Jump to content

ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-2.jpg

ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்!

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.

ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது.

ஆனாலும், அவுஸ்ரேலியாவுக்குள் தங்கவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்மஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக் கோரி  ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.

மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பதாகைகளை ஏந்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேரணியை நடத்தியுள்ளனர்.

ஈழத் தமிழர்களான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் தனித்தனியாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். இதில் நடேசலிங்கத்துக்கும் பிரியாவுக்கும், அவுஸ்ரேலியாவில் இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், இந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது

இதையடுத்து மெல்போர்ன் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து நடேசன் குடும்பத்தை விமானம் மூலம் இலங்கைக்கு அவுஸ்ரேலிய அரசு அனுப்பி வைத்தது. இலங்கையில் பிறந்த நடேசலிங்கத்துக்கும், அவரின் மனைவி பிரியாவுக்கும் மட்டுமே குடியுரிமை இருக்கிறது.

ஆனால், அவுஸ்ரேலியாவில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளான கோபிகா, தருணிகா இருவருக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது. அவுஸ்ரேலிய அரசும் குடியுரிமை வழங்காது.

இந்த சூழலில் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தடை விதித்தார்.

ஆனால், அவர் இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது, விமானம் அவுஸ்ரேலியாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கிப் புறப்பட்டது. இதுகுறித்து நீதிபதி ஹீதரிடம் அதிகாரிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆனால், நீதிபதி ஹீதர் அதற்குச் சம்மதிக்காமல் விமான நிலையத்துக்கு தொலைபேசியில் உரையாடி விமானத்தை உடனடியாக தரையிறங்க உத்தரவிட்டார். அதன்பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடேசன் குடும்பத்தினர் கீழே இறக்கி விடப்பட்டு, மெல்போர்ன் நகரில் தங்கவைக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடேசலிங்கம் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தத் தடை விதித்தது.

ஆனால், வெளியுறவு மற்றும் குடியேற்றக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் அவுஸ்ரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு, நடேசலிங்கத்தின் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தீவிரமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை மெல்போர்ன் நகரில் தங்க வைக்காமல் அவர்களை அகதிகளை அடைத்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கு அவுஸ்ரேலிய அரசு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-1.jpg

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-3.jpg

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples.jpg

http://athavannews.com/ஈழத்-தமிழ்-குடும்பத்துக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.