Jump to content

கடவுளின் கைபேசி எண்


Recommended Posts

கடவுளின்_கைபேசி_எண்..?

ஐந்துவேளை தொழும் முல்லாக்களே 
உங்கள் அல்லாவின் 
கைபேசி எண்ணைத் தாருங்களேன்
என்னிடம் சில கேள்விகளுண்டு..

புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் 
கருகும் பிஞ்சுக் குழந்தைகள் 
பெண்களின் கதறல்கள்
உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..?

அரை நூற்றாண்டு காலமாக 
ஒரு அந்திப் பொழுதுகூட
அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் 
கண்ணீரைத் துடைக்க 
கருணையின் வடிவான 
உங்கள் கரங்கள் 
ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..?

ஆறுகால பூஜை செய்யும் 
அம்பாளின் அர்ச்சகரே 
அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன்
அம்பாளிடம் ஒரு  கேள்வி...

ஆசிஃபா எனும் 
அப்பாவிக் குழந்தையை
ஆறு நாட்கள் உங்கள் 
சன்னிதியில் வைத்து  
காமவெறிகொண்ட ஓநாய்க் கூட்டம்
கடித்துக் குதறிக் கொன்ற நேரத்தில்
ஆண்டவனோடு பள்ளியறையில்  
எப்படி ஆனந்தமாய் 
உறங்கிக் கொண்டிருந்தீர்கள்..?

கலியுக வரதனே 
உன் கைபேசி எண் கிடைத்தால்
எனக்கு ஒரு கேள்வி உண்டு...

தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன் 
என்று சொன்ன எம்பெருமாளே
உனது எத்தனையோ சன்னிதிகளில்
எண்ணெய் விளக்குகூட இல்லாமல் 
நீ  இருட்டில் தடவிக் கொண்டிருக்கிறாய்
அப்படியிருக்க அதெப்படி 
திடீரென அத்தி வரதர் என்ற பெயரில் அழகழகாய் பட்டுடுத்தி
அலங்காரங்கள் செய்துகொண்டு 
அல்லும் பகலும் 
அயராது கண்விழித்து காட்சி தந்து
ஐம்பது லட்சம் பக்தர்களை 
அலைக்கழித்து அதில் 
ஐந்து பேரின் உயிரையும் பறித்ததன் காரணம் என்னவோ..?

கர்த்தரின் கைபேசி எண் 
தெரிந்தால் 
யாராவது சொல்லுங்களேன்...

தேவகுமாரனின் திருச்சபையில் பலிபூஜைகள் செய்யும்
பாதிரியார்களே கன்னியாஸ்த்ரீகளின் பெண்மையைக் களவாடியபோது 
நீங்கள் பெத்லகேமுக்கு 
சுற்றுலா சென்றுவிட்டீர்களா..?

நல்லதொரு ஞாயிறில் 
தேவாலயத்தில் தொழுவதற்காக 
கூடியிருந்த மக்களை
காக்கை குருவிகளென 
காதகனொருவன் 
சுட்டுத் தள்ளினபோது
நீங்கள் கைகட்டி வாய்பொத்தி 
கண்மூடி நின்றதன் 
காரணம் என்னவோ..?

அன்புதான் இன்ப ஊற்று..! 
அன்புதான் உயிர் மூச்சு..!
என்று சொன்ன புத்தர் பிரானே 
உங்களது கைபேசிஎண் கிடைத்தால் கட்டாயமாக நான் கேட்பேன்...

உனது ஆட்சி நடக்கும் 
புத்த பூமியில்
யுத்தம் என்று பெயர் சொல்லி
முள்ளி வாய்க்காலில் 
நிராயுதபாணிகளாக  நின்ற 
லட்சக் கணக்கான மக்களை 
கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவித்து
பிள்ளைக் கறிகளாக 
சமைத்து உனக்குப்
படையல் போட்டபோது
நீர் ஆழ்ந்த‌ தியான‌த்திலா 
மூழ்கி இருந்தீர்..? 

அணைத்துக் கடவுள்களின் 
அடையாள அட்டைகளும்
ஆதார் அட்டைகளும்
அர்ச்சகர்கள் முல்லாக்கள்
பாதிரியார்கள் பிக்குகள் 
கைகளில் அடமானத்திலிருக்கிறது

எல்லாக் கடவுள்களின் 
கைபேசி எண்களின் 
சேவைகளையும்  
இந்த இடைத் தரகர்கள்
தங்கள் தேவைக்கேற்ப 
முடக்கி வைப்பார்கள்

அவர்கள் எல்லோரும் 
தொடர்பு எல்லைக்கு அப்பால்...

இதையறியாத மூடர்கூட்டம் அலையலையாய் 
இவர்கள் பின்னே
விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சிகளாய்...! 

நன்றி. நண்பர். திரு. பாலகணேசன் அருணாசலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூமிப்பந்தின் நிலவளங்களும் காலநிலைகளும் இனசனங்களும்  மொழிகளும் ஒரே மாதிரியானவையாக இல்லையே? அது ஏன்?
முதலில் ஏழை பணக்காரன் என்ற  பேதத்தை அழியுங்கள்.இனவாதத்தை அழியுங்கள்.நிறவாதத்தை அழியுங்கள். அதன் பின் கடவுளின் ஈமெயில் ரெலிபோன் நம்பரை தேடலாம்.

பாலகணேசன் அருணாசலம் என்ற பெயரிலே ஆயிரம் தெய்வங்கள் குடியிருக்கின்றனவே???? :grin:

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

இந்த பூமிப்பந்தின் நிலவளங்களும் காலநிலைகளும் இனசனங்களும்  மொழிகளும் ஒரே மாதிரியானவையாக இல்லையே? அது ஏன்?
முதலில் ஏழை பணக்காரன் என்ற  பேதத்தை அழியுங்கள்.இனவாதத்தை அழியுங்கள்.நிறவாதத்தை அழியுங்கள். அதன் பின் கடவுளின் ஈமெயில் ரெலிபோன் நம்பரை தேடலாம்.

பாலகணேசன் அருணாசலம் என்ற பெயரிலே ஆயிரம் தெய்வங்கள் குடியிருக்கின்றனவே???? :grin:

நீங்கள் கவிதைக்கு பிற் சேர்ககை சேர்த்து கவிதையை மேலும் மெருகூட்டி உள்ளீர்கள். நன்றி. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 8/27/2019 at 10:44 PM, tulpen said:

இதையறியாத மூடர்கூட்டம் அலையலையாய் 
இவர்கள் பின்னே
விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சிகளாய்...! 

கடவுளின் கைபேசி எண்ணைக் கேப்பதுவும் மூடர்கூட்டம் தானே. இல்லீங்களா?

Link to comment
Share on other sites

18 minutes ago, Gowin said:

கடவுளின் கைபேசி எண்ணைக் கேப்பதுவும் மூடர்கூட்டம் தானே. இல்லீங்களா?

உங்கள் கருத்து சரியானது. இல்லாத ஒருவரின்  கைபேசியை கேட்டது தவறுதான். ஆனால் கவிதையை எழுதிய கவிஞரின் கற்பனை அது. தனது கறபனைத் திறனால்   சொல்லவேண்டிய செய்தியை அழகாக சொல்லியுள்ளார் கவிஞர்.  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடவுளின் கைபேசி இலக்கம்
911.

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 9/27/2019 at 2:07 AM, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் கடவுளின் கைபேசி இலக்கம்
911.

இலங்கைல 421

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.