Jump to content

அமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரியும் அமேசான் காடு

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின் காப்புரிமை Getty Images

2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின் காப்புரிமை Getty Images

அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.

எரியும் அமேசான் காடு, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதைபடத்தின்

https://www.bbc.com/tamil/global-49416771

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை twitter/EmmanuelMacron

'புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' , ' புகை உயிரைக் கொல்லும்' - இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.

இப்போது ஏன் இந்தக் கதை என்கிறீர்களா?

காரணமாகதான் முகேஷின் நுரையீரல் எப்படி புகையால் பழுதடைந்ததோ... அதுபோல பூமியின் நுரையீரல் பழுதடைந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மிக மிக மோசமாக.

தெளிவாகவே சொல்லி விடலாம்.

பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.

என்ன நடக்கிறது?

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

#PrayForAmazon ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஏன் காட்டுத் தீ?

அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Reuters

இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.

மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.

"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.

பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, "பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்" கூறி இருந்தார்.

பழங்குடிகள்

இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான்.

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமை Getty Images

ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஏன் நாம் கவலைக் கொள்ள வேண்டும்?

அமேசானில்தானே காட்டுத்தீ. இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @EmmanuelMacron

இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் ட்வீட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார்.

இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என ட்வீட் செய்துள்ளார்.

நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/global-49445166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250-ml-bisleri-water-bottle-500x500.jpg

ஒரு காலத்தில் தண்ணீர் விற்பனைக்கு வராது என்றனர்..

93a92f2d2dfaf34ed4d5121bc7f483c7--enviro

இனி வரும் காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரும் விற்பனைக்கு வரும்.😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே...  பிராணவாய்வு  எனப்படும் . "ஒக்சிஜன்"   வழங்கும் காடு,  அமேசன் காடுகள்.
அங்கு... இன்றுவரை... கூட, மனிதரால் கண்டு பிடிக்கப் படாத உயிரினங்கள் வாழும்,
 பூமாதேவியின் வயிற்று பகுதியில்... தீ, பற்றி எரிவது... நல்ல சகுனம் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் காட்டுத் தீ: காலநிலை மாற்றம் தொடர்பில் உலகில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ள விடயம்

முன்­னென்றும் இல்­லா­த­ வ­கையில் அமே­சனில்  பர­விக்­கொண்­டி­ருக்கும் காட்­டுத்தீ கால­ நிலை நெருக்­க­டி­யையும் உயிர்ப் பல்­வ­கை­மை­யையும் (Biodiversity) மேலும் மோச­ம­டை­யச் செய்யும் என்று விஞ்­ஞா­னி­களும் சுற்­றாடல் பாது­காப்பு குழுக்­களும்  கவ­லை­ய­டைந்­தி­ருக்கும்  நிலையில், அந்த நெருக்­கடி உலக ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­யாக இடம்­பி­டித்­தி­ருப்­பதைக் காணக்­கூடி­ய­தாகவும் உள்ளது.

"நிர்­மூலம் செய்­யப்­ப­டு­கின்ற எந்தக் காடுமே உயர்ப் பல்­வ­கை­மைக்கும் அதைப் ப­யன்­ப­டுத்­து­கின்ற மக்­க­ளுக்கும் ஒரு அச்­சு­றுத்­தலே. வளி­மண்­ட­லத்­திற்குள் பெரு­ம­ளவு காபன் போகி­றது என்­பதே திண­ற­டிக்­கின்ற அச்­சு­றுத்­த­லாகும்" என்று ஜோர்ஜ் மேசன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சூழ­லி­ய­லாளர் தோமஸ் லவ்ஜோய் 'நாஷனல் ஜியோ­கி­ரபிக்' தொலைக்­காட்சி சேவைக்கு தெரி­வித்தார்.

PRI_81211399.jpg

உலகின் மிகப்­பெ­ரிய வெப்­ப­மண்­டல மழைக்­கா­டான அமேசன், 'உலகின் சுவா­சப்பை' என்று வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. சுமார் 30 இலட்சம் உயி­ரி­னங்கள், தாவ­ர­ வகை­களின் வசிப்­பி­ட­மாக விளங்கும் அந்த காட்டில் பத்து இலட்சம் பழங்­குடி மக்­களும் வாழ்­கி­றார்கள். மழைக்­கா­டு­களின் பரந்­த­கன்ற பகுதி உலகின் சூழல் தொகுதியில்  (Ecosystem) பெரும் பங்கை வகிக்­கி­றது. ஏனென்றால், அவை வளி­மண்­ட­லத்­திற்குள் வெப்­பத்தை திரும்ப வெளி­வி­டாமல் உறிஞ்­சிக்­கொள்­கின்­றன. அத்­துடன் அவை காப­னீ­ரொக்சைட் வாயுவை சேமித்­து­ வைத்­துக்­கொண்டு ஒட்­சிசனை வெளி­வி­டு­கின்­றன. இதன் மூல­மாக கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைத் தணிக்கும் வகையில் குறைந்­த­ளவு காபன் வளி­மண்­ட­லத்தில் வெளி­யி­டப்­ப­டு­வது உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது. 

"உல­க­ளா­விய கால­நிலை நெருக்­க­டிக்கு மத்­தியில், ஒட்­சிசன் மற்றும் உயி­ரி­னப்­பல்­வ­கை­மையின் முக்­கிய மூலா­தா­ர­மாக விளங்கும் அமேசன் காடு­க­ளுக்கு  மேலும் சேதம் ஏற்­ப­டு­வதை  எம்மால் தாங்­கிக்­கொள்­ள­மு­டி­யாது. அமே­சனைப் பாது­காக்­க­வேண்டும்" என்று ஐக்­கிய நாடு கள் செய­லாளர் நாயகம் அன்­ரோ­னியோ குற்­றெரஸ் டுவிட்டர் சமூக ஊடகம் மூல­மாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

_108480666_deforestation.jpg

அமெ­ரிக்­காவின் தேசி­ய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் தர­வு­க­ளின்­படி ஒரு வரு­டத்­துக்கு முன்னர் இருந்த நிலைவ­ரத்­துடன் ஒப்­பி­டும்­போது இவ்­வ­ருடம் ஜன­வரி தொடக்கம் ஆகஸ்ட் வரை பிரே­ஸிலில் காட்டுத் தீ மூண்ட சம்­ப­வங்கள் 82 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. 2019 முதல் 8 மாதங்­களில் அந்த நாட்டில் மொத்­த­மாக 71,497 காட்டுத் தீ சம்­ப­வங்கள் பதி­வாகி­யி­ருக்­கின்­றன. 2018 இதே காலப்­ப­கு­தியில் 39,194 சம்­ப­வங்கள் பதி­வா­கின என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"கடந்த 12 மாதங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது பிரேஸில் நாட்டின் அமே­சனில் காட்­டுப் ப­கு­திகள் 20–30 சத­வீ­தத்­தினால் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன" என்று சாவோ போலோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆராய்ச்­சி­யா­ள­ரான கார்லோஸ் நோப்றே ஜேர்­ம­னியின் டியூற்ஷே வெல்  தொலைக்­காட்­சிக்கு கூறினார்.

அமேசன் மழைக்­கா­டு­ களில் காட்­டுத்தீ வேக­மா கப் பர­வு­வ­தற்கு அர­சாங்க சார்­பற்ற அமைப்­புக்­களே காரணம் என்று பிரேஸில் ஜனா­தி­பதி ஜாய்ர் பொல்­சா­னாரோ சில தினங்­க­ளுக்கு முன்னர் குற்­றஞ்­சாட்­டி னார். ஆனால், அந்த குற்­றச்­சாட்டை சூழ­லி­ய­லா­ளர்கள் மறு­த­லித்­தி­ருக்­கி­றார்கள். 2018 ஆம் ஆண்டில் இருந்தே காட­ழிப்பு குறித்து அவர்கள் கவ­லை­ வெ­ளி­யிட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். காட­ழிப்­பையும் காட்­டுத்­தீ­யையும்  சுற்றாடல் பாது­காப்­புக்கு விரோ­த­மான அர­சாங்­கத்தின் கொள்­கை­களே தீவி­ரப்­ப­டுத்­தின என்று அவர்கள் கூறு­கி­றார்கள்.

அமேசன் காட்டுத் தீயை ஒரு சர்­வ­தேச நெருக்­கடி என்று கூறி­யி­ருக்கும் பிரான்ஸ் ஜனா­தி­பதி இமா­னுவேல் மக்றோன்,  "ஜி7 நாடுகள் பிரான்ஸில் நடை­பெறும் அவற் றின்   உச்­சி­ம­ா­நாட்டில் இந்த நெருக்­க­டியை அவ­ச­ர­மாக ஆரா­ய­வேண்டும்" என்று வலி­யு­றுத்­தி கேட்­டி­ருக்­கிறார். "எமது வீடு தீப்­பற்றி எரி­கி­றது; எமது கிர­கத்தின் ஒட்­சி­சனில் 20 சத­வீ­தத்தை உற்­பத்தி செய்­கின்ற சுவா­சப்பை தீப்­பி­டித்­தி­ருக்­கி­றது" என்று மக்றோன் டுவிட்­டரில் பதி­வு செ­ய்­தி­ருக்­கிறார்.

பிரான்ஸ் ஜனா­தி­ப­தியின் அந்த பதிவை கண்­டித்­தி­ருக்கும் பிரேஸில் ஜனா­தி­பதி, "பிரே­ஸி­லி­னதும் ஏனைய அமேசன் நாடு­க­ளி­னதும் உள்­வி­வ­கா­ரத்தை பயன்­ப­டுத்தி மக்றோன் தனிப்­பட்­ட­மு­றையில் அனு­கூலம் பெற முயற்­சிப்­பது கவலை தரு­கி­ றது. அவரின் கருத்­துக்­களின் உணர்ச்சி­வசத் தொனி பிரச்­சி­னையைத் தீர்க்க எதையும் செய்யப்போவதில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

190823-amazon-jungle-fire_16cbf66e89d_la

அமேசன்  மழைக்காடுகளில் சுமார் 60 சதவீதமானவை பிரேஸிலுக்கு சொந்த மானவை. அவை பாழாகுவது உலக கால நிலையிலும் மழைவீழ்ச்சியிலும் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

காட்டுத் தீயினால் அழிந்துபோயிருக்கும் பகுதியின் பரப்பளவு இன்னமும் திட்ட வட்டமாக தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், காட்டுத் தீயின் விளைவான நெருக்கடி நிலை பிரேஸிலின் எல்லை களைக் கடந்து பெரூ, பரகுவே மற்றும் பொலிவியாவின் பிராந்தியங்களுக்கும் பரவியிருக்கிறது.

ECgLgvOXkAUYjfv.jpg

 

https://www.virakesari.lk/article/63398

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.