Jump to content

காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

pro-720x450.jpg

காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும்  இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் அவ்வப்போது போராட்டங்களும் பேரணிகளும் நடந்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/காஷ்மீர்-விவகாரம்-இந்தி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.