Jump to content

அரபு நாடுகளில் வாழும் இந்துக்களை தாக்க தூண்டும் ஐ.எஸ் அமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜைனுல் ஆபித் பிபிசி மானிடரிங்
   

வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்ள ஐ.எஸ் அமைப்பின் சேனல்கள் வாயிலாக ஆகஸ்டு 22ஆம் தேதியிடப்பட்ட இந்த இதழ் பகிரப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய வளைகுடா நாடுகளின் சுற்றுப்பயணத்தை இது மேற்கோள் காட்டியது.

அரபு நாடுகளில் வாழும் ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு, தத்தமது நாடுகளில் வாழும் இந்துக்களை பணக்காரர் அல்லது ஏழை என பாரபட்சம் பாராமல், அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வெளியேற்றும் கடமை இருப்பதாக அந்த இதழின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அவர்களை அச்சுறுத்தி, சொத்துகளை பறியுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்த மில்லியன் கணக்கானோர் பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த கட்டுரையில், மோதியின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வெளிநாட்டு உறவுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்தன.

அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நரேந்திர மோதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்கு மேற்கொண்ட சமீபத்திய பயணத்தில் பிரதிபலிக்கிறது.

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அல்-மக்தூம் உடன் நரேந்திர மோதி Image caption துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அல்-மக்தூம் உடன் நரேந்திர மோதி கைகுலுக்கும் படம் ஐ.எஸ் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை மத்திய அரசு நீக்கிய பிறகு, அதுதொடர்பான முதல் எதிர்வினையை ஐஎஸ் அமைப்பு இந்த தலையங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

"விலாயா ஆஃப் ஹிந்த்" என்ற புதிய கிளையை இந்தியாவில் தொடங்குவதாக கடந்த மே மாதம் ஐ.எஸ் அமைப்பு அறிவித்தது. ஆனால், இந்த குழு இதுவரை இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் அவ்வப்போது, குறைந்த அளவிலான தாக்குதல்களுக்கு மட்டுமே பொறுப்பேற்றுள்ளது.

'அவர்களை கொல்லுங்கள்'

"அரேபிய தீபகற்பத்தில்" இந்துக்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவது குறித்து அல்-நாபா கவலை தெரிவித்துள்ளது.

இந்து மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களை அரபு பிராந்தியத்தை விட்டு வெளியேற வித்திட முடியுமென்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இந்துக்களும் இது பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது மிக முக்கியமானது என்றும், அரபு "கொடுங்கோல்" ஆட்சியாளர்களை பதவி நீக்கம் செய்து, 'ஷரியா' ஆட்சியை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிப்பதாக அந்த தலையங்கம் விவரிக்கிறது.

இந்துக்கள் "இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள்" என்று கருதப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்கள் அவர்களுக்கு "பாதுகாப்பு" அளிப்பதற்கு கடன்பட்டிருக்கவில்லை. அதாவது, ஷரியா சட்டத்தில் உள்ள ஒரு கருத்து, முஸ்லிம் அல்லாதவர்களின் வாழ்க்கை, சொத்து மற்றும் மரியாதை அனைத்தையும் தீண்டத்தகாததாக ஆக்குகிறது.

ஐ.எஸ்ஸின் போட்டியாளரான அல்-கய்தா கடந்த காலத்தில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தாக்குதல்களை வலியுறுத்தியது. ஆனால், அது கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருந்தது.

காஷ்மீர் விவகாரத்துக்காக பழிவாங்குதல்

 

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து, அங்கே ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை குவித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்த "பசுவை வழிபடும்" மோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அரபு நாடுகளில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்துக்களுடன் போராடுவது காஷ்மீர் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு ஒத்ததாகும்."

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய சமயத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமைதி காப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களை போராளிகள் என்று கூறிக் கொள்ளும் காஷ்மீரின் பிரிவினைவாத குழுக்கள் "பாகிஸ்தானின் உளவு அமைப்புகளால் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன," என்றும் இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்தியா - அரபு நாடுகள் இடையேயான உறவு

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலங்களை பறிப்பது, கொலை செய்வது, மசூதிகளை அழிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்துக்கள் ஈடுபடுவதாக அல்-நாபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: Zakir Naik வருத்தம் &quot;நான் இன வெறியன் அல்ல&quot; | Malaysia Zakir Naik Issue" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=-JnXU3YqCGc~/tamil/global-49450765" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure>

 

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையில் செயல்படும், மத கொள்கைகளுக்கு எதிரான அரசுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதுடன், அங்கே முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு தூண்டிவிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ள வேண்டுமானால், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தங்களது பிராந்திய போட்டியாளரான இரானை எதிர்கொள்ள உதவும் என்று நினைத்துக்கொண்டு அரபு நாடுகளின் தலைவர்கள் செயல்படுவதாகவும் என்று தலையங்கம் கூறியது.

பொருளாதார மற்றும் கொள்கை ரீதியிலான உறவை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இந்துக்கள் அதிகமான முதலீடு செய்துள்ள நாடுகள் தத்தமது நாடுகளில் இந்தியா தனது ராணுவத்தளத்தை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படலாம் என்றும் அதில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீதான இந்துக்களின் "வெறுப்பு" ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அல்-நாபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்கள் மீதான இந்துக்களின் வெறுப்பை, இடைக்கால முஸ்லிம் வம்சங்கள் இந்தியாவை வென்ற பிறகு, பல தசாப்தங்களுக்கு இந்து மதத்தை அடக்கியது மற்றும் அவர்களின் கோயில்களை அழித்ததுடன் ஒப்பிட்டு அல்-நாபாவின் தலையங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-49450765

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பிரச்சனை வரும் இந்திய அரசு சார்ந்தவர்கள் சிந்திக்காமல் இருந்திருப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பிரச்சனைகள் எல்லா புலம் பெயர் நாடுகளிலும் வந்தால் தான் எமது மண் வளம் பெறும்.

Link to comment
Share on other sites

ஐ.எஸ். மீண்டும் பலம் பெரும் நிலையில் சில இந்துக்களின் கழுத்து அறுக்கும் நிகழ்வு வரலாம்

இந்துக்கள் கவனமாக இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

ஐஎஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி?

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் அமைப்பின் தலைமைப்பொறுப்பை  முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ_சைனின் இரணுவத்தை சேர்ந்த  அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைமறைவாகயிருந்து ஐஎஸ் அமைப்பினை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி  ஐஎஸ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார் என ஐஎஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் தனது அதிகாரங்களை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளமை அவர் 2017 இல் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 அப்துல்லா குர்தாஸ் சதாம் ஹ{சைனின் இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் 2003 இல் பஸ்ராவில் இவரும் அல்பக்தாதியும் அமெரிக்க படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இவர் பக்தாதிக்கு நெருக்கமானவராக மாறினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

isis_deputy.jpg

பஸ்ராவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையே அல்பக்தாதி அங்கிருந்த பலரை தீவிரவாதிகளாக மாற்றினார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பின்னர் அப்துல்லா குர்தாஸ் ஐஎஸ் அமைப்பி;ன் தலைவருக்கு நெருக்கமானவராக மாறினார் என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் பேராசிரியர் என அழைக்கப்படும் இந்த நபர் அமைப்பின் ஈவிரக்கமற்ற கொள்கை வகுப்பாளர் எனவும் தெரிவித்துள்ளன.

ஐஎஸ் அமைப்பின் பிரதிதலைவராகயிருந்து 2016 இல் அமெரிக்காவின் ஹெலிக்கொப்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு அல் அப்ரியின் நெருக்கமான சகாவாகவும் அப்துல்லா குர்தாஸ் காணப்பட்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பை மீள கட்டியெழுப்புவதற்காக அல் பக்தாதி அப்துல்லா குர்தாஸை  தெரிவு செய்துள்ளார் என ஐஎஸ் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அல்பக்தாதி தனது பதவியை விட்டுக்கொடுக்கவில்லை விநியோகம் மற்றும் நடமாட்ட விவகாரங்களிற்கு பொறுப்பாக அப்துல்லா குர்தாஸினை அவர் நியமித்துள்ளார் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் அமைப்பின் பலவீனங்களை கண்டறிவதற்காக  பக்தாதி  அப்துல்லா குர்தாஸினை நியமித்திருக்கலாம் ,எதிர்காலத்தில் அவரை தலைவராக மாற்றும் திட்டத்துடனும் இந்த நியமனத்தை அல்பக்தாதி மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/63260

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.