Jump to content

மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF.jpeg

மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!

பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இளவரசர் குறித்து தினந்தினம் வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளால் மகாராணி பெரும் கவலையிலும், மனஅழுத்தத்திலும் இருப்பதாக, மகாராணியின் நண்பர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

http://athavannews.com/மகாராணி-ஒருவிதமான-மன-அழு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த  ரோயல் பமிலி செய்யாத  ஊத்தைவாளி வேலையள் ஒண்டுமில்லை.....

 

Bildergebnis für Prinz Andrew: Missbrauchsskandal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல்தான் கேட்க்கிறேன், வெள்ளைக்காரர்களிடம் இதெல்லாம் பெரிய பாரதூரமான பிரச்சினை இல்லையே. பிறகெதற்கு சும்மா குத்தி முறியினம். இங்கு வந்தேறுகுடிகளான எங்களுடைய இன்றைய தலைமுறையே இதுபற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளுறதில்லை. இவர்களுக்கென்ன கேடு வந்தது......!  🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தெரியாமல்தான் கேட்க்கிறேன், வெள்ளைக்காரர்களிடம் இதெல்லாம் பெரிய பாரதூரமான பிரச்சினை இல்லையே. பிறகெதற்கு சும்மா குத்தி முறியினம். இங்கு வந்தேறுகுடிகளான எங்களுடைய இன்றைய தலைமுறையே இதுபற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளுறதில்லை. இவர்களுக்கென்ன கேடு வந்தது......!  🤨

இல்லையே அண்ணா,

எங்கள் ஊர்பக்கம்தான் சிறுவர் துஸ்பிரயோகம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. வயதுதுக்கு வந்த பெடி பெட்டையள், திருமணமானவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு பாக்கும் எம் மக்கள், சிறுவர் சிறுமிகளளை அங்கிள்மாரும் ( அரிதாக அன்ரிமாரும்), பாதிரி, டியூசன் டீச்சர் எனச் சிலரும் துஸ்பிரயோகிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டு விடுகிறார்கள். கண்டுபிட்த்தாலும், குடும்ப மானம், அது இது என்று குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவது மிகவும் அரிது.

வெளிநாட்டில் நிலைமை அப்படியே தலைகீழ். ஓப்புதல் இருந்தா, பராயம் வந்த யாரும் யாருடனும், எப்படியும் போகலாம் யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் சிறுவர் சிறுமியர் மீது துஸ்பிரயோகம் நடக்கிறதா என உன்னிப்பாக கவனிக்கப் படும். பிடிபட்டால் கதை கந்தல். எவ்வளவு பெரிய ஆளாக இருப்பினும்.

Link to comment
Share on other sites

" பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன "

இதைக்கேட்டதும் எனக்குள் இருந்த மன அழுத்தம் கொஞ்சம் குறைந்துவிட்டது🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவநாகரீக உலகில் இன்னும் ஓசையில்லாமல் பலநாடுகளிடம் கப்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அரச குடும்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இல்லையே அண்ணா,

எங்கள் ஊர்பக்கம்தான் சிறுவர் துஸ்பிரயோகம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. வயதுதுக்கு வந்த பெடி பெட்டையள், திருமணமானவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு பாக்கும் எம் மக்கள், சிறுவர் சிறுமிகளளை அங்கிள்மாரும் ( அரிதாக அன்ரிமாரும்), பாதிரி, டியூசன் டீச்சர் எனச் சிலரும் துஸ்பிரயோகிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டு விடுகிறார்கள். கண்டுபிட்த்தாலும், குடும்ப மானம், அது இது என்று குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவது மிகவும் அரிது.

வெளிநாட்டில் நிலைமை அப்படியே தலைகீழ். ஓப்புதல் இருந்தா, பராயம் வந்த யாரும் யாருடனும், எப்படியும் போகலாம் யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் சிறுவர் சிறுமியர் மீது துஸ்பிரயோகம் நடக்கிறதா என உன்னிப்பாக கவனிக்கப் படும். பிடிபட்டால் கதை கந்தல். எவ்வளவு பெரிய ஆளாக இருப்பினும்.

சுப்பர்  சகோ..

திரி  வேற  மாதிரி  போகாமலிருக்க...

இதில நம்மட  ஐயர்மாரும்  குறைஞ்ச  ஆட்களில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.