Jump to content

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்


Recommended Posts

2 hours ago, ரஞ்சித் said:

புரட்சி, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் உண்மையாகவே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஆட்சிகள் மாறும்போது மாற்றப்படுகிறதென்று நம்புகிறீர்களா? அப்படி மாறுகிறதென்றால், பி.ஜே. பியின் ஆட்சியினால் எமக்குக் கிடைத்திருக்கும் நண்மைகள் பற்றிச் சொல்லுங்களேன்? உங்களின்மாநிலமே அவர்களை முற்றாக நிராகரித்திருக்கும்போது, நீங்கள் ஆட்சிமாற்றம் எமக்கு நண்மையாக இருக்கும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.

நீங்கள் kadancha இன் கருத்தையும் எனது கருத்தையும் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். முதலில் உங்களுடைய எந்த கருத்தை quote பண்ணி நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். சும்மா பிஜேபியை இதற்குள் இழுக்காமல்.

முன்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது ராஜீவ் காந்தி (காங்கிரஸ்), பின்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது மன்மோகன் சிங் (காங்கிரஸ்). இதற்குள் பிஜேபி எங்கே வந்தது?

தவிர ஆட்சிமாற்றம் எமக்கு நன்மையளிக்கும் என்று நான் எங்கேயாவது எழுதி அதை புரட்சி ஆதரித்துள்ளாரா? இதென்ன புதுக்கதை? 😀

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Lara said:

நீங்கள் kadancha இன் கருத்தையும் எனது கருத்தையும் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். முதலில் உங்களுடைய எந்த கருத்தை quote பண்ணி நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். சும்மா பிஜேபியை இதற்குள் இழுக்காமல்.

முன்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது ராஜீவ் காந்தி (காங்கிரஸ்), பின்னைய இந்திய ஆட்சியாளர் என நான் கூறியது மன்மோகன் சிங் (காங்கிரஸ்). இதற்குள் பிஜேபி எங்கே வந்தது?

தவிர ஆட்சிமாற்றம் எமக்கு நன்மையளிக்கும் என்று நான் எங்கேயாவது எழுதி அதை புரட்சி ஆதரித்துள்ளாரா? இதென்ன புதுக்கதை? 😀

உங்களின் கருத்துக்களுக்குப் பதிலளிப்பதில்லை என்று இருக்கிறேன். ஆனாலும், ஒரு விடயத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

அரசுகள் மாறுவதால் ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை மாறுவதில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. உங்களது கருத்தில் அன்றிருந்தது ஒரு ஆட்சி, இன்றிருப்பது வேறு ஆட்சி என்று எழுதியுள்ளீர்கள். அப்படி நீங்கள் எழுதியதை மேற்கோள்காட்டி புரட்சி நீங்கள் சிக்ஸர் அடித்ததாக எழுதியிருந்தார். அதனால்த்தான் அவருக்கு நீங்களோ அல்லது நானோ கூறும் விடயம் என்னெவென்று புரிகிறதா அல்லது, நீங்கள் எழுதியதற்காக அப்படிப் பாராட்டினாரா என்று கேட்டு எழுதியிருந்தேன். அவருக்குத்தான் அது வெளிச்சம்.

கடஞ்சாவுக்கு நான் எழுதிய பதில் உங்களுக்கானது அல்ல. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு பற்றியே நான் கேட்டிருந்தேன். நீங்கள் இதுபற்றி முன்னர் எழுதியிருக்கலாம், ஆனால் நான் பார்க்கவில்லை. 

உங்களுக்கு பதிலெழுதாது நான் விடுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான், நீங்கள் எனது கருத்தை விமர்சித்து முன்வைக்கும் எந்தக் கருத்துக்கும் தவறாமல் வந்து சலாம் போடவும், பச்சை குத்தவும் சிலர் இருப்பது. பெரும்பாலும், தனிப்பட்ட ரீதியிலே அவர்கள் இப்படிச் செய்வது தெரிகிறது. அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. 

ஒருமுறை, நான் எழுதியதற்கு நீங்கள் விமர்சனம் முன்வைத்து, சிலர் வந்து சலாம் போட்டு, அதற்கு நான் கருத்தெழுதி, மட்டுருத்துனர் வந்து அனைத்துக் கருத்துக்களையும் நீக்கும்படியாகிவிட்டது. அப்படியொன்று தேவையில்லை. ஆகவேதான், உங்கள் கருத்திற்குப் பதிலளிப்பதில்லை என்று இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

உங்களிடம் ஒரு கேள்வி, எதற்காக இந்தியாவை, கிந்தியா என்று அழைக்கிறீர்கள்? இழிவுபடுத்தவா அல்லது இந்தியா ஒரு இந்துத்துவ நாடு இல்லை என்பதை பறைசாற்றவா? சும்மா, அறிந்துகொள்வதற்காகத் தான் கேட்கிறேன்.

அடுத்தாக, பி.ஜே. பியின் கிந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரஸின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் பி.ஜே பியின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அப்படியிருந்தால், அது எவ்வகையில் எமக்கு சாதகமானதாக இருக்கப்போகிறது? 

ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தன்மையை பி.ஜே பி புரிந்துவைத்திருக்கிறதென்றால், காங்கிரஸ் அதுபுரியாமலா இவ்வளவு காலமும் எமது தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? 

காஷ்மீர் தொடர்பாக பி, ஜே பியின் அண்மைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரித்திருப்பதைப் பார்த்தேன். அதற்கான காரணம் வெறுமனே ஹிந்து - முஸ்லீம் பிரச்சினையில்லை என்றும், பாக்கிஸ்த்தான் - இந்தியா பிணக்கும் இல்லையென்று நான் எடுத்துக்கொள்ளலாமா? இவை இரண்டுமில்லையென்றால், நீங்கள் கிந்தியாவின் புதிய காஷ்மீர் நிலைப்பாட்டை ஆதரிக்கக் காரணம் என்ன? காஷ்மீர் தொடர்பான கிந்தியாவின் இப்புதிய நிலைப்பாடு எப்படி எமக்குச் சாதகமாக அமையப்போகிறதென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து இழக்கப்படுவது, ஈழத்தமிழர் நிலைப்பாட்டை இன்னும் பலவீனமாக்கி விடாதா? தனது மாகாணம் ஒன்றிற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்க மறுக்கும் அல்லது இருந்ததைப் பறித்தெடுக்கும் ஒரு அரசு, எப்படி இன்னொரு நாட்டின் சிறுபான்மையினத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்கும்படி அந்நாட்டு அரசைக் கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அப்படிக் கோருவதற்கான தார்மீக அந்தஸ்த்தை கிந்தியா காஷ்மீரில் இன்று செய்துள்ளதோடு முற்றாக இழந்துவிட்டதென்பது உங்களுக்குத் தெரிகிறதா? 

இவை எல்லாவற்றையும் விட, ஈழத்தமிழருக்கு நியாயமான தீர்வொன்றைத் தர வேறொரு காரணம் பி.ஜே. பியின்  கிந்தியாவுக்கு இருக்கிறதென்றால், அதை நீங்கள் எழுதவேண்டுமெ என்பது எனது அவா. ஒருவேளை. நாங்கள் எல்லோரும் பார்க்கும் கோணத்தைவிட, இன்னொரு கோணத்திலிருந்து நீங்கள் அதைப் பார்க்கலாம் என்பதனால் கேட்கிறேன். 
 

புரட்சி, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் உண்மையாகவே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஆட்சிகள் மாறும்போது மாற்றப்படுகிறதென்று நம்புகிறீர்களா? அப்படி மாறுகிறதென்றால், பி.ஜே. பியின் ஆட்சியினால் எமக்குக் கிடைத்திருக்கும் நண்மைகள் பற்றிச் சொல்லுங்களேன்? உங்களின்மாநிலமே அவர்களை முற்றாக நிராகரித்திருக்கும்போது, நீங்கள் ஆட்சிமாற்றம் எமக்கு நண்மையாக இருக்கும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.

தோழர்..நான் சிக்ஸ் அடித்தாக நளினமாக குறிப்பிட்டேன் . பாராட்டுவதாக அல்ல.. 😊 முன்பும் எனது வலை பக்கத்தில் இருந்து யாழில் பதிந்து இருந்தேன்..(2009). ஆனால் இப்போது தேடினால் கிடைக்குது இல்லை..

"இந்தியாவின் தமிழின அழிப்பு என்ற உள்ளூரவு கொள்கையே-வெளியுறவு கொள்கையாகும்"

https://siruthai.wordpress.com/2008/12/25/இந்தியாவின்-தமிழின-அழிப்/

டிஸ்கி:

ஆனால் 10 வருடத்திற்கு முன்பு எனக்குள் இருந்த வேகம், வெறி இப்போது மிஸ்சிங்.. வயது மற்றும் பக்குவமாக இருக்கலாம்.. 😢

 

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

அரசுகள் மாறுவதால் ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை மாறுவதில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. உங்களது கருத்தில் அன்றிருந்தது ஒரு ஆட்சி, இன்றிருப்பது வேறு ஆட்சி என்று எழுதியுள்ளீர்கள். 

எனது கருத்தில் அன்றிருந்தது ஒரு ஆட்சி இன்றிருப்பது வேறு ஆட்சி என நான் எழுதியிருக்கவில்லை. 

இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைத்தது ராஜீவ் காந்தி, உச்ச நீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பு வழங்கிய போது அவர் உயிருடன் இல்லை, ஆட்சியாளராகவும் இல்லை, அந்நேரம் மன்மோகன் சிங் ஆட்சியாளராக இருந்தார். அதை தான் முன்னைய ஆட்சியாளர் வேறு பின்னைய ஆட்சியாளர் வேறு என எழுதினேன். (இருவருமே காங்கிரஸ் தான்).

நீங்கள் சரியாக எனது கருத்தை உள்வாங்காததற்கு நான் பொறுப்பல்ல.

ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டு வந்ததே இலங்கை பிரச்சினைக்குள் இஸ்ரேல் புகுந்து விட்டதால்.

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

உங்களுக்கு பதிலெழுதாது நான் விடுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான், நீங்கள் எனது கருத்தை விமர்சித்து முன்வைக்கும் எந்தக் கருத்துக்கும் தவறாமல் வந்து சலாம் போடவும், பச்சை குத்தவும் சிலர் இருப்பது. பெரும்பாலும், தனிப்பட்ட ரீதியிலே அவர்கள் இப்படிச் செய்வது தெரிகிறது. அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. 

ஒருமுறை, நான் எழுதியதற்கு நீங்கள் விமர்சனம் முன்வைத்து, சிலர் வந்து சலாம் போட்டு, அதற்கு நான் கருத்தெழுதி, மட்டுருத்துனர் வந்து அனைத்துக் கருத்துக்களையும் நீக்கும்படியாகிவிட்டது. அப்படியொன்று தேவையில்லை. ஆகவேதான், உங்கள் கருத்திற்குப் பதிலளிப்பதில்லை என்று இருக்கிறேன். 

உங்கள் கருத்தை விமர்சிக்கும் எனது கருத்துக்கு யாரும் கண்டபடி வந்து சலாம் போடுவதில்லை. எனது கருத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே like போடுவதுண்டு. உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எனக்கு பதிலளிக்காமல் விடுவதானால் அது உங்கள் விருப்பம். 😀

தவிர இத்திரியில் நீங்கள் தான் எனது கருத்தை தவறாக விளங்கிக்கொண்டீர்கள். அதற்கு விளக்கம் தந்தால் அதுவும் உங்கள் கருத்தை நான் விமர்சிக்கிறேன் என்று அர்த்தமா? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா,

நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. சிலசமயம் பொது வெளியில் இல்லாத சில விடயங்கள் உங்களுக்கு தெரிந்து - அதனால் நீங்கள் இந்த மதிப்பீட்டுக்கு வந்திருக்கலாம். நீங்கள் சொல்வது போல இப்போதைய பிஜேபி அரசு எம்மீதான அணுகுமுறையை மாற்றியுள்ளது என்றால் நம் எல்லாருக்கும் மகிழ்சியே.

ஆனால் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் எம்மீதான அணுகுமுறையில் கிஞ்சித்தும் மாற்றம் இல்லை என்பதே, சாதாரண செய்திகளை, நடப்புகளை வைத்து அனுமானிக்கும் என்போன்றோரின் முடிவாக இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

உங்களிடம் ஒரு கேள்வி, எதற்காக இந்தியாவை, கிந்தியா என்று அழைக்கிறீர்கள்? இழிவுபடுத்தவா அல்லது இந்தியா ஒரு இந்துத்துவ நாடு இல்லை என்பதை பறைசாற்றவா? சும்மா, அறிந்துகொள்வதற்காகத் தான் கேட்கிறேன்

பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சி கைமாறிய போது, கிந்தியர்களிடமே ஆட்சி வந்தது. அதை உண்மையான இந்தியாவாக, எல்லோரும் ஏற்றுக் கொண்ட இந்தியாவாக மாற்றியிருக்க முடியும், அவர்கள் அதை ஹிந்தி மொழி திணிப்பின் மூலம் வரலாறு தந்த வாய்ப்பை அழித்து விட்டார்கள்.

 

4 hours ago, ரஞ்சித் said:

அடுத்தாக, பி.ஜே. பியின் கிந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரஸின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் பி.ஜே பியின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அப்படியிருந்தால், அது எவ்வகையில் எமக்கு சாதகமானதாக இருக்கப்போகிறது? 

இப்போதைய நிலையில். தமிழீழம் தவிர, வேறுபாடு இருப்பதாகவே புலப்படுகிறது.

ஒன்று, பிஜேபி இன் மிகவும் மூத்த தலைமைத்துவம்  அண்மையில், அதிகாரத் தோரணையில் ராஜபக்சேவை அறிவுறுத்தியது.

இது முக்கியமானது, இந்துக்களும் (அதாவது தமிழர்களும்), பௌத்தர்களுமே (சிங்களவர்களுமே) இலங்கை தீவின் பூர்விக குடிகள் என்பதன் மூலம் , இவ்விரு குழுவினரே ஆட்சி, மற்றும் பூர்விக உரிமையான நிலம் ,வளம் போன்றவைக்கு உரித்துடையவர்கள்.

நவீன தேசம், தேச-அரசு, தேச-அரசின் இறைமை, காப்பாளர்கள் என்பவை பூர்விக இனம் என்பதில் இருந்தே பிறக்கிறது. பூர்விக இனத்திற்கே அவ்வுரிமைகள் உண்டு.    சிங்களம் சொல்லும் சிறுபான்மை தமிழர் என்பதன் அடிப்படை, ஓர் தேச-அரசு என்பதில், தமிழர்கள் இலங்கை தீவின் பூர்விக குடிகள் அல்ல (minority) என்பதே.  சிறுபான்மையினர் ஓர் உரிமையையும் கோர முடியாது.  ஒற்றையாட்சி, சிங்களபௌத்த நாடு என்பவை பிரதிபலிப்புகள் ஆகும்.     

இது (பூர்விக குடிகள்), அன்றைய காங்கிரஸ் (ராஜீவ்) நிலைப்பாட்டிழும் (மரபு வழி தாயகம்) மிகவும் வலுவானது. தமிழீழம் என்பதன் அடித்தளம் என்பது ஈழத்தமிழர் பூர்விக குடிகள் என்பதில் இருந்தே பிறக்கிறது , தமிழீழம் யதார்த்தத்தில் சாத்தியமானாதா என்பதற்கு அப்பால்.   

அந்த நிலைப்படடை கூட, காங்கிரஸ் தனது கொள்கைகளை, கொள்கைவகுப்பாளரின் (மலையாளிகள், தமிழ் எதிர் பிராமணர்கள்) கையில் முற்றாக விட்டதினால், தளர்த்தி விட்டது.

ஓர் வெளியுறத்துறை செயலர், அமைச்சரும் அல்ல (சிவ் சங்கர் மேனன்), கொள்கைகளை தீர்மானித்து, ஈழத்தமிழர் வந்தேறு குடிகள் என்றது, புலிகளுடனான பகையில், காங்கிரஸ் ஈழத்தமிழரின் பூர்விகத்தையே இல்லாதாக்கியது.

இது மட்டுமல்ல, வடக்கு கிழக்கை பிரித்தபோது வாயே திறக்காத காங்கிரஸ் அரசாங்கம், 2010-2011 இல் சிவ சங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் கூட்டம், சக்கடத்தாராக ராஜபக்சே உடன் தீர்வு பற்றி வடக்கை மட்டுப்படுத்தியே இருந்தது. ராஜபக்சே இந்த மலையாளிகளை லோட்டி கட்டி அனுப்பியது வேறு விடயம்.  

இது மட்டுமல்ல, தொடர்ந்து வந்த, காங்கிரஸ் நியமித்த,  (மலையாள) வெளியுறவுத் துறை செயலர்கள், ஈழத்தமிழரை சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தினர். இதன் அர்த்தம், சிங்களம் தரும் தீர்வை, அப்படி தராவிட்டாலும், தமிழர்களுக்கு கேட்கும் உரிமை கூட இல்லை என்பது.    

இதில் பிஜேபி இன் பகிரங்கமான நிலைப்பாடு, வடக்கு, கிழக்கு இணைப்பை தாம் வற்புறுத்த  முடியாது, ஆனால் தமிழர்கள் அதை வற்புறுத்தினால், அதை எதிர்க்கமாட்டோம்.      
 
ஆகவே, ஓர் பூர்விக குடிகளுக்கு எந்தெந்த உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமைகள் ஏனைய பூர்விக குடிக்கும் உண்டு என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது, பிஜேபி இந்த சிந்தனை வாதம்.

கிழக்கை பொறுத்தவையில், முஸ்லிம்கள் பூர்விகம் இல்லை (பிஜேபி ஏற்றது), சிங்களத்தின் பெரும் பகுதி வதிவிடப் பூர்விகம்  1948 பின், எனவே தமிழர்களே  கிழக்கின் இணைப்பை தீர்மானிக்கலாம்.    

இந்த உரிமைகளுக்கு, யதார்த்தத்தில் எப்படி உருவம் அளிப்பது என்பதே பிரச்னையும், தீர்வும்  ஆகும்.

மேலும், பிஜேபி துணிந்து முடிவுகளை எடுத்து செயற்ப்படுத்தும் திறன் உள்ளது, டொக்லாம், காஷ்மீர் என்பது எடுத்து  காட்டாகும். இவற்றை காங்கிரஸ், டோக்லாமில் கூட, pussyfooting ஆகவே இழுத்தடித்து, சில விட்டுக்கொடுக்களையும் செய்தது.

இதில் சந்தேகம் இல்லாமல் இல்லை. அதாவது, ஹிந்தியா தமிழர்களை பகடையாக பயன்படுத்த எத்தனிக்கிறதா என்று.

மற்றது, இது  பிஜேபி இந்த நிலைப்பாடா, அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பது.

இப்படியான மாற்றம் படிப்பு படியானதாக இருந்தாலும், அது வெளி வருவதற்கு, சமீபத்தில் நடந்த இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல், சிங்களத்தின் மீது ஹிந்தியா வைத்திருந்த இறுதி மரியாதைக்குரிய நம்பிக்கையையும் இல்லதாகியுள்ளது என்றே புலப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.ஜே. பி யின் ஈழத்தமிழர் தொடர்பான இந்த புதிய நிலைப்பாடு எப்போது யாரால் யாருக்குத் தெரிவிக்கப்பட்டது? தமிழ்க் கூட்டமைப்பிடமா? 

இலங்கையின் பூர்வீக குடிகள் பற்றிய கிந்தியாவின் புதிய நிலைப்பாடு எப்போது வெளியிடப்பட்டது ? வடக்குக் கிழக்கு இணைப்பினை வற்புறுத்த முடியாது என்று எப்போது , யாரிடம் சொல்லப்பட்டது? இந்தியாவின் அனுசரணையில்லாமல் வடக்குக் கிழக்கை இணையுங்கள் என்று தமிழர்கள் சிங்களம் மீது அழுத்தம் கொடுப்பது எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நேரத்தில்.. விபு வேலை மிணக்கட்டு.. இப்படி ஆளாளுக்கு எடுத்து ரகசியம் கதைச்சிட்டுப் போயிருக்கு.. சொந்த மக்களுக்கு ஒரு ரகசியமும் சொல்லேல்லையே. 

எல்லாரும் இப்ப தங்க தங்க பிழைப்புக்கு.. மக்களை ஏமாற்ற.. விபு வை நல்லா பயன்படுத்தினம் என்பது மட்டும் விளங்குகிறது.

எங்கள் சொந்தங்களின் தியாகங்கள்.. மலினப்படுவது தான் வேதனையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா,

ரஞ்சித்தின் கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.

பிஜேபியின் தலைமை என்றால் அது மோடி அல்லது அமித் ஷா. சங் பரிவார் என்றால் மோகன் பகவத்.

யாரும் எங்கேயும் தமிழர்கள் பூர்வ குடிகள் என்ற கொள்கையை கொடுக்கவில்லை. 

அல்லது நான் தான் சரியாக கவனிக்கவில்லையையா?

அல்லது இது மோடி- மகிந்தவுக்கு (இலங்கை உயர் பீடத்துக்கு) மட்டும் சொன்ன செய்தியா?

எனக்கென்னமோ முன்னர்

1. அமிர் டெல்லி போய் இந்திராவோட கதைச்சிட்டார், அடுத்த பொங்கலுக்கு முன் இந்தியா தலையிட்டு வங்கம் போல எமக்கும் நாடு பிடிச்சுத் தரும்

2. நாபா ரஜீவ் கதைச்சிட்டினம், மாகாண சபை அடுத்த வருடமே மாகாண அரசாக அறிவிக்கப்படும்

3. புலிகளை அழிச்சோன 13++ தான், தட்டை ரெடியா வையுங்கோ

4. சம்பந்தரும் சுமந்திரனும் டெல்லியில் போய் எல்லாம் கதைச்சாச்சு, 2016 க்கு முதல் கெளரவமான தீர்வுதான். 

இந்த வரிசையின் 5 ம் அத்தியாயமாகவே நீங்கள் சொல்லும் விடயம் படுகிறது.

உங்களை குறை சொல்லவில்லை, ஆனால் இது விடயத்தில் நீங்கள் நேரடியாக சம்பந்த பட வாய்பில்லை என்றே நினகிறேன். அப்படி சம்பந்த பட்டிருந்தால்,

1. இது பரம ரகசியாமாகின் - நீங்கள் அதை யாழில் எழுத மாட்டீர்கள்

2. இது ரகசியம் இல்லை எனில்- இது எப்போதோ செய்தியாகி இருக்கும்.

ஆகவே நீங்களும் வேறொருவர் கூறிய hearsay தகவலைத்தான் கூறுகிறீர்கள் என நினைக்கிரேன். 

இப்படியான தகவல்கள் திரிபடைய வாய்ப்புகள் அதிகம். மோடி மகிந்தவிடம், “கறுப்பு கறுப்பாய் சத்தி எடுத்தேன்” என கூறியது உங்கள் காதை அடையும் போது “காகம் காகமாக சத்தி எடுத்தேன்” என்று மாறியும் இருக்கலாம் (Chinese whispers). 

பிகு: பூர்வ குடிகளுக்குதான் ஆட்சியுரிமை என்பது உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை. அப்படி என்றால் அவுசில் அபர்ஜினியும், நியுஸிலாந்தில் மயோரியும், அமரிக்க, கனடாவில் செவ்விந்தியனும் அல்லவா ஆட்சி அமைக்க வேண்டும்?

இதற்கும் மேல் யார் எங்கே பூர்வீக குடி என்பதே இடியப்பச் சிக்கல். முஸ்லீம்கள்  எப்படி கைபர் வழியாக வந்தார்களோ அதே போல் வந்த ஆரியக் கூட்டம்தான் வட இந்திய இந்துக்களும்.

இப்போ பாகிஸ்தானில் முஸ்லீமாக இருப்போரும், இந்தியாவில் வடநாட்டு இந்துவாக இருப்போரும், இருவருமே, இஸ்லாம் உருவாக முன்னம், பேர்சியா, ஆப்கானிஸ்தான், மொங்கோகியாவில் இருந்து வந்த வந்தேறிகள். அப்படி பார்த்தால் ஹிந்திகாரனுக்கே இந்தியாவை ஆளும் உரிமை இல்லை என்றாகிவிடுமே?

இலங்கை முஸ்லீம்களுக்கும், இலங்கை (தமிழ்/சிங்கள) கிறீஸ்தவருக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எல்லாரும் இந்து/பெளத்தனாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அப்போ இலங்கை கிறீஸ்தவருக்கும் பூர்வீக குடிகள் இல்லையா?

இப்படியான தீவிர வலதுசாரி, நடைமுறைக்கொவ்வா (ஹிட்லரின் தூய ஆரிய இனக் கொள்கை போல) கொள்கைகளை சங்பரிவாரும் மோடியும் கைக்கொள்ளக்கூடும் என்பது மறுப்பதற்கில்லை. அப்படி நடந்தால் சந்தோசமே. ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை.

சுய நிர்ணய உரிமை என்பது ஒன்றில், தேசியத்தின் அடிப்படையில் அல்லது ஒரு பிராந்தியத்தில் வாழும் மக்களின் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதே, இன்று வரை நடைமுறை.

 

Link to comment
Share on other sites

On 8/27/2019 at 4:14 PM, Kadancha said:

மோடி, சொறி சிங்களத்துக்கு ஏறத்தாழ கட்டளையிட்டது, 13 இற்கு மேல் செல்லும் படி.

மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்ற போதும் 13 இற்கு அப்பால் செல்லுமாறு தான் சொன்னவர் என்று செய்தி வந்தது. இப்ப வரைக்கும் ஏதும் மாற்றம் இல்லை. 😀

மோடி உண்மையாகவே அப்படி சொன்னாரா அல்லது அப்படி சொன்னதாக ஊடகத்துக்கு சும்மா அறிக்கை விட்டாரா என்பதும் கேள்விக்குறி.

மோடி சொல்லி இலங்கை அரசு கேட்குமோ என்பது அடுத்த பிரச்சினை. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரஞ்சித் said:

பி.ஜே. பி யின் ஈழத்தமிழர் தொடர்பான இந்த புதிய நிலைப்பாடு எப்போது யாரால் யாருக்குத் தெரிவிக்கப்பட்டது? தமிழ்க் கூட்டமைப்பிடமா? 

இலங்கையின் பூர்வீக குடிகள் பற்றிய கிந்தியாவின் புதிய நிலைப்பாடு எப்போது வெளியிடப்பட்டது ? வடக்குக் கிழக்கு இணைப்பினை வற்புறுத்த முடியாது என்று எப்போது , யாரிடம் சொல்லப்பட்டது? இந்தியாவின் அனுசரணையில்லாமல் வடக்குக் கிழக்கை இணையுங்கள் என்று தமிழர்கள் சிங்களம் மீது அழுத்தம் கொடுப்பது எப்படி ?

வ‌ணக்க‌ம் அண்ணா , மோடியின் அர‌சும் ச‌ரி காங்ர‌ஸ்சும் ச‌ரி , சிங்க‌ள‌வ‌னுக்கு எப்ப‌வும் ஆமாம் போட்டு , பின்னால் க‌ழுவியும் விட‌க் கூடிய‌வை , க‌ட‌ஞ்சா என்ற‌ உற‌வு எழுதுவ‌தில் ப‌ல‌ருக்கு கொஞ்ச‌மும் ந‌ம்ப‌க‌ த‌ன்மை இல்லை அந்த‌ உற‌வு எழுதுவ‌தை என் மன‌சும் ந‌ம்ப‌ ம‌றுக்குது /

கிந்தியாவை ம‌ண்டியிட‌ வைக்க‌ எவ‌ள‌வோ வ‌ழி இருக்கு அண்ணா , அத‌ பொது வெளியில் எழுதினா யாழ் உற‌வுக‌ள் சொல்லுவின‌ம் த‌ம்பி இப்ப‌டியான‌ விடைய‌ங்க‌ளை பொது வெளியில் எழுத‌ வேண்டாம் என்று /


நூற்றுக்கு 85விழுக்காடு த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் விருப்ப‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் த‌மிழீழ‌ம் என்ற‌ த‌னி நாடு அடைஞ்சு அவ‌ர்க‌ள் த‌னியாக‌ வாழ்வ‌தையே அவ‌ர்க‌ள் விரும்புகிறார்க‌ள் ,

பொது வாக்கு எடுப்பு ந‌ட‌த்தினாலும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் உண்மை நிலையை அறிய‌லாம் அவ‌ர்க‌ளின் த‌மிழீழ‌ நிலை பாட்டை ப‌ற்றி  ,
2013ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியிலும் ப‌ல‌ மாற்ற‌ம் வ‌ந்து விட்ட‌து  / 

த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் இந்திய‌ம் என்ற‌
நாட்டை விட்டு வெளியில் வ‌ர‌ மாட்டார்க‌ள் ஒரு போதும் இது தான் உண்மையும் கூட‌ / 

த‌மிழீழ‌த்தில் நாங்க‌ள் நெருப்பை ப‌த்த‌ வைச்சா ,

த‌மிழ் நாட்டில் புர‌ட்சி தானாக‌வே வெடிக்கும் எங்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் , புல‌ம் பெய‌ர் நாடுக‌ளிலும் 2009ம் ஆண்டு எம் உற‌வுக‌ள் போராடின‌து போல் பெரும் போராட்ட‌ம் ப‌ண்ண‌னும் 

ஒரு நாள் சாக‌ தான் போகிறோம் 
போர‌ உயிர் பிற‌ந்த‌ நாட்டுக்காக‌ போக‌ட்டும் , த‌மிழீழ‌த்தில் நெருப்பை ப‌த்த‌ வைக்கும் போது ,  எங்க‌ளின் உயிர் கூட‌ பிற‌ந்த‌ நாட்டுக்காக‌ போகும் நிலை ஏற்ப‌டும் , 
உயிர் மேல‌ ஆசை இருந்தா 25ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் ,

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் எம‌க்குள் இருந்து தின‌மும் உருத்தி கொண்டு தான் இருக்கும் , அவ‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌னும் என்றால் எங்க‌ள் உட‌ம்பில் குண்டுக‌ள் பாய‌க் கூடும் /

எம் இன‌த்தில் 1000 துரோகிய‌ல் இருந்தா , த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் இருக்கின‌ம் /

 

Link to comment
Share on other sites

11 hours ago, Kadancha said:

பிஜேபி, ஈழத்தத்தமிழர்கள்ளுக்கு ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான வரலாற்றை மறைத்து, சிங்களத்தை திருப்தி படுத்தும் வெறுப்பு இல்லை.

மோடி 2015 இல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது “சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்” என்ற பாரதியின் வரிகளை சொல்லிக்காண்பித்தவர். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை எல்லாம் இந்த‌ நூற்றாண்டில் எடுப‌டாது , பெரும் ம‌க்க‌ள் புர‌ட்சி தான் சிற‌ந்த‌து /
அண்ண‌ன் திலீப‌ன் சொன்ன‌து போல‌ ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிக்க‌ட்டும் சுத‌ந்திர‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ர‌ட்டும் /

நான் எழுதும் ப‌திவுக‌ள் சில‌ருக்கு க‌ச‌க்க‌க் கூடும் , கார‌ன‌ம் இனி ச‌ண்டை வ‌ந்தா சொறில‌ங்காவுக்கு போக‌ முடியாது / ம‌கிந்தா போட்ட‌ ரோட்டுக்கை மாவீர‌ர்க‌ள் சிந்தின‌ இர‌த்த‌மும்  வேர்வையும் அதுக்கை  அட‌ங்கி இருக்கு , அத‌ ம‌ற‌ந்து அந்த‌ கொடுங்கோல‌ன் போட்ட‌ ரோட்டு ந‌ல்லா இருக்கு என்று வெக்க‌ம் இல்லாம‌ எம்ம‌வ‌ர் சில‌ர் சொல்லும் போது அட‌க்க‌ முடியாத‌ கோவ‌மும் சேர்ந்து வ‌ருது 

ப‌ல‌ நேர்மையான‌ கைக‌ள் ஒன்றாய் இணைந்தா எம் இல‌க்கை அடைய‌லாம் / 

எம‌க்கு ப‌ல‌ வித‌த்தில் உத‌வ‌ ப‌ல‌ர் இருக்கினம் , 2009ம் ஆண்டு ஆயுத‌த்தை மெள‌வுனிக்கிறோம் என்று எம‌து வ‌ன்னி த‌லைமை அறிவிச்ச‌ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பொறுமை காக்கிறார்க‌ள் 👏🙏

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

அகிம்சை எல்லாம் இந்த‌ நூற்றாண்டில் எடுப‌டாது , பெரும் ம‌க்க‌ள் புர‌ட்சி தான் சிற‌ந்த‌து /
அண்ண‌ன் திலீப‌ன் சொன்ன‌து போல‌ ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிக்க‌ட்டும் சுத‌ந்திர‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ர‌ட்டும் /

நான் எழுதும் ப‌திவுக‌ள் சில‌ருக்கு க‌ச‌க்க‌க் கூடும் , கார‌ன‌ம் இனி ச‌ண்டை வ‌ந்தா சொறில‌ங்காவுக்கு போக‌ முடியாது / ம‌கிந்தா போட்ட‌ ரோட்டுக்கை மாவீர‌ர்க‌ள் சிந்தின‌ இர‌த்த‌மும்  வேர்வையும் அதுக்கை  அட‌ங்கி இருக்கு , அத‌ ம‌ற‌ந்து அந்த‌ கொடுங்கோல‌ன் போட்ட‌ ரோட்டு ந‌ல்லா இருக்கு என்று வெக்க‌ம் இல்லாம‌ எம்ம‌வ‌ர் சில‌ர் சொல்லும் போது அட‌க்க‌ முடியாத‌ கோவ‌மும் சேர்ந்து வ‌ருது 

ப‌ல‌ நேர்மையான‌ கைக‌ள் ஒன்றாய் இணைந்தா எம் இல‌க்கை அடைய‌லாம் / 

எம‌க்கு ப‌ல‌ வித‌த்தில் உத‌வ‌ ப‌ல‌ர் இருக்கினம் , 2009ம் ஆண்டு ஆயுத‌த்தை மெள‌வுனிக்கிறோம் என்று எம‌து வ‌ன்னி த‌லைமை அறிவிச்ச‌ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பொறுமை காக்கிறார்க‌ள் 👏🙏

மக்கள் புரட்சி அல்லது ஆயுதப்போராட்டம் இப்பொழுது இலங்கையில் சாத்தியமில்லை. அப்படி ஏதும் செய்ய வெளிக்கிட்டால் எஞ்சியுள்ள தமிழர்களையும் இலங்கை அரசு கொன்று குவிப்பதற்கு தான் வழிவகுக்கும்.

முன்னாள் போராளிகள் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ள போது இப்படி கதைப்பதும் நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

பி.ஜே. பி யின் ஈழத்தமிழர் தொடர்பான இந்த புதிய நிலைப்பாடு எப்போது யாரால் யாருக்குத் தெரிவிக்கப்பட்டது? தமிழ்க் கூட்டமைப்பிடமா? 

 

2 hours ago, goshan_che said:

ரஞ்சித்தின் கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.

 

பிஜேபி அறிவுறுத்தலை நன் இங்கு முன்பு எழுதிய போது, ஒரு கேள்வியும் இல்லை என்பதால் பலரும் அறிந்துள்ளதாகவே நான் இது வரையில் எண்ணி இருந்தேன்.

ஆகவே, இது வாய் வழியாகவே வந்திருக்க வேண்டும். ஆயினும், நான் அறிந்த இரு, வேறுபட்ட, ஒன்றொக்கு ஒன்று தொடர்பில்லாத, நம்பகத் தன்மையுள்ள தொடர்புகள் மூலமே அறிந்தேன், heresay ஆக இல்லை.

ஆயினும், நேரடியாக வார்த்தைகளை அறியாததால், இந்த நிலையின் வலுவை (vehemence) சொல்ல முடியாது.

பிஜேபி நீக்கிய 370 ஐ மையமாக வைத்து ராஜபக்சே எவ்வாறு தமிழர்களை ஓரம் கட்டலாம் என்று தம்பட்டம் அடித்த கையுடனே, ராஜபக்சே நேரடியாக அறிவுறுத்தப்பட்டதாகவே அறிந்தேன்.

 

2 hours ago, ரஞ்சித் said:

வடக்குக் கிழக்கு இணைப்பினை வற்புறுத்த முடியாது என்று எப்போது , யாரிடம் சொல்லப்பட்டது?

http://www.newindianexpress.com/world/2017/feb/20/india-will-not-press-for-merger-of-north-east-sri-lankan-provinces-jaishankar-1572830--1.html

 

3 hours ago, ரஞ்சித் said:

இந்தியாவின் அனுசரணையில்லாமல் வடக்குக் கிழக்கை இணையுங்கள் என்று தமிழர்கள் சிங்களம் மீது அழுத்தம் கொடுப்பது எப்படி ?

 

இதில் எமது பேரம் பேசுதலும், கிழக்கில் சில (சிங்கள) பகுதிகளை விட்டுக்கொடுத்தழும் அடங்கும். பின்பு விலாவாரியாக எழுதுகிறேன்.

பூர்விகம் - indigenous

2 hours ago, goshan_che said:

பிகு: பூர்வ குடிகளுக்குதான் ஆட்சியுரிமை என்பது உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை. அப்படி என்றால் அவுசில் அபர்ஜினியும், நியுஸிலாந்தில் மயோரியும், அமரிக்க, கனடாவில் செவ்விந்தியனும் அல்லவா ஆட்சி அமைக்க வேண்டும்?

இதற்கும் மேல் யார் எங்கே பூர்வீக குடி என்பதே இடியப்பச் சிக்கல். முஸ்லீம்கள்  எப்படி கைபர் வழியாக வந்தார்களோ அதே போல் வந்த ஆரியக் கூட்டம்தான் வட இந்திய இந்துக்களும்.

இப்போ பாகிஸ்தானில் முஸ்லீமாக இருப்போரும், இந்தியாவில் வடநாட்டு இந்துவாக இருப்போரும், இருவருமே, இஸ்லாம் உருவாக முன்னம், பேர்சியா, ஆப்கானிஸ்தான், மொங்கோகியாவில் இருந்து வந்த வந்தேறிகள். அப்படி பார்த்தால் ஹிந்திகாரனுக்கே இந்தியாவை ஆளும் உரிமை இல்லை என்றாகிவிடுமே?

இலங்கை முஸ்லீம்களுக்கும், இலங்கை (தமிழ்/சிங்கள) கிறீஸ்தவருக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எல்லாரும் இந்து/பெளத்தனாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அப்போ இலங்கை கிறீஸ்தவருக்கும் பூர்வீக குடிகள் இல்லையா?

இந்த சிக்கல்களை தவிற்பதத்திற்கே, பிஜேபி மதத்தை வைத்து சொல்லியிருக்கிறது. அதாவது சைவ (இந்து) மதமே இலங்கையின் தொன்மையான மதம், அதில் இருந்தே பௌத்தத்திற்கு மாறினார் என்றும். அதனால், சைவத்தில் அல்லது பௌத்தத்தில் இருந்தோ கிறிஸ்தவ மதம் மாறியோர் எல்லோருமே சைவ இந்துக்கள். அடிப்படியில் எல்லோருமே, சைவ இந்துக்கள்.

தற்போதையா நிலையில், தமிழர்கள் சைவ இந்துக்கள், கிறிஸ்தவர்கள் , சிங்களவர்கள் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள்.

முஸ்லிம்களை, பிஜேபி indigenous ஆக எடுக்கவில்லை. அது, உண்மையும் கூட, முஸ்லிம்களின் அரபி வழித்தோன்றல் என்ற கட்டுக்கதையை நீக்கி விட்டுப் பார்த்தாலும்.

இன்னமொன்று, இதை பிஜேபி சொல்லவில்லை, இலங்கைத்தீவில் உள்ள மூன்று வகை தமிழ் பேசும் மக்களில், வடக்கு கிழக்கு தமிழர்களே சிங்களத்தின்  இறைமையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. தமது இறைமைக்காக இன்று வரை போராடி வருகிறார்கள்.   

2 hours ago, Lara said:

மோடி 2015 இல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது “சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்” என்ற பாரதியின் வரிகளை சொல்லிக்காண்பித்தவர்

இதில் மறைக்கப்பட்டதாகவோ, திரிக்கப்பட்டதாகவோ  தென்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

காஷ்மீர் தொடர்பாக பி, ஜே பியின் அண்மைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரித்திருப்பதைப் பார்த்தேன். அதற்கான காரணம் வெறுமனே ஹிந்து - முஸ்லீம் பிரச்சினையில்லை என்றும், பாக்கிஸ்த்தான் - இந்தியா பிணக்கும் இல்லையென்று நான் எடுத்துக்கொள்ளலாமா? இவை இரண்டுமில்லையென்றால், நீங்கள் கிந்தியாவின் புதிய காஷ்மீர் நிலைப்பாட்டை ஆதரிக்கக் காரணம் என்ன?

நீங்கள், காஷ்மீர் பிரச்சனையை தனித்த கோணத்திலேயே நோக்குகிறீர்கள்.

வேறு ஓர் திரியில் காஸ்மீர் இன்  வளரலறு பற்றி சுருக்கமாக எழுதிவிட்டேன்.

பிஜேபி, வரலாற்றில் தெரிந்தோ, தெரியாமலோ உருவாகிய தவறை, பின்னோக்கி செல்லாமல், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்றின் பாதையை சரி செய்திருக்கிறது.

அவரவர் பிரதேசங்களை, அவரவர் நிர்வாகம் செய்யும் நிலைமைக்கு வழிகோலி இருக்கிறது.

முழு காஸ்மீரின் status ஐ முதலில் துவம்சம் செய்தது பாகிஸ்தான். ஆப்கான் பஸ்தூன்  ஆயுதக் கும்பல்களை அனுப்பியது தொடக்கம், சீனாவிடம் Aksai Chin ஐ தாரை வார்த்து (சீனா 1962 ஆக்கிரமித்தது உண்மை, ஆனால் அதை நிரந்தரமாக, சட்ட அடிப்படையில் சீனாவிற்கு எழுதி கொடுத்தது), பல்டிஸ்டானை பிரித்தெடுத்தது ஈறாக. பாகிஸ்தான், தனது பஞ்சாபி முஸ்லிம்களை குடியேற்றி, பாகிஸ்தான் காஷ்மீரின் குடிப்பரம்பலையும் மாற்றியுள்ளது.

இவை ஒன்றுக்குமே, கிந்தியா தன்னுடன் வெளியகமாக இணைந்த காஷ்மீரின் பகுதிகளை, அதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றியே வந்துள்ளது.

காஸ்மீர், 370 நீக்கம் மூல உள்ளகமானபோது கூட, அதன் கடந்த வரலாற்றை மாற்ற முனையவில்லை.

மாறாக, ஜம்மு-காஸ்மீர்  ஐ ஓர் நிர்வாக பிரதேசமாகவும், லாடகை வேறு ஒரு நிர்வாக பிரதேசமாகவும், அந்தந்த பிரதேச மக்களையும், விருப்புகளையும் பிரதிபலிக்கவும், தனித்துவமான மக்கள் தொகுதி அதனைல இருந்து வேறுபட்ட மற்றும் தொடர்பற்ற மக்களின் தயவில், நிர்வாகத்தில் இருக்காமல், தமது தனித்துவம், கலாசாரம், பொருளதரம் போன்றவையை அவர்களே நிர்வகிக்கவும் வழிகோலியிருக்கிறது.

காஸ்மீரி முஸ்லிம்கள், தாம் பெரும்பான்மை என்பதன் அடிப்படையில், லடாக்கை தமது பிரதேசமாக உரிமை கோருவதும, நிர்வாக உரிமையை அனுபவிப்பதும், லடாக்கின் மக்கள் கையில் அளிக்கப்பட்டத்தின் மூலம் , வரலாற்றுப் பாதை திருத்தப்பட்டுள்ளது.

இது அந்தப் பிரச்னைகானா நியாயம்.

இந்த நியாயம், கொள்கைகள் பெருமளவில் எம்முடைய பிரச்சனைக்கும் பொருந்தி  வரும், எமது பிரச்சனையின் தனித்துவ குணாதிசயங்களோடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்ச்சா,

முன்பும் பல தடவை நாம் இப்படி பல பொய்யானவிடிவுகளை ( False dawn) கண்டவர்கள். எனவே எந்த கதையையும் நாமும் நம் மக்களும் ஏற்றுக் கொள்ளும் முன்பு தீர அலச வேண்டியுளது. மேலும் பிஜேபியின் இலங்கை தமிழர் நிலையில் இப்படி ஒரு அனுகூல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இப்படி ஒரு தகவலை கசிய விடுவதில் பின்வரும் மறை காரணங்களும் இருக்க முடியும்.

1. பிஜேபி மகிந்தவுக்கு சொல்லிவிட்டது, அழுத்தமாக கூறி மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வந்ததும், மோடி எமக்கு ஒரு தீர்வை பெற்று தரும் வெண்ணை திரண்டுவிட்டது, இப்போது தாளியை உடைக்காமல் தமிழர் எல்லாரும் கோத்த-அபவயுக்கு வாக்களிக்க வேண்டும். இப்படி ஒரு நூதன வாக்குத் திருட்டின் அங்கமாக இந்த கதை இருக்கக்கூடும். கூடவே, ஏன் எதிர்கட்சியில் இருக்கும் மகிந்தவுக்கு மோடி இதை சொன்னார்? இப்பவே மகிந்த, ரணில் இருவரையும் கூப்பிட்டு, இதுதான் ஸ்கெட்ச் இன்ன மாதிரி தமிழருக்கு இன்ன உரிமை கொடுப்போம் என இரு பகுதியும் இணங்குங்கள் என ஏன் கூறவில்லை? 

மேலும் ராஜபக்சக்கள் dark arts of politics இல் சூரர்கள். தவிபு விற்கே 2005 தேர்தலை பகிஸ்கரிக்க வைத்து “கடுக்காய்” கொடுத்தவர்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர்கள் பற்றி வரும் இப்படியான செய்திகளில் நாம் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.

2. பிஜேபி க்கு இலங்கை தமிழர்கள் மத்தியில் வெள்ளை அடிக்க வேண்டிய அவசியத்தேவை ஏதுமில்லை. இலங்கை தமிழர் வாக்கில் பிஜேபி தங்கி இல்லை. ஆனால் எவ்வளவு செய்தும் தமிழக்கதில் காலூன்ற முடியாத நிலையில் - இந்த மாதிரி ஒரு நகர்வை பிஜேபி செய்கிறது என்பதாக காட்டி, தமிழகத்தில் தமது வாக்கு வங்கியை கொஞ்சம் கூட்ட இப்படி ஒரு கதையை பாவிக்கக் கூடும்.

நீங்களே சொல்லியபடி இது நீங்கள் இரு வேறு தரப்புகளிடம் இருந்து நம்பகமாக அறிந்த செய்தி. ஆனால் இந்த தரப்புகளிடம் இந்த தகவல் நடுகை (plant) பண்ணப் பட்டிருக்கலாம் என்பதும் மறுப்பதற்கில்லை.

நீங்கள் இந்த செய்தியை முதன் முதலில் இங்கே பதிந்து சிலமாதங்கள் ஆகி விட்டன. ஆனால் இந்த செய்தி பற்றியோ, அல்லது இந்த திசையிலோ எடுக்கப்படும் நகர்வுகள் பற்றியோ செய்திகள் எதையும் காணோம்.

இது இவ்வாறிருக்க, எதேனும் நகர்வுகள் தென்படும்வரை இந்த செய்தியை இட்டு நாம் அதிகம் அலட்டிக் கொள்ளதேவையில்லை என்பதே என் அபிப்பிராயம்.

இந்தியாவின் பழைய நிலைப்பாட்டில் ஒரு இம்மியளவும் மாற்றம் இல்லை என்பதே இதுவரை அவதானத்துக்கு புலப்படுகிறது.

நாராயணனும் மேனனும் செய்த குளாறுபடிகளுக்கு எல்லாம் ஒரு அதிகாரியாக கூட இருந்து ஒத்தாசை செய்தவர், இன்றைய இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர். இவர் இலங்கையில் பணியாற்றிய பொழுது இந்தியாவின் இலங்கை சம்பந்தமாக 91 பிற்பட்ட கொள்கையையே பின்பற்றி வந்தவர்.

இந்த கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று ஒரு அறிக்கையேனும் புது டில்கிக்கு அனுப்பாதவர்.

சுப்ரமண்யசாமி இலங்கை தமிழருக்கு இப்போ உள்ள உரிமையே அதிகம் என்பவர்.

இவர்கள் எல்லாம் இருக்கும் போது பிஜேபி இலங்கை தமிழர் மீதான அணுகு முறையை மாற்றியுளது என்பது - அழகான ஆனால் நம்ப முடியாத கற்பனை. இதுவே என் நிலைப்பாடு.

எதிர்வரும் நாட்களில் நீங்கள் சொன்னது போல் நடந்தால் - சந்தோசமாக எந்தவறை ஏற்றுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட‌ஞ்சா /
இந்தியாவை ப‌ற்றியான‌ விவாத‌த்தில் இன்னொரு திரியில் நான் கேட்ட‌ கேள்விக்கு , உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ர‌ வில்லை , அந்த‌ கேள்விக்கே ப‌தில் அளிக்காம‌ மெள‌வுன‌மாய் இருந்து விட்டு , இந்த‌ திரியில் வ‌ந்து பெரிய‌ ப‌திவை எழுதுறீங்க‌ள் ஒன்றும் ந‌ம்பும் ப‌டியாய் இல்லை , 

எம் மூன்னோர்க‌ள் விட்ட‌ எவ‌ள‌வு பிழைகளால் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா இந்தியா என்று எழுதி எங்க‌ளின் நேர‌த்தை வீன் ஆக்கிறோம் ,

சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌லாம் / 

ஈழ‌ தேச‌த்தில் மீண்டும் குண்டு ச‌த்த‌ம் கேக்காம‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு விடிவு கால‌ம் பிற‌க்காது , இது தான் உண்மையும் கூட‌ , இந்த‌ 10 வ‌ருட‌ம் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி புல‌ம்பி கால‌த்தை ஓட்டி விட்டார்க‌ள் , இன்னும் ஒரு ப‌த்து வ‌ருட‌த்துக்கு இப்ப‌டியே ஆளாளுக்கு எழுதி புல‌ம்பிட்டு இருங்கோ அதுக்கு கிடையில் அடுத்த‌ ச‌ந்த‌திக்கு எம் போராட்ட‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாம‌ல் போய் விடும் , அதோட‌ எல்லாம் முடிவுக்கு வ‌ந்து , மாவீர‌ர்க‌ள் இர‌த்த‌ம் சிந்தின‌ இட‌ங்க‌ள் எல்லாம் சிங்க‌ள‌வ‌னின் இருப்பிட‌ங்க‌ள் வ‌ந்து விடும் ,

( இப்ப‌வும் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் அத‌ செய்தா சிங்க‌ள‌வ‌ன் இத‌ செய்வான் அத‌ செய்வான் என்று  கோழை த‌ன‌மாய் புல‌ம்புவ‌து த‌மிழ் இன‌த்துக்கே வெக்க‌க் கேடு , முடிஞ்சா மோது இல்லாட்டி ஓர‌மாய் நின்று வேடிக்கை பாரு , குமுறி எழுப‌வ‌ர்க‌ள் இத‌ தான் சொல்லுவார்க‌ள் 😉💪/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

கடஞ்ச்சா,

முன்பும் பல தடவை நாம் இப்படி பல பொய்யானவிடிவுகளை ( False dawn) கண்டவர்கள். எனவே எந்த கதையையும் நாமும் நம் மக்களும் ஏற்றுக் கொள்ளும் முன்பு தீர அலச வேண்டியுளது. மேலும் பிஜேபியின் இலங்கை தமிழர் நிலையில் இப்படி ஒரு அனுகூல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இப்படி ஒரு தகவலை கசிய விடுவதில் பின்வரும் மறை காரணங்களும் இருக்க முடியும்.

1. பிஜேபி மகிந்தவுக்கு சொல்லிவிட்டது, அழுத்தமாக கூறி மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வந்ததும், மோடி எமக்கு ஒரு தீர்வை பெற்று தரும் வெண்ணை திரண்டுவிட்டது, இப்போது தாளியை உடைக்காமல் தமிழர் எல்லாரும் கோத்த-அபவயுக்கு வாக்களிக்க வேண்டும். இப்படி ஒரு நூதன வாக்குத் திருட்டின் அங்கமாக இந்த கதை இருக்கக்கூடும். கூடவே, ஏன் எதிர்கட்சியில் இருக்கும் மகிந்தவுக்கு மோடி இதை சொன்னார்? இப்பவே மகிந்த, ரணில் இருவரையும் கூப்பிட்டு, இதுதான் ஸ்கெட்ச் இன்ன மாதிரி தமிழருக்கு இன்ன உரிமை கொடுப்போம் என இரு பகுதியும் இணங்குங்கள் என ஏன் கூறவில்லை? 

மேலும் ராஜபக்சக்கள் dark arts of politics இல் சூரர்கள். தவிபு விற்கே 2005 தேர்தலை பகிஸ்கரிக்க வைத்து “கடுக்காய்” கொடுத்தவர்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர்கள் பற்றி வரும் இப்படியான செய்திகளில் நாம் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.

2. பிஜேபி க்கு இலங்கை தமிழர்கள் மத்தியில் வெள்ளை அடிக்க வேண்டிய அவசியத்தேவை ஏதுமில்லை. இலங்கை தமிழர் வாக்கில் பிஜேபி தங்கி இல்லை. ஆனால் எவ்வளவு செய்தும் தமிழக்கதில் காலூன்ற முடியாத நிலையில் - இந்த மாதிரி ஒரு நகர்வை பிஜேபி செய்கிறது என்பதாக காட்டி, தமிழகத்தில் தமது வாக்கு வங்கியை கொஞ்சம் கூட்ட இப்படி ஒரு கதையை பாவிக்கக் கூடும்.

நீங்களே சொல்லியபடி இது நீங்கள் இரு வேறு தரப்புகளிடம் இருந்து நம்பகமாக அறிந்த செய்தி. ஆனால் இந்த தரப்புகளிடம் இந்த தகவல் நடுகை (plant) பண்ணப் பட்டிருக்கலாம் என்பதும் மறுப்பதற்கில்லை.

நீங்கள் இந்த செய்தியை முதன் முதலில் இங்கே பதிந்து சிலமாதங்கள் ஆகி விட்டன. ஆனால் இந்த செய்தி பற்றியோ, அல்லது இந்த திசையிலோ எடுக்கப்படும் நகர்வுகள் பற்றியோ செய்திகள் எதையும் காணோம்.

இது இவ்வாறிருக்க, எதேனும் நகர்வுகள் தென்படும்வரை இந்த செய்தியை இட்டு நாம் அதிகம் அலட்டிக் கொள்ளதேவையில்லை என்பதே என் அபிப்பிராயம்.

இந்தியாவின் பழைய நிலைப்பாட்டில் ஒரு இம்மியளவும் மாற்றம் இல்லை என்பதே இதுவரை அவதானத்துக்கு புலப்படுகிறது.

நாராயணனும் மேனனும் செய்த குளாறுபடிகளுக்கு எல்லாம் ஒரு அதிகாரியாக கூட இருந்து ஒத்தாசை செய்தவர், இன்றைய இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர். இவர் இலங்கையில் பணியாற்றிய பொழுது இந்தியாவின் இலங்கை சம்பந்தமாக 91 பிற்பட்ட கொள்கையையே பின்பற்றி வந்தவர்.

இந்த கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று ஒரு அறிக்கையேனும் புது டில்கிக்கு அனுப்பாதவர்.

சுப்ரமண்யசாமி இலங்கை தமிழருக்கு இப்போ உள்ள உரிமையே அதிகம் என்பவர்.

இவர்கள் எல்லாம் இருக்கும் போது பிஜேபி இலங்கை தமிழர் மீதான அணுகு முறையை மாற்றியுளது என்பது - அழகான ஆனால் நம்ப முடியாத கற்பனை. இதுவே என் நிலைப்பாடு.

எதிர்வரும் நாட்களில் நீங்கள் சொன்னது போல் நடந்தால் - சந்தோசமாக எந்தவறை ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் சொல்வது எதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆயினும், இன்னுமொரு கோணத்திலும் இது அணுகப்படவேண்டும்.

இந்த ராஜபக்சே ஐ ஆரத்தி தொனியில் அறிவுத்தப்பட்டது என்ற செய்தி வருவதத்திற்கு முன், காஷ்மீர் 370 இ நீக்கிய சில  நாட்களில், நான் கேள்விப்பட்டது, பிஜேபி எவ்வாறு காஷ்மீர் இல் ஹிந்து/முஸ்லீம், பௌத்தம்/முஸ்லீம் என்று terrritories ஐ உருவாக்கியதோ, அவ்வாறே இலங்கைத்தீவிலும் இரு union terrritories (இதில் uninon territories என்பது கிந்தியவி கீழா அல்லது இலங்கை தீவில் உள்ள அரசின் கீழா என்பது தெளிவில்லை) இருக்க வேண்டும் என்பதே பிஜேபி சிந்தனை வாதமாக இருக்கிறது என்று.    

இதை முன்பு நான் குறிப்பிட  மறந்து விட்டேன். உங்கள் பதிவிற்கு நன்றி, பல கோணங்களில், speculative என்றாலும், சிந்தனையை செலுத்தி எமக்குள்ள தெரிவுகளை அலசி ஆராய்வதற்கு.  

அதன் பின்பே,  அதிகாரத் தொனியில் ராஜபக்சக்கு பிஜேபி இன் அறிவுறுத்தல், அதுவும் ராஜபக்சே பிஜேபி 370 ஐ நீக்கியதை ஒத்த கொள்கை மூலம் எப்படி தமிழர்களை ஓரம் கட்டலாம் என்று ஆலோசனை செய்த கையுடன்,   370 ஐ  நீக்கியதன் வரலாற்று முக்கியத்துவத்தை, அப்படி செய்தது இலங்கை தீவில் பிஜேபி சிந்தனையில், இலங்கை தீவின் தொன்மையுள்ள இந்துக்களே பௌத்தர்களாக மாறினார், அதனால், அவ்விரு மக்களுக்கே தாயகம், தன்னாட்சி உரிமைகள் உள்ளது என்றும், இப்போதைய நிலையில் அவரவர் பிரதேசங்களில், இந்த உரிமைகள் அவர்களுக்கு உண்டு என்று.

இதை இங்கு சொல்வதற்கு காரணம், கிந்தியாவின் உணர்வு, இலங்கை தீவை பொறுத்தவரையில், ஏறத்தாழ 1987 நிலையை எதிர் கொண்டிருக்கிறது.   இதில் கதாநாயகர்கள் எல்லோருமே சார்ந்தவர்கள்.

முக்கியமாக,
சீனா ஏற்கனவே தளம் எடுத்திருக்கும் வேளையில்,
இஸ்லாமிய தீவிரவாதம் பாகிஸ்தான் ராணுவ  உளவு அமைப்பு அரவணைப்பில் இயங்கும் வேளையில்,
சொறி சிங்ககளமும்  இஸ்லாமிய தீவிரவாததை அரவணைத்து வளர்ந்துள்ளது  என்பதே கிந்தியா தற்போது அனுபவ அடிப்படையில் கண்டுபிடித்து இருக்கிறது.

சொறி சிங்களம் இதை எதிர்பார்க்கவில்லை, அதாவது கிந்தியா இஸ்லாமிய தீவிர வாதிகளினதும், அவர்களை ஆதரிக்கும் (இரு கட்சி) சிங்கள, முஸ்லீம் முக்கிய பதவி அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் பிரமுகர்களின்  பெயர் பட்டியல், முகவரியுடன் தன்னை அணுகும் என்று.

குறிப்பாக, தமிழ் பெயர் மற்றம் செய்யப்பட்ட முஸ்லிம்கள், அவர்கள் எவ்வாறு தமிழ் பெயரில் இலங்கை கடவு சீட்டு, அடையளா அட்டை, வங்கி கணக்கு போன்ற பல பின்தள வசதிகளை எவ்வாறு, தமிழ் நாட்டில் கூட,  பெற்றனர் என்பதை கிந்தியா கையும் களவுமாக கண்டறிந்து, சொறி சிங்களத்துக்கு வழங்க, சொறி சிங்கம் அதை ஒன்றுமே கண்டு கொள்ளவில்லை.   
 
இவற்றுக்கு மத்தியில், அமெரிக்கா SOFA  உடன்பாடும், அதன் இழுபறியும்.

இவையெல்லாம், கிந்தியா, தனது கொல்லைப்புறம் என்று கருதும் பகுதியில் நடப்பது, கிந்தியாவின் பாதுகாப்பும், அதற்குப்பட்ட இலங்கை தீவின் இறைமையை எவ்வாறு அணுகுவது என்பதை, ஓர் அச்சம் கலந்த உணர்வாகவே கிளப்பி விட்டு இருக்கிறது.

சென்ற வாரத்தில்,சொறி சிங்களம் சொல்கிறது இலங்கையில் முஸ்லீம் தீரவாதம் இல்லை என்று, சிங்கள கடற்படை சொல்கிறது முஸ்லீம் தீவிர வாதிகள் இலங்கையை தாண்டி தமிழ் நாடு போயிருக்க முடியாது என்று, ஹிந்தியை சொல்கிறது இலங்கை தீவில் இருந்தே முஸ்லீம் தீவிர வாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று.

எனவே தான், union territories என்பது, கிந்தியாவின் union territories ஆகுமோ என்று சிந்திக்கவேண்டியுள்ளது.

இதில், நாம், கிந்தியாவின்  pawns ஆ அல்லது hedge ஆ என்பதே மியாகப் பெரிய கேள்வி.

49 minutes ago, பையன்26 said:

க‌ட‌ஞ்சா /
இந்தியாவை ப‌ற்றியான‌ விவாத‌த்தில் இன்னொரு திரியில் நான் கேட்ட‌ கேள்விக்கு , உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ர‌ வில்லை , அந்த‌ கேள்விக்கே ப‌தில் அளிக்காம‌ மெள‌வுன‌மாய் இருந்து விட்டு

என்ன கேள்வி?

அந்த திரியை சொல்லுங்கள்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190829-170855.png
coin flip website

 

இந்த‌ திரி விவாத‌த்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவான பதிலுக்கு நன்றி கடஞ்சா,

2 யூனியன் பிரதேசம் என்றால்? வடக்கு (1), கிழக்கா (2). அல்லது இணைந்த வடக்கு-கிழக்கு(1), மற்றும் எஞ்சிய இலங்கையா (2)?

தெரிவு 1 - வடக்கு, கிழக்கு இலங்கைக்கு கீழ் தனித் தனி யூனியன் பகுதியாக வேண்டும் என்பதே இந்தியாவில் நிலைப்பாடு என்றால், அதுக்கும் இப்போ இருக்கும் மாகாண சபை (மாகாண அரசு அல்ல) ஒரு வித்தியாசம் ஏதுமில்லை.

இது ஒன்றும் இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை.

தெரிவு 2 - மாறாக மொத்த இலங்கையை 2 அல்லது 3 யூனியன் பிரதேசமாக்கியோ அல்லது, இலங்க்கையின் வடக்கு கிழக்கை மட்டும் இந்தியாவின் யூனியன் பகுதியாக்கி, இந்திய ஆளுகைக்குள் கொண்டுவருவதாயின் - அது ஒரு ஆக்கிரமிப்பு (invasion). இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் இது தலை கீழ் மாற்றமாக (paradigm shift) ஆக அமையும்.

இதை ஐநா பாதுகாப்பு கவின்சில் நிச்சயம் எதிர்க்கும். ரஸ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், யூகே - அத்தனை பேரினதும் இலங்கை மீதான சுய-நலனிற்கும் (interest in Sri Lanka). இந்தியா இப்படிச் செய்வது ஆபத்தாக முடியும்.

நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்:

தெரிவு 1 ஆயின் - இந்தியாவின் இலங்கை பற்றிய அணுகுமுறையில் ஒரு மாற்றமும் இல்லை.

தெரிவு 2 ஆயின் - மோடியால் கூட சாதிக்க முடியாத மிகப்பெரும் சவாலான, ஐநா பாதுகாப்பு சபை சட்டவிரோதம் என தீர்மானம் நிறைவேற்ற கூடிய ஒரு நிகழ்வாக இது அமையும். இது இந்தியாவின் ஜனநாயக முகத்திரை உலக அரங்கில் கிழிப்பதோடு, இந்தியாவை ஒரு தொடர் ராணுவ, ராஜதந்திர போருக்குள் தள்ளும்.

இஸ்ரேஸ், முதல், பாலஸ்தீனம், கியூபா, ரஸ்யா, ஜப்பான், பாகிஸ்தான்வரை இலங்கை நீண்ட நெடிய ராஜதந்திர உறவை வைத்துளது. சொல்லப்போனால் இந்தியாவை விட இலங்கைக்கு உலகில் உற்ற நண்பர்கள் அதிகம். 

ஏலவே, 2/3 பகுதி எல்லையில் சீனாவும் பாகிஸ்தானும் இருக்க, இந்தியா இலங்கையில் இப்படி ஒரு விசப்பரீட்சையில் ஒரு போதும் இறங்காது. இறங்கினால் சிங்களவர்களின் 1000 ஆண்டு சுதந்திரப் போருக்கு தேவையில்லாமல் இந்தியா தன் வீரர்களையும், பணத்தையும், நேரத்தையும் இழக்க வேண்டி வரும்.

உண்மையிலேயே இந்தியா தெரிவு 2 ஐ பற்றி சிந்திக்கவேனும் செய்கிறது என்றால் - என்னை கேட்டால் - சவுத் பிளக்கில் உள்ளவர்கள் எல்லாருக்கும் மூளை பிசகி விட்டது என்றுதான் சொல்லுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்க‌ள் கேட்ட‌ திரி க‌ட‌ஞ்சா 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நீங்க‌ள் கேட்ட‌ திரி க‌ட‌ஞ்சா

அந்த கேள்வி,  இந்த திரியுடன் தொடர்பு என்றால். கேள்வியை சுருக்கமாக சொல்ல முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

 

அந்த கேள்வி,  இந்த திரியுடன் தொடர்பு என்றால். கேள்வியை சுருக்கமாக சொல்ல முடியுமா? 

😁

விடுங்கோ , 
இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌க்கா பிராடுக‌ள் என்ப‌த‌ கால‌ம் வெளிச்ச‌ம் போட்டு காட்டும் / 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.