Jump to content

சிதம்பரத்துக்குச் சிறை.. அமித் ஷா வைத்த செக் - சீக்ரெட்டை உடைத்த அதிகாரிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CBI deployed in P Chidambaram house on INX Media Case

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இதில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஏற்கனவே சிபிஐக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார். அதன் பின் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதிரடி திருப்பமாக தற்போது ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டில் குவிக்கப்பட்டுள்ளனர். ப.சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் சிபிஐ குவிக்கப்ட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/cbi-deployed-in-p-chidambaram-house-on-inx-media-case-360692.html

Link to comment
Share on other sites

நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதை ப.சிதம்பரம் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஊடகங்களில் பேசிவந்தது, மத்திய அரசுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நெருக்கடியைக் கொடுக்கத் தயாராகிவிட்டது பி.ஜே.பி தலைமையிலான அரசு. மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நபராக இருந்த ப.சிதம்பரத்தைச் சிறைக்குள் அனுப்பி, காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காண வைக்கப்போகிறது.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால் அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதே போல், ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கிலும் சிதம்பரத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தன்னைக் கைதுசெய்துவிடக் கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில் கைது செய்வதற்கான தடையை நீட்டித்துக்கொண்டே வந்தார் அவர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன. அதைத் தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கிலும் அடுத்த சிக்கல் சிதம்பரத்துக்கு உருவாகும் என்கிறார்கள். அவர், வரும் 23-ம் தேதி அன்று அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக இருக்கிறார். அன்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தைக் கைதுசெய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்.


'சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இந்த வழக்கில் எங்களால் விசாரணையை முடிக்க முடியும்' என்று தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சி.பி.ஐ-யும் சொல்லிவருகிறது. எனவே, இந்த முறை வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் இரண்டு அமைப்புகளும் உறுதியாக உள்ளன. அதேநேரம், இதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் டெல்லி காங்கிரஸ் தலைமை கவனித்துவருகிறது.

 

 

மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் மற்றும் பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்தார் சிதம்பரம். குறிப்பாக, நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதை பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஊடகங்களில் சிதம்பரம் பேசிவந்தது மத்திய அரசுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிதம்பரத்துக்குச் செக் வைக்கும் வேலையில் தீவிரம் காட்டியுள்ளார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ மூலம் இந்த வேலைகள் சத்தமில்லாமல் நடந்துவந்தன. ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்தவர் சிதம்பரம். அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பே சிதம்பரத்திடம் “உங்களைக் கைதுசெய்யும் வேலைகள் தீவிரமாக நடக்கிறது. உங்கள் மகனுக்கும் சிக்கல் உள்ளது” என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்துள்ளார்கள்.

அதற்குப் பின்தான் பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாராம் சிதம்பரம். இது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிதம்பரம் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார் என்று கட்சியும் அமைதியாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கே திண்டாட்டத்தில் இருந்துவரும் நிலையில், சிதம்பரம் போன்றோரை முடக்கிவைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டு காங்கிரஸ் கட்சித் தலைமையும் அச்சத்தில் உள்ளது. ஆனால், இருக்கும் அவகாசத்தில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தனது முன்ஜாமீனை உறுதிசெய்யும் முடிவில் சிதம்பரம் இருக்கிறார். ஜாமீன் இல்லாமல் அமலாக்கத் துறையிடம் ஆஜரானால் என்ன நடக்கும் என்று அறியாதவர் அல்ல” என்று சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

சிதம்பரத்தைச் சிறைக்குள் அனுப்பி காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துவிட்டது, மத்திய அரசு. ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றால் ஏர்செல் வழக்கில் முன்ஜாமீனை ரத்துசெய்து அவருக்கு நெருக்கடி கொடுக்கும் பிளானிலும் உறுதியாக இருக்கிறதாம் மத்திய அரசு.

https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-court-denied-anticipatory-bail-to-former-minister-pchidambaram

ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்:

வீட்டில் இல்லாத நிலையில் அதிகாரிகள் ஏமாற்றம்...!

டெல்லியில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்தனர். பின்னர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாத நிலையில் அதிகாரிகள் திரும்பி சென்றனர். கடந்த 2006ல் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து இருவர் மீதும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முன் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2 மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. மேல்முறையீடு செய்ய ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்துள்ளது.

அதனையடுத்து ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். வீட்டில் ப.சிதம்பரம் இல்லாத நிலையில் அதிகாரிகள் திரும்பி சென்றனர். ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதாக கூறப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The CBI team has left from the residence of P Chidambaram 3rd time today

விரட்டும் சிபிஐ.. 24 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டுக்கு விசிட்.. இவ்வளவு அவசரம் ஏன்?

சிபிஐ அதிகாரிகள் விடாமல் ப.சிதம்பரத்தை விரட்டி விரட்டி வந்து கொண்டிருக்கின்றனர்... இதுவரை 4-வது முறையாக சிதம்பரம் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து குவிந்துள்ளது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

டெல்லி ஹைகோர்ட் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிவிட்ட நிலையில், நேற்று சாயங்காலம் ப.சிதம்பரம் வீட்டுக்கு நேரடியாகவே சிபிஐ சென்றுவிட்டார்கள்.

அங்கு ஆள் இல்லை என்றதும், திரும்பி சென்றனர். இதையடுத்து, ராத்திரி 11.30 மணிக்கு திரும்பவும் அதிகாரிகள் வந்தபோதும் சிதம்பரம் வீட்டில் இல்லை. அதனால், விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்து, வீட்டிலேயே நோட்டிஸ் ஒன்றையும் ஒட்டிவிட்டு வந்தார்கள்.

இந்நிலையில், இன்று காலை, 6 அதிகாரிகள் மறுபடியும் சிதம்பரம் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர்களை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வந்தார்கள். ஆனால் அந்த நேரத்திலும் வீட்டில் சிதம்பரம் இல்லை. அதனால் அரை மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

தற்போது, சிறிது நேரத்துக்கு முன்பும் அதிகாரிகள் 4-வது முறையாக சிதம்பரம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதாவது 24 மணி நேரத்தில் 4 முறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ப.சிதம்பரத்தை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று காங்கிரஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/the-cbi-team-has-left-from-the-residence-of-p-chidambaram-3rd-time-today-360715.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®²à¯à®²à¯

சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள். ப. சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது? 

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடியாக குவிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது சினிமாவிற்கு நிகரான அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதனால் அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் கட்டி வருகிறார்கள். தற்போது ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திடீர் என்று இன்று இரவு 8.15 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்தார். அங்கு சரியாக 8 நிமிடம் அவர் பேட்டி அளித்தார். ஆனால் கேள்விகளை எதையும் எதிர்கொள்ளாமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.

இதையடுத்து அங்கு உடனடியாக சிபிஐ அதிகாரிகள் குவிந்தனர். ஆனால் அதற்கு முன் அங்கிருந்து ப. சிதம்பரம் கிளம்பி சென்றார். இதனால் சிபிஐ அதிகாரிகளின் இன்னோர் படை அவரின் காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது. நேராக ப. சிதம்பரம் டெல்லியில் ஜோர் பாகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் காரில் சென்றனர்.

à®à®à¯à®à¯ வநà¯à®¤à®©à®°à¯

ப. சிதம்பரத்தை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். ப. சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வேகமாக விரைந்து வந்தனர். ஆனால் ப. சிதம்பரம் வீட்டின் வெளி கேட்டை திறக்கவில்லை. ப. சிதம்பரம் பாதுகாவலர்கள் சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.


à®à®©à¯à®©
 

இதனால் ப. சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். 20 அதிகாரிகள் இப்படி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். தற்போது ப. சிதம்பரம் வெளியே வர வேண்டும் என்று அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டின் பின் புறமாக உள்ளே சென்று குதித்தனர்.

ப . சிதம்பரம் முதல் மாடியில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரின் வீட்டு கேட்டை எகிறி குதித்த அதிகாரிகள் அதன்பின் தரை தளத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தற்போது காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது .
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/scenes-unfolded-like-cinema-what-is-happening-in-p-chidambaram-house-360795.html

Link to comment
Share on other sites

ப.சிதம்பரத்தை சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.

அவரை சிபிஐ கைது செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

10.30pm: Delhi braces for protest. Water canons put in place at CBI headquarters.

10.25pm: Chidambaram likely to be produced before the CBI Rouse Avenue Court on Thursday

10.20pm: Chidambaram will spend the night at CBI headquarters.

10.20pm: CBI formally arrests P Chidambaram. He has been arrested on an arrest warrant issued by a competent court.

10.15pm: On being asked who is to blame for the drama, Chidambaram's son Karti said, "Yes, of course, all of this is being done by BJP. Who else? You think Donald Trump? No."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை போரின் முக்கிய சகுனி இந்த சிதம்பரம் இவனும் இவன் சார்ந்த கட்சியும் அழிந்து போகணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதான ப. சிதம்பரம் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்?

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

ஆனால் அதற்குள்ளாக அவர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர். அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைது செய்யப்பட்டார்.

சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் எனத் தெரிகிறது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் எனத் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.hindutamil.in/news/india/512387-chidambaram-1.html

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது: டெல்லியில் அடுத்தடுத்து நடந்த பெரும் பரபரப்பு- வீடியோ

டியோ

residence-of-p-chidambaram  

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைது செய்யப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டியது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தநிலையில் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1566403125.JPG1566403138.JPG

அவரை தேடி சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் இல்லாததால் நோட்டீஸை வழங்கி விட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. இதனால் ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் எனும் விவரம் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

ஆனால் அதற்குள்ளாக அவர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதனிடையே சிபிஐ அதிகாரிகள் டெல்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால் காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர்.

அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவரை கைது செய்வதற்காக கார் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் வீட்டின் கேட் கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே கொண்டு வரப்பட்டது.

1566403169.JPG

உடனடியாக அந்த பகுதியில் பெரிய அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திரண்டனர். இதனால் அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ அதிகாரிகளால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

https://www.hindutamil.in/news/india/512382-residence-of-p-chidambaram-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது வாழ்க்கைனு வந்துட்டாலே 1000 என்குயரிஸ் ..☺️

2mtRipdNR_kKuIpG.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பொது வாழ்க்கைனு வந்துட்டாலே 1000 என்குயரிஸ் ..☺️

2mtRipdNR_kKuIpG.jpg

அதுகும்.... சுவர் ஏறி குதித்து, வீட்டுக்குள்  போய்.... என்குயரி பண்ணுகிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்று, வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளது.

சிதம்பரம் தனது குடும்பத்தினரையும், வழக்கறிஞரையும் தினமும் 30 நிமிடம் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிபிஐ தரப்புக்காக ஆஜராகியுள்ள இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் இடையே காரசாரமான வாதம் நடந்தது.

குற்றப்பத்திரிகையில் தனது பெயர் இடம்பெறவில்லை என சிதம்பரம் கூறி வருகிறார், ஆனால் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்ப்பதற்கான அத்தனை வேலைகளிலும் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அதற்குத் தேவையான ஆதாரங்களை சிதம்பரம் கொடுக்காததை இந்த கால தாமதத்திற்கான காரணம். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல விஷயங்களை எங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி தெரிவிக்கிறார்.

கைது செய்வதற்கு முந்தைய 24 மணிநேரம் சிதம்பரம் உறங்கவே இல்லை என்பதால், அடுத்த நாள் காலை, அதாவது இன்று, வியாழன் காலை கைது செய்யுமாறு சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டதாவும், அதற்கு சிபிஐ அதிகாரிகள் மறுத்ததாகவும் சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் நீதிபதியிடம் தெரிவித்தார்.

வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன; எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது.

சிதம்பரத்தை ஐந்து நாட்கள் தங்கள் காவலில் சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.

பிணையில் வெளிவர முடியாத பிடியாணைக்கு பின்னர்தான், சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தன்னுடைய பதவியை சிதம்பரம் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் அதனால் சிலர் லாபமடைந்துள்ளனர் என்றும் கூறிய துஷார் மேத்தா இந்த வழக்கில் சிதம்பரம் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்பதை வெளியே கூற முடியாது. கேட்கப்பட்ட கேள்வி மற்றும் விடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் முன்பு கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

 

சிதம்பரம் தரப்பின் எதிர்வாதம்

எனினும், குற்றப்பத்திரிகை வரை தயார் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை முடிந்து விட்டது என்று நீதிமன்றத்தில் வாதிட்ட கபில் சிபல், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கான அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை ஆறு அரசு செயலர்கள் வழங்கியுள்ளனர் அவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சிதம்பரம் ஒரு முறைகூட வரமால் இருந்ததில்லை என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று காலை எட்டு மணிக்கு சிதம்பரம் தூங்கி எழுந்தபின், மதியம் 12.30 மணி முதல் 12 கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அவற்றில் ஆறு கேள்விகள் முந்தைய விசாரணைகளில் கேட்கப்பட்டவை என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு நடக்கிறது என்று சிதம்பரம் தரப்பின் இன்னொரு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர், பின்னர் அப்ரூவர் ஆகி மீண்டும் ஒரு வாக்கு மூலம் கொடுக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே வேறு வாக்கு மூலம் கொடுத்தார் என நீதிமன்றத்துக்கு கூறவில்லை என்றார்.

அப்போது துஷார் மேத்தா குறுக்கிட்டு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரினார். ஆனால் சிங்வி தனது தரப்பு வாதம் முடியவில்லை என தெரிவித்தார்.

ஒருவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க மூன்று அடிப்படையான காரணங்கள் தேவை, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை மட்டுமே காரணமாக கொள்ள முடியாது.

குற்றங்களை ஒப்புக் கொள்வதற்காக மட்டுமே விசாரணை காவலுக்கு உத்தரவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது என அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

நீதிமன்றத்தில் தாம் பேச விரும்புவதாக சிதம்பரம் தெரிவித்ததாகவும், அப்போது அவரது சார்பாக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுவதாகவும் துஷார் மேத்தா தெரிவித்தார் என்றும் ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் தமக்காகத் தாமே நீதிமன்றத்தில் வாதிட அனுமதிக்கும் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும் சிங்வி சுட்டிக்காட்டினார்.

என் மீது பண மோசடி வழக்கு உள்ளது, எனவே உங்கள் கணக்கில் 5 மில்லியன் பணம் போடப்பட்டுள்ளது உள்ளது. எனவே எங்கள் வங்கி கணக்கு ஆதாரங்களை கொடுக்க கேட்டனர். அதனையடுத்து என்னுடைய மற்றும் கார்த்தி வங்கிக்கணக்கு விவரத்தை வழங்கினோம் என சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ப.சிதம்பரம்

நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், தாமோ தமது குடும்ப உறுப்பினர்களோ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

"சிபிஐ அல்லது அமலாக்கத் துறை தமக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது பெயர் குறிப்பிடப்படவில்லை," என்றும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறாக இருக்க தாமும் தனது மகனும் தவறு செய்தது போன்ற பிம்பம், பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்களால் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

 

வழக்கின் பின்னணி

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். இடைக்கால நிவாரணம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அனுகினார்.

உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே, அவருக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/india-49435137

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்திடம் உள்ள சொத்து விவரங்களை... கேரளா தொலைக்காட்சி வெளியிட்டது.

சென்னையில் மட்டும் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், மற்றும் 3 அலுவலகங்கள். இந்தியாவிலும், வெளி நாட்டிலும் சேர்த்து 500 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைகள். 
ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ்கள். ஆப்பிரிக்காவில் குதிரைப்பண்ணை. இது ஒரு சிறு பிசிறு மட்டுமே மீதி உள்ள சொத்து விவரங்களை காணொளியில் காணுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

கேரள மாநிலத்தில் கம்யூனிசம் வளர்ப்பதற்கு கூட அவர்கள் இட்ட பட்டியல் உதவும்.

தமிழகத்தில் மக்கள் வாக்கிற்க்கு வாங்கும் பணம் எவ்வாறு அரசியல் வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க பயன்படுகின்றது என காட்டும் இந்த காணொளி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P-Chidambaram-new.jpg

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு – ப.சிதம்பரத்திற்கு மீண்டும் 5 நாட்கள் சி.பி.ஐ. காவல்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மீண்டும் 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் பிணை கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்த நிலையில் டெல்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து அவர் செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்திலுள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

அத்துடன் 26 ஆம் திகதி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மீண்டும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

http://athavannews.com/ஐ-என்-எக்ஸ்-முறைகேடு-வழக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திஹார் சிறையில் சுத்தம் செய்யப்படும் புதிய அறை !! சிதம்பரத்துக்கு ரெடியாகும் சிறை !!

chidambaram-1.gif

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதித்திருக்கும் அந்நிய முதலீடு தொகையை விட கூடுதலாக 305  கோடி ரூபாயைப் ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவனம் பெற்றது.

சட்டவிரோதமாக அந்நிறுவனம் பெறப்பட்ட அந்த முதலீட்டு தொகைக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதித்தாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.  அந்த கஸ்டடி இன்று முடிவடைகிறது.

இதையடுத்து சிதம்பரம் இன்று மாலை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். முடிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் திஹார் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இந்நிலையில் திஹார் சிறை  வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை சிறை நிர்வாகம் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலோ அல்லது சிபிஐ மீண்டும் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டாலோ திஹார் சிறையில் உள்ள அந்த அறையில் சிதம்பரம் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.asianetnews.com/politics/chidambaram-will-be-put-in-thihar-prison-pwtom8

டிஸ்கி :

ஏழைகளுக்குத்தான் பாத்ரூமில் வழுக்கி விழுதல், மாவுகட்டு , மின்சார வயரை கடித்தல் ஆகியன நடக்கும் போல் கிடக்கு..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamilisai-3-720x450.jpg

பா.சிதம்பரத்திற்கு திகார் சிறைச்சாலை தயாராகி வருகிறது – தமிழிசை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரத்துக்கு திகாரில் உள்ள சிறைச்சாலை தயாராகி வருகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

வேலூரில் இடம்பெற்ற கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தின் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர், “இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியில் இருந்து ஏன் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றீர்கள் என்று கேட்கிறார்கள்.

பொருளாதார மேதை என்று கூறப்பட்ட பா.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றுள்ளார். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.

முதலமைச்சர் கூறியதுபோன்று அவர் நாட்டுக்கு பாரமாகத்தான் இருந்துள்ளார். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

http://athavannews.com/பா-சிதம்பரத்திற்கு-திகார/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.