Jump to content

சாதிப்பது வெறி... சாதி இப்போது வெறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது விசப்பரீட்சைதான்

 

 

கடந்த பத்தாண்டும் நாங்களும் நம்முடைய சாதிகள் பற்றிய எண்ணங்களும்…

 

 

இதுவரை பேசாப்பொருளாக இருந்ததாய் கொள்ள முடியாது. பேசும் பொருளாகவே இருந்திருக்கிறது. ஈழத்தைப் பொருத்தவரை இந்த சாதி  என்ற சாபக்கேட்டிற்கு விடை கொடுத்தவர்களாக  இருந்தது ஒரு காலகட்டத்தில் உண்மையாகவே இருந்தது…… ஆனால்………

கடந்த பத்தாண்டில் நமக்குள் மிகவும் செழிப்பாக வளர்ந்திருப்பது சாதி என்பதை அடித்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று இருக்கிறோம். புலம் பெயர்ந்த தேசத்தில் தலைமுறைகளைக் கடந்து கொண்டிருக்கிறோம்  இருப்பினும் சாதியப்புண் புரையோடிக்கிடக்கிறது.

 

 

அடிப்படைத் தொழிலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழும அமைப்பு  உயர் சாதி  தாழ்ந்த சாதி என்று  அதிலும் தூய என்ற ஒரு ஒட்டுண்ணி வார்த்தையும் சேர்ந்து நமக்குள் முழி பிதுங்க வைக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று தமிழ் பாடசாலைகளில் கற்பித்துவிட்டு வந்து தன் வீட்டில் சாதியை காத்திரமாக கட்டிக் காப்பவர் பலர்….

 

 

சில விடயங்கள் எல்லோரும் ஒருமித்துப் பேச வேண்டும். சாபங்கள் தொலைகிறதா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனிப்பு 1.

 

புலம்பெயர்ந்த நாடு (கனடா)

அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது.

பல்கலைக்கழகம் முதலாம் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் ஒரே துறை

நட்பு, சிறிது கால அவகாசத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாக இரசிப்பு, சின்னச் சின்ன பரிசுப்பரிமாற்றங்கள்... வாய்கள் பேச கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது....

திடீரென ஒருநாள்

தனித்துப் பேசும் சந்தர்ப்பம் உருவானது. உன்னை எனக்குப் பிடிக்கும்.. என்னை உனக்குப் பிடிக்குமா என்று பெண் தன்னை வெளிப்படுத்தி அவனைத் திக்கு முக்காட வைத்து நீ என்ன சாதி என்றாள். அவனும் நான் ஆண் சாதி என்றான் கம்பீரமாக... அது எனக்குத் தெரியும்தானே உன்ர சாதி என்ன சொல்லு உன்னை எங்க வீட்டில் அறிமுகப்படுத்த சாதி முக்கியம் என்றாள். எனக்குப் புரியவில்லையே என்றான் அவன் அப்பாவித்தனமாக...

ஊரில நீ உயர்சாதியா..?.........நீ உயர் சாதி என்றால்தான் உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்த முடியும். எனக்குத் தெரியாது என்றான் அவன். எப்படிச் சாதியை அறிவது என் வீட்டில் சாதி பற்றி யாரும் கதைப்பதில்லை என்றான். நீ ஒரு குறிப்புச் சொல்லேன் அதை வச்சு நான் என்ன சாதி என்று சொல்றேன் என்றான். எனக்கும் தெரியாது வீட்ல கேட்டுச் சொல்றேன் என்றாள் அவள்.......  அவள் கேட்டு வருமட்டும் நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைப் பதிவோமே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய கல்லெறி வாங்கப் போறீங்கள்! என்றாலும் பேச வேண்டிய விடயம்! அமெரிக்காவில் பதின்ம வயது வெள்ளையின ஆண்கள் இனத் துவேசம் பற்றி மனந்திறந்து பேச இயலாமல் போகும் போது, தமக்குள் மட்டுமே பேசிக் கொள்வதும் 4 chan, 8 chan போன்ற இருண்ட இணையங்களில் பேசிக் கொள்வதும் நடக்கிறதாம். அவர்களிடையே இருந்து தான் இந்த வெள்ளையின வெறி கொண்ட கொலைகாரர்கள் உருவாகிறார்கள், இப்படியொரு கருத்தை ஒரு ஆசிரியர் கூறியிருந்தார். நாம் கொலைவெறி வரையில் போக சாதி புலத்தில் காரணம் இல்லையாயினும், பிற்போக்கு தனங்களில் ஊறிக்கிடக்கும் அடுத்த சந்ததியை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. பேசுவதால் தீருமா என்று பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை! தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நிறைய கல்லெறி வாங்கப் போறீங்கள்! என்றாலும் பேச வேண்டிய விடயம்! அமெரிக்காவில் பதின்ம வயது வெள்ளையின ஆண்கள் இனத் துவேசம் பற்றி மனந்திறந்து பேச இயலாமல் போகும் போது, தமக்குள் மட்டுமே பேசிக் கொள்வதும் 4 chan, 8 chan போன்ற இருண்ட இணையங்களில் பேசிக் கொள்வதும் நடக்கிறதாம். அவர்களிடையே இருந்து தான் இந்த வெள்ளையின வெறி கொண்ட கொலைகாரர்கள் உருவாகிறார்கள், இப்படியொரு கருத்தை ஒரு ஆசிரியர் கூறியிருந்தார். நாம் கொலைவெறி வரையில் போக சாதி புலத்தில் காரணம் இல்லையாயினும், பிற்போக்கு தனங்களில் ஊறிக்கிடக்கும் அடுத்த சந்ததியை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. பேசுவதால் தீருமா என்று பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை! தொடருங்கள்!

இங்கு போலீஸ் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்பதும் ஒரு காரணம் 
குழுச்சண்டைகள் குறைந்ததுக்கும் அதுதான் காரணம் ..
நீ இவரை அடித்தியா? என்று போலீஸ் தனியே தண்டனை கொடுப்பதால் 
குழுவாக இருந்தும் பெரிதாக பாதுகாப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். 
வாளுகள் பொல்லுக்களையும் இலங்கையிலும் இரண்டு தலைமுறை காணாமல்தான் வாழ்ந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இங்கு போலீஸ் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்பதும் ஒரு காரணம் 
குழுச்சண்டைகள் குறைந்ததுக்கும் அதுதான் காரணம் ..
நீ இவரை அடித்தியா? என்று போலீஸ் தனியே தண்டனை கொடுப்பதால் 
குழுவாக இருந்தும் பெரிதாக பாதுகாப்பு இல்லை என்பதுதான் முக்கிய காரணம். 
வாளுகள் பொல்லுக்களையும் இலங்கையிலும் இரண்டு தலைமுறை காணாமல்தான் வாழ்ந்தார்கள்.

அதையே தான் நானும் இடக்கரடக்கலாகச் சொன்னேன்! பொலிஸ் பயத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் "இதை கிறிஸ்தவன் சொல்லக் கூடாது!" என்று சண்டைக்கு வந்து விடுவார்களே ஐயா? மற்றபடி "நாங்கள் எல்லாரோடையும் சேருறதில்லை!" என்று பெருமையாகச் சொன்ன ஆட்களையும் அமெரிக்காவில் கண்டிருக்கிறேன்! அதன் பிறகு அவர்கள் என் வீட்டுப் படி அண்டாதபடி செய்தும் இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா 
இருக்கிறது அந்த ஒன்றுதான் அதையும் விட சொன்னால்? எப்படி 
அறிவு வளர்ந்தால் சாதி மட்டுமில்லை ...பல மூடதனங்கள் 
பல காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள் இல்லாமல் போகும்.
அறிவு வளரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை....

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது .....
கோப்பை கழுவும் தொழில் செய்பவர்கள் என்ன சாதி? 
யாரவது சாதி பற்றிய அறிவு உள்ளவர்கள் கூறினால் நன்று. 

ஒரு மனகஸ்டமான விடயம்.....
சாதியை பெருத்த நிறுவனங்களின் பணக்கார வர்க்கம்தான் 
ஒழிக்க போகிறது .... அவர்களும் ஆடம்பர வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுபோல காட்டி 
இன்னொரு விதமான மூளைச்சலவை செய்து நுகர்வு அடிமைகள் ஆக்கிகொள்வார்கள் 
என்பதுதான் கஷ்ட்டமான விடயம். அதுக்கு இதுவே இருந்து இருக்கலாம் என்று 50 வருடம் கழித்து 
சிந்தித்துக்கொண்டு இருப்போம்.

இப்போ இந்தியா மும்பாய் பெங்களுர்  கைதராபாத் போன்ற நகர்களில் இதை அவதானிக்கலாம் 
இளம் பெண்கள் என்ன சாதி என்று பார்ப்பது குறைவு ..... என்ன போன் ... என்ன கார் எவ்ளவு காசை எனக்காக 
மாதம் செலவழிப்பார் என்று பார்த்து படுத்துக்கொள்கிறார்கள் ... பின்பு திருமணம் என்று வரும்போது  ஊருக்கு போய்விடுகிறார்கள்  .... அதனால்தான் லட்ஷக்கணக்கான ஆபாச அந்தரங்க வீடியோக்கள் இன்டெர் நெட்டில்  நாளும் நாளும் தரவேற்றம் ஆகிறது. 
இளம் பெண்கள் பாலியல் பற்றிய அறிவை பெற்றுக்கொள்வதால் ..... இது சரிப்பட்டு வராது 
என்று தெரிந்து வண்டிக்கு ஏற்றால்போல் மாடு பிடித்து கொள்கிறார்கள். 
முன்புபோல் வாழைமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் எனும் எண்ணம் வாழ்வுக்கு உதாவது என்று தேர்நிது 
இளம்வயதில் என்றாலும் வண்டி ஓடுவோம் என்று திரிகிறார்கள்.

உங்கள் கதையில் வரும் பெண்ணும் ..... இப்போது வரையில் கதையுடன் நிற்கிறார்கள் என்று 
என்னால் நம்ப முடியாது அவருக்கு தேவையான தூரம்வரை பயணித்து இருப்பார் என்பதே எனது திண்ணம் 
 ........ இனி திருமணம் என்ற நிலை வரும்போது? என்ற இடத்தில்தான் இப்போ வண்டி நிற்கிறது என்பதுவே எனது எண்ணம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

 

உங்கள் கதையில் வரும் பெண்ணும் ..... இப்போது வரையில் கதையுடன் நிற்கிறார்கள் என்று 
என்னால் நம்ப முடியாது அவருக்கு தேவையான தூரம்வரை பயணித்து இருப்பார் என்பதே எனது திண்ணம் 
 ........ இனி திருமணம் என்ற நிலை வரும்போது? என்ற இடத்தில்தான் இப்போ வண்டி நிற்கிறது என்பதுவே எனது எண்ணம் . 

மன சஞ்சலத்துடன் தான் இதை எழுத வேண்டி இருக்கு , சாதியைப் பற்றி  முற்போக்குத்தனமாக கதைக்க வெளிக்கிட்டு விட்டு , முகம் தெரியாத அந்த பெண் அவருடைய ஆண் நண்பருடன் கதைக்கும் நிலை  தாண்டி அப்பாலும் சென்றிருப்பார்கள் என்று படு பிற்போக்குத் தனமாக உங்கள் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தி அல்லவா எழுதுகிறீர்கள்
அண்மைக் காலங்களில் யாழ் வெளியில் முற்போக்குத்த தனமாக சிந்திக்கிறோம் , எழுதுகிறோம் என்று பலரும்  , பொது வெளியில் பாவிக்க இயலாத வார்த்தைப் பிரயோகங்களை ( சைக்கோ , முட்டாள் etc ) யும், மற்றயவரின் தனிப்பட்ட பிரத்தியேக வளையத்துக்குள் சென்று இவர் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கருத்திடுவதும் , தனி ஒருவரின் பிரத்தியேக நம்பிக்கைகளை விமர்சிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது
மற்றயவரின் பிரத்தியேகங்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்…...
எமக்கென்று ஒரு தராதரத்தை பேணிக் கொள்வோம் ...…….  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சாமானியன் said:

மன சஞ்சலத்துடன் தான் இதை எழுத வேண்டி இருக்கு , சாதியைப் பற்றி  முற்போக்குத்தனமாக கதைக்க வெளிக்கிட்டு விட்டு , முகம் தெரியாத அந்த பெண் அவருடைய ஆண் நண்பருடன் கதைக்கும் நிலை  தாண்டி அப்பாலும் சென்றிருப்பார்கள் என்று படு பிற்போக்குத் தனமாக உங்கள் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தி அல்லவா எழுதுகிறீர்கள்
அண்மைக் காலங்களில் யாழ் வெளியில் முற்போக்குத்த தனமாக சிந்திக்கிறோம் , எழுதுகிறோம் என்று பலரும்  , பொது வெளியில் பாவிக்க இயலாத வார்த்தைப் பிரயோகங்களை ( சைக்கோ , முட்டாள் etc ) யும், மற்றயவரின் தனிப்பட்ட பிரத்தியேக வளையத்துக்குள் சென்று இவர் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கருத்திடுவதும் , தனி ஒருவரின் பிரத்தியேக நம்பிக்கைகளை விமர்சிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது
மற்றயவரின் பிரத்தியேகங்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்…...
எமக்கென்று ஒரு தராதரத்தை பேணிக் கொள்வோம் ...…….  

நீங்கள் எழுதியது நூறுவீதம் உண்மைதான் 
நான் எழுதும்போதே இதை யோசித்தேன் ..... இருந்தும் அதை எழுத காரணம் எழுத முன்பு.
உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 
எனது கருத்தில் மேலோட்ட்மாக நீங்கள் கூறும் அனைத்தும் இருக்கிறது. 

ஏன் எழுதினேன் என்றால்......
அந்த பெண் பண்புநிலையை எப்போதோ கடந்துவிட்டார் ..... காதல் என்ற மகத்தான உறவை ... என்ன விலை?
என்று விலைபேசிவிட்டார். "எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது" என்று இவர்தான் ஆணிடம் சென்று சொல்லி இருக்கிறார்.

"எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது" 
இந்த வரிகளின் வரைவிலக்கணத்தைத்தான்  அந்த பெண்ணின் பார்வையில். எனது கருத்தில்  .... அந்த குறித்த பெண்ணை பற்றிய எண்ணமாக இருக்கிறது.

நீங்கள் மீண்டும் ஒருமுறை எனது கருத்தை வாசியுங்கள் .... நான் கவனமாகவே எழுதினேன் "எனது எண்ணம்" "எனது நிலைப்பாடு" என்றுதான் எழுதினேன். அந்த பெண் அப்படிதான் என்று எழுதவில்லை. 
அப்படி எழுதியிருந்தால் கூட  இனி அது அவதூறு என்று ஆகிவிடப்போவதும் இல்லை 
சாதாரண "காதல்"  "அன்பு" "நேசிப்பு" இவற்றை அந்த பெண் அளவில் யாரும் அவதூறு செய்யமுடியாது.

அன்பை கொன்றுவிட்டு 
ஆச்சாரம் தேடியது அந்த பெண்தான்.
பாலியல் உறவு இருந்திருந்தால்  கூட இனி அது மிக சிறிய விடயம்தான் 
அதை கூட எதோ பதின்ம வயது கோளாறு என்று கடந்துவிடலாம். 

இவரிடம் சிக்கி உண்மையான காதலை கொண்ட (கொண்டிருந்தால்) அந்த ஆணின் நிலைமை என்ன? 

Link to comment
Share on other sites

6 hours ago, வல்வை சகாறா said:

நீ ஒரு குறிப்புச் சொல்லேன் அதை வச்சு நான் என்ன சாதி என்று சொல்றேன் என்றான். எனக்கும் தெரியாது வீட்ல கேட்டுச் சொல்றேன் என்றாள் அவள்.......  அவள் கேட்டு வருமட்டும் நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைப் பதிவோமே.....

குறிப்புகளை அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றீர்களா இல்லை அவைகள் மறைந்து போகின்ற போக்கில் போகட்டும் என்று விடப்போகின்றீர்களா என்பது தெரியவில்லை. 

1 hour ago, Maruthankerny said:

எப்படி 
அறிவு வளர்ந்தால் சாதி மட்டுமில்லை ...பல மூடதனங்கள் 
பல காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள் இல்லாமல் போகும்.
அறிவு வளரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை....

பிணங்களும் மலங்களும் கலந்த காசி கங்கையில் கங்கையில் எத்தனையோ  எஞ்சினீயர் டொக்டர் என்னும் நிறைய உயர் நிலை படித்தவர்கள் தினமும் முழுகி பாவத்தைக் கழுவுகின்றர்கள். அதை புனிதம் என்று அவர்கள் அறிவு சொல்லும்.

சாதிகள் இல்லை என்ற பாரதியார் வள்ளலார் போன்ற பலர் பின்னாளில் அவரவர் பிறந்த சாதிகளின் அடயாளமாக முன்நிறுத்தப்பட்டனர். சாதிச் சங்கங்களில் அவர்கள் உருவம் பயன்படுத்தப்படுகின்றது

தற்போதைய தகவல் தொழில்நுட்பத்திலும் சாதிகளுக்கு தனித்தனியான திருமண சேவை இணையங்கள் . தனித்தனியான முக நூல்கள் ருவிற்றர்கள் பிளாக்கர்கள் என சமூகவலைத்தளங்களை சாதீயம் பயன்படுத்துகின்றது.

சதிகள் இல்லை என்பதை உணர அதிகப்படியான அறிவு தேவையில்லை. சாதிகளை ஒழிக்க தேவைப்படும் அளவை விட  அதிகமாகவே வளர்ந்துவிட்டது. 

சிகரெட் ,மற்றும்  போதைகளுக்கு அடிமையானபின் அதை அறிவைக்கொண்டும் விடமுடியாத நிலை  இருக்கின்றது அதுபோல இதுவும் ஒரு பிரச்சனை. மரபணு மூலம் பழகிய ஒரு போதைப் பழக்கம் போன்றது. அறிவால் இதுக்கு தீர்வு இருக்கா என்பது குழப்பமே.

உலகமயமாக்கலில் சாதிய இனங்கள் சமூகங்கள் சிதைந்து கலைந்து சில தலமுறைகள் கடந்து போகும் போது சாதியமும் காணாமல் போகும்.  வேறு பதிவுகளில் சொன்னது போல இனத்தின் முடிவும் சாதீய சமூக முரண்பாடுகளில் இருந்து விடுதலையும்  ஒரே புள்ளியில் இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

குறிப்புகளை அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றீர்களா இல்லை அவைகள் மறைந்து போகின்ற போக்கில் போகட்டும் என்று விடப்போகின்றீர்களா என்பது தெரியவில்லை. 

பிணங்களும் மலங்களும் கலந்த காசி கங்கையில் கங்கையில் எத்தனையோ  எஞ்சினீயர் டொக்டர் என்னும் நிறைய உயர் நிலை படித்தவர்கள் தினமும் முழுகி பாவத்தைக் கழுவுகின்றர்கள். அதை புனிதம் என்று அவர்கள் அறிவு சொல்லும்.

சாதிகள் இல்லை என்ற பாரதியார் வள்ளலார் போன்ற பலர் பின்னாளில் அவரவர் பிறந்த சாதிகளின் அடயாளமாக முன்நிறுத்தப்பட்டனர். சாதிச் சங்கங்களில் அவர்கள் உருவம் பயன்படுத்தப்படுகின்றது

தற்போதைய தகவல் தொழில்நுட்பத்திலும் சாதிகளுக்கு தனித்தனியான திருமண சேவை இணையங்கள் . தனித்தனியான முக நூல்கள் ருவிற்றர்கள் பிளாக்கர்கள் என சமூகவலைத்தளங்களை சாதீயம் பயன்படுத்துகின்றது.

சதிகள் இல்லை என்பதை உணர அதிகப்படியான அறிவு தேவையில்லை. சாதிகளை ஒழிக்க தேவைப்படும் அளவை விட  அதிகமாகவே வளர்ந்துவிட்டது. 

சிகரெட் ,மற்றும்  போதைகளுக்கு அடிமையானபின் அதை அறிவைக்கொண்டும் விடமுடியாத நிலை  இருக்கின்றது அதுபோல இதுவும் ஒரு பிரச்சனை. மரபணு மூலம் பழகிய ஒரு போதைப் பழக்கம் போன்றது. அறிவால் இதுக்கு தீர்வு இருக்கா என்பது குழப்பமே.

உலகமயமாக்கலில் சாதிய இனங்கள் சமூகங்கள் சிதைந்து கலைந்து சில தலமுறைகள் கடந்து போகும் போது சாதியமும் காணாமல் போகும்.  வேறு பதிவுகளில் சொன்னது போல இனத்தின் முடிவும் சாதீய சமூக முரண்பாடுகளில் இருந்து விடுதலையும்  ஒரே புள்ளியில் இருக்கின்றது.

 

இவர்கள் (என்ஜினியர்) டொக்டர்மாரே தவிர 
அறிவுக்கும் இவர்களுக்கும் ஏதும் சம்மந்தம் இருப்பின் 
அந்த சாக்கடையில் போய்  விழுவார்களா?

இவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதுக்குத்தான் இப்போ நீட் தேர்வு 
முறையை கொண்டுவந்து பீகார் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 
ஹிந்தியில் பாசாகாதவர்களை    தெரியாத ஆங்கிலத்தில் பாஸ் ஆக்கி 
பல்கலைக்கு அனுப்ப போகிறார்கள்.

போதைக்கு அடிமையாதல் என்பது சிறுக சிறுக தொடங்கி 
பின் அவர்களாலேயே வெளி வர முடியாத ஒரு ஒன்று 

இவர்கள் அப்படி என்று பார்க்கும் பார்வை சரியா தவறா என்று எனக்கு கொஞ்சம் 
குழப்பமாக இருக்கிறது.  இவர்கள் ஒரு மமதையில் திரிகிறார்கள் என்றுதான் கூறமுடியும்.
இங்கு யாழ் களத்தில் கூட இப்பிடியானவர்களை பார்க்க கூடியதாக இருக்கிறது 
போதைக்கு அடிமையானவர்கள் ... அதை தவறு என்று உணர்கிறார்கள்  ஆனால் வெளியேற முடியாது 
இருக்கிறார்கள். இவர்கள் அப்பிடி இல்லையே ....
இவர்களுடைய மதத்தில் இருக்கும் காட்டுமிராண்டி தனத்தை படம் எடுத்து போட்டாலும் 
ஏன் கிறிஸ்தவம் முஸ்லீம் எல்லாம் சரியா இருக்கா? என்று சண்டைக்கு போகிறார்கள் தவிர 
இப்படியான காட்டுமிராண்டி தனம் இந்தளவில் முன்னேறிய உலகில் ஒரு சமூகத்துக்கு தேவையா? 
என்று சிந்திக்க தெரியவில்லையே? 

பார்ப்பான சமூகத்தின் சாதிவெறி வேறு ...
அது பொய் புரட்டுகளை பரப்பி அடுத்தவனை சுரண்டுவது ஆகும் 
இது ... இவர்களையும் அவன் சூத்திரர் என்றுதான் சொல்கிறான் ...
கத்தோலிக்கத்துக்கு தொடர்பில்லாத பிரிடிஷ் காரன்  தனக்கு பாதுகாப்புக்கு 
காலனி நாடுகளில் கத்தோலிக்கத்தை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கியதுபோல்தான் 
பார்ப்பான் இவர்களையும் ஆக்கி இருக்கிறான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/20/2019 at 7:35 AM, வல்வை சகாறா said:

சில விடயங்கள் எல்லோரும் ஒருமித்துப் பேச வேண்டும். சாபங்கள் தொலைகிறதா பார்ப்போம்.

எங்களை சுற்றி இருக்கும் மூடத்தனமான நம்பிக்கைகள், மதவாதம், இனவாதம், ஏழை பணக்காரன் மற்றும் இந்த சாதி போன்ற பல சாபங்கள் அழிய வேண்டும் என்பதுதான் ஆசை.. ஆனால் மேற் கூறிய சாபங்களுடன் இன்னமும் வேறு சாபங்கள்(அந்தஸ்து- நீங்கள் வசிக்கும் suburbனை வைத்து மதிக்கபடுகிறது, உங்களின் நண்பரகள் வட்டம், பிள்ளைகள் படிக்கும் பாடசால etc) சேர்வதுதான் உண்மை..

காதலிக்கும் போது தெரியாத சாதி, பின்பு பெரிதாக தெரிவது மட்டுமல்லாது, பிள்ளைகளின் முன்பும் விமர்சிக்கப்படுகிறது, அவர்களின் மனதிலும் அது வலுவாக விதைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த suburb அந்தஸ்தும் சாதியோடு சேர்ந்து இங்கே கொடிகட்டி பறக்கிறது..அந்த சூழ்நிலையில் வளர்க்கபடும் பிள்ளைகளிடமும் இந்த அகங்காரம் தானாகவே இவை சேர்ந்துவிடும்..

மனிதர்களை அளவிடும் அளவுகோல்களாக இவை இன்னமும் இங்கே இருக்கும் போது   பின்பு எப்படி சக மனிதர்களை மதிக்கும் பண்பு   உருவாகும்? எவ்வாறு இந்த வேற்றுமைகளை இல்லாமல் செய்ய முடியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை அந்த பையன் அந்த பெண்ணிடம் மாட்டி தனது வாழ்க்கையை தொலைக்காமல் விட்டால் சரி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

92-E8-A30-F-B359-4-E8-B-ABFC-942-AE9-FBA

இந்த சிரட்டையில் தேநீரும் உணவும் கொடுத்து எத்தனை மனங்களை எங்களது முன்னோர்கள் நோகடித்திருப்பார்கள்?

மனிதர்களின் அறிவு வளர வளர அவர்களின் பண்பும் மனித நேயமும்தான் வளர வேண்டும் ஆனால் இங்கே வளர்வதோ அகங்காரம், சுயநலம், சாதி அந்தஸ்து.. 

சில வேளைகளில் நான் நினைப்பது நாங்கள் கற்காலத்தை நோக்கி செல்கிறோமா என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

92-E8-A30-F-B359-4-E8-B-ABFC-942-AE9-FBA

இந்த சிரட்டையில் தேநீரும் உணவும் கொடுத்து எத்தனை மனங்களை எங்களது முன்னோர்கள் நோகடித்திருப்பார்கள்?

மனிதர்களின் அறிவு வளர வளர அவர்களின் பண்பும் மனித நேயமும்தான் வளர வேண்டும் ஆனால் இங்கே வளர்வதோ அகங்காரம், சுயநலம், சாதி அந்தஸ்து.. 

சில வேளைகளில் நான் நினைப்பது நாங்கள் கற்காலத்தை நோக்கி செல்கிறோமா என்று?

சகோதரி ,

உங்கள் ஆதங்கம் புரிகின்றது .

நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த வழக்கம் நான் சிறு வயதில் கண்டிருக்கிறேன் - அதன் தாற்பரியம் புரியாத வேளை,  அதன்  பின்னர் எவ்வளவோ நடந்தேறி விட்டது .இவையெல்லாம் வழக்கொழிந்து விட்டது என நினைக்கின்றேன்அகம்,  புலம் இரண்டிலுமே

உயிர் வாழ் சீவராசிகள் அனைத்துமே குழு மனநிலை கொண்டவை தான் என நீங்கள் நம்பவில்லையா , ஒருவர் தன்னுடன் நன்கு ஒத்துப் போக்க கூடியவரை தான் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் அல்லது வளையத்தினுள்ளும் வைத்து தொடர்புகளை பேணிக் கொள்ள  நினைப்பது மிகவும் இயல்பானது இல்லையா , எவரொருவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் தெரிவு செய்வதில் உள்ள உரிமை அவரது தனித்துவத்தை பொறுத்ததல்லவா , இதைப் பற்றி வேறொருவர் ஏன் அலட்டிக் கொள்ள   வேண்டும்।  

எனக்கு பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள் , வீட்டில் விருந்து வைக்கும் போது மற்றயவர்களுடன்  அவர்களையும் அழைப்பேன் , மேசையில் சகல விதமான மாமிச உணவுகளுடன் மரக்கறி வகைகளும் இருக்கும் , மகிழ்ச்சியாக கலந்து கொண்டு தமக்கு வேண்டிய  மரக்கறி உணவை ருசித்து செல்வார்கள் , தொழில் ரீதியாவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு , பிள்ளைகளும் மிகுந்த சிநேகிதமாக இருக்கிறார்கள் - இதற்காகக் அவர்களுடன் போய் திருமண உறவு கொள்வோமா என கேட்கப் போவதில்லை ,அந்த விடயத்தில் எமக்கு தோதாக நல்ல விதமாக அமையக் கூடிய திறமான வேறு தெரிவுகள் இருக்கின்றன - இதற்கு ஏன் சாதி முலாம் பூச வேண்டும்.

சிறுவர்கள் பொம்மையை விளையாடும் போது எப்போதுமே ஒப்பிட்டுத் தான் பார்ப்பார்கள் , சரியான முறையில் கையாண்டால் இது மன நல   அடிப்படையில் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்    ஒன்று.

இதே மாதிரி தான் இந்த sub-urb  விடயமும். இந்த வகையான சம்பாஷணைகள் பிள்ளைகளுக்கு - சரியான வழியில் கையாண்டால் - தங்கள்  ஒப்பீட்டளவில் மேன்மையான இடத்தில் செட்டில் பண்ண வேண்டும் என்ற மோட்டிவேஷன் இருக்கும் - இது ஆரோக்கியமான விடயமில்லையா ..

ஒன்றுமே செய்யாமல் நாம் இருப்போம் , நல்லவை எல்லாம் தானாகவே வந்து சேர வேண்டும் என்ற மனப் பான்மையை விட்டு விட்டு ,  குறிக்கோட்களை அமைத்து    அவற்றை  அடையும் முயற்சிகளை கொள்ளுவோமா…

வாத்தியாரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது  " விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ,உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் "

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னுமொரு தற்கால நடை முறையையும் பார்க்கலாம்
அண்மைக் காலங்களில் புலம் பெயர் தேசங்களில் எமது இளவல்களிடையே நடைபெறும் திருமண பந்தங்களில் கணிசமானவை வேறு இனத்தவருடனானது। ( கவனிக்க - வேறு சாதிக்   குழுமம் என்று அடையாளப் படுத்தி வைத்திருப்பவர்களுடன் அல்ல ).   
 
இதற்கு முக்கிய காரணம் எம்மிடையே தனிப்பட்ட ரீதியில் பேணிக் கொள்ள விரும்பும் தெரிவுகள்।
இதில் பாதிக்கப் படுவதாக தோற்றம் பெறும் குழுவினர் , தம் குழுமத்தை சேர்ந்த அகத்தில் வதியும் இளவல்களுக்கு ஏன் தமது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது ।    தமது குழுவினரும் முன்னேறிய மாதிரி இருக்குமே.
ஆனால் செய்ய மாட்டார்கள்; ஊரில் பிறந்து வளர்ந்ததுகளுடன்,  இங்கேயே வளர்ந்த எமது பிள்ளைகளால் சரிக்கட்ட இயலாது என்று. இதற்கு சமாந்தரமான ஒரு நிலைப் பாடு தானே வேறு விதமான சமூக ,தனிப்பட்ட தெரிவுகளை கொண்டவர்களுடன் தனிப்பட்ட நெருங்கிய தொடர்புகளை பேண முயற்சிப்பது….


" தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்னுமாம் "  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த வழக்கம் நான் சிறு வயதில் கண்டிருக்கிறேன் - அதன் தாற்பரியம் புரியாத வேளை,  அதன்  பின்னர் எவ்வளவோ நடந்தேறி விட்டது .இவையெல்லாம் வழக்கொழிந்து விட்டது என நினைக்கின்றேன்அகம்,  புலம் இரண்டிலுமே

உண்மைதான்.. இதே போன்ற சில பழக்கங்கள் மட்டுமே இப்பொழுது இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

ஒருவர் தன்னுடன் நன்கு ஒத்துப் போக்க கூடியவரை தான் விரும்பும் எந்த ஒரு நிலையிலும் அல்லது வளையத்தினுள்ளும் வைத்து தொடர்புகளை பேணிக் கொள்ள  நினைப்பது மிகவும் இயல்பானது இல்லையா , எவரொருவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் தெரிவு செய்வதில் உள்ள உரிமை அவரது தனித்துவத்தை பொறுத்ததல்லவா , இதைப் பற்றி வேறொருவர் ஏன் அலட்டிக் கொள்ள   வேண்டும்

அவரவர் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் என்பதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை..அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி ஒரு குழுவாக இருப்பவர்கள் மற்றையவர்களும் தனித்துவமானவர்கள் என்ற மனபாங்கு இருக்க வேண்டும்..அவர்களையும் மதித்து நடக்க வேண்டும்,  அதை விடுத்து.. தாங்கள் மேலானவர்கள், அவர்களுடைய நட்பு வேண்டும் என்றால் அவர்களை போல, அவர்களின் கோட்டிற்குள்தான் இருக்க வேண்டும் என நினைப்பது சரியா?  

Link to comment
Share on other sites

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவரவர் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் என்பதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை..

கூட்டுக் குடும்பவாழ்க்கை என்ற மரபுவழியில் உரிமை இருந்தது. தற்போது அது மாற்றம்கொண்டு வருவது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய படி இந்த மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் சிறுவர்களை பெற்றோர்கள் சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்களே ஏதோவொரு வகையில் இந்த ஒப்பிட்டுப்பார்த்தலுக்கு உடந்தையாகும் போது சிறுவர்களை திருத்துவதா அல்லது பெற்றவர்களை திருத்துவதா? 

இரண்டு உதாரணங்களை இங்கே தருகிறேன் .. முதலாவது ஒரு தாய் தனது மகளிடம் கூறுவது. இரண்டாவது இரு சிறுவர்களின் சம்பாஷனை..

“ you got a house in Hills district, so you have to maintain your standards” 

” my parents told me not to  play with you because you aren’t rich..”

இதில் யாரை திருத்துவது..?

இரண்டவதாக, இந்த suburb விஷயம், இது எந்த வகையில் motivationனாக இருக்கும்? 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

ஒன்றுமே செய்யாமல் நாம் இருப்போம் , நல்லவை எல்லாம் தானாகவே வந்து சேர வேண்டும் என்ற மனப் பான்மையை விட்டு விட்டு ,  குறிக்கோட்களை அமைத்து    அவற்றை  அடையும் முயற்சிகளை கொள்ளுவோமா…

வாத்தியாரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது  " விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ,உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் "

சரியாகத்தான் கூறினீர்கள்.. அத்தோடு மனிதர்கள் எல்லோரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருடைய குறிக்கோள்களும் வேறானவை என்பதையும் மதித்து நடந்தால் சரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் கருத்தெழுதியதற்காக வருந்துகிறேன். இதுபற்றிக் கருத்தாடுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Paanch said:

கூட்டுக் குடும்பவாழ்க்கை என்ற மரபுவழியில் உரிமை இருந்தது. தற்போது அது மாற்றம்கொண்டு வருவது தெரிகிறது

இருக்கலாம் .. ஆனால் அந்த உரிமை ஒரு வரையறைக்குள் இருந்தால் மட்டுமே அந்த கூட்டு குடும்பத்தின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும்..

எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதியம்  ஒழியணும் என்பது உண்மை

வரவேற்கத்தக்கது

ஆனால்  தமிழருடைய

நாடி  நரம்பு ரத்தம் என  ஊறிப்போயுள்ள இந்த  வெறியை

எதை  வைத்தும் முற்றாக ஒழித்துவிட  முடியாது என்பது  என்  அனுபவம்  தரும்  பாடம்.

திருமணங்கள் மூலம்  இதை  சாதிக்கலாம்  என 

வல்வை சகாறா  சொல்ல  வருகிறார்  என நினைக்கின்றேன்

வாய்ப்பில்லை

ஒன்றைவிட மற்றொன்று உயர்வென

ஒவ்வொரு  சாதியினரும் படிநிலை பார்க்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள

இந்த  சாதி  அமைப்பில்

வேண்டுமானால்  இன்னொருத்தர் 

நான்  உயர்ந்து  விட்டேன்  என கொலரை  தூக்கிவிட  வேண்டுமானால்  திருமணங்கள்  உதவலாம்

அண்மையில் பிரான்சிலே இது போன்ற  ஒரு சாதி தாண்டிய திருமணம் நடைபெற்றது

அதில் கலந்து கொண்ட எனது  நண்பரிடம் பெண் வீட்டை சார்ந்த  ஒருவர்  சொன்னாராம்

பார்த்தீர்களா

உங்களுடைய  ஆட்களுடன் நாங்களும் சரி  சமமாக  வேட்டி  கட்டி ஒன்றாக நின்றதை  என.😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சாதியம்  ஒழியணும் என்பது உண்மை

வரவேற்கத்தக்கது

ஆனால்  தமிழருடைய

நாடி  நரம்பு ரத்தம் என  ஊறிப்போயுள்ள இந்த  வெறியை

எதை  வைத்தும் முற்றாக ஒழித்துவிட  முடியாது என்பது  என்  அனுபவம்  தரும்  பாடம்.

திருமணங்கள் மூலம்  இதை  சாதிக்கலாம்  என 

வல்வை சகாறா  சொல்ல  வருகிறார்  என நினைக்கின்றேன்

வாய்ப்பில்லை

ஒன்றைவிட மற்றொன்று உயர்வென

ஒவ்வொரு  சாதியினரும் படிநிலை பார்க்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள

இந்த  சாதி  அமைப்பில்

வேண்டுமானால்  இன்னொருத்தர் 

நான்  உயர்ந்து  விட்டேன்  என கொலரை  தூக்கிவிட  வேண்டுமானால்  திருமணங்கள்  உதவலாம்

அண்மையில் பிரான்சிலே இது போன்ற  ஒரு சாதி தாண்டிய திருமணம் நடைபெற்றது

அதில் கலந்து கொண்ட எனது  நண்பரிடம் பெண் வீட்டை சார்ந்த  ஒருவர்  சொன்னாராம்

பார்த்தீர்களா

உங்களுடைய  ஆட்களுடன் நாங்களும் சரி  சமமாக  வேட்டி  கட்டி ஒன்றாக நின்றதை  என.😥

வணக்கம் விசுகர்!
இதை விட சுருக்கமாக விளக்கம் யாரும் தரமுடியாது. அதற்கு அனுபவம் வேண்டும். இந்த விடயத்தில் உங்களிடம் நிறையவே அனுபவம் உள்ளது போல் தெரிகின்றது.நான் ஊரில் சாதிப்பிரச்சனைக்கு  மிண்டு கொடுத்து இளவயதிலையே என் முதுகெலும்பை உடைத்துவிட்டார்கள்.செய்தவர்கள் வேறு யாருமல்ல. என் உறவினர்கள் தான். என்னை சொந்தம் என்று சொல்லவே வெட்கப்பட்டார்கள்.அது ஒரு புறம் இருக்கட்டும்.

சாதி ஒழிப்பை திருமணத்தில் இருந்து ஆரம்பிப்பதா? சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சாமத்திய வீட்டுசடங்கில் உறவினர்களுக்குள் நடந்த கண்ணியமற்ற வார்த்தை பிரயோகங்களால் அந்த சுபகாரியமே சஞ்சலப்பட்டு விட்டது. உறவினர் பாதிப்பேர் இடைநடுவில் வெளிநடப்பு சென்று விட்டனர்.

பிரச்சனைக்கு காரணம் சாமத்திய வீட்டு பெண்ணின் பெற்றோர்கள் கலப்புத்திருமணம் செய்தவர்கள். அங்குவந்த உறவினர்களின் நீயா நானா பிரச்சனைதான் காரணம்.
தந்தை சீவல் தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
தாய் பறைமேளம் அடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
இது உண்மைச்சம்பவம்.🖐️
எனவே சாதிப்பிரச்சனை எங்கிருந்து உருவாகின்றது.அதை எங்கிருந்து அழிப்பது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.