Jump to content

ஆணவமும் அடக்கமும்  Having Ego and Being Humble 


Recommended Posts

ஆணவமும் அடக்கமும்  Having Ego and Being Humble 

Ego என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? ஆணவம், அகங்காரம், அகந்தை, அகம்பாவம், இறுமாப்பு, கர்வம், செருக்கு, சுயகவுரவம், தலைக்கனம், தற்பெருமை, திமிர்.  Humble என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? மேலே உள்ள சொற்களின் எதிர்ச்சொல்லாக இருக்கலாம். 

ஒரு மனிதன் என்பவன் பல வேறு குணாதிசயங்களை கொண்டவன். பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அவனுக்குள் மாற்றங்கள் வந்து போகும். சில, ஒட்டிய வண்ணமே இருக்கும். 

அந்த குணங்களால் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நடந்து இருக்கும். அவற்றால். சில குண அம்சங்கள் மாறி இருக்கும், மாற்றப்பட்டு இருக்கும். மாற்றம் ஒன்று தான் வாழக்கை என்பவர்கள் பலர். நான் மாறவே மாட்டேன் என்று வாழ்ந்து போனவர்களும் உண்டு.  

தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது. அதேவேளை 'எல்லாமே இருந்தும்' அடக்கமாக சமுகத்திற்கு உபயோகமாகவும் வாழ்ந்து, பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்பவர்களும் எம் மத்தியில் உண்டு. 

இந்த இரண்டு துருவ குணாதியங்களுக்கும், Ego and humble,  பொதுவானது ஒன்று இருக்கலாம். ஒரு மனிதனது ‘சுய மதிப்பு’ (SELF WORTH) மற்றும் ‘சுயமரியாதை’ (SELF RESPECT) என்று சொல்லப்படுகிற ‘சுயம்' என்ற சொல்லில் இருந்து வரலாம். இவற்றை அவரவர் புரிந்து கொள்ளுதலில் நாம் வேறுபடுகின்றோம். 

சாதாரண மனிதர்களில் இருந்து உலகத்தின் பெருந்தலைவர்களால் வரை இந்த குணாதியசங்கள் ஒரு பகுப்பாய்விற்கு உள்படும். உதாரணத்திற்கு, ட்ரம்ப் ஒரு பெரிய தலைக்கனம் பிடித்தவர் என்பவர்கள். உள்ள அதே இடத்தில், அவர் தன் மக்களின் தேவையை புரிந்த ஒரு பண்பான கோடீஸ்வரர் என்பவர்களும் உண்டு.  ஆனால், தலாய் லாமா தலைக்கனம் இல்லாத ஒரு தன்னலமற்ற மனிதர் என்பது அநேகமான மக்களின் கருத்து.  காரணம் அவரின் துறவு வாழ்க்கை. 

சில மனிதர்களால் இடத்திற்கு ஏற்ப ஒரு இடத்தில் இருந்து மற்றைய இடத்திற்கு, 180பாகை மாறி செல்லும் குணாதியசம் இருக்கலாம். அது அவர்கள் செய்யும் வேலையால் கூட நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு காவல்துறை அதிகாரிகள் ஆணவம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், வேலை அற்ற வேளைகளில் அதற்கு எதிரானவர்களாக இருப்பர். சில முகாமைதத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் சிறிது கடுப்பானவர்களாக இருந்தால்  வெற்றிகரமாக வேலையை முடிக்கலாம் என்பதும் யதார்த்தம்.

திருமணமான ஆண்களை பொறுத்தவரையில், எங்கு என்னவாக ( சிங்கமாக) இருந்தாலும், வீட்டில் அமைதியாக, ஆம் போடுபவராக (பூனையாக) இருத்தல் - சிறப்பு !. எதுவாக இருப்பினும் எமது மேல் அன்புள்ளவர்கள் நாம் கொஞ்சம் 'அகங்காரம்' பிடித்தவர்கள் என கூறும்பொழுது (சொல்லாமல் சொல்லும்பொழுது) நாம் அந்த இடத்தில் இருந்து 'இறங்குவதே' அந்த அன்பு வைப்பவர்களுக்கு நாம் காட்டும் அன்பாக இருக்கும். நாளடைவில் அந்த மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியை தரும். 

உங்களிடம் ஏதாவது ஒன்று அதிகமாக மற்றையவனிடம் இல்லாத ஒன்று இருக்கும்பொழுது அவனிடம் கொஞ்சம் humble ஆக நடந்தால் சமூகம் சிறக்கும்!

மூலம் : சுய ஆக்கம் 

 

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

எதுவாக இருப்பினும் எமது மேல் அன்புள்ளவர்கள் நாம் கொஞ்சம் 'அகங்காரம்' பிடித்தவர்கள் என கூறும்பொழுது (சொல்லாமல் சொல்லும்பொழுது) நாம் அந்த இடத்தில் இருந்து 'இறங்குவதே' அந்த அன்பு வைப்பவர்களுக்கு நாம் காட்டும் அன்பாக இருக்கும். நாளடைவில் அந்த மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியை தரும். 

உங்களிடம் ஏதாவது ஒன்று அதிகமாக மற்றையவனிடம் இல்லாத ஒன்று இருக்கும்பொழுது அவனிடம் கொஞ்சம் humble ஆக நடந்தால் சமூகம் சிறக்கும்!

👍 அருமையான சிந்தனைக் குறிப்பு, அம்பனை. நாளாந்தம் நாம் பழகும் உறவுகளிடையே இணக்கம் நீடிக்கப் பயனுள்ள கருத்துக்கள். 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.