Jump to content

நஷ்டத்தில் தவிக்கும் 10 வங்கிகள் நான்காக குறைப்பு அரசு வங்கிகள் அதிரடி இணைப்பு: 27 ஆக இருந்த வங்கி எண்ணிக்கை 12 ஆகிறது


Recommended Posts

நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார்.

அதன்படி, நேற்று அவர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, வங்கிகள் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அவரது அறிவிப்பின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், ரூ.17.95 லட்சம் கோடி வர்த்தகம் கொண்ட இவ்வங்கி, நாட்டின் 2வது பெரிய வங்கியாக மாறும். இதேபோல், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு பாங்க் ஆப் பரோடாவுடன் தேனா வங்கி, விஜயா வங்கியை மத்திய அரசு இணைத்தது. மற்ற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப்-சிந்து வங்கி ஆகிய பிராந்திய பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைப்பு மூலம், கடந்த 2017ல் 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிய 10 பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைத்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: பொருளாதாரத்தை சீர்படுத்த பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு பெரிதும் உதவும். வங்கிகள் முன்பு இருந்ததை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். கடன் வழங்குதலும் அதிகரிக்கும். இதனால், பணப் புழக்கத்தை அதிகரிக்க முடியும். வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. வங்கி நிர்வாகத்திலும் பல்வேறு புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும். வெற்றிகரமான திட்டங்களை மேற்கொள்ள வங்கி நிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படாது. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளியும் இருக்காது.

வங்கி இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். சர்வதேச அளவில் தரமிக்க வங்கிகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இதற்கு முன்னதாகவே, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும்  நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதன்படி, தற்போது பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவற்றின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடன் வசூலிப்பில் சாதனை
அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘கடன் வசூலில் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால், கடந்த ஓராண்டில் 1.21 லட்சம் கோடி வராக்கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளின் வராக்கடன் 8.65 லட்சம் கோடியில் இருந்து 7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

வெள்ளை அறிக்கை காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஜெய்வீர் ஷெர்கில், கவுரவ் வல்லபா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் பொருளாதாரத்தையும், வங்கி அமைப்பையும் பாஜ அரசு சீரழித்து விட்டது. எனவே, பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும். சரிந்து வரும் பொருளாதாரம், நிதி மோசடிகள் அதிகரிப்பு குறித்து பாஜ அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இணைக்கப்பட்ட 10 பொதுத்துறை வங்கிகள்

தலைமை வங்கி                         இணைக்கப்பட்ட வங்கிகள்                                                         வர்த்தக அளவு              நிலை
பஞ்சாப் நேஷனல் வங்கி        ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி                17.95 லட்சம் கோடி    2வது பெரிய வங்கி
கனரா வங்கி                                 சிண்டிகேட் வங்கி                                                                             15.20 லட்சம் கோடி    4வது பெரிய வங்கி
யூனியன் வங்கி                           ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி                                    14.59 லட்சம் கோடி    5வது பெரிய வங்கி
இந்தியன் வங்கி                            அலகாபாத் வங்கி                                                                              8.08 லட்சம் கோடி    7வது பெரிய வங்கி

இதுதவிர, நாட்டின் பெரிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (’52.05 லட்சம் கோடி வர்த்தகம்), பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப்-சிந்து வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=522412

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.