Jump to content

காணி விடுப்புக் கோரி வடக்கில் போராட்டங்கள்


Recommended Posts

image_c614785e82.jpg

-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.என்.நிபோஜன்

காணி விடுப்பு கோரி, வடக்கின் பல பாகங்களிலும், இன்று (28) போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவ, மன்னார் ஆகிய பகுதிகளிலேயே, இந்தப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டமக்களால், இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நேற்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவு புனித ராஜப்பர் தேவாலய முன்றலில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்புப் பேரணியாக வந்த மக்கள், மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்டச் செயலகத்துக்குள் மக்கள் செல்வதற்கு முற்பட்ட போது, மாவட்டச் செயலக வாயில் மூடப்பட்டு, மக்கள் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் அமைதிப் போராட்டம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களில், படையினர் வசமுள்ள காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (28) முற்பகல் 9.30 மணியளவில், அடையாள அமைதி போராட்டமொன்று மன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குருஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, நல்லாட்சி அரசாங்கத்துக்குகு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில், தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, படையினர் வசமுள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதியொன்றை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் நிறைவில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன் றாஸுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்று கொண்ட மாவட்டச் செயலாளர், மக்களின் கோரிக்கை நியாயமானதெனவும் எனவே இந்த மகஜர், மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்டச் செயலகம் சார்பாக, காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை மேற்கொண்டு தருவதாகவும், அவர் மேலும் கூறினார்.

மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் போராட்டம்

முல்லைத்தீவில், இராணுவத்தினர், கடற்படையினர் சுவீகரித்துள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மக்களால், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நேற்று (28) முற்பகல் 11 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களை ச்சேர்ந்த மீணவ குடும்பங்களும் கேப்பாப்புலவில் தமத நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் இணைந்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் இறுதியில், மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பதற்காக சென்றவர்கள் மாவட்டச் செயலக வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த இடத்துக்கு வருகை தந்த மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கையொப்பம் அடங்கிய மகஜர் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில், விடுவிக்கப்படாத மக்கள் காணிகளை விரைந்து விடுவிக்க வேண்டுமென கோரி, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று (28) கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முன்பாக முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி, மாவட்டச் செயலகம் வரை சென்றது.

குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளரைச் சந்தித்து, நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பில் பெற்றுக்கொண்ட கையொப்பம் அடங்கிய மகஜரை அவரிடம் கையளித்தனர்.

image_94f098d18d.jpgimage_2975b06bca.jpgimage_791f4926ee.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/காணி-விடுப்புக்-கோரி-வடக்கில்-போராட்டங்கள்/71-237490

Link to comment
Share on other sites

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலின்றி வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் துரிமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஒக்டோபர் முதாம் திகதிக்கு முன்னர் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடக்கின் நில விடுவிப்பு தொடர்பாக இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இந்த பணிப்புரையை வழங்கினார்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவ முகாம்கள் அவசியமாகும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அதற்கான ஒரு அனுபவமாக அமைந்ததுடன், பிரதேசத்தினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு முகாம்கள் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, பேச்சுவார்த்தைகளினூடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தனியார் காணிகள் இராணுவ முகாம்களுக்காக தேவைப்படுமாயின் அந்நிலங்களுக்கான நட்டஈடு வழங்குதலை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்பு துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாண நிலங்களில் 80.98 சதவீத அரச காணிகளும் 90.73 சதவீத தனியார் காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையினரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/63586

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.