Jump to content

யார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்

(நா.தனுஜா)

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள்.

selvam.jpg

 ஜனாதிபதி மாறினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மாறாது.அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்வரை அரசாங்கத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை, காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுதியான அறிவிப்பினை விடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். 

நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் பிரதானி என்ற வகையில் உண்மையில் நினைத்தால் காணிகள் அனைத்தையும் விடுவிக்கச் செய்ய முடியும். 

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவது எம்முடைய கடமை. நாங்கள் அதனைச் செய்திருக்கின்றோம். எனினும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் கைகளிலேயே இருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/63289

Link to comment
Share on other sites

பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை  ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது.

 

 தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

 இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து, அவற்றுக்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

https://www.virakesari.lk/article/63297

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.