Jump to content

பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?


Recommended Posts

பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?

Palaly_Airport-300x200.jpgதற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.

இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது.

வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

இதனை இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேரகாலத்துடனேயே ஆரம்பித்திருக்க முடியும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015இல் இலங்கைக்கு வந்திருந்த போதே, பயணிகள் கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஆகியன தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், இந்த திட்டத்தில் கை வைத்திருக்கிறது.

ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், செப்ரெம்பரில் தென்னிந்தியாவுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது.

ஒரே மாதத்தில், ஓடுபாதை விரிவாக்கம், விமான நிலைய முனைய வசதிகள், சுங்க, குடிவரவுப் பகுதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்பாமலேயே இவ்வாறான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.

எனினும், கடந்தவாரம் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக ஆராயும் வகையில், அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில், ஒக்ரோபர் 15ஆம் திகதி, விமான நிலையத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது,

அதற்குள்ளாகவே குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, ஓடுபாதை விரிவாக்கம், ஏனைய வசதிகள் செய்து முடிக்கப்படுமா என்ற கேள்விகள் ஒரு புறத்தில் இருக்க, இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதும் இங்கிருந்து சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமா- இது வடக்கிலுள்ள மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்குமா என்பதும் சந்தேகமாகத் தான் உள்ளது.

ஏனென்றால், பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்தாலும், ஓடுபாதை நீளம் மற்றும் அங்குள்ள வசதிகள் கருதி, ஏ-320 போன்ற பெரிய பயணிகள் விமானங்களை இப்போதைக்கு தரையிறக்க முடியாது.

இத்தகைய விமானங்கள் தான், தொலைதூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்னர் தான், இங்கிருந்து தொலைதூரப் பயணங்களைப் பற்றி சிந்திக்க முடியும். அதுவரை குறுந்தூர விமான சேவைகள் தான் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த குறுந்தூர விமான சேவைகள் வெற்றிகரமானதாக அமைந்தால் மட்டுமே, அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளும், அதன் மூலம் தொலைதூர விமான சேவைகளும் சாத்தியப்படும்.

இல்லாவிடின், வணிக வாய்ப்பு இல்லை என்று கூறி, மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது போல, மீண்டும் பலாலி விமான நிலையம், விமானப்படையின் விமானத்தளமாகவே மாறி விடும்.

எனவே, பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக திறக்கப்படும் போது, அது சாத்தியமானளவுக்கு வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமைய வேண்டும்.

அவ்வாறு வணிக ரீதியாக சாத்தியமான ஒரு இடமாக, அடையாளப்படுத்தப்படாமல் போனால், பலாலியின் சர்வதேச விமான நிலைய கனவு கருகி விடும்.

இந்த திட்டம்  கைவிடப்பட்டால், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, வடக்கிலுள்ள மக்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

ஏனென்றால், வடக்கில் உள்ள மக்கள், 6 மணித்தியாலங்களைச் செலவிட்டே, கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

கட்டுநாயக்கவில் இருந்து 45 நிமிடங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களை சென்றடைந்து விட முடியும். ஆனால் அந்தப் பயணத்துக்காக, வடக்கிலுள்ள மக்கள்  அதைவிட  எட்டு மடங்கு நேரம் தரைவழிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டால், வடக்கிலுள்ள மக்களுக்கு நேரச் செலவும், பணச் செலவும் மிச்சமாகும். அதுமாத்திரமன்றி, தரைவழிப் போக்குவரத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்பிக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருந்து வந்து வடக்கிற்கு சென்ற – அங்கு பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திரும்பிய பலர், அல்லது அவர்களை வரவேற்க, வழியனுப்பச் சென்ற பலர் அண்மைக்காலங்களில் அதிகளவில் விபத்துக்களில் சிக்கியிருக்கின்றனர்.

பலாலி விமான நிலையம் ஊடாக பயணங்கள் இடம்பெற்றால், இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.

பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், 90இற்கு உட்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களையே சேவையில் ஈடுபடுத்த முடியும்.

இப்போதைக்கு பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்க இந்தியாவின் இரண்டு விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எயர் இந்தியா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘அலையன்ஸ் எயர்’ நிறுவனமும், இந்தியாவில் அதிகளவு பயணிகளைக் கையாளும் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இன்டிகோ’வும், பலாலிக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களிடம், பலாலிக்கான பயணங்களை மேற்கொள்ளக் கூடிய, 72 ஆசனங்களைக் கொண்ட ATR 72-600 விமானங்கள் இருக்கின்றன என்பது முக்கியமான அம்சம்.

இவ்வாறான விமானங்களின் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியும். அது வணிக ரீதியாக வெற்றிகரமானதாக அமையும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பித்தால், அது வடக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது,

தமிழகத்துக்கும் வடக்கிற்கும் இடையில் மொழி, இன, கலாசார ரீதியான நெருக்கமான பிணைப்பும், தொடர்புகளும் உள்ளன. அதைவிட சுற்றுலா, ஆலய தரிசனம், திருமணம் போன்ற விழாக்கள், மாத்திரமன்றி பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட வணிக ரீதியான தேவைகளுக்காகவும் நாளாந்தம் வடக்கில் இருந்து பெருமளவானோர் தமிழகம் சென்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுவே, வடக்கிலுள்ள மக்களுக்கும், பலாலி விமான நிலையத்தின் வணிக ரீதியான வெற்றிக்கும் உதவியாக அமையும்.

ஆனால், தமிழகத்துக்கான நேரடி விமான சேவைகள் எதுவும் பலாலியில் இருந்து இப்போதைக்கு ஆரம்பிக்கப்படப் போவதில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளே முதற்கட்டமாக பலாலியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

இந்த விமான சேவைகள், வடக்கிலுள்ள மக்களுக்கோ அல்லது, சுற்றுலாத் துறைக்கோ பயனுள்ளதொன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

வடக்கைப் பொறுத்தவரையில் சுற்றுலாத்துறை வளரவில்லை. இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் படி பிரசாரப்படுத்தப்படவில்லை. சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இருந்து, பலாலிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோலவே, இந்த நகரங்களுக்கும் வடக்கிற்கும் தொடர்புகள் அரிது.

எனவே, வடக்கிலுள்ள மக்களும் இந்த சேவைகளால் பயனடைய முடியாது. இது கடைசியில் பலாலி விமான நிலையம் வணிக ரீதியாக வெற்றிகரமானது அல்ல என்று முத்திரை குத்தப்படுவதற்கே வழிவகுக்கும்.

வடக்கில் உள்ள மக்களுக்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்ற அரசாங்கம், பலாலியில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவைகளை நடத்த தயங்குவது ஏன் என்ற மிகப் பெரிய கேள்வி உள்ளது,

பலாலி விமான நிலையத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருவாய் குறைந்து விடும், சிறிலங்கன் விமான சேவையின் வருமானம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இதில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படும் காரணம் வலுவானதல்ல. ஏனென்றால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானமும், பலாலியின் வருமானமும், ஒரே பொதிக்குள் தான் சென்றடையும். எனவே, ஒன்றில் ஏற்படும் இழப்பு இன்னொன்றினால் நிரவப்படும்.

ஆனால், அடுத்த காரணியான சிறிலங்கன் விமான சேவையின் வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சம் நியாயமானது. சிறிலங்கன் விமான சேவை தினமும் சென்னைக்கு நான்கு சேவைகளையும், திருச்சிக்கு இரண்டு சேவைகளையும், கோயமுத்தூர் மற்றும் மதுரைக்கு தலா ஒரு சேவைகளையும் நடத்துகிறது. இவை அதிகபட்ச வருமானத்தைக் கொடுக்கின்ற சேவைகள்.

அதுமாத்திரமன்றி, சிறிலங்கன் விமான சேவை திருச்சி, சென்னை, மதுரை, கோவையில்  இருந்து மத்திய கிழக்கிற்கான பயணிகளையும் ஏற்றி வந்து கொழும்பு ஊடாக  அனுப்புகிறது.

பலாலியில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், சென்னை, திருச்சி, மதுரை, கோவைக்கான சிறிலங்கன் விமான சேவையின் பயணங்கள் நிச்சயமாக குறையும். அது அதிக வருவாயுள்ள இடங்களை இழப்பதற்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கிற்கான Transit பயணிகளை ஏற்றி வர முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.

அதனை விட, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, இடங்களில் இருந்து சிறிலங்கன் விமான சேவையில் பயணம் மேற்கொள்பவர்கள் கூட, சென்னை வழியாக பலாலிக்கான பயணத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடும். அதுவும் சிறிலங்கன் விமான சேவையின் வருமானத்தைப் பாதிக்கும்.

சரி, அவ்வாறாயின், பலாலிக்கான சேவைகளை சிறிலங்கன் விமான சேவையே ஆரம்பிக்கலாமே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

சிறிலங்கன் விமான சேவையிடம் 90 பயணிகள் வரை ஏற்றக்கூடிய சிறிய விமானங்கள் இல்லை. அதனிடம் இருப்பது, நடுத்தர உடலமைப்பைக் கொண்ட A-320/ A-321 ரகத்தைச் சேர்ந்த 13  விமானங்களும், நீண்ட உடலமைப்பைக் கொண்ட A-330 ரகத்தைச் சேர்ந்த 13 விமானங்களும் தான் இருக்கின்றன.இவை பலாலியில் தரையிறங்க முடியாது.

பலாலியில் இருந்து சேவையை நடத்த வேண்டும் என்றால், சிறிய ரக விமானங்களை சிறிலங்கன் நிறுவனம் குத்தகைக்குப் பெற வேண்டும் அல்லது கொள்வனவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை அதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகம்.

இந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு வருமானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், பலாலி விமான நிலையத்தை, வடக்கிலுள்ள மக்களுக்கான திட்டமாக கூற முடியாது.

கொடுப்பது போல கொடுத்து, பறிப்பது போல பறிப்பது என்று சொல்லவார்களே அதுபோலத் தான், அரசாங்கம் நடந்து கொள்கிறது.

அவ்வாறாயின், பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம், என்று தேர்தல் பிரசாரங்களில் ஆளும்கட்சியினர் கூறிக்கொள்வதற்கு மாத்திரமா இந்த திட்டம் இருக்கப் போகிறது?

-என்.கண்ணன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா?

Palaly_Airport-300x200.jpg

இதனை இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேரகாலத்துடனேயே ஆரம்பித்திருக்க முடியும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015இல் இலங்கைக்கு வந்திருந்த போதே, பயணிகள் கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் ஆகியன தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், இந்த திட்டத்தில் கை வைத்திருக்கிறது.

அரசின் செயல்களைப்  பார்க்க, தேர்தல் காலத்தை மனதில் வைத்தே.. 
இந்தத் திட்டத்தை  கையில் எடுத்துள்ளார்கள் போலுள்ளது.   
கூட் டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும்... 
ஆரம்பத்தில் இருந்தே அழுத்தம் கொடுக்காமல் இருந்ததும் பெரிய பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கூட் டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும்... 
ஆரம்பத்தில் இருந்தே அழுத்தம் கொடுக்காமல் இருந்ததும் பெரிய பிழை.

  தெரியாமல் கேக்கிறன்  அதுகள் எப்ப எந்த வேலையை ஒழுங்காய் செய்ததுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

  தெரியாமல் கேக்கிறன்  அதுகள் எப்ப எந்த வேலையை ஒழுங்காய் செய்ததுகள்?

ஒரு ஜனாதிபதியை.... வீட்டிற்கு கூப்பிட்டு, 
குமர்ப் பிள்ளைக்கு..... பிறந்தநாள் விழா கொண்டாடினது, லேசுப்பட்ட வேலை இல்லையே...  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

போர் முடிந்து 10 வருடமாகியும் யாழ்-கொழும்பு ஒரு நெடுஞ்சாலை போட முடியவில்லை.உலக நாடுகள் கொடுத்த பணத்தை எல்லாம் சிங்கள தேசங்களுக்கு செலவு செய்து அழகு பார்க்கிறார்கள்.

யாழுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் எத்தனையோ வீதிவிபத்துக்கள் எத்தனையோ உயிர்கள் கொல்லப்படுவதை தவிர்த்திருக்க முடியும்.
  
    மூலைமுடுக்குகளில் நின்று பணம் பறிக்கும் காவல்துறையினரின் கெடுபிடியும் குறைந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு - புத்தளம் - மன்னார் கரையோரமாக யாழப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை அல்லது A தர வீதி போடப்பட்டால் பயண தூரமும் நேரமும் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. தமிழ் நாட்டுக்கு விமானசேவை செய்யாமல் தனியே ஏனைய நகரங்களுக்கு செய்வது, பலாலியை லாபகரமில்லாததாக்கும் என்பது சரியே. மத்தளவுக்கும் பலாலிக்கும் உள்ள வித்தியாசம், மாத்தறையில் இருந்து 2.45 மணியில் கட்டுநாயக்க வந்திடலாம் (E1, E2 expressways). ஆகவே மத்தளையில் இருந்து பயணிக்கும் கேள்வி (டிமாண்ட்) இல்லை. ஆனால் பலாலி-சென்னை/திருச்சி க்கு இந்த கேள்வி அமோகமாக உண்டு. தற்போது யாழில் இருந்து சென்னையின் புறநகர் (நீலாங்கரை) போவதாயின் door-to-door (யாழ்-கட்டுநாயக்க 7, செக்கின் 3, பறப்பு 0.50, பொதிகளை எடுத்தல் 1, சென்னையில் பயணம் -0.45) கிட்டத்தட்ட 13 மணதியாலம் எடுக்கும். இதுவே பலாலியில் இருந்து போனால் 6 அல்லது 7(யாழுக்குள் 1, செக்கின் 2, பறப்பு 0.35, பொதி1, சென்னையுள் 0.45) .  கட்டுநாயக்கவுக்கு ஆகும் வான் செலவில். பலாலி-சென்னை டிக்கெட்டின் கணிசமான அளவை செலுத்தலாம். எனவே குறைந்தது கிழமையில் 4 நாளுக்காவது சென்னைக்கு பறக்கும் அளவுக்கு கேள்வி இருக்கிறது.

2. விமானம் ஓடப்போவது தனியார் நிறுவனங்கள், அவை லாப அடிப்படையில் தீர்மானித்தால், தீர்மானிக்க விட்டால் - சென்னை, திருச்சிக்கு கட்டாயம் சேவை இருக்கும்.

3. இவற்றை அரசு தடுத்தால் - வேணும் என்றே - பலாலியை they are setting up to fail என்றே கொள்ளவேண்டும்.

4. E04 - நெடுஞ்சாலையில், கண்டிக்கான ரோட் பிரிந்தாலும், அந்த நெடுஞ்சாலை குருநாகல், தம்புள்ள வரை செல்லும் என்பதே திட்டம். இந்த நெடுன்சாலையின் வேலைகள் இப்போ இரெண்டாம் கட்டத்தில். தம்புள்ளயில் இருந்து வடக்கு நோக்கி Northern Expressway போடும் திட்டம் உண்டு. ஆனாலும் இது யாழ்-கட்டுநாயக்க  பயணத்தை 7 இல் இருன்ந்து 5 ஆக்கும். அவ்வளவே

5. கரையோரமாக வடக்கு நெடுஞ்சாலை அமைந்தால், புத்தளம், மன்னார் ஆகிய இரு முக்கியமற்ற நகர்களை மட்டுமே இணைக்கும். மிகுதி எல்லாம் காடும், தரவையும். குருநாகலில் இருந்து போனால், தம்புள்ளை ( பிரிந்து கிழக்கு நெடுஞ்சாலை, வழியே பொலன்னறுவை, மட்டு, திருமலை), அனுராதபுரம், வவுனியா, மாங்குளம்(முல்லை), கிளிநொச்சி என நகர்களையும், பல மாவட்டங்களும் இணைக்கப்படும். மேலும் ஏலெவே வில்பத்து காட்டை ஊடறுத்து போகும் வீதி, சட்டவிரோத வீதி எனும் வழக்கு வேற இருக்கு.

6. மதுரைக்கு இன்னும் சர்வதேச அந்தஸ்து இல்லை என நினக்கிறேன்.

மன்னிக்கவும், மதுரை-கொழும்பு, சிங்கப்பூர் ஓடுதாம். 2008 இல் போனபோது திருச்சி போய்த்தான் போகவேண்டி இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.