Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

என்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா?

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
1 minute ago, Sasi_varnam said:

என்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா?

இதற்கெல்லாம. பூதக்கண்ணாடி தேவையா? இருட்டிலும்  கண்கள் தெளிவாக  தெரியும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்ரம் - மீண்டும் மீண்டும் வா

படம்: விக்ரம் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

 

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...
அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா

செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ

தொடங்க

மெல்லத் தொடங்க

வழங்க

அள்ளி வழங்க

இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்...


மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது

தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்

கவிதை

கட்டில் கவிதை

எழுது

அந்திப் பொழுது

கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா...


மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

படுத்தாள்....புரண்டாள்......உறக்கமில்லை.
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர...
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற...
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற...

 

படம் : வண்டிக்காரன் மகன் 
இசை: மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் 
வரிகள்: வாலி 

எனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது.
விரக உணர்ச்சிகளை பாடல் வரிகளாலும் , கந்தர்வ குரலாலும் உச்சத்துக்கு கொண்டுசென்ற பாடல் இது.
இதை போல இன்னும் ஒரு பாடல் இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 
மடல் கொண்ட வாழை 
உடல் கொண்ட பாவை 
இடை கொள்ளவில்லை 
அவள் கொண்ட சேலை 
அவன் வந்தபின்னே 
அதற்ககென்ன வேலை 

வந்தான்...செந்தேன் தந்தான் 
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான் 
வண்ணம் கொஞ்சும் அன்னம் 
தன்போல் போதைகள் கொண்டாடினாள் 
நீர் கொண்ட மேகம் 
நிலம் வந்து சேர 
அனல் கொண்ட பூமி 
குளிர் கொண்டு ஆட 
கொடி கொண்ட பூவை 
மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள் 
மெத்தை சத்தம் தத்தை 
தன் தாபங்கள் தள்ளாமல் போராடினால் 
படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Sasi_varnam said:


நீர் கொண்ட மேகம் 
நிலம் வந்து சேர 
அனல் கொண்ட பூமி 
குளிர் கொண்டு ஆட 
கொடி கொண்ட பூவை 

மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள் 
மெத்தை சத்தம் தத்தை 
தன் தாபங்கள் தள்ளாமல் போராடினால் 
படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 

 

ஸ்ஸப்பா.. கவிதை கவிதை

வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ஸ்ஸப்பா.. கவிதை கவிதை

வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...

கொடி கொண்ட பூவை 
மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள்

..... இந்த வரிகளுக்கு என் கட்பனை எங்கெல்லாமோ கூட்டிச்செல்கிறதே நிழலி ஜீ 

Link to comment
Share on other sites

23 hours ago, Sasi_varnam said:

காமக்  கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் ....

காமக் கவிதைகளை பக்தியோடு எழுதினால் திரி பற்றி எரியாதா என்ன.??? 🤣

xUklkhJk; xUtDk; Mfp ,d;gRfk; jUk; md;GnghUe;jp czu;Tfyq;fp xOfpatpe;J CWRNuhzpjk; kPJfye;J gdpapy; Xu; ghjp rpWJspkhJ gz;bapy; te;J GFe;Jjpuz;L gJk mUk;G fklk; ,njd;W.😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சதுரங்கம்

பாடியவர்கள்: SPB & வாணி ஜெயராம் 

இசை: V. குமார்

பாடலாசிரியர்: வாலி

ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான்

ரதிதேவியோபதியோடுதான்

பெண்: உயிரோவியம்உனக்காகத்தான்

உடல்வண்ணமேஅதற்காகத்தான்

ஆண்: மீனாடும்கண்ணில்விழுந்துநானாடவோ தேனாடும்செவ்விதழ் தன்னில் நீராடவோ... ஓ...மீ.. னாடும்கண்ணில்விழுந்துநானாடவோ

தேனாடும்செவ்விதழ்தன்னில்நீராடவோ...

பெண்: புரியாதபெண்மைஇது பூப்போன்றமென்மைஇது பொன்னந்திமாலைஎன்னென்னலீலை

ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான்

பெண்: ரதிதேவியோபதியோடுதான்

பெண்: கார்காலமேகம்திரண்டுகுழலானது

கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது

கார்காலமேகம்திரண்டுகுழலானது

கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது

ஆண்: ஓ... அலங்காரதேவி முகம்அடங்காதஆசைதரும் ஒன்றானநேரம்ஒருகோடிஇன்பம்

ஆண்: மதனோற்சவம்...

பெண்: ம்... ரதியோடுதான்

ஆண்: ஆ... ரதிதேவியோ... ஓ...

பெண்: பதியோடுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

 

பாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம் 🙂

Link to comment
Share on other sites

4 minutes ago, Sasi_varnam said:

பாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம் 🙂

படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா
வரிகள் : புலமைப்பித்தன்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி காலங்களில் பலருக்கு கிளு கிளுப்பை உண்டாக்கிய பாடல், குறிப்பாக கடைசி இரு பந்திகளும். நீங்களும் கற்பனை பண்ணி பாருங்கள்  இலங்கை வானொலியில் நாம் பலரும் கேட்டிருப்போம். 

படம் :புதுச் செருப்பு கடிக்கும் 
ஜெயகாந்தன் வரிகள் 
 எஸ்.பி.பியின் குரல் 

சித்திரை பூ சேலை சிவந்த முகம் 
சிரிப்பரும்பு முத்துச்சுடர் மேனி  எழில் 
மூடி வரும் முழு நிலவோ? 
மூடி வரும் முழு நிலவோ?

மீன் கடிக்கும் மெல்லிதழை - நான் 
கடித்தால் ஆகாதோ?

தேனின் ருசி தெரிந்தவன் நான் - ஒரு 
தேனீயாய் மாறேனா?

மஞ்சள் பூசும் இடமெல்லாம் - என் 
மனம் பூசல் ஆகாதா ?
கொஞ்சம் என்னை குங்குமமாய் 
குழைத்தெடுத்தால் வாறேனா ?

படிக்கட்டில் ஏறி வரும் - உன் 
பாததெழில் பார்ப்பதற்கு - நான் 
படிக்கட்டில் இடையில் ஓர் 
பலகையாய் மாறேனா?

முக்காலும் துணி மறைத்து - நீ 
மூலையிலே போய்  நின்று - உன் 
சொக்காயை இடுகையில் - நான் 
சொக்காகி, மூலை சுவராகி 
முன்னின்று பாரேனோ?

(சித்திரை பூ சேலை சிவந்த முகம்) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன் பாடல் வரிகளை எங்கே இருந்து எடுக்கிறீர்கள்.

நான் ஓரிரு தளங்களில் முயன்றேன் காப்பி பண்ண முடியவில்லை.

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... எனக்குப் பிடித்த மிக அருமையான பாடல்.
அந்த மெல்லிய  குரலும், இசையும், கமலின் கண்களின் நடிப்பும் அபாரம். :)

நிச்சயமாக ஒரு அருமையான பாடல். இத்திரியின் தலைப்பையும் தாண்டி ஓர் கலைநயமான பாடல். 😊

6 hours ago, Lara said:

மல்லிகைவாசம் இணைத்தது விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே” பாடல்.

நன்றி லாரா. 😊

Link to comment
Share on other sites

சசிவர்ணம், உங்கள் வேண்டுகோளிற்கிணங்க பாடல் வரிகள் இதோ 😊 :

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே


நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

 

நானும் இதைப்பகிர நினைத்தேன், ருல்பென் 😊 நீங்கள் முந்திக்கொண்டீர்கள். 😊

பாடல் வரிகள் இதோ:

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிதுது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

பாடல் வரிகள் இதோ:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் காமத்தில் சங்கமிக்கும் போது காம ரசத்தையும் நாகரீகமான ரசனையோடு, அரசமிலை ஆலிலை ஆகியது காம வரிதி வரிகளில்.

காதலும், காமமும் ஆணும் பெண்ணும் பகிரும் போது ஈரமான உஷ்ணத்தில் எழும் நிவாரணமாயினும், ஜேசுதாசின் குரலில் பெண்ணும் உள்ளளா?   

Link to comment
Share on other sites

11 minutes ago, ஈழப்பிரியன் said:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

பாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது. 

பல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம். 

Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

பாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி      Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும். 

Link to comment
Share on other sites

 

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்

என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்

பார்வையிலே உன் பார்வையிலே

ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்

என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்

ரசித்ததையே நீ ரசித்ததையே

என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் - துளி துளியாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்

நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் - துளி துளியாய்

 

பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே

நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்

முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்

ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி

ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட - துளி துளியாய்

நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்

மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்

பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே

உன்னை தழுவிட தழுவிட - துளி துளியாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ 

ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ 

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே 

பகலும் உறங்கிடும் .....!    ராத்திரியில்...!

ஆண் : வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 

பெண்: கைவிரலில் ஒரு வேகம்  கண் அசைவில் ஒரு பாவம் 

ஆண் : வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் 

பெண் : ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் 

புதிய அனுபவம் .......!                           ராத்திரியில்.....!

 

ஆண் :மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே 

பெண்:மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற 

ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே 

பெண் :  நாதஸ்வரம் ஊதும்வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் 

பொறுமை அவசியம் .........!     ராத்திரியில்.....!

பாடல் வரிகள்: வாலி......!   😍

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

பாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது. 

பல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம். 

 

6 hours ago, tulpen said:

பாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி      Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும். 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.