Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடம் இதழ்

ஜெயமோகன்

thadam.jpg

விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம்.

நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். அவற்றைக் கேட்டு வாங்கிய கவிஞர் வெயில் அவர்களுக்கு நன்றி

இவ்வாறு பெரிய திட்டங்களுடன் தொடங்கப்படும் முயற்சிகள் நலிந்து நின்றுவிடுவது எப்போதுமே நிகழ்கிறது. நான் தொடர்புகொண்ட முயற்சியாகிய சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’ நிறுத்தப்பட்டபோது அடைந்த உளச்சோர்வை நினைவுகூர்கிறேன். அதன்பின் என் ஊடகமாக அமைந்த சுபமங்களா நின்றது. இம்முயற்சிகளுக்கு முன்பு இடைநிலை இதழ்களாக இனி [எஸ்விராஜதுரை], புதுயுகம் பிறக்கிறது [வசந்தகுமார்] என பல முயற்சிகள் நின்றன. பல சிற்றிதழ்கள் நின்றன. நான் நடத்திய சொல்புதிதும் அவற்றில் ஒரு முயற்சி. ஒவ்வொரு முயற்சியின் தோல்வியும் மேலும் புதிய முயற்சிகள் தொடங்குவதை பலவகையில் தள்ளிப்போடுகிறது.

thadam2.jpg

ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். அரசியலையும் சினிமாவையும் மாய்ந்து மாய்ந்து விவாதிப்பார்கள். கலை, கலாச்சாரம் என பொங்குவார்கள். தமிழின் தொன்மை என தோள்தட்டுவார்கள். ஆனால் தமிழின்பொருட்டு நிகழும் எந்த முயற்சிக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தடம் இதழைப் பார்த்ததுமே ‘ஐம்பதுரூபாய் அதிகம் சார், கட்டுப்படியாகலை’ என்று சொன்ன பலரை கண்டிருக்கிறேன். மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டுபவர்கள் அவர்கள். ஒரு நல்ல காப்பியின் விலை. ஒரு முறை ஆட்டோவில் ஏறி இறங்குவதன் குறைந்தபட்ச கட்டணம். ஆனால் நம்மவர் உள்ளத்தில் கலை இலக்கியத்திற்கான விலை அதைவிடக்குறைவு தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.

தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது. கடைகளில் கண்ணில்பட்டால்தான் வாங்கினார்கள். தேடிச்சென்று வாங்குவதில்லை. அப்படிச் சிலர் இடைநிலை இதழ்களை வாங்கிய காலம் ஒன்று இருந்தது, அது இன்றில்லை. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் இதழில் வெளிவந்தபின் என் தளத்தில்  மீண்டும் வெளிவரும்போதுதான் எதிர்வினைகள் மிகுதியாக வருவது வழக்கம். இது ஒரு காலமாற்றத்தின் சித்திரம். உலகப்புகழ்பெற்ற இடைநிலை இதழ்களும், சிற்றிதழ்களும்கூட நின்றுகொண்டிருக்கின்றன.

ஆனால் விகடனின் அமைப்புவல்லமை அதை ஒரு சிறிய இதழாக நீட்டித்திருக்க முடியும். அது ஏன் நின்றது? ஏனென்று சமூகஊடகங்களைப் பார்த்தால் தெரியும். தடம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதில் வெளிவந்த ஏதேனும் ஒரு செய்தியாவது, ஒரு கருத்தாவது, ஒரு படைப்பாவது குறைந்த அளவிலேனும் சமூக ஊடகங்களில் ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறதா? சாதாரணமாகவேனும் விவாதிக்கப்பட்டிருக்கிறதா? தேடிப்பாருங்கள் , திகைப்பாக இருக்கும். விதிவிலக்கு நான் என் பேட்டியில் ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு. ஆனால் ஈழப்போர் பற்றி விதந்தும் நெகிழ்ந்தும் பேசப்பட்ட பலப்பல பக்கங்கள் தடம் இதழில் வெளிவந்துள்ளன. இந்த வசைபாடிகள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அவற்றைச் சொன்ன பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றைப்பற்றி எவராவது விவாதித்திருக்கிறார்களா? பிறருக்கு அடையாளம் காட்டினார்களா?

இங்கே பேசப்பட்டவை அனைத்துமே அரசியல்காழ்ப்புநிலைகள், சினிமா ஆகியவற்றைப் பற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘டிரெண்ட்டிங்’ விஷயங்கள் மட்டுமே. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பொதுவான பேசுபொருள் எங்கிருந்து எனத் தெரியாமல் கிளம்பி வரும்.  அத்தனைபேரும் அதையே பேசிப்பேசி சலித்து அப்படியே அடுத்ததற்குச் செல்வார்கள். தங்கள் தனிரசனையை, தங்கள் தனித்த பார்வையை, தங்கள் தேடல்களை எத்தனைபேர் முன்வைத்திருக்கிறார்கள்? முன்வைத்தவர்களுக்கு எத்தனை பேர் வாசகர்களாக வந்தனர்? இந்த செயற்கை ‘டிரெண்டிங்’ தான் இங்கே சீரிய ஊடகங்களை அழிக்கிறது. முன்பு மாலைமுரசுச்செய்தியாக அமைந்தவை இன்று மையச்செய்தியாக ஆகின்றன. அவற்றுக்கு அப்பாலுள்ள கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த எதுவும் கவனிக்கப்படுவதில்லை.

தடம் போன்ற இதழ்களின் பங்களிப்பு என்ன? இன்று நாடே ஓரிரு விஷயங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. பேசவைக்கப்படுகிறது, அதற்கான கொள்கைகள் வியூகங்கள் நடைமுறைகள் அனைத்தையும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அந்த பொதுப்போக்குக்கு அப்பால் உள்ள இலக்கியம், அரசியல்கோட்பாடு, பண்பாட்டுச் சிக்கல்களைப் பேசவே தடம் போன்ற இதழ்கள் முயல்கின்றன. ஆகவேதான் அவை மாற்று ஊடகங்கள் எனப்படுகின்றன.

இங்கூள்ள பொதுரசனை அங்கும் வெளியே உள்ள அரட்டையையே எதிர்பார்க்கும்.. அந்த அலைக்கு எதிராக நிலைகொள்ளவேண்டும். அதற்குத்தேவை அவ்வாறு பொதுப்போக்குகளுக்கு அப்பால் நின்றிருக்கும் தனித்தன்மை கொண்ட வாசகர்கள்  அத்தகைய ஒரு வாசகர்வட்டம் இங்கே உள்ளதா? உள்ளது என்பதுதான் என் வலைத்தளம் வழியாக நான் கண்டடைந்தது. இந்தத்தளம் இத்தனை வாசகர்களுடன் இத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என நான் எண்ணியதே இல்லை. ஆனால் அந்த வாசகர்களால் ஏன் தடம் பேணப்படவில்லை? அதற்குக்காரணம் தடம் இதழின் உள்ளடக்கம்  என்றோ அதன் கொள்கை  என்றோ எவரும் சொல்லமுடியாது.எல்லா கொள்கைகளுக்கும் இங்கே இடமுண்டு. இன்று தமிழில் எழுதும் ஏறத்தாழ அனைவருமே அதில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்

.thadam-1.jpg

மிக எளிமையான காரணம்தான், தடம் இதழை அதை வாசித்தவர்கள் பணம்கொடுத்து வாங்கவில்லை. அதற்குக் காரணம் அறிவு, இலக்கியம், கலை என்னும்போது மட்டும் நமக்குள் வரும் கைச்சிக்கனம். அந்த இதழ் வெளிவந்து ஒரு அறிவுத்தரப்பாக, வெளியீட்டுத்தளமாக நிலைகொள்வது எல்லாருக்கும் நல்லது என நாம் உணரவில்லை. அதை நிலைநிறுத்த பிரக்ஞைபூர்வமாக ஏதும் செய்யவில்லை. நம் கலாச்சார அமைப்புக்கள் அதை ஆதரிக்கவில்லை.நம் உரையாடல்களில் அதை நாம் பேசவில்லை.

ஐம்பது ரூபாய் கொடுத்து பத்தாயிரம்பேர் வாங்கியிருந்தால் தடம் தொடர்ந்து நடந்திருக்கும். அது தொடராது என்றே நானும் எண்ணியிருந்தேன். அதை நடத்துவதற்குக் குறைந்தது இரண்டு ஊழியர்களாவது தேவை. அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அளவுக்கேனும் அது பொருளீட்டவேண்டும். இங்கே எந்த ஒழுங்குமில்லாமல் வசதிப்பட்ட கால இடைவெளிகளுடன் சிற்றிதழ்கள் நடக்கின்றன. பல இதழ்கள் வந்து நின்றாலும் ஏதோ ஒன்று கண்ணுக்குப்படுகிறது. ஜெயமோகன்.இன் என்னும் இந்த இணையதளம் தடம் இதழைவிட அளவில் ஏழெட்டு மடங்கு பெரியது. ஆனால் சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிநபர்களின் இலவச உழைப்பைச் சார்ந்து இயங்குபவை. நிதியிழப்பு கொண்டவை. என் தளமும் அவ்வாறே.

இந்தத்தளம் நண்பர்களின் நன்கொடையாலும் இலவச உழைப்பாலும் நடைபெறுகிறது. இன்று வருகையாளர் அதிகம் என்பதனால் இதை நடத்துவதற்கான செலவும் அதிகம். அதை நண்பர்கள் அளிக்கிறார்கள். அவ்வப்போது சிறு கட்டணம் அல்லது நன்கொடை வைப்போம் என எவரேனும் சொல்வார்கள். அழகிய அச்சில், வண்ணப்பக்கங்களுடன், கையில் எடுத்து பார்க்கத்தக்கதாக, பலர் படிக்கத்தக்கதாக, மேஜையில் போடத்தக்கதாக தடம் போன்ற ஓர் இதழ் வரும்போது மாதம் ஐம்பதுரூபாய்க்கு யோசிக்கும் தமிழர்கள் இணையதளத்திற்கா பணம்கட்டுவார்கள் என்று நான் கேட்டதுண்டு. மெனக்கெட்டு அதை பிடிஎஃப் எடுத்து உலவவிட்டு பணம்கட்டாதீர், வாங்காதீர் என பிரச்சாரம் செய்வார்கள். தங்களால் முடிந்த சேவை

தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது

 

https://www.jeyamohan.in/125507#.XWojWC3TVR4

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/31/2019 at 5:41 PM, கிருபன் said:

ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு

அது வசைபாடு அல்ல ,ஒர் அழிக்கப்பட்ட /அழிக்கப்படுகிற இனத்தில் இருப்பவனுக்குதான் இன அழிப்பின்  தாக்கம்  புரியும்....இலக்கியவாதிகள் செய்திகளை படித்து எழுதுவதைவிட அந்த மண்னில் வாழ்ந்து அனுபவித்து இன அழிப்பு பற்றி கருத்து சொன்னால் நல்லது.....ஜெயமோகன் கஸ்மீரிலும் இன அழிப்பு நடைபெறவில்லை என்றே சொல்வார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தையின் தோசைப் பிரச்சினை கடைசியில் என்னவாயிற்று , உந்த ஆளை இலக்கியத்திற்காகவன்றி தோசைக்காகவே என்னால் அடையாளம் காண முடிகின்றது , அது என்னுடைய ' தகுதியை ' காட்டி நிற்கின்றது போலும்  …..😀

 

On ‎8‎/‎31‎/‎2019 at 5:41 PM, கிருபன் said:

.

 

ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். .

தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.

தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது.

. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் பேசவில்லை.

தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது

 

https://www.jeyamohan.in/125507#.XWojWC3TVR4

 

 

மற்றைய மொழிகளில் இந்த விடயம் எப்படி இருக்கின்றது , எல்லா இடங்களிலும் இன்று மின்திரை வாசிப்பு தான் முன்னணியில் இருக்கும்  என நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்ல

ஆர். அபிலாஷ்
 
இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது என்னை பெரிதாய்ஆச்சரியப்படுத்துவதில்லைஉங்களையும் தான்
ஒவ்வொரு இதழ் தொடங்கப்படும் போதும் அதன் நிறுவனர் / ஆசிரியருக்கு ஒரு கணக்கு இருக்கும்இலக்குதேவையின்பொருட்டான கணக்குகள் இருக்கும்சிற்றிதழென்றால் அதுகுழுநடவடிக்கையின் நீட்சியாகவே இருக்க முடியும்குழுநடவடிக்கையென்றால் அரசியல் நடவடிக்கை அல்லஇலக்கிய ஆர்வம்கொண்டோர் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து இதழ்ஒன்றை நடத்துவதுஅதன் வழி நாம் நம்பும் வகையில் இலக்கியதடமொன்றை அமைக்க முயல்வதுஅந்த குழு உடையும் போதோஉறுப்பினர்கள் ஆர்வம் இழக்கும் போதோ இதழ் நின்று போகும்நானேஇரு சிறுபத்திரிகைகளை நண்பர்களுடன் இணைந்து சில மாதங்களில்இருந்து ஒன்றரை வருடம் வரை நடத்தி இருக்கிறேன்இதைப் படிக்கும்உங்களில் சிலர் கூட செய்திருக்க கூடும்நீங்கள் இணைய இதழாகவேநடத்தினால் கூட அன்றாட வாழ்க்கையின் கட்டாயங்களுக்கு மத்தியில்அதை செய்வது ஒரு கட்டத்தில் உங்களை சோர்ந்து போகவே செய்யும்
இது பணம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லையாராவது லாபமோவருமானமோ இல்லை என்பதற்காக குடிசிகரெட் போன்றகேளிக்கைகளை நிறுத்தியதாக கேட்டிருக்கிறீர்களாசூதாடிகள்என்றாவது நிறுத்தி இருக்கிறார்களாஇலக்கிய நாட்டத்திலும் இன்பம்உண்டுஅதிலும் ஒரு மெல்லிய போதை உண்டுஆனால் அதை தக்கவைக்க முடியாமல் பண்ணுவது அதன் தீவிரமும் எண்ண / உணர்வுக்குவிப்பும்ஒரு சிறுபத்திரிகையை ஒருவர் நடத்துவதோஅல்லது குறைந்த பட்சம் அதை படிப்பதில் சிலர் நினைப்பது போலவாசிப்பு ஆர்வம் சம்மந்தமாக அல்லஅது அவரை ஆட்கொள்ளும் ஒருலட்சியம்ஒரு கனவுவெட்டவெளியில் புயல் முன்பு போய் நின்றுஉறுதியை நிரூபிப்பது போலத் தான் இலக்கியத்தில் இருப்பதுவெறுமனே இலக்கிய பத்திரிகை ஒன்றை புரட்டிப் பார்த்து அது குறித்துசிந்திப்பவர்களைக் கூட நான் இவ்வாறே பார்க்கிறேன்நமது அன்றாடவாழ்க்கை சற்றே லகுவாக இருந்துஇப்படி புயலிடம் ஒப்புக் கொடுக்கும்திராணியை தந்தால் தான் நீங்கள் இலக்கியவாதியாக நிலைக்கமுடியும்அல்லாவிடில் அன்றாடத்தை முழுக்க புறக்கணிக்க வேண்டும்
 
தடம்” போன்ற வெகுஜன நிறுவனங்களின் இலக்கிய இதழ்கள் குறித்துஒரு ஐயம் எனக்கு என்றுமே உண்டுஇதே போன்ற பளபளப்பானவண்ணத்தாள்களில் அதிக செலவுடன் அச்சிடப்படும் இலக்கியஇதழ்கள் சிலவற்றில் முன்பு நான் வேலை செய்து விரைவிலே இதழ்நிறுத்தப்பட்டதும் வேலையையும் இழந்திருக்கிறேன் என்பதால் இந்தமுயற்சிகளின் “வணிக நோக்கத்தை” அனுபவ ரீதியாக புரிந்துகொண்டிருக்கிறேன். “தடத்தின்” பின்னணி விபரங்களை அறியேன்என்பதால் நான் இங்கு அது நிறுத்தப்படுவது குறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை. (இது போன்ற சந்தர்பங்களில் ஊகங்களைவிநியோகித்து நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.) 
 
தடத்தின்” நோக்கம் எதுவாகினும் அதன் இலக்கிய “தடத்தை” பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்நல்ல கட்டுரைகள்கதைகள்கவிதைகள்பேட்டிகள் என தரமான இலக்கியத்தை அது நமக்குஅளித்திருக்கிறது. (சில படைப்புகள் அலுப்பு தந்தன என அதைவிமர்சிப்பது ஒரு பெண்ணை முகம் அழகு தான்ஆனால் காலில் உள்ளமயிர்கள் அருவருப்பு என சொல்வதைப் போலஒரு பெண் என்றால்எல்லாமும் தான்.) “தடத்தில்” வரும் கருத்துக்களுக்கு இங்குஉடனடியாக ஒரு தாக்கம்அதிர்வு ஏற்படுவதையும் கவனித்திருக்கிறேன்(தமிழ் ஹிந்துவைப் போல). ஆகையால் அது நடத்தியவர்களைமுதலீடுபண்ணியவர்களைஆசிரியர் குழுவில் இருந்தவர்களை பாராட்டுவோம்அவர்களுக்கு நன்றி சொல்வோம்எதிர்காலத்திலும் எந்த ஒரு இலக்கியஇதழ் விழுந்தாலும் நாம் அதை தொட்டு வணங்க வேண்டும்எச்சில்உமிழக் கூடாதுஇந்த இறுதி விசயத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லிமுடிக்கிறேன்.
 
அராத்துகேபிள் சங்கர் போன்றோர் இந்த இதழை கவைக்கு உதவாதவீண முயற்சி என பேஸ்புக்கில் சித்தரித்து எள்ளி நகையாடுவதன்காரணம் இதழ் மீதான அவர்களின் ஒவ்வாமை அல்லதீவிரமான எந்தஒன்றின்கடுமையான மனக்குவிப்பைஅறிவுழைப்பை கோரும் எதன்மீதும் அவர்கள் கொண்டுள்ள ஒருவித அச்சத்தை தான் தான் இதுகாட்டுகிறதுஇணையத்தில் பரவலாக பகிரப்படும் உடனடிவாசிப்புக்கான எழுத்துக்கள் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது. ( அராத்து இதை “போஸ்ட்மாடர்னிசம்” என்றெல்லாம்நியாயப்படுத்துவது வேடிக்கைபின்நவீனத்துவத்தின் தத்துவப்பின்புலத்தை அறிந்தால் அதை அவ்வாறு அவர் வெற்று கேளிக்கைக்கானமாற்றுச்சொல்லாக பயன்படுத்த மாட்டார்.) இதை அவர்களும்அறிவார்கள்ஆனால் அந்த புரிதலில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும்எஸ்கேபிஸ்டுகள் இவர்கள்பேய் நேரில் வந்தால் கூட சிரித்துகைகுலுக்கி கொள்வார்கள்ஆனால் தம் மனம் இசையிலோஇலக்கியத்திலோ கலையிலோ தெரியாமல் சில நொடிகள் ஆழமாகலயித்து விட்டால் உடனடியாக அந்த இடத்தை விட்டே ஓடி வந்துவிடுவார்கள் என நினைக்கிறேன்இருவரும் வெளிப்படுத்தும் இந்தஇலக்கிய விரோதம் ஒரு சுயவிரோதம் தான்ஒரு காகிதம் காற்றில்படபடத்துக் கொண்டே இருக்கிறதுஅது தன்னை சுற்றி அமைதியாகவீற்றிருக்கும் பொருட்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறது. “பார் நான்எடையற்று எவ்வளவு ஜாலியாக இருக்கிறேன்” என சீண்டுகிறதுஆனால்அப்படி எடையின்றி இருப்பதே தான் பறந்து காணாமல் போய்விடுவோமோ எனும் பதற்றத்தை அவர்களுக்குள் உண்டு பண்ணுகிறதுஅதுவே காற்றில் படபடக்க வைக்கிறதுதாம் உள்ளுக்குள் நிலையின்றிபடபடக்க பக்கத்தில் உள்ளவர்கள் மீது கோபம் திரும்புகிறதுஇந்தகோபம் இலக்கியம் வாசிப்பவனை நோக்கி  “பேட்டிக் கொடுத்துபோட்டோ போட்டதினால் ஒரு காப்பி வாங்கியவர்கள்”, “கதை கட்டுரைவெளியாகி தானும் ஒர் ”முக்கிய” மானவர்களில் முக்கியமானவர் என்றுசொல்லிக் கொள்ள” முனைபவன்,
இலக்கியத்துக்காகவே உயிர்வாழ்பவன் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் சூடோ மனப்பான்மை கொண்டவர்கள்.” என்றெல்லாம் காறிஉமிழ வைக்கிறது.
 இப்படி யோசிக்கும் படி தள்ளப்படுவது ஒரு பரிதாப நிலை என்பதேஉண்மை.
 
வெகுஜன துய்ப்புக்கு பயன்படாத எதுவும் தேவையில்லை என்பதேஇவர்கள் சொல்வதன் சாராம்சம்எனில் நீங்கள் இன்று கொண்டாடும்எந்த படைப்பாளியும் இசைக்கலைஞனும் சினிமா படைப்பாளியும்தோன்றியிருக்க முடியாதேவெகுஜன துய்ப்பின் உரத்தைகாலங்காலமாக அளிப்பது தீவிரமான கலை செயல்பாடுகள் தாம்தீவிரமான, “நான்கு பேர் மட்டும் புழங்கும்” கலை முயற்சிகள்அழித்தொழிக்கப்பட்டால் அதற்கடுத்து அழிவது வெகுஜனகலைகளாகவே இருக்கும்
 
 
ஆகையால் இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள்நிறுத்தப்படுவது மட்டுமல்ல (நான் தடத்தை மட்டுமே சொல்லவில்லை). அது நம் மொழி வெளிப்பாட்டின் அடிவேர் ஒன்றை அசைப்பதுமரம் வேறுவேர் வேறு அல்லமரத்தின் கிளைகளில் அமர்ந்து வேடிக்கைபார்ப்பவர்கள்கனிகளை உண்பவர்கள்விழுதுகளில் ஊசலாடுபவர்கள்இதையும் யோசிக்க வேண்டும்
 

 

http://thiruttusavi.blogspot.com/2019/08/blog-post_29.html?m=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து என்ன ஆகும்?

வா. மணிகண்டன்

விகடன் குழுமத்திலிருந்து தடம், சுட்டி உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டார்கள். விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் என்பதால் இந்தச் செய்தி சமூக வலைத்தளப் பரப்பில் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நிறுத்தப்பட்ட பத்திரிக்கைகளும் இதழ்களும் எந்தச் சலனத்தையும் எங்கேயும் உருவாக்குவதில்லை.  எதுவுமே நடக்காதது போல இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தடம் நின்று போவதாலும் அல்லது வேறு சில பத்திரிக்கைகள் நின்று போவதாலும்  ‘இலக்கியமே காலி’ என்றெல்லாம் எதுவுமில்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதத்தை நாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இலக்கியம், வியாபாரம், கார்போரேட் என்ற எல்லாவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும், சச்சரவுகளையும் தாண்டி கடந்த சில பத்து ஆண்டுகளாக உயர்ந்து வந்த வாசகர்களின் எண்ணிக்கை இனிமேல் படிப்படியாகக் குறையும் என்றுதான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான வாசகர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்- வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்களை மல்ட்டி மீடியா கபளீகரம் செய்கிறது.

இது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக, வாசிப்பு என்பது சற்றே பொறுமை தேவைப்படுகிற செயல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எழுத்து வழியாகவே ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழலை இப்பொழுது தொழில்நுட்பம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. பல கிராமத்துப் பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டன. QR கோடு கொண்டு திரையில் பாடம் நடத்துகிறார்கள். நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு iPad கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் கூகிளிலும், யூடியூப்பிலும் பாடங்களைப் படிக்கிறார்கள். எழுத்தின் அவசியம் பள்ளிகளிலேயே குறையத் தொடங்கிவிட்டது. 

வளரும் தலைமுறை என்று மட்டுமில்லை. வயதில் மூத்தவர்களும் அப்படித்தான். எழுத்துக் கூட்டி படிப்பதற்கான பொறுமையை பலரும் இழந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் அல்லது ரயிலில் அல்லது இழவு வீட்டில் கூட கவனித்துப் பார்த்தால் பத்துப் பேரில் எட்டுப் பேர்களாவது கண்களை செல்போனில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்போனில் கூட வாசிப்பதில்லை. உருட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்வைப்பிங் மட்டும்தான். அதுவும் நிழற்படங்கள் அல்லது சலனப்படங்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்து அம்மா, மாமனார், தாய் மாமன் என்று அறுபதைத் தாண்டிய பலரும் யூடியூப் வீடியோக்களிலும் வாட்ஸாப் வீடியோக்களிலும்தான் தலையைக் கொடுக்கிறார்கள் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது. 

வாசிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்ட அல்லது வாசித்தால்தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழலில் அச்சுத்துறை மட்டுமில்லை- எழுத்தின் எந்த வடிவமும் அடி வாங்கத்தான் செய்யும். எழுத்தில் வாசிப்பதை விட ஒரு வீடியோவில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்கிற மனநிலை வந்த பிறகு ஏன் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 

வார இதழ்களில் கூட பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்பொழுதோ வந்துவிட்டது. நிறையப் படங்கள், துணுக்குகள் என்று எழுத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டார்கள். செய்தித்தாள்களுக்கு வேறொரு பிரச்சினை- எந்தச் செய்திக்கும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அடுத்த நாள் செய்தித்தாள் அச்சாகி வந்ததைப் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அதே போல, கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகள் மிக இலாபம் ஈட்டித் தந்தன. இப்பொழுது எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள். ஒரு வருடம், இரு வருடங்கள் என்றால் சரியாகிவிடக் கூடும் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக பல வருடங்களாக மந்தமாகவே இருக்கிறதென்றால் உள்ளூர வேறு என்னவோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இல்லையா?

இப்படி பல்வேறு நெருக்கடிகளும் இன்னல்களும் எழுத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கக் கூடியவர்களின் பரப்பு பனிப்பாறைகளைப் போல சுருங்கி வருகிறது.

ஃபேஸ்புக்கில் எழுத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட படங்களுக்குத் தான் தருகிறார்கள். வெறும் 140 எழுத்துகள்தான் என்பதால் ட்விட்டர் தப்பித்திருக்கிறது. இணையப் பத்திரிக்கைகளும் வீடியோ கண்டெண்ட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் ‘அடித்த கணவன்... மனைவி என்ன செய்தால் தெரியுமா?’ என்று கொக்கி போட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பிலும் கூட ஆன்லைன் பாடங்கள் முழுக்கவும் வீடியோ கண்டெண்ட்டாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் எழுத்துகள் வாசகப்பரப்பில் தலைப்புகளுக்கும், அதிகபட்சமாக சப்டைட்டிலுக்கும் மட்டுமே தேவைப்படக் கூடிய வஸ்தாக மாறிவிடக் கூடும். 

எழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால் என்ன விதமான இழப்புகள் உண்டாகக் கூடும் என்று பெரிய அளவில் யோசிக்க முடியவில்லை. காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்? 

 

http://www.nisaptham.com/2019/08/blog-post_31.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:47 AM, கிருபன் said:

காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்? 

 

நம்ம ஜெயமோகனுக்கு இது தெரியாமல் போய்விட்டதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.