Jump to content

`எங்க சண்டை வீதிக்கு வராது!' - 50 வருட இல்லறவாழ்வு ரகசியம் பகிரும் காளியப்பன்-பாப்பாயி


Recommended Posts

#NoMoreStress

"கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!"


தம்பதியருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால்கூட விவாகரத்து பத்திரம் வாசிப்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏன், திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தம்பதிக்குள் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்துவிடுவது என்று பரஸ்பரம் பேசி முடிவு செய்வதும் அதிகரித்து வருகிறது.


தம்பதிக்குள் பெருக்கெடுக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், நேசம், புரிந்து கொள்ளும் பக்குவம், வெளிப்படுத்தவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் பண்பு குறித்த அக்கறை இல்லாததால் இனிக்க வேண்டிய இல்லறம் விவாகரத்தில் முடிகிறது. வெளிநாட்டினர் எல்லாம் பார்த்து வியந்த நம் நாட்டின் `குடும்பம்' என்கிற பந்தம், கலாசார மாற்றத்தின் காரணமாக மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியிருக்கிறது என்பது கவலையளிக்கும் உண்மை. ஆனால், என்னதான் நாகரிக மாற்றம் ஏற்பட்டாலும் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பெரிதுபடுத்தாமல் சிறு பிணக்குகள்கூட இல்லாமல் 90 வயதைக் கடந்த காளியப்பன் - பாப்பாயி தம்பதி சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மணமாகி 50 ஆண்டுகளைக் கடந்தாலும் புதுமணத் தம்பதிகளைப்போன்று அன்புடனும் நேசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
பொன்விழா கண்ட மகிழ்ச்சியில் இருந்த காளியப்பன், "நாங்களும் மத்தவங்கமாதிரி ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுஷங்கதான். எங்களுக்குள்ளும் சண்டை, சச்சரவு வரத்தான் செய்யும். ஆனா, எங்க சண்டை வீதிக்கு வராது. எங்க சண்டை மத்தவங்க காதுக்குப் போறதில்ல, நாலு சுவத்துக்குள்ளேயே முடிஞ்சுபோயிடும். எங்களுக்குள் சச்சரவு ஏற்பட்டா, 'என் மனைவிதானே என்னை திட்டுனா'னு நான் சமாதானம் ஆயிடுவேன்" என்று ஐம்பது வருட தாம்பத்யம் உடையாமல் தொடரும் சூட்சமம் பற்றி விளக்கினார்.


பாப்பாயி பேசும்போது, "என் கணவரைப் பத்தி வேற யாராச்சும் தப்பா பேசினா அவங்களை திட்டிவிட்டுடுவேன். அதேபோல என்னைப்பத்தி யாராச்சும் குறை சொன்னா என் கணவர் சம்பந்தப்பட்டவங்ககிட்ட சண்டைபிடிச்சு உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார். நான் இவருக்கு வாக்கப்பட்டு வந்து அம்பது வருஷம் ஆகுது. ஆனா, ஒருதடவைகூட இவரோட பேரை யார்கிட்டயும் சொன்னதில்லை" என்று வெட்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, இந்தத் தம்பதியைச் சந்தித்தபோது அவர்களிடையே இருக்கும் பாசப்பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. தண்ணீர்காட்டுவதற்காக பாப்பாயி மாடுகளை அவிழ்க்கப் போனபோது, ஒரு மாடு லேசாக கொம்புகளைச் சிலுப்பியது. அதைப்பார்த்துப் பதறிய காளியப்பன், `இருபுள்ள, நான் வந்து மாட்டை புடிச்சுத் தண்ணிகாட்டுறேன்' என வேகமாகச் சென்று மாடுகளைப் பிடித்தார். கணவரின் பாசத்தில் உருகிய பாப்பாயி, 'உங்களுக்குப் புடிச்ச பருப்புக் குழம்பு வெச்சுருக்கேன். சாப்பிட வாங்க' எனப் பாசமாக அழைத்தது அவர்களது அந்நியோன்யத்தைக் காட்டியது.

அந்தத் தம்பதியிடம், 'உங்களுக்கிடையே தொடர்ந்து நேசப் பிணைப்பு தொடர்வதன் மர்மம் என்ன' எனக் கேட்க நம்மிடம் பேசிய காளியப்பன், "என் பொஞ்சாதிக்குச் சொந்த ஊர் பக்கத்துலதான் இருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி எங்க கல்யாணம் நடந்துச்சு. நானும், அவளும் அதிகம் படிக்கலை. ஆனா எங்கப்பாவும், அம்மாவும், `தம்பதிங்க எப்படி மூணாவது மனுஷன் சிரிக்கிற மாதிரி இல்லாம ஒத்துமையா வாழ்றது'ங்கிற விசயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தாங்க. என் பொஞ்சாதிக்கும் அவ வீட்டுல சொல்லிக்கொடுத்து வளர்த்ததால, எங்க தாம்பத்ய வாழ்க்கை, எந்தச் சிக்கலும் இல்லாம அம்பது வருஷத்தைக் கடந்தும் தொடருது. அதுக்காக எங்களுக்குள்ள சண்டையே வராதுன்னு நினைச்சிடாதீங்க. சண்டை, சச்சரவுகள் அப்பப்ப வரத்தான் செய்யும். ஆனா அந்தச் சண்டைகளை கானல் நீராக்கி அப்பப்ப சரிபண்ணிக்குவோம். அவ கொஞ்சம் கோபமானா, நான் தாழ்ந்துபோவேன். நான் புடிச்ச முயலுக்கு மூணுகாலுனு நான் முரண்டுபுடிச்சா, அவ தாழ்ந்துபோவா. எம்பொண்டாட்டி எதாவது பேசுனா, `பொண்டாட்டிதானே நம்மகிட்ட கோபப்படுறா. ரோட்டுல போற பொம்பளையா கோபப்படுறா'னு நினைப்பேன். அதுக்குப்பிறகு, அவமேல பொங்கிவந்த கோபம் பொசுக்குன்னு அழிஞ்சுபோயிரும்.

நான் கோபத்துல பேசாம இருந்தா, நீங்க இவ்வளவு அழுத்தக்காரரா. பேசவே மாட்டேங்கறீங்க'னு சொல்வா. அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள ஒரு மாமாங்கத்துக்கு சண்டை, சச்சரவு எதுவும் வராது. நமக்குள்ள மனசு விட்டுப் பேசுனாலே கோடாங்கிச் சாட்டையடிபட்டு இறங்குற பேய்மாதிரி சண்டையெல்லாம் வந்தசுவடு தெரியாமப் போயிரும். பொண்ணுங்களும் ஒரு உசிருதானே, அவங்களுக்கும் உணர்ச்சி இருக்கு, அவங்க சொல்லையும் காது கொடுத்துக் கேட்கணும். கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்..." என்று மிடுக்காகச் சொல்லி முடித்தார் காளியப்பன்.


தொடர்ந்து பேசிய, பாப்பாயி, "புருஷனை நம்பி வந்துட்டோம். அவர்தான் நமக்கு எல்லாம்னு நினைச்சதால, எங்களுக்குள்ள இதுவரை பிரிவினையே வரலை. அதுக்காக அவர் சொல்ற எல்லாத்தையும் வேதவாக்கா எடுத்துக்கமாட்டேன். நல்லதைச் சொன்னா ஏத்துக்குவேன். கோபப்படுத்துறமாதிரி பேசினா, அவரோட சண்டை போடுவேன். ஆனா, அந்தச் சண்டையில எங்க கணவன், மனைவிங்கிற பந்தம் உடையாமப் பார்த்துக்குவேன். அவரு செத்தநாழி ஒடம்புக்கு சுகமில்லைனு படுத்தாக்கூட நான் பதறிப்போயிருவேன். அவருக்கு தைலம் தேய்ச்சுவிட்டு, பணிவிடை பண்ணுவேன். அதேபோல, எனக்கு ஒடம்புக்கு ஒண்ணுனா, அவர் துடிச்சுப்போயிருவார். வெளியில வேலையா போயிருந்தாக்கூட, என் நினைப்பாவே இருப்பார். கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுசா புரிஞ்சு வாழணும். இப்ப உள்ள பசங்ககிட்ட அது இல்லை. மத்தவங்க கருத்தைக் கேட்கிற பொறுமையும், அடுத்தவங்களை மதிக்கிற பக்குவமும் சுத்தமா இல்லை.

கூட்டுக்குடும்பமா வாழ்ந்த எங்களுக்கு அந்த மனப்பக்குவம் நிறைய உறவுகள் மூலமா கிடைச்சது. ஆனா, இப்போ உள்ள பசங்க, அவங்களுக்கான துணையை அவங்களே தேடிக்கிறாங்க; கொஞ்ச காலத்திலேயே பிரிஞ்சிவாழ்ற சோகமான முடிவையும் அவங்களே எடுக்கிறாங்க. ஆனா, நான் அப்பிடி இல்லை. கட்டுக்கோப்பா வாழ்ந்ததால அம்பது வருஷ தாம்பத்ய வாழ்க்கையை ஒத்துமையா வாழ்ந்துட்டோம்.


எங்க பிள்ளைங்களையும் அவங்களோட துணைகிட்ட அனுசரிச்சுப் போறமாதிரிதான் வளர்த்தோம். அவங்களும் சண்டை, சச்சரவில்லாம ஒத்துமையா வாழ்றாங்க. அவர் மடியில என் உயிர் போகணும், அதுதான் தினமும் நான் மகமாயியை வேண்டுற வேண்டுதல். அந்தக் கொடுப்பினை மட்டும் கிடைச்சா, நான் முழுவாழ்க்கை வாழ்ந்த திருப்தியோட போய்ச் சேருவேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.

பாசத் தம்பதியிடம் பேசிய பிறகு மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

https://www.vikatan.com/lifestyle/relationship/life-and-success-story-of-kaaliappan-paapayi-couple

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் முரண்டு பிடிக்கக் கூடாது. தம்பதிகள் விட்டு குடுத்து வாழவேண்டும்.அதுதான் கெத்து.........!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.