Jump to content

நம்ம எடப்படியாரா இது..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது!

eps2221211112-1567077397.jpg

சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்! பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன் என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி.

அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட!

ஜோரா இருக்கு

உண்மையிலேயே, எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான். நேற்றுகூட வெளிநாடு செல்வதற்கு முன்பு, தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி என்று சொல்லிவிட்டுதான் பிளைட் ஏறினார்.

கோட்-சூட்

ஆனால் லண்டனில் கால் வைத்தவுடனேயே உஜாலுக்கு மாறிவிட்டார் முதல்வர். கோட்-சூட் போட்டு ஆளே அடையாளம் தெரியவில்லை. அந்த போட்டோதான் இப்போது வைரலாகி வருகிறது. எப்பவுமே எடப்பாடியாரின் நெற்றியில் விபூதி பளிச்சென காணப்படும். அதுவும் இப்போது மிஸ்ஸிங்.

தனிநபர் உரிமை

பொதுவாக, வெளிநாட்டுக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக என எந்த கட்சி தலைவர்கள் போனாலும்சரி, தங்கியிருக்கும் நாட்கள் வரை, அந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கது உடைகளை மாற்றி கொள்வது இயல்பு. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. இது தனிநபர் உரிமையும்கூட.

வித்தியாசம்

அந்த வகையில் எடப்பாடியாரும் மாறி உள்ளார். (ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பானுக்கு சென்றபோது, வேட்டி-சட்டையுடனே அந்த நாட்டில் நடமாடினார்) வழக்கமாக, எடப்பாடியாரை ஒயிட் & ஒயிட் வெள்ளை வேட்டி, விபூதி என பார்த்து பார்த்து பழகிய நமக்கு இப்போது கோட்-சூட்டில் பார்க்க வித்தியாசமாக உள்ளது.

ஜம்முன்னு இருக்கு

தமிழ்நாட்டில் கோட்-சூட் போட்ட முதல்வர்களை பார்ப்பதே அரிதானது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கண்ணுபடப் போகுதய்யா.. என்றுதான் பாடத் தோன்றுகிறது படத்தைப் பார்த்தால்.!

https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamys-new-getup-change/articlecontent-pf397419-361490.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டியில்... பார்த்துப் பழகிய எமக்கு, 
இந்த உடையும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

தனிநபர் உரிமை

பொதுவாக, வெளிநாட்டுக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக என எந்த கட்சி தலைவர்கள் போனாலும்சரி, தங்கியிருக்கும் நாட்கள் வரை, அந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கது உடைகளை மாற்றி கொள்வது இயல்பு. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. இது தனிநபர் உரிமையும்கூட.

 

தமிழ் நாட்டிற்கு போரிஸ் ஜோன்சன் வந்தால் விவசாயி உடை அணிய வேண்டும் 🙂 

Krishna_Portrait-1-890x555-500x312.jpg

https://land.auroville.org/solitude-farm/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தனிநபர் உரிமை

பொதுவாக, வெளிநாட்டுக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக என எந்த கட்சி தலைவர்கள் போனாலும்சரி, தங்கியிருக்கும் நாட்கள் வரை, அந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கது உடைகளை மாற்றி கொள்வது இயல்பு. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது. இது தனிநபர் உரிமையும்கூட.

 

தமிழ் நாட்டிற்கு போரிஸ் ஜோன்சன் வந்தால் விவசாயி உடை அணிய வேண்டும் 🙂 

Krishna_Portrait-1-890x555-500x312.jpg

https://land.auroville.org/solitude-farm/

நம்மாளு ரொம்ப விபரம். லண்டனிலேயே, சீக்கியர் கோவிலுக்கு போய் தலைப்பா கட்டிட வோட்டு பிச்சை எடுக்கிறவர் 😂

https://www.thesun.co.uk/news/3583253/boris-johnson-grins-as-hes-dressed-in-bright-orange-turban-for-sikh-temple-visit/amp 

Link to comment
Share on other sites

14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி: லண்டனில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Dkn_Tamil_News_2019_Aug27__711208522319794.jpg

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521985

 

விமானத்தில் வேட்டியுடன் தான் வந்துள்ளார் !

"காலை தாம் தங்கியிருந்த லண்டன் ஹோட்டலில் உணவருந்தியபோது, எடப்பாடிக்கு இட்லி, பொங்கல், வடை என தடபுடலாகச் சிற்றுண்டி பரிமாறப்பட்டுள்ளது. `நம்ம ஊரு டேஸ்ட்டுலயே இட்லிலாம் இருக்கேப்பா..' என வியந்து பாராட்டிய முதல்வர், ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடக் கிளம்பினாராம்."

"எடப்பாடியார் கோட்சூட்டில் இருக்கும் படங்கள்தான் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. முதல்முறையாக கோட்சூட்டில் எடப்பாடியாரைப் பார்த்த அதிகாரிகள் பலரும், `சார், இன்னைக்கு பிரமாதமா இருக்கீங்க' எனப் பாராட்ட, எடப்பாடியாரின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டதாம். தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டவர் ப்ரிட்ஜ், 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிக் பென் கடிகாரக் கட்டடம், பிரிட்டன் அருங்காட்சியகம், பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடாகியுள்ளது."

https://www.vikatan.com/government-and-politics/politics/tn-cm-eps-london-trip-update

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகன்ஸ் நவ் : எடப்பாடினா வெள்ளை வேட்டி சட்டை போட்டுகிட்டு நெத்தில திருநீறு பூசிகிட்டு ரெண்டு கைக்கும் நடுவுல கர்ச்சிஃப் வச்சிகிட்டு குனிஞ்சி கும்பிடு போட்டுகிட்டு இருப்பான்னு நெனச்சியா???? த்தா....எடப்பாடிடா

Bild
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வà¯à®³à¯à®³à®¨à¯à®¤à®¿

à®à®°à®£à®¾à®²à®¯à®à¯à®à®³à¯

எங்க கிட்டயும் கோட் இருக்கு.. நாங்களும் போடுவோம்.. பாரீனும் போவோம்.. அடுத்து திண்டுக்கல்லார்!

இந்த வாரம் தலைவர்கள் எல்லாம் வெளிநாடு செல்லும் வாரம் போல இருக்கு.. திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா கிளம்பி சென்றுள்ளார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் எந்த பேச்சாக இருந்தாலும் சரி, கருத்தாக இருந்தாலும் சரி அது வைரலாகி விடும்.

உளறல் மன்னன், சர்ச்சை புகழ்.. என்ற பட்டப்பெயர்களுக்குள் திண்டுக்கல் சீனிவாசனும் அடக்கம்தான். அந்த அளவுக்கு மக்களிடம் எதையாவது பேசி மாட்டி கொள்வது என்பது இயல்பாகி விட்டது. ஒரு கட்டத்தில் திண்டுக்கல்லார் "இப்படி" பேசினால்தான் ஆச்சரியம் என்ற ரேஞ்சுக்கும் பதிந்துள்ளார்.

ஆனால் உண்மையிலேயே திண்டுக்கல்லார் ஒரு நல்ல மனிதன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஒரு மூத்த அரசியல் தலைவர். மனசில் ஒரு களங்கமுமில்லாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகவும், மறந்து போயும் பேசிவிடுவார். இதை கட்சி சார்பில் மற்றவர்களும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சிரித்து விட்டுவிடுவார்கள். காரணம், எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார். வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கும் சென்றுவிடுகிறது.

இப்போது, விஷயம் என்னவென்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து இவரும் வெளிநாடு கிளம்பி சென்றுள்ளார். இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாடுகளில் வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். அப்படியே சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளார். அந்த நாடுகளில் உள்ள சரணாலயங்கள், வன உயிரின பூங்காக்களை பார்வையிடுகிறார். முக்கியமாக, அந்த நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படும், வனத்துறையினர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, நம்ம ஊரிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் அமைச்சர்.
 

ஒரு பக்கம் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் லண்டனுக்கும், இன்னொரு பக்கம் திண்டுக்கல்லார் இந்தோனேஷியாவுக்கும் என்று கலக்குகிறார்கள். முதல்வர் நேற்று லண்டனில் கோட்-சூட் போட்ட போட்டோ படு வைரலானது. ஒருவேளை வெளிநாட்டுக்கு போயுள்ள திண்டுக்கல்லாரும் கோட்-சூட் போட்டு கெட்-அப் சேஞ்சுக்கு மாறுவாரா என தெரியவில்லை. கலக்கலான திண்டுக்கல்லாரை பார்க்க ஆர்வமாகத்தான் இருக்கிறது!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-dindigul-srinivasan-visits-to-indonesia-361538.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.

1545015459-13.jpg

ஒரு கவிதையே ... கவிதை வாசிப்பது போல ஒரு பீலிங்கு..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

இன்னேரம்... நம்மள வச்சு,  "மீம் கிரியேட்"  பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  :grin:

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.