Jump to content

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.4-7

யாழ்.வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/முக்கிய-செய்திகள்/யாழ்-வடமராட்சி-கப்பூதூவெ/

Link to comment
Share on other sites

‘ஆறாயிரம் ஏக்கர் உவர் நிலங்களாக மாறியுள்ளது’

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியுள்ளதாக விவசாய  அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசம் தொன்மையான ஒரு பிரதேசமாகக் காணபபட்டாலும் அங்கு குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.

கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணமாக  அமைந்துள்ளது.

பூநகரிப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறிறுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் உவர் நீர்த் தடுப்பணைகள் பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டமையால் பூநகரிப் பிரதேசத்தைச் சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.

இதனால் கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியிருப்பதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உவர் நீர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப் பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழை நீரைத்தேக்குவதன் மூலம், நிலங்களின் உவர்த்தன்மையைப் போக்கி, விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/ஆறாயிரம்-ஏக்கர்-உவர்-நிலங்களாக-மாறியுள்ளது/72-237646

Link to comment
Share on other sites

ஜம்புக்குளத்தைக் காணவில்லை

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கோரக்கன்கட்டு பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்ட சிறிய குளமான ஜம்புக்குளம், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் ஒருவரால் கனரக வாகனங்கள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது.

குறித்த குளமானது, இந்தப் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் ஓர் குளமாகக் காணப்பட்டதுடன், குளத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளிலும் நன்னீர் காணப்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த குளத்தை தனி நபரொருவர் ஆக்கிரமித்து, அதனை முழுமையாக அழித்து, மண் நிரவி மூடியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில், கால்நடைகளுக்கான நீர் இல்லாமல் போவதுடன், அருகிலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமெனவும், அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில், கமநலசேவை நிலையம், மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/ஜம்புக்குளத்தைக்-காணவில்லை/72-237744

Link to comment
Share on other sites

’வரட்சி நீடித்தால் நீர் விநியோகத்தில் சிக்கல் வரும்’

 

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது, இரண்டு நாள்களுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும் கூறியுள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, நீர்நிலைகளில் நீர் வற்றியதால், குடிநீருக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக, கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த சபையினர்,. அதிகளவு பாசி காணப்படுவதால் நீரின் நிறமும் மாற்றமடைந்துள்ளதாகவும் கூறினர்.

இதனால், நாளொன்றுக்கு, 700 மீற்றர் கீயூப் நீரைச் சுத்திகரித்து வழங்கி வந்த நிலைமை மாறி, தற்போது சுமார் 350 மீற்றர் கீயூப் நீரையே சுத்திகரித்து வழங்க முடிவதாகக் கூறிய சபையினர், தம்மால் 14 கிராம அலுவலர் பிரிவுகளுக்கே, குழாய் வழி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறதெனவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும், சபையினர் மேலும் கூறினர்.

http://www.tamilmirror.lk/வன்னி/வரட்சி-நீடித்தால்-நீர்-விநியோகத்தில்-சிக்கல்-வரும்/72-237745

Link to comment
Share on other sites

திட்டங்களை முறையாக முன்னெடுத்தால் அருமையான திட்டங்களாக அமையும்.

Link to comment
Share on other sites

On 8/31/2019 at 7:59 PM, கிருபன் said:

கப்பூதூவெளி

இப்ப தான் இந்த பேரை கேக்கிறேன்.
அப்பிடி ஓர் ஊர் இருக்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

இப்ப தான் இந்த பேரை கேக்கிறேன்.
அப்பிடி ஓர் ஊர் இருக்கோ?

இது என்னுடைய  கிராமத்துக்கு பக்கத்து கிராமம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இது என்னுடைய  கிராமத்துக்கு பக்கத்து கிராமம்

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

பால்ய விவாகம் அப்ப நடக்கிறதோ அண்ணை?!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

15056311-1307992399245793-90202839557694

மை மைன்ட் வாய்ஸ்  என்னத்த சொல்ல இந்த மனுசனுக்கு மச்சம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

கப்பூதுவில கேட்டா வேறை மாரிச் சொல்லீனம்? 😂.

நானும் இந்த ஊருக்கு போனதில்லை, சாவச்சேரியில் இருந்து சரசாலை, நுணாவில் வழியே பருத்துறை போற வழியில் இருக்குதாம்?

இந்த திட்டம் பற்றி மேலும் தகவல் இருந்தால், பகிரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2019 at 11:47 AM, ஏராளன் said:

பால்ய விவாகம் அப்ப நடக்கிறதோ அண்ணை?!😊

ஏன் என்னைப்பாக்க என்ன மாதிரி தெரியுது? 😁

On 9/4/2019 at 6:05 PM, தனிக்காட்டு ராஜா said:

15056311-1307992399245793-90202839557694

மை மைன்ட் வாய்ஸ்  என்னத்த சொல்ல இந்த மனுசனுக்கு மச்சம் தான் 

இப்பவும் எனக்கு பின்னாலை மகளிர் கூட்டம் அலையுது எண்டு சொன்னால் நம்பவே போறிங்க ராசா? 😎

On 9/4/2019 at 6:59 PM, goshan_che said:

கப்பூதுவில கேட்டா வேறை மாரிச் சொல்லீனம்? 😂.

அங்கத்தையான் சனம் பொய் சொல்லுற சனம்....அதாலைதான் நான் வேண்டாம் எண்டனான் :cool:

Link to comment
Share on other sites

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்! 

கலிகைச் சந்தில இருந்து ஒரு 6, 7 km தூரத்துல இருக்காம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.