Jump to content

குடும்பத்தின் அபிவிருத்திக்கு நம்பிக்கையின்பால் கிடைக்கும் பலம், சக்தி


Recommended Posts

2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, பி.ப. 05:37

வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு, நம்பிக்கை என்பது அத்தியாவசியமாகிறது. அதேபோன்று, திருமண வாழ்க்கை என்பதும், இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைபெறுகிறது. அவ்வாறானதொரு நம்பிக்கை சீர்குலைந்துவிடுமாயின், அந்த வாழ்க்கை சூன்யமாகிவிடும்.   

ஆரம்ப காலங்களில், குடும்பத்தின் கணவன் - மனைவி உறவென்பது, மிகவும் கௌரவமிக்க பதவிநிலைகளாகவே பார்க்கப்பட்டது. யதார்த்தத்துடன் வாழ்ந்த அக்கால மக்களின் தேவைகளும் மிகவும் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டதால், ஏமாற்றுதல் ஏமாற்றப்படுதல் என்பதற்கு இடமிருக்கவில்லை.

இருப்பினும் இப்போது, தொழில்நுட்பத்துடன் கூடிய வளர்ச்சி, மனித வாழ்க்கைக்கு வரையறுக்க முடியாத தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் கலாசாரங்கள், இலங்கைக்குள்ளும் கடைப்பிடிக்கத் தொடங்கப்பட்டதால், எம்மக்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

இதற்கு முதற்காரணம் தொலைக்காட்சி என்றே கூறலாம். அதனூடாகக் காணும் காட்சிகள், கதாபாத்திரங்களாக, எம்மக்களும் மாறத் தொடங்கியதால், சமூகத்துடனான தொடர்பாடல், பாரிய மாற்றம் காணப்பட்டுள்ளது. இன்று இந்தக் குடும்ப வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைவதற்கும், இந்தச் சமூகத் தொடர்பே காரணமாகி இருக்கின்றது.

அத்தியாவசியமானதும் அவசியமானதுமான விடயங்கள் சமூகத்தோடு வந்துசேரும் போது, வீட்டின் தலைவனாகக் கருதப்படும் கணவரின் சம்பாத்தியம் மட்டுமே, அந்தக் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. இதனால், கணவனும் மனைவியும் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது, இருவருக்குமான வேலைப்பளுவையும் அதிகரித்துள்ளது.

இதனால், இருவருக்குமிடையில் சிறிய பிரச்சினையொன்று ஏற்பட்டவுடன், அதற்கு விடைதேட, பேஸ்புக் பக்கத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். அந்தப் பேஸ்புக் ஊடாக ஏற்படுத்திக்கொண்ட நட்பிடமிருந்து, தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுகின்றனர். இதற்குக் காரணம், ஒருவருக்கு ஒருவர் சலித்தவர் இல்லை என்ற எண்ணம், அவர்கள் மனங்களில் குடிகொண்டு உள்ளமையே ஆகும்.

நாம் என்னதான் உரிமைகள் பற்றிப் பேசினாலும், கலாசார ரீதியில் பின்னிப் பிணைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புடைய நாட்டிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதனால், மேற்கத்தேய நாடுகளின் கலாசாரமும் பண்பாடுகளும், எங்களுக்கு எவ்வகையிலும் பொருந்துவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கையின்பால் கட்டியெழுப்பப்பட்ட குடும்பமொன்றுக்கே, இந்தச் சமூகம் இன்னமும் கௌரவத்தை வழங்குகின்றது. இந்த இடத்திலிருந்து தான், நாம் எமது குடும்பம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

இருவருக்கு இடையிலான தொடர்பொன்று, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இதுவே, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வழியுமாகும். அடிக்கடி உங்களுக்கு உங்கள் துணை நினைவுக்கு வருவதை, அவரு(ளு)க்கு அறியப்படுத்துங்கள், நீங்கள் சாப்பிடப்போகுமுன், சாப்பிட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேளுங்கள். அலுவலகத்தில் எத்தனை வேலைகள் இருந்தாலும், துணையுடன் பேசுவதற்காக, ஓரிரு நிமிடங்களையேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள். குடும்பச் சவால்களை எதிர்கொள்வதற்கு, நம்பிக்கையே சிறந்த ஆசிர்வாதமாகும். அவ்வாறு நம்பிக்கையால் கட்டியெழுப்பப்பட்ட குடும்பத்தவர்களின் முகங்களில், எப்போதும் ஒரு புத்துணர்ச்சியும் மலர்ச்சியும் காணப்படும். அதுவே, அந்தக் குடும்பத்தின் வெற்றியுமாகும்.

அனூஷா கோகுல பெர்ணான்டோ
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.