Jump to content

‘வங்கியால் பாதிப்படைவதே அதிகம்’


Recommended Posts

2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, பி.ப. 02:36

 

-எஸ்.நிதர்ஷன்

வங்கியால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்படைந்ததுதான் அதிகமெனத் தெரிவித்த தொழிலதிபர் வி.ஜெயேந்திரன், இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

image_b2d1ae7162.jpg

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து வருவதாகவும் மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி, மக்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குவததாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே, வங்கிகள், மக்களுக்கு கடன்களை வழங்க முதல் மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வங்கியால்-பாதிப்படைவதே-அதிகம்/71-237114

Link to comment
Share on other sites

பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன் 

அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் சரத்பொன்சேகா கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஓரு இராணுவ ரீதியான கண்ணோட்டமாகவே பார்க்கிறேன். அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேசவேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கிறார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை. வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம்.

எனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் எனத்தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/63117

Link to comment
Share on other sites

நடுத்தர வருமான நாடு என்ற நிலையிலிருந்து  முன்னேற ஏற்றுமதி பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் 

(நா.தினுஷா)

இலங்கை உயர் நடுத்தர வருமானத்தை பெரும் நாடாக மாறியுள்ளது. இன்று எமது ஆள்வீத வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. ஆகவே தொடர்ந்து இந்த நிலையில் இருந்துவிட கூடாது. உயர் பொருளாதார வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை வகுத்து கொள்ள வேண்டும். 

உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடியவகை வெளிநாட்டு வருமானம், ஏற்றுமதி பொருளதாரம் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா -கொரியா தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று  பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

அங்கு தொடரந்து பிரதமர் கூறுகையில் ;

இன்று எமது நாடு உயர் நடுத்தர பொருளதார மட்டத்தை அடைந்துள்ளது. உயர் நடுத்தர வருமானம் தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதற்கமைய ஆள்வீத வருமானம் 4000 டொலர்களாக அதிகரித்துள்ளது.  இன்று உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடு என்ற நிலையை அடைந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.  

அதேபோன்று பொருளாதார ரீதியாக நாம் எதிர்க்கொண்டுள்ள சவால்களையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரே நிலையில் இருக்க முடியாது. உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னேறி ச்செல்ல வேண்டும். அதை நோக்கி பயணிக்காவிட்டால்  பொருளாதார ரீதியாக ஒரு இடத்தில் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும். 

நாட்டின் அதிக பொருளாதார வருமானத்துக்காக எவ்வாறு எமது வெளிநாட்டு பொருளாதார வருமானத்தை ஏற்படுத்தி கொள்ளுதல், கடன்களை செலுத்துவதற்கு தேவையான நிதியை எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு கடனை மீள செலுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு பதில் தேட வேண்டும்.  இதுவரையில் பாரிய கடனை பெற்றுக்கொண்டுள்ளோம். அந்த கடன் தொகைகளை விரைவாக மீள்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

என்றாவது ஒருநாள் நாம் பெற்றுள்ள மொத்த கடனையும் மீள செலுத்தி கடன் சுமையில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கு சரியான காலமே தற்போது உருவாகியுள்ளது. கடன் சுமையில் இருந்து மீண்டு வரவேண்டுமாக இருந்தால் எமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இன்று எமது  ஏற்றுமதி பொருளாதாரத்தி அளவை விட இறக்குமதி பொருளாதாரத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி பொருளதாரத்தை விட ஏற்றுமதி பொருளாதாரத்தினூடான வருமானம் அதிகரிக்கும் போதே கடன் சுமையில் இருந்து மீண்டு வருவோம். 

ஜி.எஸ்.பி வரிச்சலுகையினூடாக எமது வருமானத்தை  இன்னும் பெற்றுக்கொள்ள கூடியதாக இக்கும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே உலக சந்தையில் எமது இடத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எமது சவால். இன்று தேர்தல் குறித்தும் நாட்டை  மீட்டெடுக்குமாறும் கூச்சலிடுகிறார்கள். நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் எமது கடன்களை மீலச் செலுத்த வேண்டும்.  அதனூடாக எமது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/63055

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.