Jump to content

இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்


Recommended Posts

இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்

Major-General-Shavendra-Silva-300x203.jpகடுமையான இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இராணுவத் தளபதி ஒருவரின் நியமன விடயத்தில், இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எதிர்கொண்ட மிகநெருக்கடியான தருணம் இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன்னரும் இராணுவத் தளபதி நியமனங்களின் போது இழுபறிகள், முரண்பாடுகள், குழிபறிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சேவை மூப்பின் அடிப்படையில் முன்னால் இருந்த திறமைமிக்க பல அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். சேவைமூப்பில், பின்வரிசையில் இருந்தவர்கள், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில், தளபதி ஆகியிருக்கிறார்கள்.

எனினும், எந்தவொரு இராணுவத் தளபதி நியமனத்தின் போதும், புற அழுத்தங்களை ஜனாதிபதியோ, அரசாங்கமோ இதுவரை எதிர்கொண்டதில்லை.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தான், கடைசி நேரம் வரை முடிவெடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், எடுக்கப்பட்டது இப்போது தான் என்றில்லை.  அந்த முடிவு, ஜூலை 14ஆம் திகதியுடன் ஓய்வுபெறவிருந்த அவருக்கு, ஆறு மாத சேவை நீடிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியபோதே, எடுக்கப்பட்டு விட்டது.

ஆனால், சர்வதேச அழுத்தங்களைச் சமாளித்து, அவருக்கு இந்த நியமனத்தை அளிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியல் சூழல் மாற்றங்களும், மேற்குலகுடனான உறவுகளில் ஏற்பட்டு வந்த விரிசல்களும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை எடுப்பதற்கு ஒரு காரணியாக இருந்தது.

அந்த முடிவை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான உள்ளக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

Major-General-Shavendra-Silva.jpg

இந்த நியமனம் நடக்கப் போவதை அறிந்து கொண்ட கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் பலரும், அதனை தடுக்க முயன்றனர். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கத் தவறவில்லை.

ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் ஓய்வு அல்லது சேவை நீடிப்பு மற்றும் புதிய இராணுவத் தளபதி குறித்த நியமனம் குறித்து அறிவிப்பு, கடந்த வாரத்துக்கு முந்திய வாரமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாகவே எல்லாம் நடந்தன.

ஓகஸ்ட் 17ஆம் திகதியுடன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஓய்வுபெற்று விட்ட போதும், அவருக்கான பிரியாவிடை இராணுவத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்படவில்லை. அவர் சேவைநீடிப்பில் இருக்கிறாரா ஓய்வு பெற்று விட்டாரா என்றுஅறிவிக்கப்படவும் இல்லை.

இதனால், இராணுவத் தளபதி ஒருவர் இல்லாத குழப்பம், கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் வரை நீடித்தது, 18ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், புதிய இராணுவத் தளபதிக்கான நியமனம் 19ஆம் திகதி மதியம் தான் ஜனாதிபதி செயலகத்தில், வைத்து, வழங்கப்பட்டது.

இதனால், 20ஆம் திகதியே ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு பிரியாவிடை அளித்து, வழியனுப்பும் நிகழ்வும், இராணுவத் தளபதிக்குரிய அடையாளச் சின்னமான ‘பிரம்பு’ கையளிக்கும் நிகழ்வும் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னரே எடுத்து விட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டதே இந்த இழுபறிக்குக் காரணம்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த நியமனத்தை எதிர்த்தனர். அதன் விளைவாக, இலங்கையுடனான இராணுவ உறவுகள் பாதிக்கப்படும்,என்று எச்சரித்தனர். இதனால் தான், ஜனாதிபதியினால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடைசியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான முடிவை எடுத்தபோது, அதற்கு கடுமையான எதிர்வினைகள் சர்வதேச மட்டத்தில் இருந்து வந்தது.

இந்த நியமனத்துக்கு  எதிர்ப்புகள், கண்டனங்கள், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனால் இந்தளவுக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதற்காக சர்வதேச அளவில்- குறிப்பாக மேற்குலக மட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று- லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள்.

இரண்டு- அவர், வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பது.

இறுதிக்கட்டப் போரில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு அபரிமிதமானது. அவரது போர்த்திறன், படை நிர்வாக ஆளுமை என்பன கேள்விக்கிடமற்றது.

major-general-shavendra-silva.jpg

1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த அவர், இலங்கை இராணுவம் முதன்முதலாக பெயரிட்டு நடத்திய ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையில் இருந்து, கடைசியாக மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை- எல்லா முக்கியமான சண்டைகளிலும் பங்கேற்றவர்.

இறுதிக்கட்டப் போரில், மன்னாரில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை- 58 ஆவது டிவிசனை வழிநடத்தியவர்.

இந்தப் போரின்போது தான், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறினார் என்று ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று இவர் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார்.

இவர், மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஐ.நா விசாரணை அறிக்கைகள் கூறியிருந்தன. இவ்வாறான ஒருவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தான் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பொறுப்புக்கூறல் முயற்சிகள் தடைப்படும், கடந்த நான்கரை ஆண்டுகளாக இராணுவத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புகள் முடங்கும், நல்லிணக்க செயற்திட்டங்கள் பாதிக்கப்படும், இவற்றுக்கு அப்பால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தளபதியாகும் போது, பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடைவர், அது ஒட்டுமொத்த நல்லிணக்க முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் என்பதே சர்வதேச கரிசனையாகும்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த விடயத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களும் போதியளவு கொடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரை துணிச்சலுடன், இராணுவத் தளபதியாக நியமித்ததை ஐ.நாவினாலும் சரி, மேற்குலகினாலும் சரி பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெற்றுக் கொண்ட காலஅவகாசத்துக்கு அடுத்த ஆண்டு பொறுப்புச் சொல்ல வேண்டியுள்ள நிலையில் உள்ள அரசாங்கம், அதிலிருந்து நழுவி, போர்க்குற்றம்சாட்டப்பட்டவர்களை முன்னுரிமைப்படுத்துவது, சர்வதேசத்துக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பது ஐ.நா தரப்பின் நிலைப்பாடு.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேறு விதமாகச் சிந்திக்கிறார்.

அவர், 2015இல் ஆட்சிக்கு வந்தபோது இருந்த மனோநிலையில் இப்போது இல்லை. அப்போது அவர் பலரையும் சமாளிக்க வேண்டியிருந்தது. மனதுக்குப் பிடிக்காதவற்றையும் செய்ய வேண்டியிருந்தது.

அத்தகைய சூழலினால், பல படை அதிகாரிகள் விலகிச் செல்ல நேரிட்டது, பாதுகாப்புதுறையில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது அவர் அதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு நடந்து கொண்டிருக்கிறார். தான் பதவியேற்கும் போது, எவ்வாறான நிலையில் நாடு இருந்ததோ அதேநிலையில் கொண்டு போய் ஒப்படைக்க முனைகிறார்.

சிங்கள மக்களின் மனநிலை, விருப்புகளை ஒட்டியே அவர் முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார். லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனமும் அவ்வாறானதொரு முடிவு தான்.

general-mahesh-farewell-1.jpg

இந்த நியமனம் குறித்து அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அவர் அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் போது, பொறுப்புவாய்ந்த இடத்தில் அவர் இருக்கப் போவதில்லை.

எனவே, கண்ணை மூடிக் கொண்டு அவர், முடிவை எடுத்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுக்க வைப்பதில், பல்வேறு தரப்புகள் செல்வாக்குச் செலுத்தியதாக பேசப்படுகிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் நியமிப்பதில், ஜனாதிபதியின் மகள் சதுரிக்கா சிறிசேனவும்  செல்வாக்குச் செலுத்தினார் என்றும், அவருக்காக ஆதரவு தேடினார் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் முடிவுகளில் சதுரிக்கா சிறிசேன செல்வாக்குச் செலுத்துவதாக முன்னரே பலமுறை தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதைவிட, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டும் எனக் கோரி சமூக வலைத்தளங்களின் மூலமும் கடுமையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னால் கோத்தாபய ராஜபக்ச – மகிந்த தரப்பு இருந்திருக்கலாம்.

ஏனென்றால், இந்த நியமனத்தில் மகிந்த தரப்பின் செல்வாக்கு இருந்ததாக வலுவான சந்தேகங்கள் உள்ளன.

காரணம், கோத்தாபய ராஜபக்சவும் சவேந்திர சில்வாவும் மிக நெருக்கமானவர்கள். போர்க்காலத்தில் மிகநெருக்கமாக இணைந்து செயற்பட்டவர்கள். ஒருவரின் இரகசியத்தை மற்றவர் அறிந்திருக்கும் அளவுக்கு இந்த நெருக்கம் இருந்தது.

இறுதிப்போரின் போது கோத்தாபய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் கீழ் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டார், அவரது உத்தரவுகளை நடைமுறைப்படுத்தினார் என முன்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே, இருவரும் 1ஆவது கஜபா ரெஜிமென்ட்டில் பணியாற்றிவர்கள். எனவே லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாவதை, ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் கோத்தாபய ராஜபக்ச நிச்சயம் விரும்புவார்.

அதற்காகவே, இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு கோத்தாபய ராஜபக்சவின் விருப்பத்தை – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அது ஒரு வகையில் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கும், ஜனநாயகத்துக்கும் கூட அச்சுறுத்தலாக அமையக் கூடும்.

-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.