Jump to content

விமானத்தில் கதறகதற ஏற்றப்பட்ட தமிழ் தம்பதியினர்- நீதிமன்றத்தின் தலையீட்டினால் இறுதிநேரத்தில் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது


Recommended Posts

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

thumb_nadesh_priya_au22.jpg

இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு  தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றன  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/63673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர  முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

thumb_nadesh_priya_au22.jpg

இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியான செய்தி. போராடினால்... வெற்றி கிடைக்கும். என்பதற்கு நல்ல சான்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டே வயதான அவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது...
அத்துடன் பெற்றோருக்கு அவுஸ்திரேலிய அரசு பாதுகாப்பு தர வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை என்று ஒத்துக்க கொள்ளுமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அரசு ஒன்றின் இறையாண்மையின் மீது தனிப்பட்டவர்களின் நலன்கள் எப்போதுமே ஒரு கேள்விக்குறி தான் …


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும். 

Link to comment
Share on other sites

What's good for the goose is good for the gander.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இளைய மகளின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் எவ்வாறு உறுதிப்படுத்தப் படும் என்ற கேள்வியின் அடிப்படையிலேயே இந்த தற்காலிக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதனால், இவ்வாறு அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ் திருப்பி அனுப்ப கூடாது !

What's good for the goose is good for the gander.

Link to comment
Share on other sites

தமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம் 

ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

920191104259385680635.jpg

அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். 

விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா என்ற தம்பதியினர் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடக்கிய மேற்படி குடும்பம் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. 

தற்போது குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கும் மெல்போர்ன் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. 

_108549232_ediqxmnueaacsgp.jpg

இந் நிலையில் அவர்கள் வாழ்ந்த குயின்ஸ் தீவிலிருந்து மேற்படி  குடும்பத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் கொடுமை செய்ததாக அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் ரிச்சர்ட் டி நடேல் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேல்வேறு இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/63822

 

Link to comment
Share on other sites

On 8/30/2019 at 8:07 AM, nedukkalapoovan said:

தமிழன் எல்லா நாடுகளிலும் அகதி என்று இப்படி அவலப்படுவதிலும்.... அவதிப்படுவதிலும்.. அவனுக்கென்றொரு நாட்டை உருவாக்கி அங்கு நோக்கி.. இந்த மேற்குலத்தவர்களை கவரும் நாள்... அதாவது சிங்கப்பூர் போல.. ஒன்று வந்தால் தான்.. இந்த அவலங்களுக்கு முடிவு வரும். 

இவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2019 at 5:01 PM, Dash said:

இவர்களளுடைய நிலை லட்ச கணக்கில் கொடுத்து வெளி நாடு வர விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாடம்; தமிழனின் இருப்பை இலங்கையில் காக்க போவது தமிழனின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே;

 

 

இல்லையாம் முதல் தீர்வுதானாம்.பு.பெ .சனம் தெளிவாய்த்தான் இருக்குதுகள்.😉

Link to comment
Share on other sites

தமிழனின் பொருளாதார வளர்ச்சிக்காக அன்று அமைச்சராக இருந்த யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் முயற்சியினால் நிறுவப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் இன்று எங்கே...? எந்த ஆண்டிகள் போட்டுடைத்தார்கள்...?? 🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.jpg

தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலிய அரசாங்கம்

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று இவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குறித்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தினை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

குறித்த தடை தொடருமா என்பது நாளைய தினமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்-குடும்பத்துக்கு-வி/

Link to comment
Share on other sites

இன்னும் நூறு / இருநூறு  வருடங்களில் அவுசில் வெள்ளை இனத்தவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை அலுவலகம் வரும் போது, வானொலியில் qld / Sydney க்கான   இலங்கைக்கான கோன்சுலரை  ( ஒரு சிங்கள ஆள் )  ஒரு ஐந்து நிமிடம் லைவ் பேட்டி கண்டார்கள் 

கேள்விகள்

1) தற்சமயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா ?

2) இந்த குடும்பம் இலங்கை வந்திறங்கினால்  உடனடியாக என்ன நடக்கும் ?

3)தமிழ் மக்களுக்கான கல்வி , பொருளாதார நிலவரங்கள் எப்படி இருக்கின்றன ?

 பதில்கள்

1) எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லை , இதனை பாராளுமன்றில் இருக்கும் இரண்டு தமிழ் கட்சிகளே categorikallaka வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன , தேவைப்படுவது devolution மட்டுமே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன .

2) உள்ளூர் குடியகல்வு  சட்டங்களை மீறி    வெளியே சென்றதனால் அவர்கள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப் படுவார்கள்       ( இதனை விபரிக்குமாறு அறிவிப்பாளர் கேட்க எங்கட ஆள் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுப் போய்  இங்கே உள்ளூர் தடுப்பு முகாம்களில் பலர் தற்கொலை செய்து , இங்கேயே இறுதிச்சடங்குக்குள்     செய்து  சாம்பலை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்று சொல்கிறான் பாவி ( இரவு  கூடக் குறைய விஸ்கி அடிச்சுப் போட்டான் போல) , கேட்டவர் சரியாக குழம்பிப் போய் , நான் கேட்டதற்கும் நீ சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் என்று  கேட்க , ஒரு மாதிரி எதோ சொல்லி சமாளிக்ஸ்து ஆள் ) .

3) 1ம் வகுப்பு தொடக்கம் பல்கலை வரை இலவச கல்வி , இலவச மருத்துவம் , எல்லோர் போலவும் வேலை வாய்ப்பு  .

 

இவர்கள் பற்றிய உயர்நீதிமன்றத்தின் முடிவு இன்று தெரிய வரும் என்று தெரிகிறது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் மேலும்  பனிரெண்டு நாட்கள்   வழங்கியிருக்கின்றது , இளைய மகளுக்கு குடியுரிமை விண்ணப்பித்திருக்கிறார்கள் , அதே திகதியில் ( இரவோடிரவாக ?) அச்சிறுமியின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து விட்டோம் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் சொல்கிறது ।        நீதிவான் மேலதிக விபரங்களை கோரியிருக்கிறார்
Lawyers for the family have questioned the assessment process, which happened quickly and on the same day citizenship was sought for the toddler.
ஒரு technical  பாயிண்ட் இல் அவுஸ்திரேலிய அரசு தவற விட்டிருப்பதற்காக தெரிகிறது , தமிழ் குடும்பத்தினருக்கு இது சாதமாக திரும்ப வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்   

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.