Jump to content

இராமேஸ்வரத்தில் 5வது நாளாக மீனவர்கள் போராட்டம்


Recommended Posts

இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளதாகவும், மீன்பிடி சார்பு நிறுவனங்கள் கூட்டப்பட்டு சுமார் 25 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர்கள் அறிவித்ததையடுத்து இன்று வட்டாச்சியர் ஜாபர், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மீன்வளத்துறை உதவி இயக்குனர், ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாளை இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521809

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.