Jump to content

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் …….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் …….

ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே  அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது.

வேறொன்றுமில்லை,  மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில்  துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி  செல்லலாம் என வந்திருந்தோம்.   எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு.

 வந்த இரண்டாம் நாள்  துணைவியார் கூப்பிட்டார்  இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று.   ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது   கொண்டு போய்க் காட்டுவோம் என்று-  மறுத்து விட்டார். (நான் என்ன சொன்னாலும் reflex  இல் அதை உடனேயும் மறுப்பது அவரின் இயல்பு - அதன் நன்மை தீமைகளை ஆராயாமலே)  

மகளிடம் சொன்னேன் , அவர் அதை பார்த்து விட்டு GP இடம் கொண்டு போய் காட்ட  வேண்டும் என்று சொல்லி விட்டார். (இவ அதற்கெண்டால்  உடனேயும் மாடு மாதிரி தலையாட்டுறா)

மகள்அன்று பின்னேரம் வேலையால் வந்ததும் , GP இடம் போனோம் , அவர் பார்த்து விட்டு சொன்னர், தான் செய்வதற்கு இது சற்று பெரிதாக இருக்கு , ஆஸ்பத்திரி எமெர்ஜென்சிக்கு போனால் அவர்கள் உடனேயும் செய்து விடுவார்கள் , பிரைவேட் ஆஸ்பத்திரி என்றால் அவர்கள் இன்றிரவு மறித்து அநேகம் நாளை தான் செய்வார்கள் , உங்கள் வசதிப்படி செய்யுங்கள் , அதுவரை இந்த anti-பையோட்டிக் ஐ எடுங்கள் என எழுதித் தந்தார் ।

பக்கத்தில் இருக்கும்,  நகரிலேயே திறமான பேர் பெற்ற அரசு வைத்தியசாலையின் எமெர்ஜென்சிக்கு இரவு ஒரு 6:30  போல போனோம் ; நல்ல கூட்டம் , அரை மணித்தியாலம் வரிசையில் நின்று , அட்மிஷனில் இருந்த டாக்டரிடம் கதைத்தோம் , அவர் பார்த்து விட்டு , இது  அட்மிட் பண்ணி செய்ய வேண்டும் , இருங்கள் என்று சொன்னார் , அதிலிருந்து தான் ஆரம்பித்தது எல்லாமே .

தொடக்கத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை , வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் , குறிப்பாக  இருவர் ,

ஒருவர் வயது 90 என்றாலும் இருக்கும் , வீல் செயரில் இருந்து கொண்டு அவரும் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், அவரிடம் கண்ணைக் கொடுத்தால் உடனேயும் புன்னகைத்துக் கொண்டு கதைக்கப் பிடித்து விடுவார், அவருடன் துணைக்கு வந்தவர் - மகன் என நினைக்கின்றேன் - அவரை அதட்டி நிற்பாட்டும் வரை ।       மிகவும் சுறு சுறுப்பாக இருந்தார்

இன்னொரு நடுத்தர அல்லது வயதான பெண்மணி - தனது  கணவருடனும் மகளுடனும் வந்திருந்தார், எதோ ஒரு வித வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடைய மகள் மிகவும் அப்செட் ஆக இருந்தார் , கணவனோ மனைவியை கட்டிப் பிடித்துக் கொஞ்சி சேவகம் புரிந்து கொண்டிருந்தார்- கால்களை பிடித்து விடுவதில் இருந்து , சத்தி எடுக்கும் பையை மிகவும் பிரியமாக மனைவியின் வாயருகே பிடித்து விடுவது வரை । எனது துணைவியார் அர்த்த மிகு பார்வையொன்றை எனது பக்கம் வீசினார் " பார்த்தியாடா " எனும் தோரணையில்.    

இடையிடையே ஒலிபெருக்கியில் அறிவித்தல் ஒன்று வந்து கொண்டிருந்தது - "அன்று வழமையை விட கூட்டம் அதிகம் என்பதால் , காத்திருப்பு நேரம் கூடுதலாக இருக்கக் கூடும் , வீதியின் மறு பக்கம்  GP க்ளினிக் ஒன்று இருக்கிறது , நோயாளர் யோசித்து முடிவ எடுக்கலாம் " - என்ற தோரணையில்!...

நாங்கள் GP இடமிருந்து தான் வந்திருப்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை -

நேரமும் 8 தாண்டி , 9 தாண்டி 10ம் ஆகி விட்டது , ஒரு வித அசுமாத்தமும் இல்லை எங்கள் விடயத்தில்

அந்த 90 வயது நோயாளியின் நிலைமை என்றால் சற்று கவலை தருவதாக இருந்தது। வருவோர் போவோரை கண்ணால் கொழுவி இழுத்து கதைத்துக் கொண்டிருந்தவர் , களைத்துப் போய் அமைதியாகி , கண்ணை மூடிக் கொண்டிருந்தார்। அவரைக் கவனிப்பார் எவருமில்லை - அவரின் மகனின் முகத்திலென்றால் கலவரம் சூழ்ந்து போய் கிடந்தது .

காதல் தம்பதியினர் உள்ளே சென்று விட்டிருந்தனர் - நோ மோர் விடுப்ஸ் அங்கே !

வயிற்றுக்குள் சற்றே எதோ செய்தது , 5 மணிக்கு குடித்த தேநீருக்கு பிறகு ஒன்றும் உள்ளுக்குள் அனுப்பவில்லை  என்ற பகாசுரனின் தகவல் அது துணைவியாரை ஒன்றும் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தியிருந்த படியால் உணவைப் பற்றி ஒருவரும் அலட்டிக் கொள்ளவில்லை - பகாசுரனின் தகவல் வரும் வரை। துணையினாருக்கும் அந்த தகவலின் காப்பி போயிருக்க வேண்டும் – “ஏதாவது குடியுங்கோவனப்பா , பிள்ளைகளுக்கும் கொடுத்து  என்றார்”  சரி என்று இரண்டு கோக் வாங்கி குடித்தோம் ( ஆஸ்பத்திரி வழியவே  கோக் போன்ற நச்சுத் திரவங்களை என் இன்னமும் தடை செய்யாமல் இருக்கிறாங்கள் ??)

 

நேரம் இப்போ 12 ம் ஆகி விட்டது     சற்றே பொறுமை இழந்து அட்மிஷனில் மீண்டும் போய் கேட்டேன் - பொறுமை காக்கவும் என்பதே பதிலாக வந்தது - ஐந்து மணித்தியாலமாக பொறுமை காத்துக் கொண்டிருப்பது , உண்மையிலும் ஒரு புது அனுபவமாகத் தான் இருந்தது

இருந்தாற்போல ஒரு பரபரப்பு - அந்த 90 வயது முதியவர் அவரது இருக்கையிலேயே மயங்கி சரிந்து விட்டார் அவரைச் சுற்றி இப்ப நாலைந்து நேர்ஸ்,  டாக்டர் என ஒரே அல்லக்கை எனக்கு உண்மையிலேயே நம்ப இயலாமல் இருந்தது -  அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரின் முக்கிய அரச வைத்தியசாலையில் வழங்கப் படும் வைத்திய சேவையின் தரம் இவ்வளவு தானா என்று   நன்றாக இருந்த மனிதனை சாகும் பருவத்துக்கு கொண்டு போய் தான் வைத்திய வசதி செய்யப் படும் என்றால் - கடவுளை நம்புவதை விட வேறு வழியில்லை போல (அது சரி எந்தக் கடவுளை ?)    அந்த மனிதரை அவர்களால் எழுப்பவே முடியவில்லை நாடித்துடிப்பு இன்னமும் இருக்கின்றது என்று கதைத்துக்  கொண்டார்கள் . ஸ்ட்ரெச்சர் இல் ஆளை தள்ளி ஏற்றி  அவசரமாக உள்ளே கொண்டு சென்றார்கள் ।।

பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என முதன் முதலாக மனதில் ஓர் எண்ணக்கீற்று.

 

ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் பகுதி இரண்டு தொடரும்……….

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என முதன் முதலாக மனதில் ஓர் எண்ணக்கீற்று.

சாமானியன்அப்பலோ மாதிரி இடம் ஒன்றும் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சாமானியன்அப்பலோ மாதிரி இடம் ஒன்றும் இல்லையோ?

அதுவல்ல ஈழப்பிரியன் ,  இலையான் அடிக்க பீரங்கி தேவையில்லை என்று தான் …...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Accident and emergency பிரித்தானியாவிலும் நீண்ட நேரம் காத்திருக்கும் அனுபவம்தான். ஆனால் triage தாண்டினால் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

Accident and emergency பிரித்தானியாவிலும் நீண்ட நேரம் காத்திருக்கும் அனுபவம்தான். ஆனால் triage தாண்டினால் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள்.

எந்த ஆஸ்பத்திரி என்றாலும் அம்புலன்சில் போனால் கொஞ்சம் விரைவாக அலுவல் நடக்கும்.

இல்லை என்றால் நெஞ்சைப் பொத்திக் கொண்டு ஐயோ குய்யோ என்று உள்ளிட்டால் தான் உடனே வேலை நடக்கும்.

Link to comment
Share on other sites

அரசு மருத்துவமனைகளில் பொதுவாக இப்படித்தான் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி வரும். அவுஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல!

அவசரத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதனால் தான் private health coverம், ambulance coverம் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவியாக இருக்கும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

அரசு மருத்துவமனைகளில் பொதுவாக இப்படித்தான் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி வரும். அவுஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல!

அவசரத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதனால் தான் private health coverம், ambulance coverம் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவியாக இருக்கும். 😊

இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..

Link to comment
Share on other sites

1 hour ago, சாமானியன் said:

இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..

நிச்சயமாக, தொடருங்கள்... ஆவலாயுள்ளோம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு பதிவு. ஆர்வத்துடன் வாசித்தோம்.

Link to comment
Share on other sites

மருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள்  குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மருத்துவக் காப்புறுதி செய்வது எல்லோருக்குமே சட்டக்கட்டாயம் என்பதால் சுவிற்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சனைகள்  குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். 

எங்கடை சனம் கனக்க மருத்துவ காப்புறுதி செய்யாமல் காசு மிச்சம் பிடிக்கினமாமே?

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

எங்கடை சனம் கனக்க மருத்துவ காப்புறுதி செய்யாமல் காசு மிச்சம் பிடிக்கினமாமே?

நிச்சயமாக அவ்வாறு செய்ய முடியாது. சுவிற்சர்லாந்தில் வசிக்கும்  எல்லோருக்கும் மருத்துவக்காப்புறுதி  சட்டக்கட்டாயம்.  நீங்கள் கூறியது போல  யாராவது அப்படி செய்வார்களானால் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.  எனவே அப்படி ரிஸ்க் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 

வேண்டுமானால் மாத  prämien குறைவாக கட்டி அதை சேமிப்பதற்காக ஒரு  வருடத்தில் மருத்துவ செலவில் தாம் பொறுப்பேற்க வேண்டிய தொகையை உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.எப்போதாவது டொக்ரரிடம் செல்பவர்கள் இம்முறை மூலம் பயன் அடையலாம்   ஆனால் அடிக்கடி டொக்டரிடம் செல்பவர்களுக்கு இது உகந்த முறை அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கழித்தல் ஒன்றுதான் குறிக்கோள் மற்றப்படி தண்ணியடித்துவிட்டு விழுந்து முறிந்து போனால் இராச மரியாதை மத்தப்படி வாங்கில்தேய்ப்புத்தான் இங்கேயும். ஆனால் அனைத்து மருத்துவமனைகளும் இங்கு உலகத்தரம் என்ன, ரிஸ்க் எடுக்கமாட்டான் டாக்குத்தர் காரணம் ரிஸ்க் எடுத்துப் பிசகிப்போச்சுதெண்டால் வழக்கு வம்பு என இழுபடவேண்டும் என்பதால். இன்னுமொரு விடையம் கடந்தவருடம் இந்த நாட்டின் அரச அதிபரது மனைவிக்குக் உழந்த பிறந்தது அரசாங்கப் பொது மகப்பேற்று மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்தார்கள். எனது இளையமகன் சின்னவயதில் போன பாலர் பாடசாலையில்தான் அவ்வேளையில் பிரதமராகப் பதவிவகித்தவரது மகள் சேர்க்கப்பட்டிருந்தாள் இங்கு எல்லாமே சகயம் அதனால்தான் இதைக்குறிப்பிடுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில் மருத்துவம் இலவசம். அடிப்படை வருமான உள்ளவர்களுக்குக் கூட்டிக்கழித்துப்பார்த்து சமூக நலக்கொடுப்பனவைக் கவனிக்கும் துறை உதவிகளைச் செய்கிறது அதிக வருமானமுள்ளவர்களது மருத்துவம்கூட பெருமெடுப்பிலான கட்டண முறை இல்லை தவிர அனைவரும் கல்வி வீட்டு வசதி மருத்துவம் உணவுத்தேவை ஆகியவிடையத்தில் பாரபட்சம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(a) ஒன்றை குறிப்பிட மறந்து விட்டேன் , இந்த நாட்டில் கடந்த பதினைந்து வருடத்துக்கும் மேலாக மருத்துவக் காப்புறுதி வைத்திருக்கிறேன் , முழுக் குடும்பத்துக்குமென மாதாமாதம்  கணிசமான தொகையைக் கறந்து விடுகிறார்கள் .  இது பற்றி எழுதினால் பெருகும்  .. சுருக்கமாக   …..

 

இது வரை காலமும் பெற்ற பயன்கள்

(1) பல்லுக் கழுவுதல் - தொடக்கத்தில் மேலதிக பணம் வாங்காமல் கழுவியவர்கள் , பின்பு அது செய்தால் நல்லம் இது செய்ய வேண்டும் என மாதாந்த பிரீமியத்தை விடவும் பல மடங்கு தொகையை ப்ரபோஸ் பண்ண தொடங்கவே , ஆளை விடுடா சாமி என்று இப்ப அங்காலைப் பக்கமே போறதில்லை ; பல வருடங்களுக்கு முன்னர் வாங்கி வைத்திருந்த கோபால் பற்பொடி இன்னும் ஒரு இரண்டு மூன்று வருடத்திற்கெண்டாலும் வரும் , கிழமைக்கு ஒருக்கால் என்றாலும் எடுத்து பல்லு தீட்ட தவறுவதில்லை   , பிரச்சனை இல்லாமல் போகுது , அத்துடன் அது முகத்துக்கும் ஒரு பொலிவைக் கொடுக்கும் பாருங்கோ ( கொண்டும் சாடையா லிப்ஸ்டிக் அடிச்ச மாதிரி இருக்கும் )

(2) கண்ணாடி - நாற்பது தாண்டினாலே சிஸ்டம் சொல்லி விடும் வாசிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கு எண்டு.  காப்புறுதி இருக்கு தானே எடுப்பம் எண்டு போனால் ( எக்ஸஸ் கட்டத் தேவையில்லை என்று சொல்லிய பிறகு தான் போவது ) , மல்டி focal , கோட்டிங் அது இது என்று சொல்லி ஒரு நூறு இருநூறு எண்டாலும்  கறந்து விடுவினம்.      

மல்டி போக்கலை  போட்டு நடந்தால் படியில் மேலே ஏறும் போது, கீழே இறங்குவது மாதிரி ஒரு பீலிங் , ஒரு ஸ்டெப் எடுத்து வைச்சால் கால் ஒன்றரையாம் படியில் நிற்கப் பாக்கும்;   அத்துடன்  றோட்டிலை  கார் ஓடிக் கொண்டு போகும் போது எக்கச்சக்கமான ஹார்ன் அடிப்புகள் - மற்றைய சக ஓட்டுநர்களிடமிருந்து தான் - மனுசி சொல்லிப் போட்டுது - உந்த மல்டி போக்காலுடன் ஓட்டுவதென்றால் நான் வர மாட்டேன் என்று.

அதவாது பரவாயில்லை,   "அவளுகள் சொன்னாளுகள் எண்டவுடனே  பல்லை இளித்து கொண்டு ஓமெண்டிருப்பியள்" என்ற துணைவியாரின் ஜட்ஜ்மெண்ட் தான் மனதை கடுமையாக காயப்படுத்தும் ( சில வேளை உண்மையும் அது தானோ ? ) .   

கடைசியில் இப்ப வருடக் கணக்காக கை கொடுப்பது 2 dollar ஷாப்பில் வாங்கி வைத்திருக்கும் வித விதமான பவரில் கிடைக்கும் அந்தக் கண்ணாடிகள் தான் - தொலைந்தால் புதிது மாற்றுவது ஒரு விடயமே இல்லை   

 

(b) அரச வைத்தியசாலை எமெர்ஜென்ஸிக்கு போனது , பிரத்தியேக வைத்தியசாலையில் உடனே விடாமல் மறித்து விடுவார்கள் என்பதால். சில விடயங்கள் பட்டுத் தான் அறிவு வர வேண்டும் எண்டு விதித்திருந்தால் யார் தான அதை மாற்ற முடியும் .   

 

(c) அட்மிஷனில் முதல் வேலையாக எமது மருத்துவக் காப்புறுதி விபரங்களை கேட்டு பெற்றுக் கொண்டார்கள்.  அரச வைத்தியசாலைகளில் பிரத்தியேக முறையில் மருத்துவ வசதி அளித்து மேலதிக  தொகையை பெற்றுக்   கொள்ளும் பொருட்டில். என்ன ஒரு rip- off ….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு சாமன்யன்.

எனக்கும் இலங்கையிலும் யூகேயிலும் ஆசுப்பத்திரி அனுபவங்கள் இருக்கு.

1. யூகே NHS ஆனது free at point of service எனும் நடைமுறையில் நடக்கிறது. ஆனால் பொது வரியில் இருந்து கணிசமான அளவு இதற்குப் போகிறது. யூகேயில் தனியார் காப்புறுதிகள் இருந்தாலும், அடிப்படை, மேல்நிலை (கான்சர், bypass surgery, transplant) இப்படி கிட்டத்தட்ட சகல பிரச்சினைக்களுக்கும் தரமான மருத்துவம், இலவசம். முன்னாள் பிரதமர் கமருன் பெரும் செல்வந்தர், மனைவி அவரை விட செழிப்பான குடும்பம். ஆனாலும் அவர்களின் வலுக்குறைந்த குழந்தை ஒன்றை முற்றிலும் என் எச் எஸ் சிலேயேதான் பராமரித்தார்கள். இங்கேயும் எமெர்ஜென்சியில் போனால் காத்திருக்கும் பிரச்சினை இருக்கு. பொதுவாக பெருநகரங்களில் இது அதிகம். ஆனால் எல்லா காத்திருப்பும் ரெகோர்ட் செய்யப்பட்டு. டார்கெட் இற்கு எதிராக மாத முடிவில் அலசப்படும். இந்த டார்கெட் இருப்பதால் எப்படியும் 3 மணதியாலதுக்குள் பார்த்துவிடுவர்.

2. இங்கே பெரிய பிரச்சினை படுக்கை. Bed space. Social care செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையும் மருத்துவ மனைகள் மீது விழுவதால், விடுவிக்க தயாரான பின்னரும் பல வயதானவர்கள் மருத்துவ படுக்கையில் இருப்பதால் - படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு. எமெர்ஜின்சி வார்டில், கொரிடோரில் கட்டில் போடும் நிலையும் சில சமயம் ஏற்படும். எனது தாயாருக்கு பல நோய்கள். அண்மையில் 3 கிழமை ஆசுபத்திரி வாசன். மிகவும் கண்ணியமான, கனிவான கவனிப்பு. அவரோடு 24/7 நாங்கள் நிண்டது பல தாதிகளுக்கு அதிசயம். அம்மாவுக்க்கு இலவச உணவு, அதையும் தாண்டி எம்மையும் கோப்பியை, பானை எடுத்து சாப்பிடமாறு வேறு கேட்பார்கள். அதுவரை அதிகப்படியான வரி என்று முக்கால் அழும் நான் அன்றுதான் அதன் பலனை உணர்ந்தேன்.

3. இங்கே NHS ஒரு தேசிய அடையாளம். அதில் கைவைக்கப் போகிறார்கள், தனியார் மயப்படுத்த போகிறார்கள் என சதா தொழில் மற்றும் லிபரல் கட்சிகள் கன்சவேடிவ்வை தாக்கும். அவர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான், ஆனால் அப்படி செய்தால் ஆட்சி பறிபோகும். எனவே சிறுக சிறுக தனியார் மயப்படுத்தலை புகுத்துகிறார்கள். மிக அதிகளவில் ஆசுபத்திரிகளை மூடி விட்டார்கள். 

4. முன்னர் NHS ஐ உலகின் பொறாமை (envy of the world) என்பார்கள். இப்போ அந்த சிறப்பு இல்லை எனிலும், ஆதார மருத்துவம், அவசர மருத்துவம், மேல் மருத்துவம், மருத்துவ ஆராய்சி என்பதில் இன்னும் தரமான சேவையே தரப்படுகிறது. இப்போ கன்சேவேடிவ் ஜோன்சனும் கூடுதல் பண ஒதுக்கீடு அறிவித்துள்ளார். பார்க்கலாம்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5. இலங்கை அனுபவம் அப்பாவை, சித்தப்பாவை ஒட்டியது. அப்பா வைத்தியர் சிவக்குமாரன்னின் நண்பர். வைத்தியர் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஆனாலும் அப்பாவின் நண்பர் என்பதால் கொஞ்சம் இயல்பாய் இருப்பார். தனியார் மருத்துவ மனையில் ஒருதரம் அப்பாவை பார்த்து விட்டு, அவரே இதைவிட என் கூடுதல் கவனிப்பு அரச மருத்துவ மனையில்தான் கிடைக்கும் அங்கே வாருங்கள் என மாற்றினார் ( இப்படி பட்ட உன்னதத்களும் எம்மத்தியில் இருந்தார்கள்). இதன் பின் அப்பா காலாமாகும் வரை அரச ஆஸ்பத்திரிதான். குறை சொல்ல முடியாத சேவை. என்ன இலங்கை ஆஸ்பதிரிகளுக்கே உரிய மூக்கை பிடுங்கும் மருந்து நாற்றம்தான் ஒரே குறை.

5. சித்தப்பா - தனியார் ஆஸ்பத்திரிக்கு போகும் போதே மூளைச்சாவு ஆகிவிட்டார். எனினும் 3 நாட்கள் செயற்கை உயிரூட்டியில் வைத்து காசை கறந்த பின்னரே விட்டார்கள் 😡.

பிகு: கல்வியும் மருத்துவமும், எப்போதும் அரச கையில் இருக்க வேண்டும். பெறும் நிலையில் (point of delivery/service) இலவசமாக இருக்க வேண்டும். இவை இரெண்டிலும் லாப நோக்க தனியார் கம்பெனிகளை விட்டால், அவர்கள் வேண்டும் என்றே அரச அமைப்புக்களை சீரழித்து, தனியாரே சிறப்பு. அல்லது காப்புறுதியே காப்பு எனும் நிலையை உருவாக்குவார்கள். அமெரிகாவை பார்த்தால், ஓபாமா கேர் இற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் இது புரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.