Jump to content

ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Woman-stabs-kills-boyfriend-with-scissors-after-he-calls-720x409.jpg

ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!

சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார்.

ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார்.

ஐஸ்கிறீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்கிச் சென்றார்.

பின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு, அங்குள்ள கடையொன்றிற்குள் சென்று 2 கத்தரிக்கோல்களை எடுத்து வந்தார்.

பெண்ணின் காதலர் “எதற்காக கத்தரிக்கோல்?” என கேட்ட அடுத்த நொடியே அவரது வயிற்றில் 4 முறை சரமாரியாக குத்தினார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சந்தையில் இருந்த ஏனையவர்கள் மீட்டு அவரச நோயாளர் காவு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இடை வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

Image result for china young woman killed his lover for ice cream

http://athavannews.com/ஐஸ்கிரீம்-கேட்டு-வாங்கித/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!

இனிமேல் பெண்டாட்டி எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிடவில்லை, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத தாக்குதல்....ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்திருந்தால் இப்ப அவர் ஐஸ் பெட்டிக்குள் இருந்திருக்க மாட்டார்.......!   😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  நம்மாளு....😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவ‌ல‌ம் ஒரு ஜ‌ஸ்கிறிமுக்காக‌ ஒரு உயிரை கொல்லும் ம‌ன‌ நிலையில் இருக்கும் இவ‌ள் , உண்மையில் இவ‌ள் ஒரு ம‌ன‌ நோயாளியாதான் இருப்பாள் /
சீனா நாட்டு சிறையை ப‌ற்றி என‌க்கு தெரியாது / வெளிச்ச‌ம் இல்லா இருட்டு சிறைக்குள் இவ‌ளை பிடிச்சு த‌ள்ள‌னும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இனிமேல் பெண்டாட்டி எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடுங்கப்பா.

நான் சும்மா கேட்டால் உடனே வாங்குவதா?
உங்கள் புத்தி எங்கு போனது? என்று கேட்டும் குத்துகிறார்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, Maruthankerny said:

நான் சும்மா கேட்டால் உடனே வாங்குவதா?
உங்கள் புத்தி எங்கு போனது? என்று கேட்டும் குத்துகிறார்களே? 

பெரியோர்கள்  சிலவற்றை சொல்லி  வைத்திருக்கிறார்கள்

ஆடிக்கறக்கிற  மாட்டை  ஆடிக்கறக்கணும்

பாடிக்கறக்கிற  மாட்டை  பாடிக்கறக்கணும்  என்று..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

பெரியோர்கள்  சிலவற்றை சொல்லி  வைத்திருக்கிறார்கள்

ஆடிக்கறக்கிற  மாட்டை  ஆடிக்கறக்கணும்

பாடிக்கறக்கிற  மாட்டை  பாடிக்கறக்கணும்  என்று..:grin:

வேறு வேறு மாடு என்றால் புரிந்து கறக்கலாம் ....
இது ஒரே மாடுதானே ஒருக்கா பாடுது ...... இன்னோருக்கா ஆடுது 

எப்ப ஆடும் .... எப்ப பாடும் என்பதுதான் புரியுதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

வேறு வேறு மாடு என்றால் புரிந்து கறக்கலாம் ....
இது ஒரே மாடுதானே ஒருக்கா பாடுது ...... இன்னோருக்கா ஆடுது 

எப்ப ஆடும் .... எப்ப பாடும் என்பதுதான் புரியுதில்லை. 

இதற்குத்தானே 64  கலைகள்?

நீங்க  இந்த  விடயத்தில  ஓரமா  போய் விளையாடுங்க  ராசா:grin::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.