Jump to content

புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
கோள்

சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூரியனை விடவும் குறைவான பிரகாசத்தை கொண்ட நட்சத்திரமொன்றும், அதனை சூழ இரண்டு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.

நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளானது, குறித்த நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றி வருவதாகவும், மற்றைய கோளானது நட்சத்திரத்தை 65 நாட்களில் சுற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

50 நாட்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கோளொன்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விடயம் என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான கோளொன்றை இலங்கை கண்டுபிடித்துள்ளமை பாரிய சவாலான விடயம் எனவும் கூறியிருந்தார்.

கோளொன்றை கண்டுபிடிக்கும் தொலைநோக்கியின் பெயரையே தாம் இந்த கோள்களுக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோள்

இதன்படி, நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளுக்கு K2-310B எனவும், நட்சத்திரத்திற்கு சற்று தொலைவிலுள்ள கோளுக்கு K2-310C எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.

K2-310B கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (33165 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 263 பாகை செல்சியஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கோளுக்கும், குறித்த நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரமானது, சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பத்தில் ஒன்று என சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேபோன்று, K2-310C கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (34,441 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளுக்கும், குறித்த நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரமானது, சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தில் மூன்றில் ஒன்று என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த ஆய்வு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

இலங்கை விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனம், இந்த ஆய்வினை 2017ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பிரதான ஆய்வு விஞ்ஞானியான சராஜ் குணசேகர இந்த ஆய்வினை முதலில் ஆரம்பித்திருந்தார்.

சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள் மண்டலங்களை கண்டறியும் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கேப்லர் செயற்பாட்டு தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளை தொடரும் நோக்குடன் புதிய விண்வெளி விஞ்ஞானியான மஹேஷ் ஹேரத் 2018ஆம் ஆண்டு, பிரதான ஆய்வு விஞ்ஞானியான சராஜ் குணசேகரவுடன் கைக்கோர்த்துள்ளார்.

சந்திர ஜெயரத்ன, மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர (இடமிருந்து வலமாக) Image caption சந்திர ஜெயரத்ன, மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர (இடமிருந்து வலமாக)

இதன்படி, நாசா நிறுவனத்தின் கேப்லர்-2 செயற்பாடுகளின் ஊடாக 5,88,991 நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு, அவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் ஊடாக 2018ஆம் EPIC 212737443 என்ற நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த நட்சத்திரத்தை சூழ இரண்டு கோள்கள் சுழன்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இந்த கோள் மண்டலம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து மேலதிக விடயங்களை கண்டறிந்துக் கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 11 விண்வெளி விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு ஆய்வு கண்காணிப்பாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்களினால் தமது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததும், சர்வதேச நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ரோயல் விண்வெளி ஆய்வு சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பல்வேறு விண்வெளி ஆய்வுகள் தொடர்பான நிறுவனங்களின் இணையத்தளங்களும் இந்த கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

இந்த கோள்களில் உயிரினங்கள் வாழ முடியுமா?

சனத் பனாவின்னகே Image caption சனத் பனாவின்னகே

இந்த இரண்டு கோள்களிலும் வாயு மண்டலம் மற்றும் நீர் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.

அத்துடன், நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளின் வெப்பநிலை 263 பாகை செல்சியஸ் என்பதனால், அந்த கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும், குறித்த நட்சத்திரத்திற்கு சற்று தொலைவிலுள்ள கோளின் வெப்பநிலையானது, 43 பாகை செல்சியஸ் என்பதனால், உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி, மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் அந்த கோள்களில் உள்ளனவா என்பதை கண்டறிய உள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் உறுதியளித்தார்.

விண்வெளி ஆய்வுகளில் மிகவும் முன்னிலையில் திகழ்கின்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் பட்டியலில் ஆசிய நாடான இலங்கையும் இணைந்துக்கொண்டுள்ளமை பெருமை அளிப்பதாக விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவிக்கின்றார்.

இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் தமது திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் இதன்போது தெளிவூட்டினார்.

''இலங்கையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்றை தொடங்குவது தொடர்பாக 2015ஆம் ஆண்டு நாங்கள் திட்டமொன்றை தயாரித்திருந்தோம். இந்த திட்டத்தை நாங்கள் அரசாங்கத்திடம் கையளித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் என நான் நினைக்கின்றேன். சர்வதேச அளவிலான ஆய்வுகளை நடத்தும் அளவிற்கு நாம் வந்துள்ளோம்.

கோள்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்கள் முதல் இதனுடன் ஆர்வமுள்ள அனைவரையும் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுத்த முடியும். அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய ஒத்துழைப்பாக அமையும். பலர் விண்வெளி தொடர்பான ஆர்வத்திலிருந்து தற்போது விலகிச் செல்கின்றனர். அதனால் இது இந்த காலத்திற்கான தேவையாகவே காணப்படுகிறது" என விஞ்ஞானி சராஜ் குணசேகர கூறுகிறார்.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இலங்கையில் தொடங்குவதற்கு 750 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சனத் பனாவின்னகே தெரிவிக்கின்றார்.

''சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்றை தொடங்குவதற்கான ஆய்வு அறிக்கையை 2016ஆம் ஆண்டு திறைசேரியிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்கு தேசிய திட்டம் தொடர்பான திணைக்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. தேசிய திட்டம் தொடர்பான திணைக்கத்தின் அனுமதியை பெற்ற பல திட்டடங்கள் காணப்படுகின்றன.

எமது திட்டத்தின் முதலீட்டு தொகையானது மிகவும் பெரியளவில் காணப்படுகின்றது. 750 மில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. தற்போதைய காலத்தில் அந்த தொகை மேலும் அதிகரித்திருக்கக்கூடும். சர்வதேச திட்டங்களை எமக்கு பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே நாம் ராவணா செய்மதியையும் தயாரித்திருந்தோம். விண்வெளியிலுள்ள செய்மதிகளின் தரவுகளை தரவிறக்கம் செய்தல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நிலையமொன்றை தொடங்கும் திட்டமொன்றும் எம்வசம் காணப்படுகின்றது. அதற்கான காணியை அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது" என பொறியியலாளர் சனத் பனாவின்னகே குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/science-49411620

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள், தொடர்க இந்த பயணம்!

"சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்களினால் தமது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததும், சர்வதேச நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ரோயல் விண்வெளி ஆய்வு சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது." 

பின் குறிப்பு : முடிந்தால் இலங்கைக்கு, குறிப்பாக வட, வட கிழக்கு கரையோரங்களுக்கு தினமும் போதைப்பொருட்களை கடத்தி வரும் படகுகளை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙂 

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

பின் குறிப்பு : முடிந்தால் இலங்கைக்கு, குறிப்பாக வட, வட கிழக்கு கரையோரங்களுக்கு தினமும் போதைப்பொருட்களை கடத்தி வரும் படகுகளை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙂 

பிறகு இவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்!  

ஏற்கனவே கடத்தல், பாலியல்  பலாத்காரம்,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல். கொலைகளில் பிரபலமான ஒரு மிலேச்ச பயங்கரவாதி சவேந்திர சில்வா சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளின் தலைவனாகவும், இவர்களையெல்லாம் இயக்கிய மிலேச்ச பயங்கரவாதி கோட்டாபய இராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

பின் குறிப்பு : முடிந்தால் இலங்கைக்கு, குறிப்பாக வட, வட கிழக்கு கரையோரங்களுக்கு தினமும் போதைப்பொருட்களை கடத்தி வரும் படகுகளை கண்டுபிடிக்க உதவுங்கள் 🙂 

இவர்கள்.... காணாமல் போனவர்களையும், கண்டு பிடித்து தந்தால்.... பெரிய உதவியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.