Jump to content

‘பிரபாகரனால் பெறமுடியாததை சம்பந்தனாலும் பெறமுடியாது’


Recommended Posts

வா.கிருஸ்ணா / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 06:26

தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் தான் விலகியுள்ளதாகத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), தமிழ் மக்களுக்கு, பிரபாகரனால் பெற்றுக்கொடுக்க முடியாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற்றுக்கொடுக்க முடியாதென்றார்.

மட்டக்களப்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொண்டே ஆதரவு வழங்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் கிழக்கில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவோர் அமைக்கப்படும் ஆட்சியில் பங்குதாரர்களாக மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோட்டாபய,  பசில், சஜித் என யாராக இருந்தாலும் கடந்த காலத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்டதே உண்மையெனவும், அவர் இதன்போது சாடினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிசெய்த காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்கனில் கிறிஸ் மனிதர்கள் உலாவியதையும் வெள்ளை வான்கள் அதிகரித்திருந்ததை தமிழ் மக்கள் இன்றும் மறக்கவும் மறுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாற்று இனத்தை வாழ வைத்து தமிழினத்த வீழ்த்த்தும் அரசியலை செய்யக்கூடாது என்ற நிலைக்குத் தான் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பிரபாகரனால் பெற்றுத் தரமுடியாத எந்த உரிமையையும் எந்தத் தமிழ்த் தலைவர்களாலும் பெற்றுத்தரமுடியாது என்பதை சம்பந்தன் ஐயா காட்டிவருகின்றார் என்றார்.

தீர்வுத்திட்டம் தொடர்பில் காலங்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஏமாந்து, எதிர்க்கட்சித் தலைவன் ஒருவனாக தமிழன் ஒருவன் இருக்கின்றான் என்ற பெருமையோடு வாழ்ந்தார்கள். அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறிகொடுத்த இனமாக தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் எனவும், வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், தான் தொடக்கத்தில் இருந்தே தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவே இருப்பதாகவும் 2001ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே நாடாளுமன்றம் சென்றிருந்ததுடன், 2012ஆம் ஆண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே மாகாண சபைக்கும் சென்றதாகவும் அக்கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவராகவும் மாவட்ட தலைவராகவும் இன்றுவரை இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தனக்குப் பதவிகளைத் தந்து, தன்னை ஒரு பகடைக்காயாகப் பாவிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எந்தக் கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தான் வாழமாட்டேன் எனவும் பதவியை வைத்து தன்னைப் பணியவைக்கமுடியாதெனவும் தெரிவித்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இனித்தான் இயங்குவதில்லையென அறிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பிரபாகரனால்-பெறமுடியாததை-சம்பந்தனாலும்-பெறமுடியாது/73-236999

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொண்டே ஆதரவு வழங்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் கிழக்கில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவோர் அமைக்கப்படும் ஆட்சியில் பங்குதாரர்களாக மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிலவரத்திற்கு ஏற்புடைய அரசியல் பதில்  !

 

3 hours ago, ampanai said:

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தனக்குப் பதவிகளைத் தந்து, தன்னை ஒரு பகடைக்காயாகப் பாவிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எந்தக் கட்சிக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தான் வாழமாட்டேன் எனவும் பதவியை வைத்து தன்னைப் பணியவைக்கமுடியாதெனவும் தெரிவித்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இனித்தான் இயங்குவதில்லையென அறிவித்தார்.

 

காலத்திற்கு ஏற்ற முடிவு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒருவர் கோத்தாவுக்கு ஆதரவு தேடுகிறார்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ....
அப்படி ஏற்றுக்கொள்வது என்றால் இனி தீபாவளியே வாராது என்று இருந்தால் மட்டுமே 
ஏற்றுக்கொள்ள முடியும். 

தீபாவளி நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் இவர் இப்படி பேசுவது தவறு.
சம்மந்தன் ஐயா சுமந்திரனுடன் கூடி ..... என்ன திட்டம் வைத்த்திருக்கிறார் என்பது 
தமிழர்களுக்கு எதிர்காலத்தில் வரும் தீவாளி அன்றுதான் தெரியும். 

சென்ற கிழமைதான் ஐயா அமெரிக்காவை அதிர  வைத்து விட்டு வந்ததாக 
சுமந்திரன் ஐயா அவர்கள் சொல்லி இருந்தார் 
சென்ற கிழமை அமெரிக்கா அதிர்ந்தபோது நாம் பட்ட கஸ்டம் என்னைப்போல 
இங்கு இருப்பவர்களுக்குக்குத்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.