Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது ;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் அமைப்புக்கள்


Recommended Posts

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படகூடாது. என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளதுடன், திறக்கப்பட்டால் போராட்டம் நடாத்துவோம் எனவும் கூறியுள்ளனா். 

 

000.jpeg

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். 

இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார். 

இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எதிர்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். 

அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தினத்தில் வடக்கு, கிழக்கில் போராட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். 

முள்ளிவாய்க்காலில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்திலும், கல்முனையிலும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள், மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

https://www.virakesari.lk/article/63050

Link to comment
Share on other sites

காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழந்த சோகம்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். 

IMG20190820125211.jpg

 

வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது இந்நிலையில் தனது மகன் அச்சுதன் வயது 26 கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது மகனை மீட்கும் போராட்டத்தில் இணைந்திருந்த வேலாயுதம் செல்வராசா 56வயது மகிழங்குளம் ஓமந்தை இடத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு நேற்று இரவு 10மணியளவில் வைத்தியசாலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மனைவி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவருடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் இன்றுவரையிலும் 39பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/63002

Link to comment
Share on other sites

டக்ளஸ், வரதர் தரப்­புகள் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க  கங்­கணம் கட்­டு­கின்­றன  ; முல்­லைத்­தீவு காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி 

Published by R. Kalaichelvan on 2019-08-21 12:34:35

IMAGE-MIX.png
 

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ் மற்றும் வர­த­ராஜப் பெருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி மரி­ய­சுரேஷ் ஈஸ்­வரி தெரி­வித்தார்.

jaffna_press_club.jpg

யாழ்ப்­பாணம் ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

உள்­நாட்டு போரில் போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர்  கோத்தாபய ராஜ­பக்ஷவே என்று எமது மக்­க­ளுக்கும் உல­குக்கும் தெரியும். எங்­களின் உற­வு­களை மறைத்து வைத்­தி­ருக்க பிர­தான சூத்­தி­ர­தாரி இவர்தான். 

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் கோத்­த­பாய போர்க்­குற்­ற­வாளி தான். அந்த மன­நி­லையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தாவை இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர தமிழ் மக்­க­ளா­கிய நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அவர் எம்மை மீறி ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் மிகு­தி­யாக இருக்­கின்ற எங்­களை கொன்­ற­ழிக்­கவே துடிப்பார். 

காணா­மல்­போன உற­வு­க­ளுடன் முக்­கி­ய­மாக அர­சியல் கைதி­களை தங்­களின் கட்­டுப்­பாட்­டி­லேயே இவர்கள் வைத்­தி­ருந்­தனர். ஆனால் அவர்­களில் பலர் எங்கே? சிறை­களில் தடுத்து வைத்­த­வர்­களை விடு­விக்­க­வில்லை. சிறையில் உள்­ளவர்க­ளை­யா­வது நாம் மீட்க வேண்டும் என பல போராட்­டங்களை நடத்­தினோம்.

ஆனால் இவர்­களும் தென்­னி­லங்கை அர­சி­யல்வா­தி­களும் கொஞ்சம் கூட இரங்­க­வில்லை.

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­த­பா­ய­வுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்ககங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் தேர்தலில் எமது தமிழ் தலைமை தவறுவிட்டால் நாம் தட் டிக் கேட்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/63084

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.