Jump to content

உளவுத்துறை எச்சரிக்கை; தமிழகத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகள்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு


Recommended Posts

2019-08-23@ 08:49:39

பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாங்கண்ணி கோயில் திருவிழா மற்றும் விநாயகர் சதூர்த்தி வருவதாலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520354

Link to comment
Share on other sites

தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு; தமிழக டிஜிபி மறுப்பு

தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. இதற்கு தமிழக டிஜிபி திரிபாதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

தீவிரவாதிகள் ஊடுருவலால் பாதுகாப்பை அதிகரிக்க கூறிய தகவல் உண்மை தான் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முதல், சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து

"கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

கோவையில் வழக்கத்திற்கு மாறாக காவல் துறையினர் பல இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உக்கடம், டவுன்ஹால் பகுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, வாகனங்களை சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் ஆறு நபர்கள் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் லக்‌ஷர் இ தய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மத்திய உளவுத்துறையில் இருந்து தமிழக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

கோவை மேற்கு மண்டலத்தின் காவல் துறை தலைவரிடம் இது குறித்து கேட்டபோது, இது ஒரு பொதுவான எச்சரிக்கை நடவடிக்கை, ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

ஏடிஜிபி ஜெயந்த் முரளி கோவை வந்துள்ளார். தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக ஏடிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

கடல் எல்லையில் பாதுகாப்பு

கடல்

தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையடுத்து தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, குருசடைத்தீவு உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர குழும காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

செய்யப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலம், பாம்பன் சாலைப் பாலம், பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவுமண்டபம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

https://www.bbc.com/tamil/india-49445535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகு இலக்கான இலங்கையை மட்டும் குறி வைக்கிறது பலம் இல்லை.அங்கை வேணும் என்டால் பண்னி பாருங்கோ.அங்கே என்டால் வட இந்தியாவில்.

Link to comment
Share on other sites

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் மற்றும் அவருக்கு உதவியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520678

Link to comment
Share on other sites

6 தீவிரவாதிகள் ஊடுருவல்... கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை

கோவையில் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து சந்தேகத்துக்கு உரிய நபர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற மத்திய உள்துறையின் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் கோவைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய உளவுத்துறை அறிக்கையில் இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற தீவிரவாதியும் கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ.தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற வெளியான தகவலையடுத்து கோவை முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதற்கு கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

கோவையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்படி உள்ளூர் போலீசார், அதிவிரைவுப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் நுழைவு பகுதிகளான 12 செக்போஸ்ட்கள் மற்றும் கோவை மாவட்ட நுழைவு பகுதிகளில் 27 செக்போஸ்ட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.இதற்கிடையே கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520685

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.