Jump to content

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து தாம் போராட்டம் நடத்தியதையும் அவர்கள் கண்டித்ததாகவும், இந்திய அரசை எதிர்த்து தம்மால் தீர்வை பெற முடியாதென்றும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமென்றால் அவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி புலிகள் குறிப்பிட்டார்கள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..

நீங்கள் ஓட்டு வாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டு திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார்.

நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம்.

உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என தெரிவித்தார்.

 

https://www.tamilwin.com/srilanka/01/224223?ref=home-latest

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருப்பினும், வரலாறும், அனுபவவும் காங்கிரஸ் ஈழதது தமிழரிடர்க்கு ஆதரவில்லை  என்பது மட்டுமல்ல, எதிரானதும் எனப்து மட்டுமல்லாமல்,  காங்கிரஸ்  வரலாற்று அடிப்படையில் எழுந்த இனப் பிரச்சனைகளை தீர்ப்பதில் கையகலாதவர்கள் என்பதை வரலாறு காட்டி விட்டது.

நான் பிஜேபி மற்றும் கிந்தியா இற்கு வக்காலத்து வாங்கவில்லை.

ஆனால், எவர் எதை சொன்னாலும், பிஜேபி, இலங்கைத்தீவை பொறுத்தவரையிலான ஈழத்தமிழரின் பிரச்சனையை வரலாற்று அடிப்படையில் நன்றாக புரிந்துள்ளது.  அந்த சரியான புரிதலை, வெளிப்படையாக, ஆணித்தரமாக, ஈழத்தமிழர் பிரச்சனையின் எதிர் சாராரான சிங்களத்துக்கு அதிகாரத் தொனியில் வெளிப்படையாக அறிவுறுத்தவும் தயங்கவில்லை.

ஈழத்தமிழரின் வரலாற்றையே இல்லாதாக்கியது காங்கிரஸ், சிவ் சங்கர் மேனனின் நேரடியான statement, தமிழர் இலங்கையில் வந்தேறு குடிகள்.

வரலாற்ற்றில் உண்டாக்கிய, உருவாக்கிய  தவறுகளால் பாதிக்கப்பட்டோரை, வரலாற்றின் அடிப்படியில் பின்னோக்கிப் பார்க்காமல், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு பிஜேபி யே ஜம்மு-காஷ்மீர் இல் தீர்த்தும் வைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை , அன்மையில் காவேரி தொலைக் காட்சியில்   திருமாள‌வ‌னால் , நெரியாள‌ர் மத‌ன் கேட்ட‌ கேள்விக்கு இந்த‌  திருமாள‌வ‌னால்  ச‌ரிய ப‌தில் அளிக்க‌ முடியாம‌ கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் / 

2013ம் ஆண்டு கூடா ந‌ட்பு கேடாய் முடியும் என்று கொலைஞ‌ர் க‌ருணாநிதி காங்கிர‌ஸ்சை விட்டு வெளிய வ‌ந்த‌  போது இந்த‌ திருமாள‌வ‌ன் என்ன‌ சொன்னார் 😁😉 /  

2009ம் ஆண்டு ஈழ‌த்தில் போர் யார் செய்தார்கள் என்று எம் வ‌ன்னி த‌லைமைக்கு  ந‌ல்லாவே தெரியும் /
அண்ண‌ன் சீமானை 2009ம் ஆண்டு க‌ருணாநிதி கைது செய்து சிறையில் அடைக்கும் போது உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் வ‌ன்னி த‌லைமைக்கு அறிவிக்க‌ ப‌ட்ட‌து /

( இன்றில் இருந்து திருமாள‌வ‌ன் ஒரு  பொய்ய‌ன் ம‌ற்றும் நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாறும் கேவ‌ல‌மான‌ ம‌னித‌ர் 😠
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ன்னியில் இப்ப‌ எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை தானே , அத‌ன் துனிவு தான் திருமாவை இப்ப‌டி பேச‌ வைக்குது , திருமாவின் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌லுக்காக‌ இத போல‌ ப‌ல‌ க‌தை சொன்னாலும் புலம் பெய‌ர் நாட்டில் உண்மை என்று ந‌ம்ம‌ எம்ம‌வ‌ர்க‌ள் சில‌ர் இருக்கின‌ம் / 

க‌ருணாநிதி வைக்கோவோட‌ ப‌ய‌ணிச்சு   அவ‌ர்க‌ளின்   ந‌ரி புத்தியும் ந‌ரி குன‌மும் திருமாள‌வ‌னிலும் தொத்திட்டு /

இன்னும் நிறைய‌ பொய்யை அவுட்டு விடு திருமா ,  த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ பிள்ளைக‌ள் ல‌ச்ச‌ க‌ண‌க்கில் இருக்கிறோம் அவ‌ர்க‌ளுக்கு தெரியும் எது பொய் எது உண்மை என்று   /

இவ‌ரை விட‌
அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் அண்ண‌ன் வேல்முருக‌ன் , எவ‌ள‌வோ வெற்ற‌ர் / 

Link to comment
Share on other sites

2009 காலப்பகுதியில்( முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ) ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போ இந்தியாவின் அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல் பற்றியெல்லாம் பேசினார். அப்போ மேல் கூறிய கூற்றை பற்றி கூறாதவர் இப்போ கூறுவது பொய் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளால் அதிக‌ம் நேசித்த‌ , த‌மிழ் செல்வ‌ன் அண்ணா , 2006ம் ஆண்டு இந்தியா அர‌சுக்கு புரியும் ப‌டியாய் ஒரு உண்மையை சொன்ன‌வ‌ர் ( முந்தி செய்த‌ பிழையை மீண்டும் இந்தியா செய்ய‌க் கூடாது என்று /

இந்தியா சமாதான‌ கால‌த்தில் இல‌ங்கை அர‌சாங்க‌த்துக்கு குடுத்த‌ டாட‌ர் ம‌ற்றும் , போராளிக‌ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை க‌ண் அறியும்  க‌ருவிக‌ள்  , அதை தாக்கி அழிக்கும் வெடி பொருட்க‌ள் இல‌ங்கை அர‌சுக்கு இந்தியா குடுத்த‌து , இது எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் , 

2006ம் ஆண்டில் இந்தியா உத‌வின‌த‌ விட‌ 2008 ம‌ற்றும் 2009ம் ஆண்டு உத‌வின‌து அதிக‌ம் /

 க‌ணிமொழி , திருமாள‌வ‌ன் , ராம‌தாஸ்  , இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட‌து போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுங்கோ , எங்க‌ள் ம‌க்க‌ள் செத்து ம‌டியின‌ம் என்று , வ‌ன்னியில் இருந்து அழைப்பு வ‌ர‌ 2ஜீ ஊழ‌லுக்கு சொந்க‌க் காரியான‌ க‌னிமொழி ரெலிபோனை எடுக்க‌ வில்லை , 

2009ம் ஆண்டு ராம‌தாஸ்சின் கேலி கூத்தை பின்னாளில் , அண்ண‌ன் மேல் முருக‌ன் ஆதார‌த்தோடு சொன்ன‌வ‌ர் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

Image may contain: 2 people, people sitting

கூட்டத்தில்   வெறும் கதிரைகள்தான்... அதிகம் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

2009 காலப்பகுதியில்( முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ) ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போ இந்தியாவின் அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல் பற்றியெல்லாம் பேசினார். அப்போ மேல் கூறிய கூற்றை பற்றி கூறாதவர் இப்போ கூறுவது பொய் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

உண்மை தான் நுனா அண்ணா , இவ‌ருக்கு இர‌ண்டு நாக்கு இருக்கு , இவ‌ர் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு என்று என‌க்கு தெரியாது , இவ‌ர் போட்டி இட்ட‌ தொகுதியிலும் ம‌க்க‌ளுக்கு காசு குடுக்க‌ ப‌ட்ட‌து /

காசு குடுத்து ஓட்டை வாங்கும் பிராடுக‌ளுட‌ன் கூட்ட‌னி வைச்சு கொண்டு எப்ப‌டி தான் இவ‌ரால் வெளியில் த‌ல‌ காட்ட‌ முடியுது  / 

ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது வேறு பேச்சு , திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா பிற‌க்கு இன்னொரு பேச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே😂

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

பிரோ , திருமான்ட‌ ந‌ல்ல‌ நேர‌ம் இந்த‌ செய்தியை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து சொன்ன‌து , இத‌  த‌மிழ் நாட்டு ஊட‌கத்தில் சொல்லி இருக்க‌னும் , இன் நேர‌ம்  திருமாவள‌னை  க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்பின‌ம் /

உண்மையில்  இவ‌ருக்கு  வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை கொஞ்ச‌மும் இல்லையா பிரோ 🤔😁 /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேச்சையும் சனம் கேட்டுக்கொண்டிருக்கிறதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

பிரோ , அண்ண‌ன் சீமான் , திருமாவோட‌ நீண்ட‌ கால‌ம் ப‌ய‌ணிச்ச‌வ‌ர் , ஏதோ அவ‌ர் மேல் க‌ட‌ந்த‌ கால‌ பாச‌த்தை ம‌ன‌தில் வைச்சு சொல்லி இருக்க‌லாம் ,

இப்போது அண்ண‌ன் சீமான் , பெரிசா திருமாள‌வ‌ன் ப‌ற்றி வாய் திற‌ப்ப‌து இல்லை , 
பாராள‌ம‌ன்ற‌  தேர்த‌லில் வென்ற‌துக்கு வாழ்த்து சொன்ன‌வ‌ர் போல‌ / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 

என்ன‌ தாத்தா , இப்ப‌டி ஒரு வ‌ர‌வேற்பை திருமாள‌வ‌ன் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டார் 😁😂/

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா இற‌ந்த‌ போது திருமாள‌வ‌ன் ல‌ண்ட‌னுக்கு வ‌ந்து  அஞ்ச‌லி செலுத்தி விட்டு ம‌க்க‌ள் முன் உரை ஆற்றினார் , அப்போது இப்ப‌டி நில‌மை இல்லை , ம‌க்க‌ள் அன்போடு தான் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

2009 தோடு திருமாவளவன் இன்னுமொரு பக்கா அரசியல்வாதி என்பது நிருபணமாயீற்று. 

இவரை சீமான் முதல்வராக தகுதி உள்ளவர்னு சொல்றாரே? இனி சீமானின் திருமா பற்றிய பார்வையில் மாற்றம் வருமா?

13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில்,

விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா , இப்ப‌டி ஒரு வ‌ர‌வேற்பை திருமாள‌வ‌ன் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டார் 😁😂/

அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா இற‌ந்த‌ போது திருமாள‌வ‌ன் ல‌ண்ட‌னுக்கு வ‌ந்து  அஞ்ச‌லி செலுத்தி விட்டு ம‌க்க‌ள் முன் உரை ஆற்றினார் , அப்போது இப்ப‌டி நில‌மை இல்லை , ம‌க்க‌ள் அன்போடு தான் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏

எனக்கு திருமாளவன் மீது நல்லதொரு மரியாதை இருந்தது. ஆனால் 2009க்கு பின் எதுவுமே இல்லை.😡

Link to comment
Share on other sites

2008 ம் ஆண்டு நடுப்பகுதிக்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள் விரும்பி இருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.  இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிங்களவரை விட தமிழர் மீது அதிக வெறுப்பை கொண்டவர்களாக இந்திய ஆளும் வர்க்கமே இருந்தது.  அதை விட இணைத்தலைமை நாடுகளும் எமது போராட்டத்திற்கு பாதகமான முடிவுகளையே தொடரந்து  எடுத்தான.  போராட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை புறந்தள்ளி தமிழக அரசியல்வாதிகள் மீதோ திமுக மீதோ முழுப்பழியையும் போடுவதும் ஒரு மிகைப்படுத்தல் தான். அவர்கள் சுயநல அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களில் அரசியலை 1986 ம் ஆண்டிலேயே  புரிந்து கொண்டு தமது விடுதலைப் போரட்ட இராணுவ அரசியல்  திட்டங்களை சிறப்பாக திட்டமிட்ட எமது தரப்பால் பிற்காலத்தில் உலக அரசியலைப் புரிந்து   சரிவர அரசியல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது எமது துரதிஷ்ரம்.

எமது தோல்விக்கு ஒன்றுக்கு  மேற்ப்பட்ட பல அக/ புறக்காரணிகள் இருந்தும்  தவறுகளை சுயவிமர்சனம் செய்ய இப்போதும்  தவறுதோடு  அவற்றை கண்டும் காணாமல் மறைக்கவும் மறக்கவும்  முற்படும் நிலையில்  நாம் இருக்கிறோம். இந்திலையில்  தமிழக அரசியல்வாதிகளின் மீது மட்டும்  அகோர கோபவெறியுடன் சிலர்  பாய்வதும் அவர்கள் தான் அவர்களை முழுப்பழிகாரர்களாக காட்ட முனைவதும்  தமக்கு   தேசியப்பற்று இருப்பதாக  விளம்பரப்படுத்த அவர்கள்   செய்யும்  ஒரு வித நடிப்பாகவே எனக்கு  தெரிகிறது. இவ்வாறு செய்பவர்கள் 2009 ம் ஆண்டின் பின்னர் தமக்குள் கொள்கையளவில் கூட  புரிந்துணர்வுடன்   ஒற்றுமையாக அரசியல் செய்யாதவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

2008 ம் ஆண்டு நடுப்பகுதிக்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள் விரும்பி இருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.  இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிங்களவரை விட தமிழர் மீது அதிக வெறுப்பை கொண்டவர்களாக இந்திய ஆளும் வர்க்கமே இருந்தது.  அதை விட இணைத்தலைமை நாடுகளும் எமது போராட்டத்திற்கு பாதகமான முடிவுகளையே தொடரந்து  எடுத்தான.  போராட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை புறந்தள்ளி தமிழக அரசியல்வாதிகள் மீதோ திமுக மீதோ முழுப்பழியையும் போடுவதும் ஒரு மிகைப்படுத்தல் தான். அவர்கள் சுயநல அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களில் அரசியலை 1986 ம் ஆண்டிலேயே  புரிந்து கொண்டு தமது விடுதலைப் போரட்ட இராணுவ அரசியல்  திட்டங்களை சிறப்பாக திட்டமிட்ட எமது தரப்பால் பிற்காலத்தில் உலக அரசியலைப் புரிந்து   சரிவர அரசியல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது எமது துரதிஷ்ரம்.

எமது தோல்விக்கு ஒன்றுக்கு  மேற்ப்பட்ட பல அக/ புறக்காரணிகள் இருந்தும்  தவறுகளை சுயவிமர்சனம் செய்ய இப்போதும்  தவறுதோடு  அவற்றை கண்டும் காணாமல் மறைக்கவும் மறக்கவும்  முற்படும் நிலையில்  நாம் இருக்கிறோம். இந்திலையில்  தமிழக அரசியல்வாதிகளின் மீது மட்டும்  அகோர கோபவெறியுடன் சிலர்  பாய்வதும் அவர்கள் தான் அவர்களை முழுப்பழிகாரர்களாக காட்ட முனைவதும்  தமக்கு   தேசியப்பற்று இருப்பதாக  விளம்பரப்படுத்த அவர்கள்   செய்யும்  ஒரு வித நடிப்பாகவே எனக்கு  தெரிகிறது. இவ்வாறு செய்பவர்கள் 2009 ம் ஆண்டின் பின்னர் தமக்குள் கொள்கையளவில் கூட  புரிந்துணர்வுடன்   ஒற்றுமையாக அரசியல் செய்யாதவர்கள். 

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இந்த அத்திவரதர் சயனநிலைதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு சமனாக இருந்தது.

Bildergebnis für à®à®°à¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿ à®à®£à¯à®£à®¾à®µà®¿à®°à®¤à®®à¯

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் இந்த அத்திவரதர் சயனநிலைதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு சமனாக இருந்தது.

Bildergebnis für à®à®°à¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿ à®à®£à¯à®£à®¾à®µà®¿à®°à®¤à®®à¯

இது கருணாநிதியின் வழமையான அரசியல் ஸரண்ட்.  இதற்கும் எமது போராட்டத்தோல்விக்கும் தொடர்பு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழருக்கு எதிரான மனோநிலையே என்றுமே இருந்து வந்துள்ளது.

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்தியாவால் அளிக்கப்பட்டதே அது ஏன்?

Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்தியாவால் அளிக்கப்பட்டதே அது ஏன்?

தமது கூலிப்படையாக தமிழ் இளைஞரை பாவிக்க என்பதை உணர்ந்து கொண்டதாக விடுதலைப்புலிகளே தெரிவித்திருந்தார்கள். அதை உணர்ந்து தான் புலிகள் தமது தளத்தை சென்னையில்  இருந்து தாயகத்திற்கு நகர்த்தினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ நேர்மையான‌ த‌மிழ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருக்க‌னும் , இந்திய‌த்தை ஒரு நொடியில் ஆட்ட‌ம் காண‌ வைச்சு இருக்க‌லாம் ,

போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிறீங்க‌ளா , அல்ல‌து இந்தியா என்ற‌ நாட்டுட‌ன் இருந்து  த‌மிழ் நாடு த‌னியாக‌ போர‌த‌ விரும்புகிறீர்க‌ளா என்று கேட்டு இருந்தா , அது ச‌ர்வ‌தேச‌ பிர‌ச்ச‌னையாய் மாறி இருக்கும் ,

முதுகெலும்பு இல்லா திருட்டு ர‌யில் நாதாரியின் குடும்ப‌ம்  செய்த‌ ஊழ‌ல் தான் 2009ம் ஆண்டு அவ‌ர்க‌ள் இவ‌ள‌வு வேச‌ம் போட‌ கார‌ண‌ம் , 

போராடின‌ ம‌க்க‌ள் வ‌ழ‌க்க‌றிய‌ர்க‌ள் என்று ப‌ல‌ரும் க‌ருணாநிதியின் உத்த‌ர‌வில் தாக்க‌ ப‌ட்டார்க‌ள் / அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு சிறையை விட்டு வெளிய‌ வார‌தும் வ‌ந்து ஒரு சில‌ கிழ‌மைக‌ளில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் /

க‌ருணாநிதி இற‌ந்த‌ போது ,
ப‌ல‌ருக்கு அது பெரிய‌ தாக்க‌த்தை உண்டு ப‌ண்ண‌ வில்லை /
த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் க‌ட்டு ம‌ர‌ம் எப்ப‌ பாடையில் போகும் என்று கார்த்து இருந்தார்க‌ள் , கார‌ண‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ துரோக‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஒரு த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ நேர்மையான‌ த‌மிழ‌ன் 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருக்க‌னும் , இந்திய‌த்தை ஒரு நொடியில் ஆட்ட‌ம் காண‌ வைச்சு இருக்க‌லாம் ,

போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிறீங்க‌ளா , அல்ல‌து இந்தியா என்ற‌ நாட்டுட‌ன் இருந்து  த‌மிழ் நாடு த‌னியாக‌ போர‌த‌ விரும்புகிறீர்க‌ளா என்று கேட்டு இருந்தா , அது ச‌ர்வ‌தேச‌ பிர‌ச்ச‌னையாய் மாறி இருக்கும் ,

முதுகெலும்பு இல்லா திருட்டு ர‌யில் நாதாரியின் குடும்ப‌ம்  செய்த‌ ஊழ‌ல் தான் 2009ம் ஆண்டு அவ‌ர்க‌ள் இவ‌ள‌வு வேச‌ம் போட‌ கார‌ண‌ம் , 

போராடின‌ ம‌க்க‌ள் வ‌ழ‌க்க‌றிய‌ர்க‌ள் என்று ப‌ல‌ரும் க‌ருணாநிதியின் உத்த‌ர‌வில் தாக்க‌ ப‌ட்டார்க‌ள் / அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு சிறையை விட்டு வெளிய‌ வார‌தும் வ‌ந்து ஒரு சில‌ கிழ‌மைக‌ளில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் /

க‌ருணாநிதி இற‌ந்த‌ போது ,
ப‌ல‌ருக்கு அது பெரிய‌ தாக்க‌த்தை உண்டு ப‌ண்ண‌ வில்லை /
த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் க‌ட்டு ம‌ர‌ம் எப்ப‌ பாடையில் போகும் என்று கார்த்து இருந்தார்க‌ள் , கார‌ண‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ துரோக‌ம் 

பையன்,

தமிழகத்து அரசியல் பலமென்பது மத்தியை ஆட்டம்காண வைக்கும் ஒரு ஆயுதம் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. எம் ஜி ஆர் காலத்திலேயே, அவரின் கைக்கு மீறி காரியங்கள் நடந்தபோது, அவர் தலைவரை மீண்டும் ஈழத்துக்கே திரும்புங்கள், தமிழகத்தில் இருப்பது உங்களுக்கு ஆபத்து என்று சொன்னாரே ஒழிய, மத்தியைக் கட்டுப்படுத்த முயலவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புலிகளின் மிகப்பெரும் ஆதரவாளராக இருந்த எம் ஜி ஆருக்கே கைகள் கட்டப்பட்டுத்தான் இருந்தன.

கருனாநிதிபற்றிக் கேட்கத் தேவையில்லை. 2008 / 2009 களில் அவர் மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும்கூட, அவரால் எதுவுமே செய்திருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. கனிமொழியினதும், ராஜாவினதும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செயற்பாடுகளைக் காரணம் காட்டி, சோனியா கருனாநிதியின் வாலை ஒட்ட நறுக்கி வைத்திருந்தது அவர் பேசாமல் இருந்ததிற்கு ஒரு காரணம். அடுத்தது, இலங்கையில் போரை நிறுத்துங்கள், அல்லது தமிழ்நாடு பிரியும் என்று கருனாநிதி கேட்டிருந்தால், மறுகணமே அவரின் மகளும், வளர்ப்பு மகனும் சிறைப்பிடிக்கப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆளுனராட்சி அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவை எதற்குமே கருனாநிதி உடன்படப்போவதில்லை. கருனாநிதி இடத்தில் எவர் இருந்தாலும், இதுதான் நடந்திருக்கும்.

அடுத்தது திருமாவளவன் போன்றவர்கள்மேல் நாம் வைத்திருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையும், அவர்களின் அரசியல் செல்வாக்கும், அதனோடு நாம் அடைந்த ஏமாற்றங்களும். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளே தமது பதவிகளைத் துறக்காது, அரசுக்கு மாறி மாறி முண்டுகொடுத்துவரும்போது, திருமாவளவன் போன்றோரை எங்களுக்காக குரல் கொடுங்கள், பதவி துறவுங்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? அடுத்தது, இவர் தனது சாதிமக்களுக்காக கேட்டுப் பெற்றுக்கொள்ளும் பதவியை தூக்கியெறிவதென்பதோ, அல்லது மத்திய அரசுக்கெதிராகச் செயற்படுவதென்பதோ தனது மக்களுக்கு எதுவித நண்மையையும் செய்யப்போவதில்லையென்றானபின், அவர் அதை ஏன் செய்யவேண்டும்? எங்களுக்காக தனது அரசியல் எதிர்காலத்தை வீணடிப்பதால் எமக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை, மத்திய அரசையும் ஆட்டம் காண வைக்கப்போவதில்லை, அவரது மக்களும் நண்மை அடையப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை தமிழக அரசியல் வாதிகள் அனைவருமே வெத்துவேட்டுக்கள். இப்படிச் சொல்வது அவர்களை அவமானப்படுத்தவல்ல, மாறாக அவரகளது அரசியல் பலத்தின்மூலம் எமக்கு எதையுமே செய்ய அவர்களால் இயலாது என்பதைத்தான்.

திருமா போன்றவர்கள் அவ்வப்போது எம்மிடையே உலாவருவதால் அவர்கள் மேல் எமது ஆத்திரத்தைக் காட்டுகிறோம். ஆனால், கொலைகளைச் செய்யத் திட்டமிட்டு, கனகச்சிதமாய் அரங்கேற்றிய சோனியா, நாராயணன், சிவ் சங்கர் மேனன், அந்தோனி, நம்பியார்கள், பிரணாப் முகர்ஜீ போன்ற மனித உருவில் உள்ள மிருகங்கள் எம்மிடையே ஒருபோதும் உலாவரப்போவதில்லை. இவர்கள்மேல்த்தான் எமது ஆத்திரம் திரும்பவேண்டும்.

இறுதியாக, தனது மக்களுக்கே நாளொன்றிற்கு ஒவ்வொருகதை கூறும் திருமாவும், அவரது தோழர்களும் எமக்கு அதைவிட அதிகமான புனைகதைகளைக் கூறக்கூடியவர்கள்தான் என்பதை நாம் எப்படி மறந்தோம். பேசாமல், அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிட்டு, எங்கள் வேலையைப் பார்ப்பதே மேல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.