Jump to content

பின்லாந்து கல்வி முறை நம் நாட்டிலும் சாத்தியம்தானா? ஓர் அலசல்


Recommended Posts

கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம்.

``ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருவது மிக இயல்பானதே. பின்லாந்து நாட்டில் கல்வி தொடங்குவதே மிக ஆரோக்கியமான வயதில்தான். ஆம்! ஒரு குழந்தையின் ஆறு வயதில்தான் முறையான கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால், நமது ஊரில் இரண்டரை வயதிலிருந்தே ஃப்ரி ஸ்கூலுக்குக் குழந்தைகளை அனுப்பத் தொடங்கிவிடுகிறோம். அங்கும் 6 வயதுக்கு முன் ஃப்ரீ ஸ்கூல் இருக்கிறது. ஆனால், அங்கு எந்தப் பாடமும் கிடையாது. இசை, நீச்சல், ஓவியம் போன்ற கலைகளைப் பயிற்றுவிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. புத்தகங்கள் கிடையாது.

ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒரு வருடம் பாடங்கள் கிடையாது. பெரிய அறையில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு, அங்கிருக்கும் விளையாட்டுப் பொருள்களில் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். அதன்பின், 7 வயதில்தான் பாடங்களே தொடங்குகின்றன. அதிலும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரேங்க் கார்டு எனும் முறையே கிடையாது. இதை நம் ஊரில் நினைத்துப் பார்க்க முடியுமா? எல்.கேஜியிலேயே முதல் மார்க் குறைந்துவிட்டது எனக் குழந்தையிடம் கோபித்துக்கொள்ளும் பெற்றோர்களே அதிகம். இவ்வளவு பணம் கட்டிப் படிக்க வைக்கிறனே என்று கரித்துக்கொட்டவும் செய்வார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ரேங்க் கார்டு என்பது மாணவர்களுக்கு இல்லை. உங்கள் பிள்ளைக்கு இந்த வயதில் இந்தந்த திறன்கள் இருக்கவேண்டும். அவற்றில் இருக்கும் போதாமைகளை, பெற்றோரிடம் சொல்வது மட்டுமே நடக்கும். அதிலும் கண்டிப்போ நிர்பந்தமோ இருக்காது. 7 வயது முதல் 16 வயது வரையிலான கல்வி முழுக்க பின்லாந்து நாட்டின் ஃபீனிஷ் மொழியில்தான் அளிக்கப்படுகிறது. இது என்னளவில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். ஏனெனில், தாய்மொழியில் கல்வி கற்கும்போதே அக்கல்வி அர்த்தம் புரிந்துகொண்டு ஆழமாக அம்மாணவரின் மனதில் தங்கும். அதன் தாக்கம்தான், ஐ.நா, நாசா உள்ளிட்ட பல இடங்களில் பின்லாந்து நாட்டினர் தற்போது கணிசமான அளவு இடம்பெற்றுவருகிறார்கள். 7- 16 வயதுக்குரிய கல்வியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு என அம்மாணவரின் விருப்பத்துக்கு ஏற்ப மற்றொரு மொழியைக் கற்க முடியும்.

7-16 வயதுக்குள் சர்வதேச அளவிலான மூன்று தேர்வுகளை எழுதிவிடுகிறார்கள். அவற்றை எழுத வைக்கப்படுவதில்லை. அந்தளவுக்குத் திறன்கள் அக்கல்வி முறையில் இருக்கின்றன. மேலும், அக்கல்வி முடிவடையும்போது கொடுக்கப்படும் சான்றிதழ் வெறுமனே தேர்வு வைத்துக்கொடுக்கப்படுவது அல்ல. இந்தக் காலகட்டத்தில், விவாசயம், மெக்கானிக்கல், மின்சாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றி டிப்ளோமா சான்றிதழ்கள் பெற வேண்டும். பின்னாளில் இத்தனை துறைகளில் வேலை வாய்ப்பு இருக்கின்றன என்பதும், ஒரு தொழில் செய்யப்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களை நேரிலும் பழகிக்கொள்ளும் நல்ல வாய்ப்பாக அது அமையும்.

இந்தப் பள்ளிக் கல்வி முடிந்தது, மூன்று வகை பிரிவுகள் படிப்பதற்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்க முடியும். முதலாவது அகாடமிக் பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பைத் தரும் லூக்கியோ ( Lukio). இதன் வழியே டெக்னாலஜி அல்லாத படிப்புகளான பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் படிக்கலாம். அடுத்தது, அம்மக்யூ குலு ( Ammaqi kolu) இந்தப் பிரிவில் தொழில் கல்வி தொடர்பான பிரிவுகளைப் படிக்கலாம். உதாரணமாக, மூன்று மணிநேரம் பாடம் என்றால், அடுத்த மூன்று மணி நேரம் பொருள்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேரடியாகப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இதன்மூலம் படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், கல்வி இலவசம்தான். மூன்றாவது பிரிவான லிபரல் ஆர்ட்ஸ் என்பது மாணவர்களின் கலைத்திறன்களை வளர்ப்பது. இதில் இசை உள்ளிட்ட 216 பிரிவுகளை வைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு பிரிவுகளை முடித்தவர்கள் அதன் மேல்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேரலாம். அம்மக்யூ குலு முடித்தவர்களில் பலரும் நேரடியாகத் தொழில் சார்ந்த பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

பொதுவாக பின்லாந்து கல்வி முறையில் நாம் ரொம்பவே சிலாகித்துச் சொல்லும் அம்சம் ஒன்று உண்டு. ஒரு வகுப்பில் அரையாண்டுத் தேர்வுக்கான பகுதியாக A - Z வரை கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது ஊரில், அந்தப் பாடப் பகுதியை நடத்திவிட்டுத் தேர்வு முறைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், வகுப்பின் அனைத்து மாணவர்களும் A - Z வரை புரிதலுடன் கற்றிருப்பார்கள் என்று சொல்லமுடியாது இல்லையா? சில A - Z வரை படித்திருப்பார். சில D யிலேயே நின்றுகொண்டிருப்பர். அதனால், எந்தப் பகுதி ஒரு மாணவருக்குப் புரியவில்லையே அதை அவர் தெரிந்துகொள்ளும் சரியான வாய்ப்பை பின்லாந்து கல்வி முறை அளிக்கிறது.

உதாரணமாக, 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு அல்ஜிப்ரா தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அல்ஜீப்ரா 6-ம் வகுப்பில்தான் கற்றுத்தரப்படுகிறது எனில், அந்த மாணவர் ஒரு வாரம் இருந்து படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்படிக் கற்றுத்தர ஓர் ஆசிரியர் ஒதுக்கப்படுவார். ஆசிரியர் மட்டுமல்ல, ஒரு மாணவர் பல்கலைக்கழகப் படிப்பு படிக்கும் வரையில் பள்ளியில் ஏதேனும் சந்தேகத்தைத் தீர்க்க அவர் வேண்டும் எனில், அப்பள்ளி அவருக்கு கடிதம் எழுதும். அவர் பல்கலைக்கழகத்தில் விடுப்பு எடுத்து பள்ளி வர வேண்டும். அந்தளவுக்குப் பள்ளியோடு இணைப்பில் ஒரு மாணவரை வைத்திருக்கிறார்கள்.

பின்லாந்தில் பள்ளிகள் என்பது கல்விக் கட்டடங்களாக மட்டுமல்லாமல், மக்களின் பண்பாட்டோடு இணைந்திருக்கிறது. அறுவடைக் காலங்களில் தானியங்களை உலர்த்த பள்ளியைப் பயன்படுத்துவார்கள். அதேபோல வெள்ளக் காலங்களில் ராணுவம் தங்கும் இடமாகவும் இருக்கும். ஊர்த் திருவிழாக் கொண்டாட்டக் களமாகவும் பள்ளிகள் இருக்கும். அதுதான் பள்ளி என்பது நம்முடையது என்கிற ஒரு நெருக்கத்தை அது அளிக்கிறது. இந்த உணர்வை நம் நாட்டில் பார்ப்பது மிகவும் அரிது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று, கல்வி முழுக்க முழுக்க அரசின் வசம் மட்டுமே இருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசு இலவசமாகக் கல்வி அளிக்கிறது. மேலும், நான்கு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கிய விழா ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்றபோது, அங்கு வந்த பின்லாந்து ஆசிரியர்களைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் இசை, நடனம் உள்ளிட்ட பல்திறன் கொண்டவர்களாக இருந்தனர். அதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியான ஆசிரியர்களிடம்தானே இயல்பாக மாணவர்களுக்குத் திறன்களைக் கற்றுத்தர முடியும்.

 

பின்லாந்து நாட்டின் அருமையான கல்வி முறையை நம் நாட்டிலும் பின்பற்ற முடியுமா என்ற கேள்விக்கு வருவோம்.

இதில் இருக்கும் முக்கியமான சிக்கல் நம் நாட்டின் மக்கள் தொகை. பின்லாந்தை விடவும் சுமார் 40 மடங்கு மக்கள் தொகை கொண்டது நம் நாடு. ஆனாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் சாத்தியம்தான். அதற்கு அரசு முன் வரவேண்டும். ஏனெனில், பின்லாந்து ஜிடிபியில் 24 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது; ஆனால், நம் நாட்டில் 3 சதவிகிதம் மட்டும்தான். இதை 6 சதவிகிதமாக மாற்றுவதற்கு கோத்தாரி வைத்த கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. தற்போது வெளியான தேசியக் கல்விக் கொள்கை வரைவில் ஜிடிபி 6 சதவிகிதம் பயன்படுத்த தனியாரைக் கல்வியில் ஈடுபடுத்தச் செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுகிறது அரசு.

அடுத்து, பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிரிலியன்ட் என்று இவர்கள் நினைக்கிறார்கள். திறன்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதுமே பிரிலியன்ட் மாணவருக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹோம் வொர்க் அதிகம் கொடுக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்ற மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும். பெற்றோர்களைப் போலவே சமூகம், திறமை உள்ள மாணவர்களைப் பாராட்டுவதற்கு முன் வந்தால் மட்டுமே இங்கே பின்லாந்து கல்வி முறை சாத்தியமாகும். ஏனெனில், பின்லாந்து கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி கல்வி நிலையங்கள் இயங்கின. ஆனால், அரசு இம்முறையைக் கையிலெடுத்து மாற்றும்போதே முழுமையான பலன் கிடைக்கும்.

 

https://www.vikatan.com/government-and-politics/education/educationist-natarasan-talks-about-finland-education

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.