Jump to content

தினமும் காதுகளுக்கு 'பட்ஸ்' பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்


Recommended Posts

காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் மூலம் காதைச் சுத்தப்படுத்தினால்தான் அவருக்குத் தூக்கம் வரும் என்றொரு நிலை. இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்திருக்கிறது.


ஒரு கட்டத்தில் அவரது இடது காது கேட்பதில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார் மருத்துவர். ஆனால் ஜாஸ்மினுக்கு காது கேட்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடு சரியாகவில்லை. ஆனாலும் `பட்ஸ்' பயன்படுத்தும் பழக்கத்தை அவரால் கைவிடமுடியவில்லை.

ஒருநாள் அவர் `பட்ஸ்' பயன்படுத்தியபோது அதில் ரத்தம் படிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, மீண்டும் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார். காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையைச் செய்யச் சொன்னதுடன் காது, மூக்கு, தொண்டை நிபுணருக்குப் பரிந்துரைத்தார் அந்த மருத்துவர்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் `சி.டி ஸ்கேன்' எடுக்கும்படி சொல்ல, அதன் முடிவில்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக `பட்ஸ்' பயன்படுத்தியதால் அவரது காதில் பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டு, அது காதுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டை அரித்திருக்கிறது

`ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் என்னை அணுகியிருக்க வேண்டும்' என்று ஸ்கேன் முடிவைப் பார்த்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று ஏற்பட்டு மண்டை ஓடு அரிக்கத் தொடங்கி, தற்போது அது தீவிரமாகியிருக்கிறது. உடனடியாக ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது நோய்த்தொற்று திசுக்கள் அகற்றப்பட்டு, காது துவாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. `காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. காதுகளைச் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்தான் பாதுகாப்பானது என்கிற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் காட்டன் பட்ஸை காதுக்குள் செலுத்தக் கூடாது என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை' என்று அறிவுறுத்தினர் மருத்துவர்கள்.

ஜாஸ்மினுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து தீர்வு காணப்பட்டாலும், அவரது இடது காது கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ``பல ஆண்டுகளாக நான் பட்ஸ் உபயோகித்ததால் என் காதின் உள்ளே சிறிய நார்ப்பொருள் தேங்கியிருந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக என் காதின் பின்னால் இருந்த மண்டை ஓடு ஒரு பேப்பர் அளவுக்கு அரித்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அது குணமடைந்துவிட்டாலும் ஒருபக்க காது கேட்கவில்லை. இப்போது நான் சந்திக்கும் அனைவரிடமும் `பட்ஸ்' உபயோகிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்கூறி வருகிறேன். காது என்பது மிகவும் மென்மையான சென்சிட்டிவ்வான உறுப்பு என்பதால், அதை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும்" என்கிறார் ஜாஸ்மின் இப்போது.

`பட்ஸின் முனையில் உள்ள பஞ்சு காதுக்குள் சிக்கிக்கொண்டதால், ஓர் ஆணுக்கு மண்டை ஓட்டில் நோய்த்தொற்று ஏற்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றனர். `காதுக்குள் இருக்கும் அழுக்கை அகற்ற `பட்ஸ்' போன்ற பொருள்களைப் பயன்படுத்தும்போது எதிர்உருவாக்கம் நிகழ்ந்து காதில் இருக்கும் மெழுகு மீண்டும் காதிலேயே தங்கிவிடும்.

அது காதுக்குள் உறுத்தலையும் காயங்களையும் ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக காது ஜவ்வில் ஓட்டை விழுவது, நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்படும். பாதிப்பின் தீவிரம் அதிகரித்தால் முழுமையாக செவித்திறனை இழக்க நேரிடும்' என்று காது சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கண்களில் பார்வைத்திறன் குறைந்தால் அதை மீட்டெடுத்துவிட முடியும். ஆனால் காதுகளில் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதை சிகிச்சைமூலம் மீட்டெடுக்க முடியாது. அதனால் காது குடைய பட்ஸ்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் நல்லது.

 

https://www.vikatan.com/news/healthy/cotton-swab-usage-creates-ear-skull-infection

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.