Jump to content

இந்தியாவிற்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை – விக்கிரமசிங்க


Recommended Posts

இந்தியாவிற்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை – விக்கிரமசிங்க

 

இந்தியாவிற்கும் பலாலி விமானத்தளத்திற்குமிடையேயான விமானப் போக்குவரத்து இவ் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று, சனிக்கிழமையன்று, மூதூர்-மட்டக்களப்பு வீதிக் கட்டுமான வேலைகளை ஆரம்ப நிகழ்வில் பேசும்போது அவர் அதைத் தெரிவித்தார்.

download-12.jpg
பலாலி விமானத்தளம்

” பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மூலம் நாம் உல்லாசப்பயணிகளைக் கொண்டு வருவோம். சுற்றுலா அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது, இவ் வருட இறுதிக்குள் சுமார் 2 மில்லியன் உல்லாசப் பயணிகள் வரக்கூடுமென்று சொன்னார்கள். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தார்கள். உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புக்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரிக்கிறது என்பதையே அது காட்டுகிறது. VAT வரி அதிகரிப்பை வைத்து எம்மை விமர்சித்தவர்கள் இப்போது அதனால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்

http://marumoli.com/இந்தியாவிற்கும்-பலாலிக்/

Link to comment
Share on other sites

17 hours ago, nunavilan said:

சுற்றுலா அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது

மனுஷன் நல்லா விசாரிச்சு பாத்துதான் பேசுறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

இந்தியாவிற்கும் பலாலி விமானத்தளத்திற்குமிடையேயான விமானப் போக்குவரத்து இவ் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேற யார்தான் பலாலிக்கு விமானம் விடப் போகிறான்?

இதுவும் பயணிகள் நலனுக்காக அல்ல.இந்திய புலனாய்வுப் பிரிவு புகுந்து விளையாட இலகுவாக இருக்கும் என்பதாலேயே.
         இதே சாட்டில் வேலைக்கென சிங்களவர்களைக் குடியமர்த்த இலங்கைக்கும் நல்ல சந்தர்ப்பம்.

Link to comment
Share on other sites

On 8/26/2019 at 1:17 PM, ஈழப்பிரியன் said:

வேற யார்தான் பலாலிக்கு விமானம் விடப் போகிறான்?

இதுவும் பயணிகள் நலனுக்காக அல்ல.இந்திய புலனாய்வுப் பிரிவு புகுந்து விளையாட இலகுவாக இருக்கும் என்பதாலேயே.
         இதே சாட்டில் வேலைக்கென சிங்களவர்களைக் குடியமர்த்த இலங்கைக்கும் நல்ல சந்தர்ப்பம்.

எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது.

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை என அடிக்கடி செய்தி வந்து கொண்டிருக்கிறது. விளம்பரம் செய்கிறார்களோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Lara said:

இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை என அடிக்கடி செய்தி வந்து கொண்டிருக்கிறது. விளம்பரம் செய்கிறார்களோ? 😀

இது விள‌ம்ப‌ர‌ம் இல்லலை லாரா , இதுக்கான‌ ப‌ணிக‌ள் தீவிர‌மாக‌ ந‌ட‌ந்திட்டு இருக்கு  😁😉

முன்னால் இல‌ங்கை கிரிக்கெட் அணி க‌ப்ட‌ன் ர‌ன்ன‌துங்கா , அவ‌ர் த‌ல‌மையில் இதுக்கான‌ வேலை தீவிர‌மாக‌ ந‌ட‌க்குது 😉 /

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

இது விள‌ம்ப‌ர‌ம் இல்லலை லாரா , இதுக்கான‌ ப‌ணிக‌ள் தீவிர‌மாக‌ ந‌ட‌ந்திட்டு இருக்கு  😁😉

முன்னால் இல‌ங்கை கிரிக்கெட் அணி க‌ப்ட‌ன் ர‌ன்ன‌துங்கா , அவ‌ர் த‌ல‌மையில் இதுக்கான‌ வேலை தீவிர‌மாக‌ ந‌ட‌க்குது 😉 /

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து வருகிறார்கள் என்று தெரியும்.

ஆனால் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. அது தான் விளம்பரம் செய்கிறார்களோ என எழுதினேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து வருகிறார்கள் என்று தெரியும்.

ஆனால் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. அது தான் விளம்பரம் செய்கிறார்களோ என எழுதினேன். 😀

ச‌ரி ச‌ரி 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.