Jump to content

தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும்

வீ.தனபாலசிங்கம்

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ' கேசரி ' க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

jvp2.JPG

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூறியிருக்கும் திசாநாயக்க " தமிழ் மக்களின் கொள்கைகள், எதிர்பார்ப்புகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டுசெல்லவேண்டும் ; தமிழ் மக்கள் மத்தியில் எமது அரசியலை பலப்படுத்தவேண்டும்.இந்த இரு பணிகளையும் உருப்படியாக செய்யாமல் முன்னோக்கி நகரமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரையான  தங்களது அணுகுமுறைகளினாலும் செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கமுடியவில்லை.இறுதிவரை முடியாது என்பது இதன்  அர்த்தமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் மக்களை வென்றெடுக்கும் முயற்சிகளை தாங்கள் கைவிடப்போவதில்லை என்றும் ஜே.வி.பி.தலைவர் கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் தெரிவாக இருக்கக்கூடிய தென்னிலங்கை அரசியல் கட்சியென்றால் அது தங்களது கட்சியே என்று கூறுகின்ற அவர், இதுவரையில் தங்களால் அந்த  மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாமல் போயிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை ஒரு கணம் திரும்பிப்பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகவும் பயனுறுதியுடையதாகவும் இருக்கும். உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய  காலகட்டத்தில் புதிய சிந்தனை வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர்கள் கூறிவந்திருக்கின்ற போதிலும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தங்களது சிந்தனையில் புரிந்துகொள்ளக்கூடிய எந்த அடிப்படை மாற்றத்தையும் செய்துகொண்டதாக இல்லை. சிறுபான்மை  இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள்  தொடர்பில் தெற்கில்  மக்கள் மத்தியில் எண்ணப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு   குறிப்பிடத்தக்க செல்வாக்குடைய  அரசியல் சக்தி என்ற வகையில் தாங்கள் எதைச் செய்திருக்கிறார்கள் என்பதை ஜே.வி.பி.தலைவர்கள் ஆத்மசோதனை செய்து பார்க்கவேண்டும்.

இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாறு இனப்பிரச்சினை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எப்போதுமே தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு மாறானதாகவே இருந்துவந்திருப்பதை காட்டுகிறது. மார்க்சிய -- லெனினச கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற கட்சி என்று உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும்,சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகள் என்று வரும்போது அதுவும் குறிப்பாக, அதிகாரப்பரவலாக்கல் என்று வரும்போது ஜே.வி.பி.யிடம் ஒருபோதுமே முற்போக்கு கொள்கை அணுகுமுறை இருந்ததில்லை. இப்போதும் கூட அதிகாரப்பரவலாக்கல் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் தெளிவானவையாக இல்லை. இது விடயத்தில் அந்த கட்சியின் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம்.

1957 பண்டா -- செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட வேளையில் ஜே.வி.பி.இருக்கவில்லை. ஆனால், அதன் தாபகத் தலைவரான றோகண விஜேவீர 1966 டட்லி -- செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார். அந்த நேரத்தில் விஜேவீர சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இனவாத நோக்கில் நடத்தப்பட்ட அந்த பேரணியில் பங்குபற்றக்கூடாது என்று கட்சி விதித்த கட்டுப்பாட்டையும் மீறி அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அரசாங்கங்களை தூக்கியெறியும் நோக்கிலான ஆயுதக்கிளர்ச்சிகளை அதன் வரலாற்றில் இரு தடவைகள் முன்னெடுத்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் வாழ்க்கையில் தேசிய இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.ஜெயவர்தன அரசாங்கம் 1980 களின் ஆரம்பத்தில் மாவட்டசபைகளை அறிமுகப்படுத்தியபோது ஜே.வி.பி.அதை எதிர்த்து தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்தது.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜெயவர்தனவும் 1987 ஜூலையில் இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கயைில் கைச்சாத்திட்ட வேளையில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பி.இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு அதன்இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை தீவிரப்படுத்தியது.

சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தின் மூலமாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் முறையையும் ஜே.வி.பி.நிராகரித்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் 1989 பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு விஜேவீரவும் பல தலைவர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 5 வருடங்கள் ஒரு உறங்குநிலையில் இருந்த அந்த கட்சி 1994 ஜனநாயக அரசியலுக்கு மீண்டும்திரும்பியது.ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகள் தேர்தல் உட்பட சகல தேர்தல்களிலும் அது போட்டியிட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிருவாகம் 2002 நோர்வேயின் அனுசரணையுடன் மு்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையில் முடுக்கிவிடப்பட்ட இனவாதப் போராட்டங்களின் முன்னரங்கத்தில் ஜே.வி.பி.நின்றது. ஒரு கட்டத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும ஜே.வி.பி.பங்கேற்றது.அதன் முக்கிய தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால், 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு -- கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு பணிகளைச் செய்வதற்கு  விடுதலை புலிகளின் பங்கேற்புடன் நிருவாக ஏற்பாடொன்றை வகுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை ஆட்சேபித்து அரசாங்கத்தில் இருந்து ஜே.வி.பி.வெளியேறியது.

பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் நோர்வே அனுசரணை  சமாதான  முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்திக்கொண்டு போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை ஜே.வி.பி.ஆதரித்தது. ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட முழுவீச்சிலான போரை அந்த கட்சி பூரணமாக ஆதரித்தது.போரில் அப்பாவி குடிமக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அவர்கள் பெரிதாக எதுவும் பேசியதில்லை.

ராஜபக்சவுடனான குறுகிய கால ஐக்கியத்துக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்த ஜே.வி.பி. அவரினதும் சகோதரர்களினதும் ஆட்சிக்கு எதிரான போராட்ட இயக்கத்தில் இணைந்துகொண்டது.2010 ,2015 ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொதுவேட்பாளர்களை ஆதரித்த ஜே.வி.பி.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தை அதன் ஆரம்பக்கட்டங்களில் விமர்சன அடிப்படையில் ஆதரித்தது.ஆனால், அதன் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் பிறகு ஜே.வி.பி. கடுமையாக கண்டனம் செய்யத்தொடங்கியது. புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறைகளில் பங்கேற்ற போதிலும் துடிப்பான பங்கை அக்கட்சி வகிக்கவில்லை ;அதிகாரப்பரவலாக்கல்குறித்து தெளிவான எந்த யோசனையையும் முன்வைக்கவுமில்லை.

இவ்வாறாக ஜே.வி.பி.யின் அரசியல் வரலாற்றை சுருக்கமாக இங்கு கூறமுனைந்ததற்கு காரணம் தேசிய பிரச்சினைக்கு அரசியல்தீர்வொன்றைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியையும் ஒருபோதுமே அது ஆதரிக்கவில்லை என்பதையும் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவாக நிற்கும் முற்போக்கு அரசியல் சக்திகளுடன் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதில்லை என்பதையும் வரலாற்றச் சான்றுடன் உணர்த்துவதேயாகும்.

ஆகவே, தென்னிலங்கையின் வேறு எந்த அரசியல் கட்சியையும் விட தமிழ் மக்களின் தெரிவாக இருக்கக்கூடியது ஜே.வி.பி.யே என்று கூறுகின்ற அதன் தலைவர் திசாநாயக்க தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் அந்த கட்சிகளை விடவும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கவேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, தமிழ் மக்களைப் பொறுத்தவரை  ' மதநம்பிக்கைக்கு '  ஒப்பானதாக அவர்களிடம்  நிலைபெற்றுவிட்ட அதிகாரப்பரவலாக்கல் விவகாரத்தில் இதுகாலவரை ஜே.வி.பி.கடைப்பிடித்துவந்த அணுகுமுறையையும் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவது குறித்து சிந்திக்க முடியும்.அத்தகைய மாற்றத்துக்கு தனது கட்சியை வழிநடத்துவதற்கு திசாநாயக்க அரசியல் துணிச்சலை வரவழைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாமா?

 

https://www.virakesari.lk/article/63834

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.