Jump to content

அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்.!

chennai-day222-1566464369.jpg

சென்னை: ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாகிய முகவரி என்பது அதன் மொழி தான். ஆனால் இப்போது சென்னையில் சென்னை தமிழ் தன் இயல்பை இழந்துவருகிறது. தென் மாவட்ட மக்கள் மொத்தமாக வந்து குவிந்ததால் இப்போது சென்னை பாஷையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்க தானே அட்ரசு.. மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் சென்னை என்றதும் ஞாபகத்து வருகிறது. 2009ம்ஆண்டு இருந்த சென்னை 10 வருடங்களில் அப்படியே மாறிப்போய் விட்டது.இந்த 10 வருடங்களில் சென்னை மாநகரம் அடையாளத்தையே மாற்றிக்கொண்டுள்ளது.

மாறி போன அடையாளம்

ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் மெட்ரோ ரயில்கள் ஆக்கிரமித்து ஓடுகின்றன. வானுயர்ந்த அழகிய கட்டிடங்கள், ஆடம்பர நட்சத்திர மால்கள் என தோற்றம் மொத்தமும் அற்புதமாக மாறிக்கிடக்கிறது. இந்த மாற்றத்தோடு இங்கு காலம் காலமாக பேசப்பட்டு வந்த சென்னை தமிழும் இப்போது மாறி போய் கிடக்கிறது.

இப்போது ரீ என்கிறேன்

பிற மாவட்ட , மாநில மக்கள் இந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் வந்து குவிந்ததால் சென்னை தமிழ்  அதன் இயல்பை மாறிக்கிடக்கிறது. 2009ல் "நைனா ஒரு ரீ போடேன்... " என்று சொன்ன நிலையில் இப்போது "சேட்டா ஒரு ரீ.. " என்ற அளவுக்கு பிற மாநில மக்கள் குவிப்பால் மாறிக்கிடக்கிறது.

மாறிப்போன தமிழ்

முன்பு யார் சென்னை வந்தாலும் சென்னை பாஷையை கற்றுக்கொண்டு அதற்கு மாறிக்கொண்டு இருந்தார்கள். ஆனா இப்போது எல்லோரும் அவரவர் தமிழையும் சென்னை தமிழிசையும் மிக்ஸிங் செய்து பேசுகிறார்கள். "எம்புட்டு நேரம் குந்திக்கிணே இருக்குறது  ? "என்று மதுரைவாசிகள் சென்னை பாஷை பேசும் நிலையும், கோவைவாசிகள், "இன்னா கண்ணு ஊட்டாண்ட உன்னை காணலயே! " என்று சொல்வது சாதாரணமாக மாறிவிட்டது.

வையிராங்க

இதே போல் "என்னலே என்ன பன்றவ பிறகு பாரும்!" என்று பேசிய நெல்லை சீமை மக்கள் இங்கு வந்து, "இன்னா பன்ற ? , பிறகு பாரும்யா " என்று மாற்றி பேசுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரின் பாஷையிலும் சென்னை பாஷை ஒட்டிக்கொண்டுள்ளது. முன்பெல்லாம் மதுரை வார்த்தையான " வையிராங்க " என்று கோவை பக்கமோ சென்னை பக்கமோ சொன்னால் வித்தியாசமாக பார்ப்பார்கள். இப்போது "வையிராங்க" என்பது சென்னையில் சர்வசாதாரணமாக பேசுகிறார்கள்.

மாறிப்போன அம்மாக்கள்

முன்பு " இன்னா பாத்துகினு நிக்கிற துன்னு.. !" என்று தெரு முனையில் இட்டலி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்டலியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். இப்போது அப்படியே "என்ன பார்த்துகிட்டே இருக்கே..? சாப்பிடுப்பா..!" என்று மதுரை தமிழ் கேட்கிறது. இதே போல் நெல்லை தமிழும், கோவை தமிழும் கலந்து சர்வ சாதாரணமாக கேட்கிறது .

அடித்தட்டு மக்களின் மொழி

சென்னை தமிழ் என்பது இங்குள்ள அடித்தட்டு மக்களின் செம்மொழியாகும். மற்ற மாவட்டங்களில் அந்தந்த மொழி அங்குள்ள ஆதிக்க மக்கள் பேசும் மொழி என்பதால் அப்படியே அங்கு இன்னும் நீடிக்கிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் மொழி என்பதால் என்னவோ இப்போது மெல்ல மெல்ல வங்ககடலில் இருந்து ஒதுங்கி வருகிறது இப்போது சென்னையின் கண்ணகி நகர் பகுதியிலும் வடசென்னை பகுதியிலும் ஒதுங்கி வருகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/chennai-day-special-beautiful-chennai-language-changed-with-in-10-years/articlecontent-pf395824-360854.html

டிஸ்கி:

சென்னை தமிழின் பிதாமகன்.

loose-mohan-b82f687d-c993-46c9-82af-2f5e

லூசு மோகன் (8.2.1928 - 16.9.2012) .💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறிப்போன... மெட்ராஸ் தமிழ் என்றாலும்... 
அங்கும், தமிழ் நாட்டின் மற்றைய மாவட்டங்களின் தமிழ் விளையாடுவதும் அழகு தான்.    
ஹிந்தி கலக்காமல் கதைக்கின்றார்களே... என்று சந்தோசப் படவேண்டும். :)

தமிழ்  நாட்டில், ஆங்கிலம் அதிகமாக கலந்து கதைப்பது, மனதை  உறுத்துகின்றது. 

தமிழக தமிழை.. கேட்பதில் எனக்கு உண்மையிலேயே சரியான விருப்பம். 💓

ஜேர்மனியில்  எனது நெருங்கிய நண்பர்,  பாஞ்ச் அண்ணை  போல,
திருச்சியை... சேர்ந்த தமிழ் குடும்பத்தினரும்,  எனது குடும்ப நண்பர்களே.
அவர்கள்... பேசும்  தமிழை கேட்க, சுவராசியமாக  இருக்கும். 😍

இதில் ஆச்சரியமான விடயங்கள் என்ன வென்றால்...
எனது பிள்ளைகளும், திருச்சி நண்பரின்  பிள்ளைகளும், இங்கு பிறந்தவர்கள்.
எனது பிள்ளைகள்... ஈழத் தமிழையும், திருச்சி நண்பரின் பிள்ளைகள் தமிழக  தமிழையும் தான் கதைக்கின்றார்கள். வியப்பு ஊட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.