Jump to content

Tamil Community Centre


Recommended Posts

Tamil Community Centre 

CBC covered the townhall last week where the Steering Committee of the Tamil Community Centre provided an update to the community. Check out their story.

 

தமிழ் கலாசார நிலையம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் .நிகழ்வு @ Scarborough Civic Centre on Aug 18,2019.
நிகழ்வின் இ குருவியின்( ekuruvi) அனைத்து புகைப்படப்பதிவுகளையும் பார்வையிட இங்கேஅழுத்தவும்......https://images.biztha.com/…/Tamil-Community-Centre-Consult…/

Link to comment
Share on other sites

தமிழ் கலாசார நிலையம் வரவேற்கத்தது.

இளையவர்கள் இதில் பங்களிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி  

' இனவழிப்பு ' என்ற சொல்லை மீண்டும் மீண்டும் செல்லும் அனைவர்களுக்கும் நன்றிகள். 

Link to comment
Share on other sites

community center  and cultural center இரண்டும் ஒன்றா ? தெரிந்தவர்கள் சொல்லவும். 

கோயில்கள் ஊர்சங்கங்கள் ஊர் ஒன்று கூடல்கள்  என்பனவற்றை கடந்து தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சன சமூக நிலையம் வருவது வரவேற்கத்தக்க விசயம். இருந்தும்  எமக்கான கலாச்சாரம் எது எமக்கான அடயாளம் எது என்ற குழப்பநிலையில் உள்ள சமூகமாக நாம்  இருப்பதாலும்   இரவல் காலாச்சாரத்துக்கு சொந்தக்காரராக இருப்பதாலும் இதன் செயற்பாடு எப்படி போகும் என்று தெரியாது. மொழி கற்பித்தல். பாதிக்கப்பட்டோருக்கு வழிகாட்டுதல், என சரியான திசையில் இதை பயன்படுத்துவார்களா இல்லை தவில் கச்சேரியும் பரதநாட்டியமும்  ஆடி ஐயரை அழைத்து  புரியாத பாசையில் மந்திரம்  சொல்லி மணியாட்டி இவைதான் எமது கலாச்சாரம் என்று மேட்டுக்குடிகள் அடயாளம் தேடுவார்களா என்பது தெரியவில்லை.  இனத்துக்காக பொதுவாக ஒரு காரியத்தை ஒன்று கூடி நீண்ட நாட்களுக்கு செய்த வரலாறு எமக்கில்லை.. ஏதொ ஒரு வகையில் குரங்கு கையில் கிடைத்த மாலையாக்கி விடுவார்கள். வரவிருக்கும் இந்த சன சமூக நிலயம்  பொதுசனத்துக்கானதாக இருந்தால் மகிழ்ச்சி. 

 

Link to comment
Share on other sites

சிந்தனைகள் செயலாக மாறும் 
செயல்கள் பழக்கங்களாக மாறும் 
பழக்கங்களே ஒரு கலாச்சாரமாக மாறும் 
கலாச்சாரமே அடுத்த தலைமுறையை காக்கும் 

அந்த வகையில் இந்த கலாச்சார நிலையம் அடுத்த தலைமுறைக்கும் அப்பால் கனடாவில் தமிழரின் அடையாளத்தை நிறுத்தி காத்து வளர்க்க உதவட்டும் ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.