Jump to content

``இலங்கை மன்னார் புதைகுழிகளின் கார்பன் டேட்டிங் தவறானது!” - தடயவியலாளரின் நேரடி அனுபவம்


Recommended Posts

155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கிபி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்பட்டது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜெனிவா உச்சி மாநாடு கடந்த மார்ச் மாதம் 26 அன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் ஒருவர்.

 

1990 முதல் 2009 வரை இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் புதைகுழிகளின் மர்மம் குறித்தான தனது ஆய்வுகள் குறித்து உச்சி மாநாட்டில் மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷும் பேசியிருந்தார். மன்னார் பகுதியில் 2013 டிசம்பர் 20-ம் நாள் குடிநீர்த் திட்டத்திற்காக நீர்க்குழாய்கள் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டியபோது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரத்தினத்தின் உத்தரவின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 155 நாள்கள் நடைபெற்ற ஆய்வில் 325 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் கார்பன் டேட்டிங் அறிக்கையின்படி, அவை கி.பி 1499 முதல் கி.பி 1719 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கணக்கிலிடப்பட்டது. இந்த இலங்கை மன்னார் புதைகுழிகளில் தாம் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம் குறித்தும் மருத்துவர் சேவியர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”அனைத்துலக ஈழத்தமிழர் உரிமைச் சங்கம் அழைப்பின் பெயரில் அவர்களது குழுவுடன் ஒருவருடத்துக்கு முன்பு சென்று போருக்குப் பின் இலங்கையில் உள்ள சூழ்நிலையைப் பற்றிய சமநிலை கண்காணிப்பை நிகழ்த்தினோம். மன்னார் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று மன்னார் புதைகுழி ஆராய்ச்சியைப் பார்வையிட்டோம். மன்னாரில் ஓரிடத்தில் கட்டடம் கட்ட தோண்டப்பட்டபோது மனித உடல் புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு ஆய்வுசெய்யும் நிலை உருவானது.

இது மாதிரியான ஆய்வுக்குக் குறைந்தபட்சம் 10 அடி தூரமாவது எலும்புகள் இல்லை என உறுதியான பின்தான் புதைகுழி ஆய்வு வரைமுறை செய்ய வேண்டும். ஆனால் மன்னாரில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. புதிதாகப் போடப்பட்ட சாலையில் ஒரு பக்கம் ராணுவ முகாம், மறுபக்கம் மனித எலும்புகள் அந்தச் சாலையின் விளிம்பிலேயே வெளியே தெரிகின்றன.

 

இலங்கை அரசு வெளியிட்டுள்ள கார்பன் டேட்டிங் அறிக்கையும் தவறானது. குற்றம் புரிந்தவர்களே குற்றத்தை விசாரிப்பது உலகத்தில் எங்கும் நடக்காதது. தடயவியல் துறை சார்ந்த ஒருவர், தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒருவர் எனப் பயிற்சியற்ற இருவர் மட்டுமேயான குழு நடத்தும் புலன்விசாரணை நிறுத்தப்பட்டு, ஐ.நா. சபை மூலம் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தடயவியல் முறையில் ஒருவர் பல்லைவைத்தே அவரது பிறந்த தேதியைச் சொல்ல முடியும் எனும்போது இவர்களது அணுகுமுறை வெறும் கண்துடைப்பே. எடுத்த எலும்புகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆறு எலும்புகளை மட்டுமே ஆரய்ச்சிக்கு அனுப்புகிறார்கள். பிரமிடுகளின் வயதைக் கணக்கிடும் தொல்லியல் ஆராய்ச்சி முறையைப் பின்பற்றி, எலும்புகளை ஆராய்ந்து ஓர் எலும்பு 210+/-30 வருடங்கள் என்றும் மற்றோர் எலும்பு 320+/- 30 என்றும் கூறுகிறார்கள்.

குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் ஆபரணங்கள், பிஸ்கட் கவர்கள், குழந்தைகளின் எலும்பைச் சுற்றியுள்ள இரும்புச் சங்கிலிகள் போன்றவை பறைசாற்றுகின்றன.

போஸ்னியா, உகாண்டா போன்ற நாடுகளில் நடந்தது போன்று சர்வதேச விசாரணை நடத்தி இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கப் போராட வேண்டும். இலங்கையில் போராட்டம் காந்தி வழியில் தொடங்கி ஆயுதப் போராட்டத்தில் முடிந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை தவிர்த்து மத்திய அரசிடம் ஈழத்தமிழர்களின் நலனுக்காக அழுத்தம் கொடுக்கவேண்டும். இங்கிருந்து அங்கு நடிகர்கள், பாடகர்களைக் கூட்டிச் சென்று விழா எடுக்கிறோம் என்றில்லாமல் ஈழ மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இலங்கையில் வடகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகள் எல்லாம் சீன மயமாகி உள்ளன.

சீன ஆக்கிரமிப்பை அடுத்து, சாலையறியா ஊர்களில் எல்லாம் சாலை போட்டுள்ளது பற்றி ஒரு பல்கலைக்கழக மாணவரிடம் விசாரித்த போது, 'இந்த ரோடு எங்களைத் திட்டமிட்டு அழித்தவர்கள் வருங்காலத்தில் தப்பி ஓடுவதற்காகப் போடப்பட்டது' என்று குமுறுகிறார். தமிழர்களின் நிலங்கள் ராணுவ முகாம்களாக உருமாறியுள்ளன. தமிழ்ப் பெண்கள் போருக்கு முன்பு இரவிலும் பயமின்றி வெளியில் சென்று வந்ததாகவும், போருக்குப் பிறகு பகலில் பேருந்தில் சென்றாலும் ராணுவத்தினர் அருகில் அமர்ந்து தூங்கி விழுவதுபோல் பாசாங்கு செய்யும் கொடுமையும், ராணுவத்தினர் தனியாக வாழும் பெண்களை போன்களில் அழைக்கும் இழிநிலையும் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

அவர்கள் இந்திய ராணுவம் செய்த பாலியல் வன்முறையை மறக்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாகக் கருதாமல் அவர்கள் தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவே இலங்கை ராணுவம் கொல்வதை இந்திய அரசு தட்டிக் கேட்காவிட்டால், பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியா இழக்க நேரிடும். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கனடா, சுவிட்சர்லாந்து, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நல்ல வாழ்வாதாரத்தில் வாழ்கிறார்கள்.

அவர்களின் குழந்தைகளும் தமிழ் மணம் மாறாமல் பேசுகிறார்கள். பிற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நல்லபடியாக இருக்கும்போது தொப்புள் கொடி உறவெனச் சொல்லப்படும் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது.

அகதிகளாய் வந்தவர்கள் அகதிகளாய்த்தான் வாழ்கிறார்கள். உலகச் சமூகம் இந்தக் கருவறுப்புக்கு உதவியுள்ளது. இந்தக் கருவறுப்பு தமிழினத்துக்கு ஏற்பட்டதல்ல. மனிதகுலத்துக்கு ஏற்பட்டது” என்றார்.

https://www.vikatan.com/government-and-politics/international/mannar-mass-grave-on-the-tenth-year-anniversary-of-eelam-massacre

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் ஆபரணங்கள், பிஸ்கட் கவர்கள், குழந்தைகளின் எலும்பைச் சுற்றியுள்ள இரும்புச் சங்கிலிகள் போன்றவை பறைசாற்றுகின்றன.

இவை அனைத்தும் இந்த படுகொலைகள் கடந்த 30 வருடத்துக்குள் நடந்தவை  என்றும், இந்த படுகொலைகள் ஸ்ரீலங்கா சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் செய்யப்பட்டவை என்றும் உறுதிப்படுத்துகின்றன.

மேலும் இந்த படுகொலைகளை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் மறைக்க எடுத்த முயற்சிகள்  மூலமும் அவர்களே கொலைகாரர்கள் என்பது உறுதியாகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.