Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அந்த ஒரு நிமிடம்(1985)

இசை: இளையராஜா

வரிகள்: வைரமுத்து

பாடியோர்: SPB & S ஜானகி

அலைகளில் மிதக்குது நிலவொன்று
குளிக்குது கை கொடு குளிக்கின்ற நிலவுக்கு
முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மறத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே..... (வழி ஒண்ணும்)

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி.......
நானிங்கு நானில்லை நீ இன்றி ஆளில்லை
ஆடை காண வில்லை......... (அலைகளில்).

ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ இருக்குற வேட்டிய
கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை...... (வழி ஒண்ணும்).

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பொறந்தவீடா புகுந்தவீடா(1993)

வரிகள்:வாலி

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & சித்ரா

தொந்தரவு பண்ணாதீங்க

இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

உங்களுக்கு சேவை செஞ்சு இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

பாலூத்தும் வெண்ணிலவு

அடி சூடேத்தும் முன்னிரவு இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க

வேணாம்மய்யா வம்பு வேணாம்மய்யா

ஹ்ஹான் தொந்தரவு பண்ணாதீங்க இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

ப்ச்.ஹேய் உங்களுக்கு சேவை செஞ்சு ஹான் இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு ச்சே

வேலைவெட்டி பாத்துபுட்டு
வீடுதிரும்பும் ஆம்பளைக்கு
வாட்டமெல்லாம் தீர்த்துவைக்க
வேற சுகந்தான் என்ன இருக்கு

அன்னாடந்தான் இந்த கூத்து
ஆகாதய்யா உன்னை தேத்து

ஹான்

கிண்ணாரந்தான் என்னைப்பார்த்து
போடாதய்யா மூக்கு வேர்த்து

நித்தம்தான் திங்கிறோம் சாப்பாடு
அத நிப்பாட்டி வைக்குற ஆள் யாரு.ஹ்ஹம்

சாப்பாடு போலவா சரசம் என்பது
அதுவேறுய்யா அட இதுவேறுய்யா
யோய்வ்.தொந்தரவு பண்ணாதீங்க

ம்...

இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு

ஏய்

உங்களுக்கு சேவை செஞ்சு

ஹாஹ்.ஹம்

இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

போடி..

மாலை கட்டி மேளங்கொட்டி தாலிமுடிஞ்ச மாமனுக்கு பேரு

சொல்ல நாலுபிள்ளை பெத்துயெடுத்தேன்

இன்னும் எதுக்கு பதினாறும்தான் பெத்து வாழ சொன்னாங்களே

நம்ம பாத்து செல்வங்கள பதினாறா சொன்னதுதான்

அந்த வாழ்த்து கிள்ளாடி பொம்பள நீதான்டி

பதில் நல்லாவே சொல்லுற யம்மாடி

சொன்னாலும் ஏறல சொகுசு மாறல நடக்காதய்யா

ஹான் அது கிடைக்காதய்யா தொந்தரவு பண்ணாதீங்க

ஹ்ஹூம் இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு ஸ்... உங்களுக்கு சேவை செஞ்சு ஏய்..

இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு.

அட பாலூத்தும் வெண்ணிலவு .

அடி சூடேத்தும் முன்னிரவு இன்னைக்கு ஏத்துக்க

நாளைக்கு போத்திக்க வேணாம்மய்யா வம்பு வேணாம்மய்யா ஹ்ஹூம்

தொந்தரவு பண்ணாதீங்க

ஹே.ய் இப்ப மூனுபுள்ளை நாலுபுள்ளை ஆச்சு.

ஹஹ்ஹான் உங்களுக்கு சேவை செஞ்சு ப்ச் இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : நல்ல நாள் (1984 )

இசை: இளையராஜா

வரிகள்: வாலி

பாடியோர் : SPB & S ஜானகி

போடு தந்தானதாம் அடி தம்மாருதம் அதப்
போட்டாலே ப்ரம்மானந்தம் அட மாமா
ஏதோ ஏதோ மயக்கம்

போடு தந்தானதாம் அடி தம்மாருதம் அதப்
போட்டாலே ப்ரம்மானந்தம் அட மானே
ஏதோ ஏதோ மயக்கம்

மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம்

அடி உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்தாலே
அடடா உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்தாலே

இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும் (போடு)

பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க ஆச தீய உண்டாக்கு

சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும் கட்டாயம் கிளுகிளுப்பு (போடு)

டிஸ்கி :

கேப்டன்ர  றான்ஸ பார்க்க கண் கோடி வேண்டும்..👌

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

படம்: இந்திரன் சந்திரன்(1989)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா

வரிகள் : வாலி 

காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ

தினமும் தினமும் தவிப்பதோ சிறிது உறங்க மடி கொடு
தழுவ தழுவ தடுப்பதோ அழகு முழுவதும் அளந்திடு

மருவி மருவி அணைப்பதோ வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் மதுவும் கொடுப்பதோ சபலம் உனக்கு பிறப்பதேன்
தென்றலும்  தீண்டினாலே புஷ்பமே நோகுமா
காதல் ஒரு போதை ஆகும் கன்னி பூவும் தாங்குமா
அள்ளினால் கிள்ளினால் என் மடி ஏந்தினால் வாடுமோ மடல்
ஓ காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ

அமுத மழையை பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே விருந்து வழங்கும் அணைப்பிலே
மனமும் உடம்பும் கனியுமோ இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும் பொழுது இனித்திட
தேனிலே ஊறும் இந்த பூ மடல் போதுமா
தென்னையின் கள்ளும்  இந்த பூ உதட்டில் ஊறுமா
மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனியோர் மலர்

காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ
ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
ஆத்தாடி கண்பார்வை என் மீதா உனை நெருங்கிட
காதல் ராகமும் கனி தமிழும் ஓன்று சேர்ந்ததுவோ
ஆசை தாளமும் அழகிய பூஜையில் பிறப்பதுவோ.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : ராஜரிஷி(1985)

இசை : இளையராஜா

வரிகள் : புலமைபித்தன் 

பாடியோர்: மலேசியா வாசுதேவன் & S ஜானகி 

பெண்:  ஆ... ஆ... ஆ... மா  தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே ..

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்.

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே ..

செவ்விதழோ இது தேன் கனிக் கோவை...

ஆ... ஆ... ஆ... ஆ..செவ்விதழோ இது தேன் கனிக் கோவை.. 

தேவா உன் பானமுதம் தேவா உன் பானமுதம்..

சேயிழை நூலிடை மின்னல் தோரணம் ..

காமனின் கோயிலில் நானே கோபுரம்..

தேனூறும் ஆகாய கங்கை சலசல சலவென வருகிறதே வழிகிறதே ஆ... ஆ... மடியினில் நீராடு..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே..

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ... ஆ... ஆ...

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி..

நான் அங்கே தங்கையினால்..

ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும்.

ஞனியின் ஐம்புலன் என்னில் சங்கமம்

தியாகமும் யோகமும் என்ன நாடகம்..

ஆண் ஆ... ஆ...ஆ... ஆ...

பெண்: பிரம்மாவின் கை வண்ணம் நானே

இளமையில் ஒருமையில் தனிமையிலே..

விக்கிறதே ஒரு முறை பாராயோ..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே..

அந்தி மா கலையில் இந்த மேகலைகள்..

அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய ..

நடைகள் பயிலும் மயில் இது தானே..

ஆண்:தத்த ஜம்த தக தகிட ஜம்த தக தகதீம்த தகதீம்த தக தாம் தக

பெண்:தீயிலே மரகதம் இதழில் சோம பானம்

ஆண் தகிட தாம் தகிட தாம் தகிட தாம

பெண்:நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண்:ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண்:ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண்:தாம்த தக தாம்த தக தீம்தக பெண்:இளைய தேகம் இரவு நேரம் விரக தாபம் எரியுதே

ஆண் :தகிட ஜம்த திகிட ஜம்த

பெண்:முகிலிலான குழலும் உந்தன் உறவு தேடி அலையுதே ஆண்: தகிட ஜம்த திகிட

பெண்: தவம் அது கலைவது தெரிகிறது அருள் கொடு மா தேவா..

ஆண்:அருகினில் மாதே வா பெண்: மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்..

தவமும் தனமும் சுகமும் என் வசம்..

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே.

டிஸ்கி :

மா துறவை நீ அறிவாய் (பெரும் துறவு)
மாதுறவை ஏன் மறந்தாய்(மாது + உறவு)
அருள்கொடு மா தேவா (பெரும் தேவன்)
அருகினில் மாதே வா (பெண்ணே வா)
அந்திமாகலையில் இந்த மேனகைகள் அசையும் அசைவிலே இசைவிலே இடை ஒடிய ஒடிய..☺️

 

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : கட்டளை (1993)  

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & சித்ரா

வரிகள்: வாலி

ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா

ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா
பூத்த பூவ நாரில்
நீ கோர்த்து வாங்கு மாமா
காத்திருக்கிறேன்
நீண்ட நேரமா ஹோய்
வா வா நேசமா
நீ வந்தால் தோஷமா

ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே
ரூட்ட மாத்துற
சூட்ட ஏத்துற ஹோய்
வேணா சோதனை
ஹேய் ஏம்மா ரோதனை

ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா

மீறாதே எல்லைக் கோடு
மாறிப் போகும் எந்தன் மூடு
ஒட்டாதே தூர நின்னு
வேற பாட்டு பாடு நீ

பாடாத பாட்டப் போல
பொண்ணு இந்த பூமி மேல
நின்னாலே லாபம் என்ன
தாகம் தீர்க்கப் பாரு நீ

வீணாகச் சீண்டுற
வம்பாகத் தூண்டுற
வில்லங்கம் பண்ணுற
வில்லம்பு பூட்டுற

உன்ன அடைய….ஆ
என்ன பண்ணணும்….ம்ம்….
சொல்லு கேக்குறேன்
நான் செஞ்சு பாக்குறேன்

ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே

பொன் மாலை நேரம் வந்தால்
பூ வாங்கிக் கையில் தந்து
வேறென்ன வேணுமின்னு
காதில் வந்து கேக்கணும்

தஞ்சாவூர் பொம்ம போல
தலையாட்டும் ஆளும் அல்ல
ஏன்மா நான் பொண்ணு கிட்ட
மண்டி போட்டு தோக்கணும்

வீணாகப் போகுது
நம்மோட வாலிபம்
ஹ ஹா
சேர்ந்தேதான் ஆகணும்
நம்மோட ஜாதகம்

அப்புறம் என்ன தப்பு நடக்கும்
நானும் மாறணும்
ஹேய் நீதான் காரணம்

ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா
பூத்த பூவ நாரில்
நீ கோர்த்து வாங்கு மாமா

ரூட்ட மாத்துற
சூட்ட ஏத்துற ஹோய்
வேணா சோதனை
ஹேய் ஏம்மா ரோதனை

ஹேய் ஆத்துக்கார மாமா ம்ம்
நான் பாத்து ஏங்கலாமா
ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.