Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழில் இன்று திறப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழில் இன்று திறப்பு

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ja.jpg

குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போது அதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

IMG_1563.jpg

இநநிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை அவசர அவசரமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_1562.jpg

 

 

https://www.virakesari.lk/article/63281

 

 

Link to comment
Share on other sites

காணாமல் போனோர் அலுவலகத்தை யாருக்காக திறந்தீர்கள்; உறவுகள் போர் கொடி?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் பாரிய போராட்டத்தினையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தினை எதிர்த்து போராடிய போதிலும் நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா? அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா?

பட்டப்பகலில் திறக்க வேண்டிய அலுவலகத்தினை அதிகாலையில் திறக்கவேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத்தேடி தரப்போகின்றீர்களா இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம்.

 

vauniya.jpg

 

நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்திற்காகவோ சுகபோகத்திற்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும் நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரியளவிலான போராட்டமொன்றினை முன்னெடுக்கின்றோம்.

வவுனியா பன்றிக்கெய்த குளத்தில் இருந்து எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளோம்.

இதற்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் பொது அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/63315

Link to comment
Share on other sites

’உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை உதவி திட்டங்கள் கிடைக்கும்’

 

-எஸ்.நிதர்ஷன்

காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எம்மால் கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும், உங்கள் நீதிப் பயணத்தை நீங்கள் தொடர முடியும் என, காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் அகக்ப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இந்த அலுவலகத்தை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” உனவும் தெரிவித்தார்.

“ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே, இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப்படுத்த மட்டும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது.

“எமது அலுவலகத்தால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களால் உங்கள் வலிகளை போக்க முடியாது. அதற்காக நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை. எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே. இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், காணமல் போவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பது சிக்கலான விடயம் அத்துடன் நீண்ட காலம் எடுக்கலாம். 

“உங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை உங்களின் அன்றாட வாழ்க்கைக்கே சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். அது கூட உங்களுக்கு போதாது என்பதை நாம் உணர்கின்றோம். காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் வெறுமனே காணமல் போனோருக்கு மட்டுமல்ல அவர்களை தேடும் உறவுகளுக்கக்கவுமே. அதனால் தான் சில உதவி திட்டங்களை வழங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் எம்மூடாக நீதியை வழங்க வேண்டும் என எதிர்பாக்கிண்றீர்கள். நாமும் நீதிக்காக உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவே இருக்கின்றோம். 

“சிலரால் எமது செயற்பாட்டை விளங்கிக் கொள்ள சிரமப்படலாம். இந்த அலுவலகம் வேண்டாம் என எதிர்க்கும் உறவுகள் சிலர் எம்மை இரகசியமாக சந்தித்து எம்மிடம் பெயரிடப்பட்ட ஐந்து கோவைகளை தந்தனர். அதில் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் கூறவேண்டும். அதுவரை இந்த அலுவலகத்தைத் திறக்கக்கூடாது என்றனர். அப்போது நாம் உங்கள் கோரிக்கையை மட்டும் நாம் விசாரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தரப்புகள் அனைவரதும் கோவைகளையும் விசாரிப்போம் என கூறினோம்.

“உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாயை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனை பெற தற்காலிக சான்றிதழ் தேவையாக உள்ளது. இதனை பெறுவதால் உங்கள் நீதிக்கு தடை ஏற்பட்டு விடும் என தவறாக எண்ணாதீர்கள். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த உதவி திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

“இவ்வாறான உதவிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் உங்கள் நீதிப் பயணத்தினை நீங்கள் தொடர முடியும். எமது அலுவலகம் எந்த சந்தர்ப்பங்களிலும் ஏதாவது பிழை விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் துணிந்து சுட்டிக்காட்ட முடியும். நாங்கள் மட்டும் செயற்பட வேண்டும் என கருதவில்லை. பாதிக்கப்பட்ட நீங்களும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் அப்போது தான் நாம் விரைவாக உங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்” எனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உங்களுக்கான-நீதி-கிடைக்கும்-வரை-உதவி-திட்டங்கள்-கிடைக்கும்/175-237282

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.