Jump to content

வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது!


Recommended Posts

வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது!

என்பதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

 

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வா பற்றியும் அவர் செய்த கொலைகளை பட்டியல் இட்டதும்  ஹான்சட்டில் இதை பதிந்தன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தார்மீக கடமையை செய்துள்ளார். 

Link to comment
Share on other sites

படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக  இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புலமைச் சொத்­துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இவரின் மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காலை 11 மணிக்கே மனை­வியும் அவரின் இரு பிள்­ளை­களும் அவரை பார்­வை­யிட்­டுள்­ளனர். 

அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்சட்டம் மற்றும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பயங்­கர விளைவு இது. வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் நீண்­ட­கா­ல­மாக யாழ். மாவட்­டத்தின் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யா­கப்­பணி புரிந்­தவர். தற்­போது கிளி­நொச்சி மாவட்ட பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­ச­ராக இருக்­கின்றார். இவர் துணிச்சல்மிக்­கவர். மக்­க­ளுக்­கா­கப் ­ப­ணி­யாற்­று­பவர். இதனால் இரா­ணுவ, பொலிஸ் புல­னாய்­வா­ளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சி­களும் இவரின் கைதுக்கு கார­ண­மாக இருக்­க­லா­மென நாம் கரு­து­கின்றோம். 

குறிப்­பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தியில் யாழ். மாவட்­டத்தில் சுமார் 300க்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஆனால் இரா­ணுவ,பொலிஸ் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் இவர்கள் தற்­கொலை செய்து கொண்­ட­தாக, விபத்தில் இறந்­த­தாக தெரி­வித்து அந்த விதத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அப்­போது சட்ட வைத்­திய அதி­கா­ரி­யாக இருந்த சிவ­ரூபன், பல மர­ணங்கள் அடித்­துக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன, சைலன்சர் துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளன, நவீன முறை­க­ளைப் ­ப­யன்­ப­டுத்­திக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­த­துடன் சர்­வ­தே­சத்­துக்கும் தெரி­யப்­ப­டுத்­தினார். அத்­துடன் இரு தட­வைகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­பா­கவும் இவர் சாட்­சியம் வழங்­கினார். 

2006ஆம் ஆண்டு அல்­லைப்­பிட்­டியில் ஒரு வீட்­டுக்குள் இருந்த மக்கள் இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­ல­பட்­டனர். இதில் பலர் காய­ம­டைந்­தனர். அப்­போது அவர்­களை அங்­கி­ருந்து கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் இருந்­தது. 

இத­னை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தின் நீதி­ய­ர­ச­ரா­க­வி­ருந்த ஸ்ரீநிதி நந்­த­சே­க­ர­னுடன் இணைந்து அப்­போது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்த சிவ­ரூபன் அங்கு சென்று காயப்­ப­ட­ட­வர்­களை  மீட்டு வந்து சிகிச்­சை­ய­ளித்த வர­லாறு  அவ­ருக்­குண்டு. இதற்­காக அவரை அமெ­ரிக்கா அழைத்து விசேட விருது வழங்­கி­யது. 

இவ்­வா­றான துணிச்சல் மிக்க வைத்­தி­யரின் பணியை முடக்­கு­வ­தற்­கா­கவும் தமி­ழர்­களின் பல படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­ய­மாக இருப்­ப­த­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வீட்டில் வைத்து கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக  ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்­துத்தான் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்­களைக் கொல்­வோம், அழிப்போம், நீங்கள் எங்கள்  அடி­மைகள்  என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது.  இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை. 

நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை  என்றார்.

https://www.virakesari.lk/article/63085

Link to comment
Share on other sites

ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓ.எம்.பி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1மணிவரையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

DSC_1556.JPG

வவுனியாவில் தொடர்ந்து 917ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஓ.எம்.பி ஒரு போலி அமைப்பு.

இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னோடி நிமல்கா பெர்னாண்டோவும் சுமந்திரனும்  ஆவார். சுமந்திரன் முன்னணி புலம்பெயர்ந்தோர் குழுக்களான , எல்லியஸ் ஜெய்ராஜாவின் யு.எஸ்.ரி பக் (USTPAC) ,  பாதர் இம்மானுவேலின் ஜி.ரி .எஃப் (GTF ) டாண்டன் துரைராஜா வின்   தமிழ் கனேடிய காங்கிரஸ் ஆகியவை நிமல்கா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் சேர்ந்து  ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர்.  

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிமல்கா காணாமல் போனார். ஆனால் அவர் சிங்களவர்களின் நிகழ்ச்சி நிரலை, அதாவது உள்ளூர் விசாரணைக்கு  ஊக்குவிக்க பணிபுரிந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க நடிகை ஜோலி ஏஞ்சலினா பார்க்க விரும்பி நிமல்காவை  கேட்டுக் கொண்டார். நிமல்கா போர்க் குற்றவாளிகளின்  ஆமி கொமாண்டரின் மனைவிகளை ஜோலி ஏஞ்சலினாவுக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்சி மாற்றம்  விதிமுறை முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு முன், கடைசியாக OMP ஐ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள் .

OMP என்பது நிமல்கா மற்றும் சுமந்திரனின்  சாதனம் ஆகும், இது UNHRC ஐ உள்ளூர் விசாரணையை நம்ப வைக்கும் சாதனம் .

நிமல்கா OMP யை  எப்படியாவது தமிழர்களுக்கு தேவை என்று காட்ட வேலை செய்ய தனது கடைசி தரம்  முயற்சிக்கிறார்.

தெற்கில் இன்னும் சில நிலங்களை சீனாவுக்கு அடமானம் வைப்பதன் மூலமும், காணாமல் போன ஒவ்வொருவரின் பெற்றோருக்கும் 5000 ரூபாயைக் கொடுத்து வழக்கை மூடுவதே  நிலம்ல்கா யோசனை. காணாமல் போனவர்கள்,  நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கண்டறிய எங்கள் சாதனம்.  நமது அரசியல் எதிர்காலம் மற்றும் எங்கள் வாழ்வாதாரம்  காணாமல் போனவர்ககளில் தங்கியுள்ளது.

காணாமல் போனவர்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேசவில்லை. இது பற்றி கதைத்தால் கொழும்பில் அது அவர்களை காயப்படுத்துகிறது. அவர்களின் லஞ்சம் ரணிலால் நிறுத்தப்படும்.

OMP ஒரு நெருக்கடி. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு இலங்கை உள்ளூர் விசாரணையைப் பெற நம்பகமான OMB ஐ உருவாக்குவதாக நிமல்க்காவும் சுமந்திரனும்  உறுதியளித்துள்ளனர்.

OMP குழப்பம் என்பதால், நிமல்கா, சுமந்திரான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் OMP என்ன செய்வது என்பது UNHRC இல் சில நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதாகும்.

எனவே, நாம் அனைவரும், இந்த போலி OMP உருவாக்கத்தை எதிர்ப்போம். எங்கள் எதிர்கால  சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் OMP ஐ நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டத்தின் இறுதியில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/63317

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.