று ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய மற்­று­மொரு கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

அவ்­வாறு ஒன்றும் இல்லை. எங்­க­ளது கட்­சியின் தீர்­மா­னங்­களை கட்­சி­யி­னு­டைய தலைவர் நிறை­வேற்றி இருக்­கின்றார். குறிப்­பாக கடந்த செப்­டெம்பர் மாதம் இடம்­பெற்ற தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் தேசிய மாநாட்­டிலே இந்த ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்­ப­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் இரண்டாம் மூன்றாம் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாமல் விட்­டதன் மூலம் கட்சி நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொண்டு இருக்­கின்றார். 

இன்­னொரு விடயம் பிரதி குழுக்­களின் தலைவர் என்­பது அர­சாங்­கத்­தி­னு­டைய பதவியல்ல. 2004 ஆம் ஆண்டு நாங்கள் 22 பேர் பாராளுமன்றம் சென்ற போது பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ இருந்த பொழுது நாங்கள் வாக்களிப்பதன் மூலம் எங்களுடைய ஆதரவின் மூலம் எதிர்க்கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். 

அந்த வகையில் செல் வம் அடைக்கலநாதன் இன்றைக்கும் எதிர்க் கட்சியின் ஆசனத்தில் இருப்பதன் மூலம் இது அரசாங்கத்தினுடைய பதவி அல்ல என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62936

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.